Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காதலர் தினத்தை முன்னிட்டு யாழ்.மண்ணிலிருந்து இரு பாடல்கள் வெளியீடு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காதலர் தினத்தை முன்னிட்டு யாழ்.மண்ணிலிருந்து இரு பாடல்கள் வெளியீடு

2013-02-14 10:49:27

உலக காதலர் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்துக் கலைஞர்களால் இரு பாடல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

பிளைன்ட் லவ்

இன்றைய காதலர் தினத்தை சிறப்பிக்கும் முகமாக யாழ். ஹிமாலயா கிரியேஷன் நிறுவனம் தயாரித்து வழங்கியுள்ள இப்பாடலில் வரிகளை ரெ. துவாரகன் எழுதியுள்ளார். ஜீசஸ் யுவராஜ் இசைமைத்துள்ள இப்பாடலை ரெ. நிசாகரன் பாடியுள்ளார்.

பாடல்காட்சியை ஒளிப்பதிவு செய்து நவீன தொழில்நுட்ப முறைகளுடன் துசிகரன் தொகுத்துள்ளார்.

நேர்த்தியான காட்சியமைப்பு சிறந்த ஒலி நயத்தில் இனிமையான இசையில் அழகிய வரிகளுடன் இப்பாடல் ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

http://youtu.be/I7WqGpE0cl0

தேடல் வித் லவ்

சாண் கிரியேஷன் நிறுவனத்தின் அடுத்த வெளியீடாக புதிய காதல் பாடல் வெளிவந்துள்ளது. புலம்பெயர் இளைஞன் ஒருவனின் கடந்த கால வாழ்க்கை ஊர் உறவுக்ள பற்றிய ஏக்கம் மற்றும் காதல் பற்றிய தேடலாக இப் பாடல் உருவாக்கப்பட்டுள்ளது.

பாடல் வரிகi சாளினி சார்ள்ஸ் எழுதியுள்ளார். பாடலுக்கான இசையை ரி. பிரியன் பி. பிரசாத் ஆகியோர் வழங்கியுள்ளனர். இப்பாடலை கே. கனிஸ்ரன் பாடியுள்ளனர். பாடலுக்கான காட்சி உருவாக்கம் படத்தொகுப்பை ரி. பிரியன் செய்துள்ளார். ராசி வீடியோ ஒளிப்பதிவைச் செய்துள்ளனர்.

http://youtu.be/k3uDldTM64s


யாழ் கள உறுப்பினர்களில் ஒருவர் இவ்வாறான பாடல்களைச் செய்தால் உடனடியாக ராட்டுவோம். புலம்பெயர் தமிழர்களில் ஒருவர் செய்தாலும் அதை பெரிய சாதனையாக எடுத்து பாராட்டுவதற்கு பல பதில்கள் எழுதுவோம். ஆனால் தாயகத்தில் இருந்து
இப்படி பாடல்களைச் செய்தால் மட்டும் பாராட்ட மாட்டோம்.

 

ஏன் தாயக இளைஞர்கள் எல்லாரும் போராட்டம் மட்டும்தான் செய்ய வேண்டுமா? அவர்களின் இப்படியான முயற்சிகளைப் பாராட்டி ஊக்குவிக்க மாட்டமா? ஊக்குவித்தால் போராட மாட்டார்கள் என்ற காரணமா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ் கள உறுப்பினர்களில் ஒருவர் இவ்வாறான பாடல்களைச் செய்தால் உடனடியாக ராட்டுவோம். புலம்பெயர் தமிழர்களில் ஒருவர் செய்தாலும் அதை பெரிய சாதனையாக எடுத்து பாராட்டுவதற்கு பல பதில்கள் எழுதுவோம். ஆனால் தாயகத்தில் இருந்து

இப்படி பாடல்களைச் செய்தால் மட்டும் பாராட்ட மாட்டோம்.

 

ஏன் தாயக இளைஞர்கள் எல்லாரும் போராட்டம் மட்டும்தான் செய்ய வேண்டுமா? அவர்களின் இப்படியான முயற்சிகளைப் பாராட்டி ஊக்குவிக்க மாட்டமா? ஊக்குவித்தால் போராட மாட்டார்கள் என்ற காரணமா?

