Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்ட புகைப்படங்களை எடுத்தவர்கள் யார்? - கோத்தபாய

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
gota-seithy-20120919-150.jpg

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்ட புகைப்படங்களை பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச நிராகரித்துள்ளதுடன், யார் இதனை எடுத்தார்கள் என கேள்வி எழுப்பியுள்ளார். பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்டுள்ள 'நோ பயர் சோன்' புகைப்படங்களை பாதுகாப்பு செயலாளர் நிராகரித்துள்ளார். அத்துடன், குறித்த புகைப்படங்களில் இராணுவ அடையாளங்களே இல்லை எனவும் அவ்வாறான படங்களை பார்த்துவிட்டு, அச்சிறுவன் இராணுவத்தின் பதுங்கு குழியில் உள்ளார் என சனல் 4 தொலைக்காட்சி எவ்வாறு கூற முடியும் எனவும் பாதுகாப்பு செயலாளர் கேள்வி எழுப்பியுள்ளார்.

  

புகைப்படங்களை வெட்டி ஒட்டும் வேலையை இவர்கள் பல காலங்களாகவே செய்துகொண்டிருப்பதாகவும் கோத்தபாய குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இவ்வாறு இறுதிக்கட்டத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் இந்த படங்களை எடுத்தவர் யார்? அவர்கள் விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்ட சிறுவர்களைப் பற்றி பேசுவதில்லை எனவும் கோத்தபாய தெரிவித்துள்ளார். மேலும் விடுதலைப் புலிகளால் தற்கொலைத் தாக்குதல்களை மேற்கொள்ளவும் சயினைட் குளிசைகளை சப்பி சாப்பிடவும் பயிற்றப்பட்ட சிறுவர் போராளிகளைப் பற்றியும் இவர்கள் ஒருபோதும் பேசுவதில்லை எனவும் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய தெரிவித்துள்ளார்.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=76602&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

அபகீர்த்தியை ஏற்படுத்திவிட்ட சானல் 4 க்கு எதிராக வழக்குத் தொடுக்கலாமே? ஏன் வெட்டிப்பேச்சு??

Edited by இசைக்கலைஞன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

-சுபுன் டயஸ்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனுடையது எனக் கூறி செனல் 4 தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ நிராகரித்தார். 

'இராணுவ அடையாளம் தெரியாத படங்களை பார்த்துவிட்டு, அச்சிறுவன் இராணுவத்தின் பதுங்கு குழியில் உள்ளார் என செனல் 4 எவ்வாறு கூற முடியும்?' எனவும் பாதுகாப்பு செயலாளர் கேள்வி எழுப்பினார். 

'படங்களை வெட்டி ஒட்டும் வேலையை இவர்கள் பல காலங்களாகவே செய்துகொண்டிருக்கின்றனர். இந்த படங்களை எடுத்தவர் யார்? அவர்கள் விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்ட சிறுவர்களைப் பற்றி பேசுவதில்லை.

தற்கொலைத் தாக்குதல்களை மேற்கொள்ளவும் சயினைட் குளிசைகளை சப்பி சாப்பிடவும் பயிற்றப்பட்ட சிறுவர் போராளிகளைப் பற்றியும் இவர்கள் ஒருபோதும் பேசுவதில்லை' எனவும் அவர் சுட்டிக்காட்டினார். 

ஒரு அரசு தான் சில உலக சட்ட வரையமைப்புக்களுக்கு இணங்க நடப்பேன் என கையெழுத்து இட்டு அதற்கு ஏற்ப இசைவாக நடக்க ஏற்றுக்கொண்டுதான் அதன் தலைவர், பாதுகாப்பு அமைச்சர் என்பவர்கள் சத்திய பிரமாணம் எடுக்கின்றார்கள்.

 

எனவே தான் செய்த குற்றங்களை மறைக்கவோ இல்லை ஒரு அமைப்பு பயங்கரவாதம் செய்வதால் தானும் செய்யலாம் என்பதோ ஏற்றுக்கொள்ள முடியாத வாதங்கள்.

-சுபுன் டயஸ்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனுடையது எனக் கூறி செனல் 4 தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ நிராகரித்தார். 

'இராணுவ அடையாளம் தெரியாத படங்களை பார்த்துவிட்டு, அச்சிறுவன் இராணுவத்தின் பதுங்கு குழியில் உள்ளார் என செனல் 4 எவ்வாறு கூற முடியும்?' எனவும் பாதுகாப்பு செயலாளர் கேள்வி எழுப்பினார். 

'படங்களை வெட்டி ஒட்டும் வேலையை இவர்கள் பல காலங்களாகவே செய்துகொண்டிருக்கின்றனர். இந்த படங்களை எடுத்தவர் யார்? அவர்கள் விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்ட சிறுவர்களைப் பற்றி பேசுவதில்லை.

தற்கொலைத் தாக்குதல்களை மேற்கொள்ளவும் சயினைட் குளிசைகளை சப்பி சாப்பிடவும் பயிற்றப்பட்ட சிறுவர் போராளிகளைப் பற்றியும் இவர்கள் ஒருபோதும் பேசுவதில்லை' எனவும் அவர் சுட்டிக்காட்டினார். 

 

1958ல் ஒரு கிழமைக்குள் பண்டாரநாயக்கா அரசு தமிழருக்கு செய்த அழிவை புலிகள் 30 வருட போராட்டத்தில் சிங்களவருக்கு செய்ய இல்லை. இதை பற்றி கோபத்தபய பேசுவதில்லை.மற்றயவை எல்லாம் (1977,1981, 1983, 2008-2009) போனஸ்.

