Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எழுட்சியும் வீரமும் தமிழீழப் போருக்கு உரமூட்ட இழப்பின் கண்ணீரோடும் எதிர்காலக் கனவுகளோடும்....

Featured Replies

யாருக்கும் இல்லாத பெருமையும்
எவருக்கும் இல்லாத தொன்மையும் உடைய இந்த தமிழினம்
எப்போதும் இல்லாத பேரழிவை இப்பொது கண்டிருக்கிறது
வல்லூர்கள் துணையோடு பொல்லாதவர்கள் சூழ்ந்து
நம்மை சூறையாடினர்
நிலம் அதிர நீர் அதிர நட்சத்திரங்கள் எல்லாம் அதிர
கொத்துக் கொத்தாய் கொன்று முடித்தனர் கொலைகாரப் பாவிகள்
நெட்டை மரமென இந்த உலகம் வேடிக்கை பார்த்தது
வேற்றுப் புலம்பலாய் நம் நேற்று முடிந்தது - ஆனால்
நாளை அப்படி இருக்காது , இருக்கவும் கூடாது
நமக்கு நேர்ந்த இந்த வரலாற்றுத் துயரை
நம் மீது படிந்த இந்த வரலாற்றுப் பிழையை
நாமே துடைப்போம்
நமக்கான விடியலுக்காய் நாமே எரிவோம்
என மீண்டும் மீண்டும் எழுகின்ற தமிழினத்துக்கு
மற்றுமொரு வரலாற்று கடமை நிமிர்த்தம்
மூகநூல் வாயிலாக தமிழீழ ஆவணங்கள் தாங்கி " தேசக்காற்று " வீசுகின்றது...

துரோகத்தின் சக்திகள் துணையோடு எம் தமிழீழ பாடல்கள் முதல் அனைத்து காப்பக சுவடிகள் முதல் அழிக்கபட்டும் போட்டி பொறாமையினால் காணாமலும் போகின்றது ஆகவே எம் வரண்காலம் எம் இனத்தின் விழுமியத்தை அறிந்து கொள்ள எம் தாய் திருநாட்டின் சுதந்திர வேள்வியில் யாகங்கள் தாங்கி அனைத்து உறவுகளிடம் சென்றடைய இது ஓர் முயற்சி எம் தாயக கானம் யாவும் மற்றும் ஏனைய போராட்ட பதிவுகள் இலவசமாக் இங்கே பெற்று எம் தேச உணர்வலைகளுடன் பயணிப்போம்..

'இவை பொழுது போக்கின் அம்சம் அல்ல இழப்பின் கண்ணீரோடும் எதிர்காலக் கனவுகளோடும் தமிழீழ நினைவில்'

" தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் "

 

 

http://thesakkaatu.com/

 


அன்புள்ள நெஞ்சங்களே வணக்கம் !

உள்ளத்தில் நிறைத்து வைத்திருக்கும் தாயகக் கனவே வேர் விட்டு நீளமாகவும்
ஆழமாகவும் பரவும் வீர அத்தியாயத்தின் தொடர்ச்சியை தேசக்காற்றில்
பதிந்துள்ளோம்.


எங்கள் உறவுகளுக்கு தமிழீழத்தின் உணர்வுகளைக் காற்றில் அனுப்பி வைக்கும் முயற்சி இது.


தணல் பட்டால் தடுமாறும் மனிதத்தின் பெரும் தணல்களைக் கூட கண்டஞ்சாத
புனிதர்கள் வாழும் தேசம் இது நெஞ்சுக்குள் நினைவுகளை மூச்சாக்கி அதை
செயலில் மட்டும் வீச்சாக்கும் எம் தலைவனின் வளர்ப்பு உச்சங்களின் வீர
அத்தியாயத்தின் நாமங்கள் சுமந்து நாளும் நெருப்பூட்டி வடித்தெடுத்த வரிகள் ,
இசையூற்றிலே இருக்கை செதுக்கி தமிழீழ விடியலுக்கு ஆணிவேராக இருந்த
வரலாற்றுச் சுவடுகளை எம் ஊர்ப்புறத்தே உரசிவரும் காற்றைப் போலவே காற்றினை
எங்கள் எண்ணத்துக்கு மாற்றி அதில் பல வண்ணங்கள் காட்டி  தேசக்காற்று தமிழீழ
நினைவில் உலகின் அனைத்துப் பாகங்களிலும் சொல்லிலடங்கா உணர்வுகளுடன் வீசும்
உங்கள் கருத்துக்கள் , ஈழ ஆவண ஆக்கங்களை thesakkaatu@gmail.com இந்த மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.


