Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஜெனிவாவில் கூட்டமைப்பு காலடி வைத்தால் நல்லிணக்க கதவு இழுத்து மூடப்படும்! - வசந்த பண்டார எச்சரிக்கை!!

Featured Replies

சிங்கள பௌத்த மக்களின் ஆசீர்வாதம் கிடைத்தால் மட்டுமே வடக்குத் தமிழர்களுக்கு நீதியின் வாசல் திறக்கப்படும் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.

 

அத்துடன், நாட்டை கூறுபோடும் நோக்கில் ஜெனிவாவில் கூட்டமைப்பு காலடி எடுத்துவைக்குமானால், இங்கு நல்லிணக்கத்துக்கான கதவு இழுத்து மூடப்படும் என்றும் அந்த இயக்கம் கூறியுள்ளது.

 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு ஜெனிவாவுக்குச் சென்று ஓரங்க கூட்டத்தொடரில் கலந்துகொண்டு வடக்கு, கிழக்கு நிலைவரங்களை தெளிவுபடுத்தவுள்ள நிலையில் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் செயலாளர் கலாநிதி வசந்த பண்டார மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:

 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஜெனிவா செல்வதை எம்மால் தடுக்க முடியாது. அங்கு செல்வதற்கான சுதந்திரம் அவர்களுக்கு உண்டு. ஆனால், நாட்டுக்கு எதிரான செயற்பாடுகளில் அவர்கள் ஈடுபடமுடியாது.

 

நிறுவனமொன்றின் முன்னிலையில் அவர்கள் சாட்சியமளிப்பார்களாயின், அது அரசமைப்பை மீறும் செயலாகும். தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்துப் பேசலாம். நாட்டைக் கூறுபோடும் நடவடிக்கையில் ஈடுபட முடியாது.

 

அதேவேளை, சிங்கள மக்களின் மனங்களை வெல்வதற்குரிய நடவடிக்கையை கூட்டமைப்பு முன்னெடுக்க வேண்டும். சிங்கள மக்களின் ஆசீர்வாதம் இருந்தால் மட்டுமே வடக்குத் தமிழர்களுக்கு நீதியின் வாசல் திறக்கப்படும். நல்லிணக்கத்தை நோக்கிப் பயணிக்கவேண்டிய தருணத்தில் கூட்டமைப்பு குழப்பம் விளைவிக்கக்கூடாது என்று வசந்த பண்டார தெரிவித்துள்ளார்.

 

http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=1&contentid=526f5acf-0347-4823-bb7f-a6b60306d814

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பண்டாரங்களால பெரிய தொல்லையாப் போச்சு!

 

உரிமை என்பது எடுக்கப்பட வேண்டியதேயன்றி, இன்னொருவரால் கொடுக்கப் படுவதில்லை! :o

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் கூட்டணியுடன் எத்தனை சுற்று பேச்சுவார்த்தை நடாத்தியவர்.ஏதாவது தீர்வை ஏன் மகிந்தவால் கொடுக்க முடியாது போனது? 60 வருடங்களாக தமிழர் போராடியும் ஒரு சிங்கள தலைவரால் ஒரு தீர்வை கொடுக்க முடியவில்லை.

  • தொடங்கியவர்

கூட்டமைப்பிற்கு அங்கீகாரத்தை சிங்களமே தரவுள்ளது !

  • கருத்துக்கள உறவுகள்

வாயாலை சொல்லாமல், சடாரென்று கதவை இழுத்து... மூடவேண்டியது தானே....tuer.gif

தமிழருக்குள்ள உரிமையை ஒருபோதும் விட்டுக் கொடுக்க முடியாது : மனோ கணேசன்

 

By     V.Priyatharshan
2013-02-27 15:26:26

ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவுக்கு சென்று முறையிட்டு,
நீதிகேட்க தமிழருக்குள்ள உரிமையில் எவரும் தலையிட முடியாது. எமது இந்த
உரிமையில் அரசாங்கம் குற்றம் காண முடியாது. தமிழ் தேசிய கூட்டமைப்பு
மற்றும் நமது மனித உரிமை அமைப்புகள், ஜெனீவா சென்று செயற்படுவதை ஜனநாயக
மக்கள் முன்னணியும், எம்முடன் கரம் கோர்த்துள்ள அனைத்து கட்சிகளும்
முழுமையாக அங்கீகரிக்கின்றன, ஆதரிக்கின்றன, வலியுறுத்தி நிற்கின்றன என்பதை
எந்தவித தயக்கமுமின்றி மிகத்தெளிவாக, உறுதிபட கூறிவைக்க விரும்புகின்றேன். 