 

அபகீர்த்தியை ஏற்படுத்திவிட்ட சானல் 4 க்கு எதிராக வழக்குத் தொடுக்கலாமே? ஏன் வெட்டிப்பேச்சு??

 

சவூதியில் செய்தமா

திரி தனது நாட்டு தூதுவரை அழைக்கலாம்

இல்லை

சகல இராஜதந்திர தொடர்புகளையும் துண்டிக்கலாம்

இல்லை

 

பொருளாதார தடை போடலாம்

 

ஆனால் :D

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியே பொய்யை சொல்லிட்டு இருக்கப் போக்கினம்...உலகமே உங்களை பார்த்து சிரிக்கிறார்கள்....இவர்களின் பொய் நிலைக்கப் போறது இல்லை...ஆடு கண்ணா ஆடு கொழும்பில் இருந்து கொண்டு நீ எப்படி வேணும் என்றாலும் கூட ஆடலாம்...ஆனால் வெளி உலகுக்கு வந்தா நீங்க எல்லாரும் வாய் பேசா உமையல்......

  • கருத்துக்கள உறவுகள்

பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்ட புகைப்படங்களை எடுத்தவர்கள் யார்? - கோத்தபாய

எல்லாம் கூலிப்படைகள் தான்.

இவ்வளவு நாளும் மறுத்தார்கள். எல்லோரும் ஏற்றுக்கொண்டார்கள். புலத்தில் அதை ராஜதந்திரமாக புகழந்தார்கள். பின்புலத்தில் லஞ்சமும் லொபியும் விளையாடியது.

 

இப்போதும் மறுக்கிறார்கள். இதுவும் ராஜதந்திரமா? புலத்தில் எதற்காவது விளையாட முடிகிறதா?

 

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் கூலிப்படைகள் தான்.

அவன்ட கூலிப்படைகளிட்டை இன்னும் பணத்தை அள்ளிக் குடுத்தால்...வெளி வராத படங்கள் நிறைய வரும்.....அதை பார்த்து மனம் உடையிறது நாங்கள் தான் :(:unsure: 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எப்போதும் உண்மையை ரொம்ப நாளைக்கு மறைக்க முடியாது பொய்யின் முன்  உண்மை வெளியே வந்துதான் தீரும்.

யார் படமெடுத்தது எங்க எடுத்தது என்பதனை அறிய விசாரணைக்கு வந்தால் தெரியும் தானே.

 

புலிகளால் பாதிக்கப்பட்டவர்களை பற்றி இல்லை இப்போது பிரச்சனை இலங்கை அரசின் போர்க்குற்றத்தைப் பற்றியதே.

 

புலிகளின் செயற்பாடுகளின் பயன் இரு உலகநாடுகள் தடை செய்தனவே அது எப்படி வசதியாக மறைந்து போனது?

 

புலிகளை தடை செய்யும்போது வேண்டாம் இலங்கை இராணுவமும் அரச இயந்திரமும் இதுகளை விட படுமோசம் என்று சொன்னார்கள் ஆனால் சர்வதேசம் அதனை செவிமடுக்கவில்லை.

 

இப்போதுதான் ஆர்க்கும் சந்தர்ப்பம் அவர்களுக்கு அதுக்குள்ளே நீங்கள் வந்து அந்தப் பழைய பாட்டையே பாடமுடியாது... 

  • கருத்துக்கள உறவுகள்

யார் படமெடுத்தது எங்க எடுத்தது என்பதனை அறிய விசாரணைக்கு வந்தால் தெரியும் தானே.

 

புலிகளால் பாதிக்கப்பட்டவர்களை பற்றி இல்லை இப்போது பிரச்சனை இலங்கை அரசின் போர்க்குற்றத்தைப் பற்றியதே.

 

புலிகளின் செயற்பாடுகளின் பயன் இரு உலகநாடுகள் தடை செய்தனவே அது எப்படி வசதியாக மறைந்து போனது?

 

புலிகளை தடை செய்யும்போது வேண்டாம் இலங்கை இராணுவமும் அரச இயந்திரமும் இதுகளை விட படுமோசம் என்று சொன்னார்கள் ஆனால் சர்வதேசம் அதனை செவிமடுக்கவில்லை.

 

இப்போதுதான் ஆர்க்கும் சந்தர்ப்பம் அவர்களுக்கு அதுக்குள்ளே நீங்கள் வந்து அந்தப் பழைய பாட்டையே பாடமுடியாது... 

 

அவன் கொழும்பில் பாது காப்பாய் இருந்து கொண்டு உப்படித் தான் கொக்கரிப்பான்...அவன்ட அண்ணன் இந்த மாதம் திருப்பதி போனான் . அங்கத்தை நாட்டு ஊடகங்கள் கேள்வி கேக்க அந்த இடத்தில் இருந்து ஒரு நிமிடத்திலையே ஆள் எஸ்கேப்...கோத்தபாயா ஒரு நேர்மையானவன் என்றால் வெளிநாட்டு ஊடகங்களை சந்திக்கட்டும் பாப்போம்...அதுக்கு அவன் சம்மதிக்க மாட்டான் அப்படி சந்திக்க அவனிடம் துனிவும் இல்லை...வெளி நாட்டு ஊடகங்களை சந்திச்சா அவனுக்கு தெரியும் தனக்கு நாலு பக்கத்தாலும் அடி விழும் என்று

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.