Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சம்பூர் மின்நிலையத் திட்டத்திலிருந்து வெளியேறுகிறது இந்தியா!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
sampoor-electrisity-plant-150.jpg

சம்பூரில் இலங்கை அரசுடன் இணைந்து 500 மெகா வாட்ஸ் உற்பத்தித் திறன்கொண்ட அனல் மின்நிலையத்தை அமைக்கும் உடன்பாட்டில் இருந்து இந்தியா விலகிக் கொள்ளவுள்ளது. இலங்கை மின்சார சபையுடன் இணைந்து கூட்டுமுயற்சியாக ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்ட, இந்த அனல் மின் திட்டப் பணிகளில் இருந்து தாம் விலகிக் கொள்ளப் போவதாக, இந்திய மத்திய அரசுக்கு, இந்திய அரசுத்துறை நிறுவனமான தேசிய அனல் மின் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

  

அத்துடன், இந்தத் திட்டப்பணிகளை மேற்கொள்வதற்காக கொழும்பில், தங்கியிருந்த இரண்டு உயர் அதிகாரிகளையும் இந்த நிறுவனம் திருப்பி அழைக்க முடிவு செய்துள்ளது. முன்னதாக ஒப்புக்கொள்ளப்பட்டதற்கு முரணான வகையில், மின்சாரத்தை கொள்வனவு செய்வது தொடர்பான உடன்பாட்டை மாற்றியமைக்க இலங்கை முன்வைத்த யோசனைகள் ஏற்புடையவையல்ல என்று தேசிய அனல் மின் கூட்டுத்தாபனத்தின் தலைவர் அருப் றோய் சௌத்ரி தெரிவித்துள்ளார்.

 

இந்த திட்டத்தை செயற்படுத்த 2006ம் அண்டிலேயே இணக்கம் காணப்பட்ட போதிலும், பல்வேறு விடயங்களில் இழுபறி நிலை காணப்பட்டதால் இன்னமும் செயற்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=76752&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செய்தி..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல காலம் பிறக்குது போல ..

சும்மா கண்டநிண்டபடி எல்லாம் எழுதேங்கோ. எப்ப சாம்பூர் மின்நிலையத்திற்குள் இந்தியா வந்தது என்று எழுதினால், இப்போது வெளியேறுகிறது என்று எழுத பொருள் இருக்கும்.

 

சாம்பூர் தொடர்பில் நடந்தவை மிக சிக்கலாவை. சர்வதேச முட்டாள்களான சொலேயும் போன்றவர்களை சமாதானம் என்று ஏமாற்றிக்கொண்டு தமிழர் பகுதிய இலங்கை ஆக்கிரமிக்க தொடங்கிய போது அங்கே பிடித்த காணிகளை தமிழர் திரும்ப பெற்றிடாமல் இருக்க இந்தியாவை காவல் வைத்தது. சாம்பூரை உபயோகம் கெட்ட சொலெயும் இலங்கை பிடிக்கமாலே புலிகளிடம் இருந்து பறித்து ஆமிக்கு கொடுத்தவர். இப்போது தமிழரால் அந்தக்காணிகளை திரும்ப பெறமுடியாது என்று இலங்கை நினைக்கிறது. இனி ஏன் இந்தியா அங்கே.

 

தமிழரைக் கெடுத்து அங்கே காலூன்ற வந்தவர்கள் கிந்தியர்கள்.  திருகோணமலை எண்ணைக்குததிலுமிருந்து வெளியேற்றப்படுவார்கள். இவர்கள் சிலவற்றை வைத்திருந்தால் அமெரிக்கா மிச்சத்தை கேட்கும் என்றபடியால் இவர்களை அதனால் வெளியேற்ற வேண்டியது இலங்கைக்கு அவசர தேவை. அதை கட்டயம் இலங்கை செய்யும்.

இனியாவது சம்பூர் மக்களுக்கு அவர்கள் வாழ்ந்த நிலம் கிடைக்குமா ? அதற்கான ஏற்பாட்டை இந்தியா மேற்கொள்ளுமா ??

  • கருத்துக்கள உறவுகள்

images.jpg

 

சீய்... இந்தப் ப‌ழம் புளிக்கும்.
இந்தியா தானாக வெளியேறவில்லை. சிங்களவனால்... வெளியேற்றப் பட்டது என்பது தான்... உண்மை.

 

  • கருத்துக்கள உறவுகள்

images.jpg

 

சீய்... இந்தப் ப‌ழம் புளிக்கும்.

இந்தியா தானாக வெளியேறவில்லை. சிங்களவனால்... வெளியேற்றப் பட்டது என்பது தான்... உண்மை.

