Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குடும்பத்தினர் உயிருக்கு ஆபத்து - நடுங்குகிறார் பின்லேடனைச் சுட்ட அமெரிக்க கொமாண்டோ!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
seal-1222013-150.jpg

ஒசாமா பின்லேடனை 3 முறை சுட்ட கொமாண்டோ வீரர் தனது குடும்ப உறுபினர்களின் பாதுகாப்பு குறித்து அச்சமடைவதாக தெரிவித்துள்ளார். 2011-ம் ஆண்டு மே மதம் பாகிஸ்தானில் உள்ள அபோடாபாத் என்ற நகரில் அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவரான ஒசாமா பின்லேடன் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த ரகசிய தாக்குதலை அமெரிக்காவைச் சேர்ந்த நேவி சீல் என்கிற சிறப்புப்படை மேற்கொண்டது.

  

நேற்று வெளிநாட்டு பத்திரிகை ஒன்றிற்கு அந்த தாக்குதலில் பங்குகொண்ட கொமாண்டோ வீரர் பேட்டி அளித்தார். அவர் தனது அடையாளங்களை வெளியிடக்கூடாது என்கிற வேண்டுகோளோடு இந்த பேட்டியை அளித்தார். தற்போது வேலை இல்லாமல் பணச்சிக்கலில் இருப்பதாகவும் தனது குடும்பத்தினரின் பாதுகாப்பு குறித்து அச்சம் அடைவதாகவும் அவர் தெரிவித்தார்.

 

2012-ம் ஆண்டு ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றார். இதன் பிறகு தனது குடும்பத்தாரின் மீது பழிக்குப்பழி தாக்குதல்கள் நடக்கக்கூடும் என்று பயப்படுவதாகவும், இதற்குப் பிறகு ஒரு சாதாரணக் குடிமகனாக எப்படி வாழ்வது என்று தெரியவில்லை என்றும் கூறியுள்ளார். தாக்குதல் நடத்திய சம்பவம் பற்றி அவர் கூறியதாவது-

 

பின்லேடன் தனது இளம் மனைவியுடன் அபோடாபாத் கட்டிடத்தில் இருட்டான மூன்றாவது தளத்தில் இருந்தார். அவருக்கு அருகே ஏ.கே. 47 ரக துப்பாக்கி ஒன்று இருந்தது. எங்களைப் பார்த்ததும் அவர் குழப்பமாக காணப்பட்டார். நான் நினைத்ததை விட அவன் உயரமாக இருந்தார். அடுத்த நொடி நான் அவனை இரண்டுமுறை நெற்றியில் சுட்டேன். அவன் கிழே சரியும்போது திரும்ப ஒருமுறை சுட்டேன். அவர் அசையவில்லை. அவர் இறந்து விட்டார். அவனுடைய நாக்கு வெளியே தள்ளி இருந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

 

கொமாண்டோவின் மனைவி தெரிவிக்கும்போது அவர் நாட்டிற்காக நிறைய செய்துள்ளார். ஆனால் அவரைக் குப்பையில் வீசிவிட்டனர் என்று வேதனைப்பட்டார்

 

http://www.seithy.com/breifNews.php?newsID=75893&category=WorldNews&language=tamil

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மூன்றே குண்டுகள், நாக்கு தள்ளிவிட்டது! - பின் லேடனை சுட்டவர் அனுபவப் பேட்டி

4QSmXmFKpN.jpg

உலகின் மிகப் பயங்கர தீவிராவத இயக்கமான அல் குவைதாவின் தலைவர் பின் லேடன் அமெரிக்க அதிரடிப் படை வீரர்களால் 2011ஆம் வருடம் மே மாதன் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரி சுட்டுக் கொன்ற அனுபவத்தை அமெரிக்க கப்பல் படையைச் சேர்ந்த அதிரடி வீரர் எஸ்கொயர் பத்திரிகைக்கு பேட்டியாக சொல்லியிருக்கிறார். அவரது பெயரைக் குறிப்பிடக் கூடாது என்ற நிபந்தனையுடன் இந்தப் பேட்டி வெளியிடப்பட்டிருக்கிறது. பின் லேடனை சுட்டுக் கொன்ற அனுபவத்தை அவர் சொல்லுகிறார் கேளுங்கள்.

