Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வன்னியில் ஆசிரியர்களுக்கு கடும் பற்றாக்குறை

Featured Replies

120429163959_vanni_schools_304x171_bbc_n

பல பாடசாலைகளில் அடிப்படை வசதிகள் இல்லை

முப்பதாயிரம் மாணவர்கள் கல்வி கற்கின்ற கிளிநொச்சி மாவட்டப் பாடசாலைகளில் 380 ஆசிரியர்களுக்குப் பற்றாக்குறை நிலவுவுதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் போன்ற முக்கிய பாடங்களுக்கு ஆசிரியர்கள் முக்கியமாகத் தேவைப்படுகின்றனர்.

 

கிராமப்புறப் பாடசாலைகள் பலவற்றில் இந்தப் பாடங்களை போதிப்பதற்கென ஆசிரியர்கள் முற்றிலும் இல்லாத நிலைமையே காணப்படுகிறது.

 

கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களிலும், மன்னார் மாவட்டத்தின் மடு பிரதேசத்திலும், வவுனியா மாவட்டத்தின் வடக்குப் பிரதேசத்திலும் ஆசிரியர் பற்றாக்குறை அதிகமாக இருக்கிறது.

 

இந்த நிலைமைகளை உறுதிப்படுத்திய யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார், வன்னிப் பகுதிக்குத் தேவையான கணிசமான ஆசிரியர்களை யாழ் மாவட்டத்தில் இருந்தே பெற வேண்டியிருப்பதாகவும், எனினும் அங்கிருந்து அந்த ஆசிரியர்களை வன்னிப் பிரதேசத்திற்கு இடம்மாற்றம் செய்யும்போது, ஆசிரியர் தொழிற்சங்கங்களின் தலையீடு மற்றும் ஆசிரியர்களின் உடல் ஆரோக்கிய நிலை மற்றும் முக்கிய காரணங்களைக் காட்டி அந்த ஆசிரியர்களில் பலர் வன்னிப்பிரதேசத்தில் இருந்து மீண்டும் யாழ் மாவட்டத்திற்கே சென்று விடுவதாகவும் குறிப்பிடுகின்றார்.

 

நடவடிக்கை

இத்தகைய ஆசியரியர்கள் வன்னிப் பிரதேச பாடசாலைகளுக்குப் பணியாற்ற வராமல் இருப்பதற்கு மனித உரிமை அமைப்புக்களும் உதவி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் சுட்டிகாட்டுகின்றார்.

 

வன்னிப்பிரதேசத்தின் ஆசிரியர் பற்றாக்குறையைப் போக்குவதற்காக மாகாணக் கல்வி அமைச்சின் அதிகாரிகள், அமைச்சின் செயலாளர், வடமாகாண ஆளுனர் ஆகியோருடன் பல தடவைகள் தொடர்பு கொண்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதுடன், வன்னிப் பிரதேசத்தில் நிரந்தர நியமனமில்லாமல் தொண்டு அடிப்படையில் பணியாற்றுகின்ற ஆசிரியர்களையும் நிரந்தர ஆசிரிய சேவைக்குள் உள்வாங்குவதற்கான முயற்சிகளையும் தாங்கள் மேற்கொண்டிருப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் தெரிவிக்கின்றார்.

 

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2013/01/130125_shortageofteachersinvanni.shtml

 

தேசியம் வளர்க்கும் சுண்டல் ,தமிழ்சூரியன் ,தமிழன்,மருதங்கேணி ,நுனாவிலான் ,விசுவுகின் மகன் ,தமிழ் அன்பு ,ஆன்னி,இசை இன்னும் பலரின் ரிசுமியை அனுப்புமாறு கேட்டு கொள்கின்றேன் .  

தேசியம் வளர்க்கும் சுண்டல் ,தமிழ்சூரியன் ,தமிழன்,மருதங்கேணி ,நுனாவிலான் ,விசுவுகின் மகன் ,தமிழ் அன்பு ,ஆன்னி,இசை இன்னும் பலரின் ரிசுமியை அனுப்புமாறு கேட்டு கொள்கின்றேன் .  

 

ஏன் நீங்கள் போக கூடாது? உங்களுக்கு புலிகளை தானே பிடிக்காது. மக்கள் நலனில் அக்கறை உள்ளது என்று தானே அடிக்கடி சொல்வீர்கள். :D

  • கருத்துக்கள உறவுகள்
தேசியம் வளர்க்கும் சுண்டல் ,தமிழ்சூரியன் ,தமிழன்,மருதங்கேணி ,நுனாவிலான் ,விசுவுகின் மகன் ,தமிழ் அன்பு ,ஆன்னி,இசை இன்னும் பலரின் ரிசுமியை அனுப்புமாறு கேட்டு கொள்கின்றேன் .  

 

நீங்கள் முதலில்.. வலது காலை எடுத்து வையுங்கள்.அர்ஜூன்.