 

இதைத்தான் நானும் சொல்லவந்தேன் சிறி

அத்துடன் முதல் தாக்குதலுடன் வெளியேறவில்லை

பல முறை  முயன்றும் பலமுறை அடிவாங்கியே முடியாததால் மூஞ்சியைத்தூக்கிப்போட்டுக்கொண்டு விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்றபடி வெளியேறுகிறார்கள். அத்துடன் இத்தகைய செயல்கள் இந்தியாவுக்கு  சிறிலங்கா  சார்ந்து இது முதல் முறையுமல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

இதைத்தான் நானும் சொல்லவந்தேன் சிறி

அத்துடன் முதல் தாக்குதலுடன் வெளியேறவில்லை

பல முறை  முயன்றும் பலமுறை அடிவாங்கியே முடியாததால் மூஞ்சியைத்தூக்கிப்போட்டுக்கொண்டு விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்றபடி வெளியேறுகிறார்கள். அத்துடன் இத்தகைய செயல்கள் இந்தியாவுக்கு  சிறிலங்கா  சார்ந்து இது முதல் முறையுமல்ல.

 

ஸ்ரீலங்காவைப் பொறுத்தவரை... இந்தியா ஒரு வேண்டாத, விருந்தாளி. விசுகு.

எத்தனை முறை இதனை... ஸ்ரீலங்கா, மறைமுகமாக உணர்த்திய போதும், அந்த மர மண்டையில் ஏறுதில்லை. :D

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ரீலங்காவைப் பொறுத்தவரை... இந்தியா ஒரு வேண்டாத, விருந்தாளி. விசுகு.

எத்தனை முறை இதனை... ஸ்ரீலங்கா, மறைமுகமாக உணர்த்திய போதும், அந்த மர மண்டையில் ஏறுதில்லை. :D

 

இதில் ஒரு பகிடி என்னவென்றால்

 

தமிழனை  வெல்லணும் என்பதற்காக

உலகத்தின் 4வது பெரும் இராணுவம்

ஆசியாவின் வல்லரசு

இந்த குட்டி மாம்பழத்திடம் தோற்பதை கணக்கெடுப்பதே இல்லை

இதற்கு தமிழன் எவ்வளவோ செய்தாயிற்று.

ஆனால் இந்தியா முழிப்பதாக இல்லை

 தமிழரைக் கெடுத்து அங்கே காலூன்ற வந்தவர்கள் கிந்தியர்கள்.  திருகோணமலை எண்ணைக்குததிலுமிருந்து வெளியேற்றப்படுவார்கள். இவர்கள் சிலவற்றை வைத்திருந்தால் அமெரிக்கா மிச்சத்தை கேட்கும் என்றபடியால் இவர்களை அதனால் வெளியேற்ற வேண்டியது இலங்கைக்கு அவசர தேவை. அதை கட்டயம் இலங்கை செய்யும்.

 

அப்படி நடந்தால் நல்லம்.

 

காரணம் இந்தியாவோ இல்லை அமெரிக்காவோ அத்துமீறித்தான் வரவேண்டிய நிலைமை வரும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
சிறிலங்காவின் நிபந்தனைகளுக்கு பணியாமல், சம்பூரில் இருந்து வெளியேறுகிறது இந்தியா
 

india-sri-lanka.jpg

சம்பூரில் சிறிலங்காவுடன் இணைந்து 500 மெகா வாட்ஸ் உற்பத்தித் திறன்கொண்ட அனல் மின்நிலையத்தை அமைக்கும் உடன்பாட்டில் இருந்து இந்தியா விலகிக் கொள்ளவுள்ளது. சிறிலங்கா மின்சார சபையுடன் இணைந்து கூட்டுமுயற்சியாக ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்ட, இந்த அனல் மின் திட்டப் பணிகளில் இருந்து தாம் விலகிக் கொள்ளப் போவதாக, இந்திய மத்திய அரசுக்கு, இந்திய அரசுத்துறை நிறுவனமான தேசிய அனல் மின் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.


அத்துடன், இந்தத் திட்டப்பணிகளை மேற்கொள்வதற்காக கொழும்பில், தங்கியிருந்த இரண்டு உயர் அதிகாரிகளையும் இந்த நிறுவனம் திருப்பி அழைக்க முடிவு செய்துள்ளது.

முன்னதாக ஒப்புக்கொள்ளப்பட்டதற்கு முரணான வகையில், மின்சாரத்தை கொள்வனவு செய்வது தொடர்பான உடன்பாட்டை மாற்றியமைக்க சிறிலங்கா முன்வைத்த யோசனைகள் ஏற்புடையவையல்ல என்று தேசிய அனல் மின் கூட்டுத்தாபனத்தின் தலைவர் அருப் றோய் சௌத்ரி தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்தை செயற்படுத்த 2006ம் அண்டிலேயே இணக்கம் காணப்பட்ட போதிலும், பல்வேறு விடயங்களில் இழுபறி நிலை காணப்பட்டதால் இன்னமும் செயற்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=6566:2013-02-24-09-03-18&catid=1:latest-news&Itemid=18

Edited by தமிழரசு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.