 

 

நிழலி 
 
முதலில் மன்னிக்கவும் ... நான் யாழுக்கு அதிகம் வரமுடிவதில்லை, அதலால் பல அற்புதமான எங்கள் இளைஞர்களின் படைப்புக்களுக்கு  கருத்துச் சொல்லமுடிந்திருக்கவில்லை, ஆனாலும் நேரம் கிடைக்கும் பொழுதுகளில் எம்மவர்களின் பாடல்களை ரசிப்பதுண்டு.
 
பொய் சொல்லாமல் உண்மையை சொல்கிறேன்... இந்தியப்பாடல்களையே தேடி ரசித்துக்கொண்டிருந்த எம்மைப் போன்றவர்களை தங்களின் பக்கம் கிட்டத்தட்ட முழுவதுமாக இழுத்துவிட்டார்கள் எம்மவர்கள், அதிலும் முக்கியமாக தாயகத்திலிருந்து, எவ்வளவோ பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்துக்கொண்டிருந்தும், ஆண்குரல், பெண்குரல், இசையமைப்பு, ஒளிப்பதிவு என்று பலதுறைகளிலும் அட்டகாசமாக கலக்கிக்கொண்டிருக்கிறார்கள் எம் செல்வங்கள். 
 
இந்தத் திரியில் இருக்கும்  இந்த இரு பாடல்களும், மற்றும்  மிகவும் காதலர் தினத்துக்கு வந்த இன்னுமொரு பாடலும் அதற்கு முன்பு வந்த ஏனைய பாடல்களும் பாடல்களும் மிகவும் அற்புதம். இதை உருவாக்கிய அனைவரும் மேலும் வளர வாழ்த்தி அவர்களின் திறமைக்கும் பாராட்டுக்கள்.... 

யாழ் கள உறுப்பினர்களில் ஒருவர் இவ்வாறான பாடல்களைச் செய்தால் உடனடியாக ராட்டுவோம். புலம்பெயர் தமிழர்களில் ஒருவர் செய்தாலும் அதை பெரிய சாதனையாக எடுத்து பாராட்டுவதற்கு பல பதில்கள் எழுதுவோம். ஆனால் தாயகத்தில் இருந்து

இப்படி பாடல்களைச் செய்தால் மட்டும் பாராட்ட மாட்டோம்.

 

ஏன் தாயக இளைஞர்கள் எல்லாரும் போராட்டம் மட்டும்தான் செய்ய வேண்டுமா? அவர்களின் இப்படியான முயற்சிகளைப் பாராட்டி ஊக்குவிக்க மாட்டமா? ஊக்குவித்தால் போராட மாட்டார்கள் என்ற காரணமா?

நியாயமான ஆதங்கம்.

எங்கே திறமை உள்ளதோ அந்த இடத்தில் எல்லாம் ஊக்குவிப்பது கடமை. இளையவர்கள்

தீயவழியில் போனால் திட்டுகின்றோம், மனம் வருந்துகின்றோம். அந்தளவிற்கு வாழ்த்துவது காணாது என்பது உண்மை.

 

தாயகத்தில் பலவேறு சவால்களுக்கு மத்தியிலும் வளரும் திறமைகளை வளர்த்தெடுக்க ஒரு வர்ததக ரீதியான அணுகுமுறை தேவையாக இருக்கலாம். ஆகக்குறைந்தது அவர்களுக்கு ஒரு யூட்டியிப் சனலை ஆவது அமைத்து கொடுக்கலாம். பணம் இருந்தால் சி.டியில் அமைத்து கொடுக்கலாம். சில போட்டிகளை அமைத்து பரிசுகளை கொடுக்கலாம்....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானும் கிட்டடியில் இலங்கை போட்டு வந்தேன்..பாலும் தேனும் ஓடுதோ, இல்லை விடிஞ்ச பொழுதுபட்டா கொலை விழுகுதோ என்று சொல்லத் தெரியவில்லை. எனக்கு இரண்டுமாரியும் இருக்கவில்லை.