- நன்றி -


‘ புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் ‘

 

Edited by அருள் மொழி இசைவழுதி

துரோகத்தின் சக்திகள் துணையோடு எம் தமிழீழ பாடல்கள் முதல் அனைத்து காப்பக சுவடிகள் முதல் அழிக்கபட்டும் போட்டி பொறாமையினால் காணாமலும் போகின்றது

  • கருத்துக்கள உறவுகள்

தேசக்காற்றின் மலர்வு தமிழ்த்தேசிய ஆன்மாவின் அடிநாததமாய் தங்கள் ஆன்மாக்களை விதைத்த அனைத்து மாவீரர்களின் கனவையும் நிறைவேற்றும் தளமாக மிளிர்கிறது. அழிந்து போகிற மறந்து போகிற எங்கள் மண்ணின் நினைவுகளும் பாடல்களும் தேசக்காற்றில் தவழ்ந்து உலகெங்கும் நிலைக்க பாராட்டுக்கள் இசைவழுதி.

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு முயற்சி. வாழ்த்துக்கள். எமது வரலாற்றை நாம் தான் காக்க வேண்டும். கடந்த கால வரலாற்றை காக்கத் தவறியதன் விளைவே.. தமிழ் காட்டுமிராண்டி மொழியாகி.. தமிழன் நாடோடி.. என்ற பதமாகி நிற்கக் காரணம். கடவுளை கல்லில் செதுக்கிய நாம் எமது  வரலாற்றை கல்லில் செதுக்கி இருந்தால் இன்று சுதந்திர புருசர்களாக வாழும் உரிமைக்கான ஆதாரங்களை தக்க வைத்திருப்போம்.

 

இலத்திரனியல் உலகம் ஒரு பாதுகாப்பற்ற.. நிரந்தரமற்ற.. திருட்டுக்கள்.. மோசடிகள் அதிகம்.. உள்ள உலகம். எனவே இணையத்தில்.. கணணியில் சேமிப்பதில் மட்டும் கவனம் செலுத்தாது இவற்றை பிற வடிவங்களில்..  நீண்ட கால உயிர்ப்புள்ள ஆவணங்களாகவும் பேண வேண்டும். :icon_idea:

 

 

நல்லதொரு முயற்சி. வாழ்த்துக்கள். எமது வரலாற்றை நாம் தான் காக்க வேண்டும். கடந்த கால வரலாற்றை காக்கத் தவறியதன் விளைவே.. தமிழ் காட்டுமிராண்டி மொழியாகி.. தமிழன் நாடோடி.. என்ற பதமாகி நிற்கக் காரணம். 

 

 

 

 

தமிழை காட்டுமிராண்டி மொழி என்று சொன்ன இன்னொரு தமிழன் நீங்கள்தான்.என் மொழி மீது எனக்குதான் முதலில் பெருமை இருக்கவேண்டும்.ஆனால் எம்மவர்களிடையே இது தலைகீழ்.அந்நிய மொழிமோகமே இதற்கு எல்லாம் காரணம்

 

 

 

 

கடவுளை கல்லில் செதுக்கிய நாம் எமது  வரலாற்றை கல்லில் செதுக்கி இருந்தால் இன்று சுதந்திர புருசர்களாக வாழும் உரிமைக்கான ஆதாரங்களை தக்க வைத்திருப்போம்.

