Jump to content

மார்ச் 5ல் சிங்கள தூதரகம் முற்றுகை: டெசோ கூட்டத்தில் தீர்மானம்


Recommended Posts

சென்னையில் மார்ச் 5ம் தேதி சிங்கள தூதரகத்தை முற்றுகையிட போவதாக டெசோ சார்பில் இன்று அறிவிக்கப்பட்டது. டெசோ அமைப்பு உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம், சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை 11.15 மணிக்கு தொடங்கியது.
 
இக்கூட்டத்துக்கு அமைப்பின் தலைவரும் திமுக தலைவருமான கருணாநிதி தலைமை வகித்தார். அமைப்பின் உறுப்பினர்களான திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, திமுக பொதுச் செயலாளர் அன்பழகன்,  விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், சுப.வீரபாண்டியன், சுப்புலட்சுமி ஜெகதீசன், டி.ஆர்.பாலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
tesomeeting250213.jpg
ஈழத் தமிழர்கள் எதிர்கொண்டு வரும் பிரச்னைகள் பற்றியும், இலங்கையில் நிலவிவரும் தற்போதைய நிலவரங்கள், பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்திரன் கொடூர கொலை குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மார்ச் 5ம் தேதி சென்னையில் இலங்கை தூதரகத்தை முற்றுகையிடவும், அதே நாளில் பார்லிமென்ட் முன்பு திமுக, விடுதலைச் சிறுத்தைகள் எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் நடத்தவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
 
Link to comment
Share on other sites

இவர்கள் போகிற போக்கைப் பார்த்தால் ஸ்பெக்ட்ரம் பூதம் மீண்டும் வெளிவரும்போலை இருக்கு.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2009தில் செய்து காட்டதையா இனி செய்து காட்டப் போக்கினம்... ஏதோ செய்யுங்கோ....இனியாவது நல்ல மனதோடை செய்தால் எல்லாம் நல்ல மாரி நடக்கும்..அரசியலுக்காக மீண்டு நாடகம் போட்டால்..நீங்கள் அடுத்த தேர்தலிலும் படு தோல்வி தான்.............

Link to comment
Share on other sites

இவர்கள் போகிற போக்கைப் பார்த்தால் ஸ்பெக்ட்ரம் பூதம் மீண்டும் வெளிவரும்போலை இருக்கு.. :D

காங்கிரஸ் திரும்ப வரமாட்டாது. அதில் கையை போடால் அவர்களின் நாசிதான் பழுதாகும். சோனியா, சிதம்பரம்போன்ற்வர்களின் பங்கு பிராணம் முகர்ஜியாலேயே ஏற்கப்பட்டது.  கிண்டி வைத்துவிட்டுபோனார்களானால் பா.ஜா.காவிலும் எல்லோரும் வாஜ்பாய் மாதிரி கனவான் பாதிரம் ஏற்று நடிக்க விரும்புவர்கள் அல்ல, கிடைக்கும் சந்தர்பத்தை இலகுவில் போகவிடமாட்டார்கள். அந்தவகை வாதத்தால் காங்கிரஸ் இனி அதில் கவனம் செலுத்தாது.

 

ஸ்பெக்ரம் வழக்கு கருணாந்தியின் குடும்பத்தை அரசியலில் இருந்து ஒதுக்க கொண்டுவரப்பட்டத்து அல்ல. கருணாநிதி கூட்டணி அரசியலில் இன்னமும் ஒரு பங்குதாரர். அன்றும் பங்குதாரர்.  தி.மு.காவில் அந்த நேரம் வளர்ந்து வந்துகொண்டிருந்த கனிமொழிக்கும் மட்டும் எதிரானது. தி.மு.கவில் கனிமொழியியை வலுக்குறைத்தபின்னர் அந்த வழக்கும் வலுக்குறைக்கப்பட்டது.