  • கருத்துக்கள உறவுகள்
தேசியம் வளர்க்கும் சுண்டல் ,தமிழ்சூரியன் ,தமிழன்,மருதங்கேணி ,நுனாவிலான் ,விசுவுகின் மகன் ,தமிழ் அன்பு ,ஆன்னி,இசை இன்னும் பலரின் ரிசுமியை அனுப்புமாறு கேட்டு கொள்கின்றேன் .  

 

ஏதோ நாங்கள் சுயநலவாதிகள். நீங்கள் தான் லண்டனில் இருந்து இயக்கத்துக்கு போன ஆள் என்று மார் தட்டினீர்கள். இப்போ ஏன் பம்முகிறீர்கள் ??

ஏதோ நாங்கள் சுயநலவாதிகள். நீங்கள் தான் லண்டனில் இருந்து இயக்கத்துக்கு போன ஆள் என்று மார் தட்டினீர்கள். இப்போ ஏன் பம்முகிறீர்கள் ??

நான் ஒருக்கா போய் வந்துவிட்டேன்,இப்பவும் தேசியம் தேசியம் என்று வெளிநாடு ஓடி வந்து கத்தவில்லை .

எதையும் நான் செய்யாமல் மற்றவனை செய்ய சொல்லவில்லை ,இப்ப சொல்லுவது பிரச்சனை எனறவுடன் வெறுமன ஓடிவந்து இங்கிருந்து மற்றவனை உசுப்பேத்துபர்களை மட்டும் .

இவர்கள் புலம் பெயர்ந்த இடத்தில் நாடகம் போடவும் பாட்டு பாடவும் கூத்து அடிக்கவும் தான் லாயக்கு தமது பிள்ளைகளை வேறு பொத்தி பொத்தி.வளர்த்துக்கொண்டு மற்றவன் பிள்ளைகளை  கரும்புலியாகு என்பார்கள் .

  • கருத்துக்கள உறவுகள்
நான் ஒருக்கா போய் வந்துவிட்டேன்,இப்பவும் தேசியம் தேசியம் என்று வெளிநாடு ஓடி வந்து கத்தவில்லை .

எதையும் நான் செய்யாமல் மற்றவனை செய்ய சொல்லவில்லை ,இப்ப சொல்லுவது பிரச்சனை எனறவுடன் வெறுமன ஓடிவந்து இங்கிருந்து மற்றவனை உசுப்பேத்துபர்களை மட்டும் .

இவர்கள் புலம் பெயர்ந்த இடத்தில் நாடகம் போடவும் பாட்டு பாடவும் கூத்து அடிக்கவும் தான் லாயக்கு தமது பிள்ளைகளை வேறு பொத்தி பொத்தி.வளர்த்துக்கொண்டு மற்றவன் பிள்ளைகளை  கரும்புலியாகு என்பார்கள் .

 

ஓம் அண்ணை நீங்கள் தான் எல்லாம் செய்த ஒரே ஆள். மற்றவர்கள் எல்லாம் லூசுப்பசங்கள் right.

 

மற்றது போராட்டம் என்று போய் மக்களை கொள்ளை அடிச்ச ஆட்கள் எங்கு இருக்கினம் என்ன செய்யினம் போன்ற விபரங்கள் தேவை என்றால் தரலாம்.

நான் ஒருக்கா போய் வந்துவிட்டேன்,இப்பவும் தேசியம் தேசியம் என்று வெளிநாடு ஓடி வந்து கத்தவில்லை .

எதையும் நான் செய்யாமல் மற்றவனை செய்ய சொல்லவில்லை ,இப்ப சொல்லுவது பிரச்சனை எனறவுடன் வெறுமன ஓடிவந்து இங்கிருந்து மற்றவனை உசுப்பேத்துபர்களை மட்டும் .

இவர்கள் புலம் பெயர்ந்த இடத்தில் நாடகம் போடவும் பாட்டு பாடவும் கூத்து அடிக்கவும் தான் லாயக்கு தமது பிள்ளைகளை வேறு பொத்தி பொத்தி.வளர்த்துக்கொண்டு மற்றவன் பிள்ளைகளை  கரும்புலியாகு என்பார்கள் .

 

நீங்கள் கூட தான் மக்கள் நலன் மக்கள் நலன் என்று அடிக்கடி கூறுவீர்கள். எனவே ஏன் நீங்கள் அங்கு சென்று ஆசிரியராக கூடாது? நீங்கள் செல்லாமல் மற்றவன் செல்ல வேண்டும் என்று கேட்பதில் என்ன நியாயம் உள்ளது?

தேசிய ஆதரவாளர்கள் நாட்டுக்கு செல்வதால் அவர்களுக்கு இப்பொழுதும் பிரச்சினை உள்ளது. உங்களுக்கு புலி தானே பிரச்சினை? அவர்கள் தான் இப்பொழுது அங்கு இல்லையே. இருப்பவர்களும் நிராயுதபாணிகளாக தானே உள்ளார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் கூட தான் மக்கள் நலன் மக்கள் நலன் என்று அடிக்கடி கூறுவீர்கள். எனவே ஏன் நீங்கள் அங்கு சென்று ஆசிரியராக கூடாது? நீங்கள் செல்லாமல் மற்றவன் செல்ல வேண்டும் என்று கேட்பதில் என்ன நியாயம் உள்ளது?