 

 

 

 

நெடுக்காலபோவான் அண்ணா.கடவுளை கல்லில் செதுக்கியது கூட தமிழர்களின் வரலாற்றை சொல்லும் ஆதாரங்கள்தான். :) தமிழர்கலின் முன்னோர்கள்தான் கற்களிலே கடவுளாகவோ என்னவாகவோ அதிகமான ஆதாரங்களை விட்டுப்போனவர்கள் என்று நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழை தமிழரை காட்டுமிராண்டி என்றவர் இன்று தந்தையாக.. போற்றப்படும் இழிநிலை தமிழகத்தில். அதுபோக அண்மையில்.. காட்டுமிராண்டி மொழிகளில் எல்லாம் சிங்களச் சிறீலங்கா தேசிய கீதம் பாடப்படுவதா என்று ஒரு பிக்கு கேட்டானே ஒரு கேள்வி.. அந்தப் பிக்குவைப் பார்த்து ஒரு கேள்வி கேட்க.. அவருக்கு விளக்கம் கொடுக்க யாரும் இல்லை..??! எங்களுக்கு சிலர் பாடம் எடுக்கினம்... அதுதான் வேடிக்கை. :lol:

 

சிலைகள் இன்னும் சிலாகிப்பில் உள்ளனவே தவிர.. எமது மண்ணை எமதென்று நிறுவி நிற்க போதிய.. ஆதாரங்களாக இல்லை என்ற அடிப்படை விளக்கமின்றி... பலர்.. இன்றும் எம்மோடு..!

 

தமிழீழ கலை பண்பாட்டுக் கழகம் சேமித்த ஆவணங்கள் கூட ஆக்கிரமிப்புச் சிங்களவர்களால் திருடப்பட்ட நிலையில்.. இருந்ததையும் இழந்து நாம்.. 60 அடிக்கு ஆஞ்சநேயர் சிலை கட்டிக் காப்பது... புத்தர் அந்த இடத்தில்.. 70 அடி உயரத்தில்..குந்தாத வரை  மதம்..! இனமோ.. இடமோ.. உரிமையோ.. விடுதலையோ அல்ல..! :icon_idea::rolleyes:

Edited by nedukkalapoovan

சிலைகள் இன்னும் சிலாகிப்பில் உள்ளனவே தவிர.. எமது மண்ணை எமதென்று நிறுவி நிற்க போதிய.. ஆதாரமாக இல்லை என்ற அடிப்படை விளக்கமின்றி... பலர்.. இன்றும் எம்மோடு..!

 

சிலைகள் போதுமான ஆதாரங்களாகதான் இருக்கின்றன நெடுக்காலபோவான் அண்ணா.ஆனால் அவற்றை ஆராய்ச்சி செய்து உலகின் முன் எடுத்து செல்ல எமக்கு வளங்கள் இல்லை,அல்லது எம்மவர்களின் ஆர்வமின்மை,அல்லது சிங்கள் அரசின் முட்டுக்கட்டைகள் போன்றவைதான் காரணமே அன்றி,சாமி சிலைகளை முன்னோர்கள் வடித்தது காரணமல்ல நெடுக்காலபோவான் அண்ணா :) .இந்த அடிப்படை விளக்கமின்றி நீங்கள் சும்மா சகட்டு மேனிக்கு எமது முன்னோர்களை திட்டாதீர்கள் :) .இப்படி மற்றவர்கலை திட்டுவதை விடுத்து நீங்களும் எதிர்கால சந்ததிக்கு எமது வரலாறு போய் செரும் வகையில் ஏதாவது செய்யுங்கள். :)

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு முயற்சி, வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

செயலே இன்றைய  தேவை.

வாழ்த்துக்கள்

எமது வாழ்த்தும்

உதவியும் என்றும் இருக்கும்

  • தொடங்கியவர்

விதையாக விழ்ந்தோர் நினைவுகளுடன் தமிழீழ நாமத்துடன் தேசக்காற்று நாளும் வீச உறுதுணையாக உதவும் அனைத்து உறவுகளையும் நன்றி உணர்வுடன் மனதில் தாங்கி ...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.