 

தமிழ் பிரதேசங்கள் "தமிழ்-சிங்கள " பிதேசங்களாக மாறுகிறது போல தெரிகிறது. பலரும் கஸ்ரபட்டு தமிழ் கலாச்சாரங்களை இறுக பிடித்திருப்பது போன்ற உணர்வு-அது கைகழுவி விடும் என்ற பயம் காரணமாக இருக்கலாம்.


 

யாழ்பாணத்து உதயன் பழைய மாதிரியே தேசிய சேவை செய்கிறது-தணிக்கைகளுக்கு உட்பட்டு.


 

மக்கள் தெரியாதவர்கள்/நன்கு அறிந்தவர்கள் அல்லாதவர்கள் உடன், எதுவும் கதைப்பதில்லை. -ஆகக் குறைந்தது  என்னிடம் கதைக்கவில்லை.


 

என்ன சொல்லுவது என்று தெரியவில்லை; ஆனால்  மாறிவிட்டது என்று சொல்லலாம்.


 

இந்த பாட்டு வேறு ஒரு இடத்திலும் கேட்டேன்- இரண்டாவது- பிடித்திருந்தது. இரண்டுமே நன்றாக இருக்கிthu.


 

இதை எழுத தோன்றியதே நிழலியின் பதில்.

 

அனால், அங்கே பல விடயங்கள் , இலங்கை/தமிழ் பகுதிகளில், ஆலை இல்லா ஊருக்கு இலுப்பை பூ சக்கரை மாதிரி நடந்து கொண்டு இருக்கிறது. அதே நேரத்தில் அவர்களது வாழ்வை, எங்களது வாழ்க்கை முறையுடன் சரிக்கு சரி ஒப்பிடுவது சரியல்ல. ஆனால் ஒப்பிட்டே வாழ்ந்து பழகிய எங்களுக்கு, உங்கட பள்ளிக்கூடமா எங்கட பள்ளிகூடமா திறம்?, உங்கட தமிழ் ஆசிரியரா எங்கடையா திறம்? பாசைஊரா /கொட்டடியா , தின்னவேலியா/சாவச்சேரியா     ............, இப்படியே ஒப்பிட்டு பழகியதால்தான் சிறிது ஒட்டாமல் இருந்தது/இருக்கிறோம்..


 

யாழில், மற்றைய தமிழ் இடங்களில் தமிழர்கள் வாழுகிறார்கள். கொஞ்சம், நாங்கள் டொராண்டோவில் இருப்பது போல, கொச்சிக்கடையில் இருப்பது போல, வெள்ளவத்தையில் இருப்பது போல. ஆனால் புதிதாக சிங்களம் கேட்கிறார்கள், பலசரக்கு கடைகளில், அசுபத்திரிகளில், வீதிகளில், கிறீம் ஹவுஸ்களில் ....நல்லூருக்கு பின்னுக்கு கிறீம் ஹவுஸ்க்கு போனால், அங்கே சரி அரைவாசி சிங்களம் கதைப்பவர்கள் போல இருந்துதது.

 

நாங்கள் எங்கேயாது தூர உள்ள நகரத்துக்கு போனால் தாniye கலர் ஆக்களாய் இருப்பது போல வெள்ளைகள் யாழ்ப்பாணத்தில் திரிகிறார்கள்...


 

யாரும் எது பற்றியும் கேட்டால்- அது பற்றி  தெரிந்தால் , எழுதுகிறேன்.


 

 

யாழ் கள உறுப்பினர்களில் ஒருவர் இவ்வாறான பாடல்களைச் செய்தால் உடனடியாக ராட்டுவோம். புலம்பெயர் தமிழர்களில் ஒருவர் செய்தாலும் அதை பெரிய சாதனையாக எடுத்து பாராட்டுவதற்கு பல பதில்கள் எழுதுவோம். ஆனால் தாயகத்தில் இருந்து

இப்படி பாடல்களைச் செய்தால் மட்டும் பாராட்ட மாட்டோம்.

 

ஏன் தாயக இளைஞர்கள் எல்லாரும் போராட்டம் மட்டும்தான் செய்ய வேண்டுமா? அவர்களின் இப்படியான முயற்சிகளைப் பாராட்டி ஊக்குவிக்க மாட்டமா? ஊக்குவித்தால் போராட மாட்டார்கள் என்ற காரணமா?