 

காரணம் பலவற்றை சொல்லலாம். ஆனால் கனிமொழி தமிழ் நாட்டில் தனது பிரசித்தியை கூட்ட ஈழத்தமிழர் பிரச்சனையை கையில் எடுத்தா. இதை காங்கிரஸ் கையைகட்டி வாளாவிருந்து பார்த்துக்கொண்டிருக்க முடியாது. அப்பா காங்கிரஸ் செய்வது ஒன்றும் அடாத்தில்லை என்றதை நிரூபிக்க 4 மணித்தியால உண்ணாவிரதமிருந்தார். இது காங்கிரசுடன் பேசிப் பொருத்தி நடந்த விடையம். ஆனால் கனி மொழி செய்தவை தான் மட்டும் பிரசித்தமாக செய்தவை. இவை காங்கிரசால் வவுச் பண்ணப்பட்டிருக்காதவை. பின்னர் அவை வெறும் அரசியல் ஸ்ரண்ட் தான் என்பதை காங்கிரசுக்கு காட்ட, கனிமொழி மகிந்தாவின் காலில் வந்து விழுந்தா. அதன் பின்னர் கனிமொழி தி.மு.காவில் தனது வளர்ச்சியை துரிதப்படுத்த முயலவில்லை. (குறைந்தபட்சம் அதை செய்திகளிலாவது நாம் காணவில்லை.) அழகிரி-ஸ்ரனின் நாட்கங்களை பிரசித்தமாக தொடங்கிவிட்டன. கனிமொழியை ஒருவரும் கவனிக்கவில்லை.

 

2G  அலைகற்றை வழக்கில் சம்பந்தபட்ட அரசியல்வாதிகளான, மாறன், சிதம்பரம், சோனியா இராசாத்தி அம்மாள், கருணாநிதி இவர்கள் எல்லோருக்குள்ளும் கனிமொழிதான் மிக குறைந்த குற்றச்சாட்டை கொண்டிருந்தவ. ஆனல் அவ தமிழ் நாட்டில் தன்னை பிரசித்தப்படுத இலகுவான ஈழத்தமிழர் விவகாரத்தை தான்தோன்றித்தனமாக தனது  கையில் எடுத்தா. தனது அனுபவமின்யை அறிந்துகொண்டுவிட்ட கனிமொழி ஈழத்தமிழர் விவகாரத்தில் இருந்து ஒதுங்கிவிட்டா.

 

அன்றைய  கனிழொழியின் செயல்களால் காங்கிரஸ் நேராக இலங்கை அரசால் தாக்கபட்டிருக்கலாம். அதாவது மறைமுகமாக அது காங்கிரசுக்கு எதிரானது. இன்றைய டெசொ அன்று கனிமொழி விபரம் தெரியாமல் பாவித்த அரசியல் ஸ்ரண்ட் அல்ல. மேலும் இது காங்கிரசுக்கு எதிரானதும் அல்ல.  டெசோவின் இலக்கு ஜெயலலிதா. கடந்த தேர்தலில் ஜெயலலிதாவுக்கு கிடைத்த ஈழத்தமிழர் ஆதரவு மீது வைக்கப்பட்ட குறிதான் டெசோ. எனவே காங்கிரஸ்-கருண்நிதி கூட்டு மத்திய தேர்தலில் தப்பியொட்டி திரும்பவ வரவேண்டுமாயின் காங்கிரசுக்கு டெசோ மிகவும் இன்றியமையாதது. இவற்றை பின்னல் வைத்துக்கொண்டு, முன்னால் எதிர்ப்பது, ஆதரிப்பது போல இந்த அரசியல் வாதிகள் காட்டுவது எல்லாம் ஒரே நேரத்தில் வடக்கு தெற்கு இரு மக்களையும் ஏமாற்ற போடும் சதிகள் மட்டுமே.

Link to comment
Share on other sites

இலங்கை தூதரகம் முற்றுகை!
டெசோ கூட்டத்தில் முடிவு!