‘ பின் லேடனை சுட்டது பதினைந்து விநாடிகளில் முடிந்து விட்டது. லேடனின் அறைக்குள் நுழைந்ததும் ஒரு உயரமான மனிதர் ஒரு பெண்ணின் தோளுக்கு பின்னால் நின்றுக் கொண்டிருந்தார். அவர் தான் பின் லேடன் என்று தெரிந்துவிட்டது. நான் கற்பனை செய்து வைத்ததை விட உயரமாக இருந்தார். தன் முன்னால் இருந்தப் பெண்ணை தள்ளிவிட்டார். என்னை நோக்கி என்று சொல்ல இயலாது. வாசலை நோக்கி என்று கூட கருதலாம். என்னைப் பார்த்த விநாடியில் அவரது கண்களில் ஒரு குழப்பம் வந்துப் போனதைப் பார்த்தேன். கும்மிருட்டாக இருந்தது. ஆனால் நாங்கள் விசேஷ இரவுப் பார்வை கண்ணாடி அணிந்திருந்தோம். அதனால் எங்களால் தெளிவாகப் பார்க்க முடிந்தது. அவரால் நிச்சயம் அந்த இருட்டில் என்னைப் பார்த்திருக்க இயலாது. ஓசைகளை மட்டும்தான் அவரால் கவனித்திருக்க இயலும். தலையில் தொப்பி அணிந்திருந்தார். அவரது அரையில் ஏகே 47 ரகத் துப்பாக்கி இருந்தது. அதை அவரால் எடுத்துவிட விட முடியும். அதற்குள் அவரை சுட்டு விட வேண்டும் என்று என் உள்ளுணர்வு சொல்ல, அவரது நெற்றியைக் குறி வைத்து இரு முறை சுட்டேன். அப்படியே சுருண்டு விழுந்தார். விழுந்தப் பிறகும் மூன்றாவது முறையாக சுட்டேன். நாக்கு வெளியில் தள்ளியது. இறந்துவிட்டார் என்பது நிச்சயமாக தெரிந்தது.’ என்று அன்று நடந்த சம்பவத்தை திரைப்படக் காட்சி போல் விவரிக்கிறார் அந்த அதிரடிப் படை வீரர்.

தற்போது அதிரடிப் படையிலிருந்து ஓய்வுப் பெற்று குடும்பத்துடன் வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறார் இந்த வீரர். ‘நான் யார் என்பது தெரிந்தால் என்னைக் கொல்ல முயல்வார்கள் என்பதாலே என்னை வெளிக் காட்டிக் கொள்ள விரும்பவில்லை’ என்று தெரிவிக்கிறார்.

அவரது மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் துப்பாக்கி சுடும் பயிற்சி தந்திருக்கிறாராம். ஏதாவது தாக்குதல் நடந்தால் ஒரு தற்காப்பு நடவடிக்கைக்காக இந்தப் பயிற்சி என்கிறார்.

இந்த வீரர் பதினைந்து வருடங்கள்தான் கப்பல் படையில் இருந்ததால் ஒய்வுதியம் கிடையாதாம். அமெரிக்க ராணுவ விதிகள்படி 20 வருடங்கள் ராணுவப் பணியில் இருந்தால்தான் ஒய்வூதியம் தருவார்களாம்.

‘நாட்டுக்காக நிறைய தியாகங்கள் செய்திருக்கிறார். ஆனால் இப்போது அந்த நாடு அவரைக் கண்டுக் கொள்ளவில்லை’ என்று வருத்தத்தோடு சொல்லுகிறார் இந்த வீரரின் மனைவி.

 
  • கருத்துக்கள உறவுகள்

ஆட்சிப்பீடங்களை அலங்கரிக்கும்.. அதிகாரம் படைத்த மனிதர்கள் காட்டும் ஆசைகளை செயற்படுத்த.. உழைத்தால்.. கடைசியில்.. இது தான் கதி. அது அமெரிக்கா என்றால் என்ன..  சிறீலங்கா என்றால் என்ன.. மனிதர்களை மனிதர்கள் விழுத்தி சாதித்தது எதுவும் இல்லை..! சதா.. அழிவுகளை கண்டு அஞ்சியதைத் தவிர..! துப்பாக்கியை ஏவுகணைகளைத் தூக்க முன்.. புத்தியை தூக்கிறது தான் மனிதனுக்கு அழகு..! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.