வணக்கம் நிழலி உண்மையில் நியாயமான ஆதங்கம் ...........உண்மையில் இரண்டு நாட்களாக நான் யாழுக்குள் வரவில்லை ...............அதனால் கவனிக்கவில்லை .உண்மையில் நாம் இங்கிருந்து செய்யும் படைப்புக்களை விட தாயகத்தில் இருந்து படைப்புக்களை செய்யும் எம் உறவுகளை தட்டிக்கொடுத்து ஊக்குவிப்பது கூட எம் தலையாய கடமையாகும் ............என்னில் எம் அடித்தளம் அங்கிருந்தே உருவாக  வேண்டும் .தமிழீழ விடுதலைப்புலிகள் காலத்தில் அது நிலை நிறுத்தப்பட்டது. ஆனால் இன்று யாருமற்றவர்களைப்போல்  அவதியுறும் எம்மவர் படைப்புக்கள் உன்னதமானவை ..................என்னில் கலையும் .கலாச்சாரமும் .ஓர் இனத்தின் முதுகெலும்பு ............அந்த இனத்தின் அடையாளத்தை தக்கவைப்பவை ...........................................

படைப்புக்களை திறமையாக படைத்த என் இனிய சொந்தங்களுக்கு வாழ்த்துக்களும்,பாராட்டுக்களும்.

யாழ் கள உறுப்பினர்களில் ஒருவர் இவ்வாறான பாடல்களைச் செய்தால் உடனடியாக ராட்டுவோம். புலம்பெயர் தமிழர்களில் ஒருவர் செய்தாலும் அதை பெரிய சாதனையாக எடுத்து பாராட்டுவதற்கு பல பதில்கள் எழுதுவோம். ஆனால் தாயகத்தில் இருந்து இப்படி பாடல்களைச் செய்தால் மட்டும் பாராட்ட மாட்டோம்.

 

ஏன் தாயக இளைஞர்கள் எல்லாரும் போராட்டம் மட்டும்தான் செய்ய வேண்டுமா? அவர்களின் இப்படியான முயற்சிகளைப் பாராட்டி ஊக்குவிக்க மாட்டமா? ஊக்குவித்தால் போராட மாட்டார்கள் என்ற காரணமா?

 

தாயகத்து இசையமைப்பாளர்களுக்கு நாம் கொடுக்கும் ஊக்குவிப்பு காணாது தான். அதற்காக புலம்பெயர் ஈழதமிழர்களின் பாடல்களுக்கு, யாழ்கள உறவுகளின் பாடல்களுக்கு பகிரப்பட்ட கருத்துகளை ஒப்பிட்டு நீங்கள் கருத்தெழுதியது தவறாக படுகிறது. என்னை பொறுத்தவரை அவர்களுக்கும் ஊக்குவிப்பு கொடுப்பவர்கள் சிறிய பகுதியினரே... அந்த சிறிய பகுதியினரில் பலர் தாயகத்து இசையமைப்பாளரான கந்தப்பு ஜெயந்தன் அண்ணாவின் திரியிலும் கருத்து பகிர்ந்துள்ளார்கள். :rolleyes:

 

யாழ்கள உறவு என்றால் கண்முன்னே எம்முடன் உரையாடிய உறவு என்பதால் அவர் பாடலை கேட்டு ஊக்கம் கொடுப்பது வழமை. பல பதில்கள் எழுதுகிறோம் என்றால் அதற்கு காரணம் அவர்கள் யாழ்கள உறவு என்பதோ அல்லது புலம்பெயர் உறவு என்பதோ அல்ல.... குறித்த பாடலை உருவாக்கியவர் ஏனையோரை விட மிகவும் திறமையாக அப்பாடலை உருவாக்கியுள்ளார் என்று அர்த்தம். :rolleyes: நன்றாக உருவாக்கினால் அது சாதனை தான். தாயக உறவாக இருந்தாலென்ன, புலம்பெயர் உறவாக இருந்தாலென்ன....

இவர்களின் முயற்சிக்கு பாராட்டுகள்.
 

இந்த திரியிலுள்ள பாடல் கூட தாயக இசையமைப்பாளருடையது தான். (மட்டக்களப்பு...)

http://www.yarl.com/forum3/index.php?showtopic=117141

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.