”இனி ராஜபக்சேவின் இலங்கை தூதரக முற்றுகை அறிவிப்பை எதிர்பார்க்கலாம்... ”

 

போனவருசம் ‘சர்வதேச விசாரனை வேண்டும் என்பதை இந்தியா திரித்ததை சி.பி.ஐ கட்சியின் டி.ராஜா கண்டித்து நேர்மையான தீர்மானம் கொண்டு வர விவாதிக்கவேண்டும் என்றபோது , “ நமது பிரதமர் ஆதரவுன்னு அறிவிச்சுட்டார்,

 

இதுக்குமேலே வேறெதுவும் பேசவேண்டியதில்லைன்னு” திமுக எம்.பி குறிக்கிட்டு டி.ராஜாவை தடுக்காம இருந்திருந்தா ஏதேனும் நடந்திருக்கலாம்.. இவுங்க லண்டனுல பண்ணுன கூத்தைப் பற்றி இதுவரை பேசாம இருக்குறேன்.. பேச வைப்பாங்க போல....


இவுகள யாராச்சும் கொஞ்சம் பேசாம இருக்கச் சொல்லுங்கப்பா.. முடியல....

 

- - திருமுருகன் காந்தி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பாரிய கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட எதிர்பார்க்கிறோம்; சமன் ரத்னப்பிரிய! 27 SEP, 2024 | 05:07 PM (எம்.ஆர்.எம்.வசீம்) வரலாற்றிலேயே  மிகப்பெரிய கூட்டணி அமைத்து பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட எதிர்பார்க்கிறோம். ஐக்கிய மக்கள் சக்தியுடனான கலந்துரையாடலும் சாதகமான நிலைக்கு வந்துள்ளது என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார். எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு ஐக்கிய தேசிய கட்சி எடுத்துவரும் நடவடிக்கை தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.   இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,  பாராளுமன்ற தேர்தலுக்கு தற்போது அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் எதிர்க்கட்சியில் இருக்கும் அனைத்து கட்சிகளையும் இணைத்துக்கொண்டு தேர்தலுக்கு முகம்கொடுப்பதற்கே எதிர்பார்க்கிறோம்.   நாட்டு மக்களின் எதிர்பார்ப்பும் அவ்வாறு இருப்பதாகவே எமக்கு தோன்றுகிறது. அவ்வாறான பரந்துபட்ட கூட்டணியை அமைக்குமாறே அனைவரும் வற்புறுத்தி வருகின்றனர்.   அதனால் இந்த கூட்டணியை அமைப்பதற்காக தற்போது ஐக்கிய மக்கள் சக்தியுடனான கலந்துரையாடலை ஆரம்பித்திருக்கிறோம்.    அதேபோன்று மொட்டு கட்சியின் பெரும்பான்மை பிரிவினர், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களுடனும் கலந்துரையாடல் இடம்பெற்று வருகிறது.    ஓரிரு தினங்களில் இந்த கலந்துரையாடல்களை முடிவுக்கு கொண்டுவர முடியுமாகும். அதனால் வரலாற்றில் பெரிய கூட்டணி அமைத்து இந்த பாராளுமன்ற தேர்தலில் பாேட்டியிட முடியுமாகும் என எதிர்பார்க்கிறோம். பல்வேறு தரப்பினர்கள் கட்சிகளுடன் கலந்துரையாடிய விடயங்களை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடனும் நாங்கள் கலந்துரையாடினோம்.    ரணில் விக்ரமசிங்கவின் ஆலாேசனையின் பிரகாரம் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இரண்டு தினங்களுக்கு முன்னர் கலந்துரையாடினோம். நேற்றும் கலந்துரையாடினோம்.    