தேசிய ஆதரவாளர்கள் நாட்டுக்கு செல்வதால் அவர்களுக்கு இப்பொழுதும் பிரச்சினை உள்ளது. உங்களுக்கு புலி தானே பிரச்சினை? அவர்கள் தான் இப்பொழுது அங்கு இல்லையே. இருப்பவர்களும் நிராயுதபாணிகளாக தானே உள்ளார்கள்?

அர்ஜூனை. கண்டியில் உள்ள பிக்குகளுக்கு, தமிழ் கற்பிக்க பரிந்துரைக்குறேன்.அவரிடம்... சிறந்த தமிழும், சிறந்த தொடர்பும் உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

தேசியம் வளர்க்கும் சுண்டல் ,தமிழ்சூரியன் ,தமிழன்,மருதங்கேணி ,நுனாவிலான் ,விசுவுகின் மகன் ,தமிழ் அன்பு ,ஆன்னி,இசை இன்னும் பலரின் ரிசுமியை அனுப்புமாறு கேட்டு கொள்கின்றேன் .  

 

 

நாங்கள் முட்டாள்   கூட்டம்

இது அறிவுயீவிகளுக்கான அழைப்பு.

 

காலை  வைக்கலாமே............

அதுவும் பொய்யா?

டூப்பா அண்ணா????

  • தொடங்கியவர்

அரசியல் தீர்வே எமது மக்களின் கல்வியை மேம்படுத்தும் !

 

வன்னியில் கல்வியை மேம்படுத்த முடியாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் அங்குள்ள இராணுவ பிரசன்னமும் அந்த இடத்தில் உள்ள வசதிக் குறைகளுமே.

 

 

அரசியல் தீர்வே எமது மக்களின் கல்வியை மேம்படுத்தும் !

  • தொடங்கியவர்

கிழக்கு மாகாண பள்ளிக்கூடங்களில் பாலியல் புகார்கள்

 

கிழக்கு மாகாண பள்ளிக்கூடங்களில் மாணவிகள் மீதான பாலியல் சம்பவங்கள் தொடர்பாக கிடைத்துள்ள முறைப்பாடுகளின் பேரில் இதுவரை அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்விசரா ஊழியர்கள் என 25 பேர்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாகாண கல்வி அமைச்சர் விமலவீர திஸாநாயக்க தெரிவிக்கின்றார்.


பள்ளிக்கூடங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் மாணவிகள் மீதான பாலியல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக கூறும் அவர், முறைப்பாடு பதிவு செய்யப்படாத சம்பவங்களும் இருப்பதால நடந்த சம்பவங்களின் எண்ணிக்கை அதிகம் என்றும் கூறுகின்றார்.



தமிழ், முஸ்லிம் சமூகங்களிடமிருந்து இவ்வாறான முறைப்பாடுகள் வெளிவருவதில்லை. சிங்கள சமூகத்திடமிருந்துதான் பெரும்பாலான முறைப்பாடுகள் வந்துள்ளன என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டுகிறார்.

 

விசாரணைகளின் முடிவில் சிலர் சேவையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள அதேவேளை இன்னும் சிலர் வேறு பள்ளிக்கூடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் விமலவீர திஸாநாயக்க குறிப்பிடுகின்றார்.


விசாரணைகளின் போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில் ஒருசிலர் சட்ட நடவடிக்கைகளுக்கு உள்ளாகியுள்ளார்கள். ஆனால் சாட்சியங்கள் இல்லாத நிலையில் சிலர் நிரபராதி என விடுதலையான சம்பவங்களும் உள்ளன என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டுகிறார்.

 

முறைப்பாட்டாளர்களும் சாட்சிகளும் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு முன்வராமையால் பள்ளிக்கூட மாணவிகளுக்கு எதிரான பாலியல் செயற்பாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் தடைகள் காணப்படுவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

 

பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்களின் கட்டளைகளுக்கு அமைவாக மாணவர்கள் செயற்பட வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கின்றமையே இவ்வறான துஷ்பிரயோகங்கள் அதிகரிக்கக் காரணம் என்று சமூக ஆர்வலர்கள் பலரும் சுட்டிக்காட்டுகின்றனர்.

 

சில நாடுகளை பின்பற்றி இலங்கையிலும் பாலியல் துஷ்பிரயோகங்களை தடுப்பதற்காக முன்பள்ளிகள் தொடக்கம் விழிப்புணர்ச்சி விளக்கங்கள் அளிக்கப்பட வேண்டியதன் அவசியம் பற்றி விழுது அமைப்பின் தலைவி சாந்தி சச்சிதானந்தம் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.



http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2013/01/130126_eastschool.shtml

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.