Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிரானிக்கு உயர் பதவி ஒன்றை வழங்கத் துடிக்கும் மகிந்த

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
சிரானிக்கு உயர் பதவி ஒன்றை வழங்கத் துடிக்கும் மகிந்த
பிப் 7, 2013    
  
பதவி நீக்கப்பட்ட தலைமை நீதிபதி ஷிரானி பண்டாரநாயக்காவுக்கு மகிந்த உயர் பதவி ஒன்றை வழங்கவுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
பதவி நீக்கப்பட்ட நாள் முதல் ஷிரானி பண்டாரநாயக்காவுடன் தொடர்புகொள்ள அரசு தரப்பு முற்பட்டபோதிலும், அவர் அதனை விரும்பவில்லையெனவும், பின்னர் மகிந்த நேரடியாக தொலைபேசியில் உரையாடியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
 
ஷிரானி பண்டாரநாயக்காவுக்கு வரி இல்லாத பெறுமதியான புதிய வாகனம் ஒன்று தற்போது வழங்கப்பட்டுள்ளதெனவும், விரைவில் புதிய பதவி வழங்கப்படுமெனவும் கொழும்பு தகவல்கள் குறிப்பிடுகின்றன.
அவருக்கு ஆதரவாக தாமும் மக்களும் நடத்திய போராட்டங்களை ஷிரானி பண்டாரநாயக்கா மறந்து செயற்படுவதாக மூத்த வழக்கறிஞர் ஒருவர் கவலை வெளியிட்டார்.
 
ஆனால், தரகர்கள் மூலமாக பேரம்பேசப்பட்ட எந்தவொரு விடயத்துக்கும் தமது தாயார் அடிபணியவில்லையென ஷிரானி பண்டாரநாயக்காவின் மகன் கூறியதாக கொழும்பில் உள்ள வெளிநாட்டு செய்தியாளர் ஒருவர் குறிப்பிடுகிறார்.

சிராணியை பணிய வைக்கவேண்டிய தேவை உள்ளது மகிந்தவிற்கு. முதலில் மரியாதையாக கேட்பார்.

 

பணியாவிட்டால் கோத்தா கேட்பார். கணவரோ இல்லை மகனோ இலக்காகலாம்.

சர்த்- என்- சில்வாவினது நீதி மந்திரிப்பதவி இவவுக்கு வரவிருக்காகும்.

 

சிராணி ஏற்கனவே கணவரை வைத்து தான் Black Mail பண்ணப்படுவதாக நினைத்துதான் திவிநெகும்பவை எடுத்து மகிந்தாவை மிரட்ட முயன்றார். இதனால் அவவின் நிலைமையும் திரிசங்கு நிலைமைதான்.

உயிர்  தப்பும் ஒரே நோக்கத்திற்காக பதவியை எடுக்கலாம்.

 

பதவியை எடுத்தாலும் வெளிநாடு செல்லா அனுமதிக்க மாட்டாது சிங்களம்.

  • கருத்துக்கள உறவுகள்

டக்ளசும்  தமிழ் பத்திரிகையாளரை கொன்று விட்டு அவரது மனைவிக்கு வீடு வாங்கி கொடுத்தவர்.இதனை கோத்தபாயவின் வசனத்தில் சொல்வது எனில்  "cover up".

ஒரு தடவை தேசிய அரசாங்க ஆவலில் ரணில் ஒடித்திரிந்திருந்தாலும் அவருக்கு தான் ஜனாதிபதியாக வேண்டும் என்பதில்தான் விருப்பம். மேலும், பசில், சாமல், நாமல் கழிந்து வரும் பதவிகளிலும் அதிகம் நாட்டமில்லை.

 

பொன்சேக்கா, அனோமா இருவரும் பதவிகள் ஏற்பதில் ஆரம்பம் தொடக்கம் அடம் பிடித்தவர்கள். இப்போது சிராணியின் பெயரும் அதில். கிரோனிக்கா நமலுக்கு பின்னால் அலைந்து தனது பொய்ப்பிரண்டையும் இழந்து, வாக்குறுதிகள் கொடுக்கபட்ட அரசியல் பதவிகளும் ஒன்றும் இல்லாமல் ஏமாந்து போயிருக்ககிறா. இனி நீதி மன்றத்தில் வைத்து துமிந்தாவுடன் சவால்கள் விட முடியாது.  தாய் கட்சி அமைப்பாளர் பதவிக்கு போட்டி போட்டவ. கிடைத்துவிட்டதா தெரியாது. மாகாண மந்திரி பதவிகள் திறக்கப்பட்டால் கக்கீமுக்கு கிழக்கு மாகாணம் கிடைக்கும். கக்கீமின் நீதி அமைச்சர் பத்வி சிராணிக்கு அல்லது சரத் என் சில்வாவுக்கு கிடைக்கும். சரத் என் சில்வாவுக்கு கிடைத்தால் தூதுவர் பதவிதான் சாத்தியம்.

 

 

 

 

நடிப்புத் திறமையில் வல்ல பயங்கரவாதி ராஜபக்ச இப்போது அரசியல்வாதி போல் செயற்பட்ட சிரானியின் பின்னர் சொறிநாய் அலைவது போல அலைகிறான்.

மார்ச்சின் பின்னர் நிலைமைகள் மாறலாம்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.