அந்த கலந்துரையாடல் சாதகமாக அமைந்துள்ளது. ஆரம்பத்தில் ஐக்கிய மக்கள் சக்தி இந்த பேச்சுவார்த்தைக்கு பின்வாங்கியபோதும் தற்போது அவர்கள் கலந்துரையாடல்களுக்கு இணக்கம் தெரிவித்து, ஆராேக்கியமான பல கருத்துக்களை தெரிவித்திருக்கிறார்கள்.    அதனால் தொடர்ந்தும் அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடி எப்படியாவது பாராளுமன்ற தேர்தலில் கூட்டணியாக போட்டியிடவே நாங்கள் எதிர்பார்க்கிறோம்.   கூட்டணி அமைத்து போட்டியிடுவதன் மூலமே எமக்கு தேர்தலில் எதிர்பார்ப்பொன்றை ஏற்படுத்திக்கொள்ள முடியும். எமது ஆதரவாளர்களின் எதிர்பார்ப்பும் அதுவாகும் என்றார். https://www.virakesari.lk/article/194920
    • நிலாமதியவர்களே, படித்துப் பாராட்டியமைக்கு நன்றி. கிறுக்க முயற்சிக்கிறேன்.  நாம்தானே ஓடிவந்துவிட்டோம். எங்கோ ஒதுங்கி ஓடிய காலங்களைத் திரும்பிப்பார்க்கும் போது வெறுமையாய் தெரிகிறது.    நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி சுவியவர்களே, படித்துப் பாராட்டியமைக்கு நன்றி. நீங்களே ஒரு சிறந்த படைப்புகளைப் தருபவர். உங்கள் வரிகள் உற்சாகம் தருவனவாக உள்ளன.  நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி ஈழப்பிரியனவர்களே, படித்துப் பாராட்டியமைக்கு நன்றி. உண்மைதான். ஆனால், சிங்களத்தின் சிந்தனையல்லவா எம்மை ஆக்கிரமித்துள்ளது.  நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
    • ஸ்துமாரி (Stumari) ஸ்துமாரி (Stumari) என்கிற ஜார்ஜியா மொழி வார்த்தைக்கு விருந்தினர் என்ற பொருள்.  இன்றைக்கு இந்த வார்த்தையை நான் தெரிந்து கொள்ள காரணமாக இருந்தது இன்றைய சிறப்பு தினம்! ஆம் இன்றைக்கு உலக சுற்றுலா தினம் - 27 செப்டம்பர் - ஒவ்வொரு வருடமும் இந்த தினத்தினை உலக சுற்றுலா தினமாக, உலகம் முழுவதும் கொண்டாடுகிறார்கள்.  இந்தப் பழக்கம் ஆரம்பித்தது எப்போது தெரியுமா? 1980-ஆம் ஆண்டு. ஒவ்வொரு வருடமும் இந்த தினத்திற்கான நோக்கம் ஒன்று தான் - அது சுற்றுலா. தவிர ஒவ்வொரு வருடத்திற்கான Theme மட்டும் மாறுபடுகிறது.  இந்த வருடத்திற்கான உலக சுற்றுலா தினத்தின் Theme - Tourism and Peace! இந்த வருடம் உலக சுற்றுலா தினம் கொண்டாட தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கும் இடம் Georgia! அதனால் தான் எனக்கும் ஜார்ஜியா மொழியில் இருக்கும் ஸ்துமாரி (Stumari) என்கிற வார்த்தை தெரிந்தது.  அவர்கள் விருந்தினரை கடவுளின் அன்பளிப்பாக கருதுகிறார்கள் (Stumari is a gift of God!). ஸ்துமாரி குறித்த ஒரு காணொளியை பாருங்களேன். சுற்றுலா குறித்த எனது ஆர்வம் குறித்து எனது தொடர்பில் இருக்கும் பலரும் அறிந்திருப்பார்கள். நான் சென்ற சுற்றுலாக்கள் பொதுவாக சராசரியை விட அதிகம் என்றாலும் ஒரு சிலருடன் ஒப்பிடும்போது குறைவு தான் 🙂ஹாஹா…  எத்தனை பயணம் செய்தாலும் இன்னும் வேண்டும், இன்னும் இன்னும் பயணிக்க வேண்டும் என்ற ஆசை மட்டும் குறைவதே இல்லை.  பயணம் மீது ஒரு வெறுப்பு வருவதே இல்லை.  எப்போது பயணிக்க வேண்டும் என்று சொன்னாலும் உடனே மனதில் புத்துணர்வு வந்து விடுகிறது.  சூழல்கள் காரணமாக கடந்த சில மாதங்களாக எந்த வித சுற்றுலாவும் செல்லவில்லை என்றாலும் சுற்றுலா மீதான ஆர்வம் இன்னும் குறையவே இல்லை.  வாழ்க்கையில் இருக்கும் ஒரு ஆசை தொடர்ந்து சுற்றுலா செல்வதும், அந்தப் பயணங்கள் வழி பல விஷயங்களைத் தெரிந்து கொள்வதும் தான்.  வேறு பெரிய ஆசைகள் எதுவும் இல்லை. பார்த்தது கையளவு என்றால் பார்க்காதது உலகளவு.  உலகம் முழுதும் பார்க்க வேண்டும் என்று கூட இல்லை, பாரதம் முழுவதும் பயணித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதே ஒரு ஆசையாக இருக்கிறது.  இந்த வருடத்தின் உலக சுற்றுலா தினம் குறித்த Concept Note UN தளத்தில் பார்க்கக் கிடைத்தது.  உங்களுக்கு விருப்பம் இருந்தால் அதனை இங்கே படிக்கலாம். இந்தக் குறிப்பின் படி, 2024-ஆம் ஆண்டின் உலக சுற்றுலா தினம், சுற்றுலா மற்றும் அமைதியை உருவாக்குவதற்கான தொடர்பினை சந்திப்பை ஆராய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.  பயணம், கலாச்சார பரிமாற்றம் மற்றும் நிலையான சுற்றுலா நடைமுறைகள், அமைதியை உலகம் முழுவதும் நிலைநிறுத்த எவ்வாறு பங்களிக்க முடியும் என்பதையும் நாடுகளுக்கு இடையேயான மோதல்களுக்கு தீர்வு, நாடுகளுக்கு இடையே நல்லிணக்கம் மற்றும் உலகளவில் அமைதியை மேம்படுத்துதல் ஆகியவற்றை பிரதான நோக்கமாக கொண்டு கொண்டாடப்படுகிறது.  எங்கு பார்த்தாலும் நாடுகளுக்கு இடையே சண்டைகள், அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் என்று ஒவ்வொரு நாளும் செய்திகளில் படிக்கையில் சுற்றுலா இந்த பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வாக இருக்க முடியும் என்றே தோன்றுகிறது.   நம் நாட்டில் மட்டுமே எத்தனை எத்தனை சுற்றுலா தலங்கள்? ஒரு பிறப்பில் இவை அனைத்தையும் பார்த்து விட முடியுமா என்ன?  அதனால் எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ, அந்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு விட வேண்டும்.  சுற்றுலா/பயணம் மூலம் பல இடங்களை பார்க்க முடியும் என்பதோடு விதம் விதமான மனிதர்களையும் சந்திக்க முடிகிறது.  பல வித அனுபவங்களையும் பயணங்கள் நமக்குத் தருகின்றன.  ஆதலினால் பயணம் செய்ய வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அதனை பயன்படுத்திக் கொள்ளுங்கள்!  இந்த உலக சுற்றுலா தினத்தில் நமக்கு பயணம் செய்ய கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வோம் என்று தீர்மானம் செய்து கொள்வோம்.  தொடர்ந்து பயணிப்போம்.  பல அனுபவங்களைப் பெறுவோம். பயணம் நல்லது ஆதலினால் பயணம் செய்வீர்! https://venkatnagaraj.blogspot.com/2024/09/World-Tourism-Day-2024.html
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.