எம்மை
குறை கூறுபவர்கள், முதலில் தம்மை திருத்தி, இந்நாட்டில் தமிழரும்,
முஸ்லிம்களும் சமத்துவத்துடன் நியாயமாக வாழும் நடைமுறையை
உறுதிப்படுத்தட்டும். இதை செய்யாமல் எம்மை, உலகத்திடம் முறையிடாதீர்கள்
என்று சொல்லுபவர்களை நாம் நிராகரிக்கிறோம் என ஜனநாயக மக்கள் முன்னணியின்
தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

அதிகாரத்தை பகிர்ந்து
ஐக்கியப்படுத்தும் இயக்கத்தின் ஊடகவியலாளர் மாநாடு இன்று புதன்கிழமை
கொழும்பில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர்
மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இன்று
இந்நாட்டில் எந்த பக்கம் திரும்பினாலும் "ஜெனீவா, ஜெனீவா" என்ற கோஷமே
கேட்கிறது. நான் இரண்டு மாதங்களுக்கு முன்னர் சொன்னது போல் இன்று இந்நாட்டை
ஜெனீவா காய்ச்சல் கடுமையாக பிடித்துள்ளது.
நமது இந்த, அதிகாரத்தை
பகிர்ந்து ஐக்கியப்படுத்தும் இயக்கத்தின் பங்காளிகளான தமிழ் தேசிய
கூட்டமைப்பு இன்று ஜெனீவா சென்றுள்ளது. இதை இன்று அரசாங்க ஊடகப்
பேச்சாளரும், அமைச்சர்களும் நாட்டை அவப்பெயருக்கு உள்ளாக்கும் செயல் என்று
குற்றம் சாட்டுகிறார்கள். அரசு ஆதரவுடன் செயல்படும் பல்வேறு இனவாத
இயக்கங்கள் நாட்டைக் காட்டிகொடுக்கும் செயல் என்று கூக்குரல் இடுகின்றன.

இது
நாட்டைக் காட்டி கொடுக்கும் செயல் அல்ல. இது எங்கள் அடிப்படை உரிமை. இதை
நாம் விட்டுக்கொடுக்க முடியாது. 1989 ஆண்டுகளில் அன்றைய எதிர்க்கட்சி
உறுப்பினர் மகிந்த ராஜபக்ச, வாசுதேவ நாணயக்கார ஆகியோர் தெற்கின் சிங்கள
மக்களின் மனித உரிமை கோரிக்கைகளை எடுத்துகொண்டு ஜெனீவா சென்றது நியாயம்
என்றால் அதை இன்று ஏன் எம்மால் எமது மக்களுக்காக செய்ய முடியாது என்ற எனது
கேள்வியை இங்குள்ள சிங்கள ஊடக நண்பர்கள் சிங்கள மக்களிடம் எடுத்துச் செல்ல
வேண்டும்.

2012ஆம் ஆண்டு கூட்டமைப்பு ஜெனீவா செல்லவில்லை. அதனால்
கூட்டமைப்பை தமிழ் தீவிரவாதிகள் விமர்சித்தார்கள். புலம்பெயர்ந்த தமிழர்
மத்தியிலும் பெரும் எதிர்ப்புக் குரல் எழுந்தது. அந்த வேளையில் இலங்கை
அரசாங்கத்திற்கு எதிராக முதன்முறையாக ஐ.நா.வில் தீர்மானம் கொண்டு
வரப்பட்டது. அன்று தமிழர் பிரதிநிதிகள் இலங்கையிலிருந்து ஜெனீவா செல்லாமல்,
தவிர்த்துகொண்டதன் மூலம் இலங்கை அரசுக்கு ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.
நமது பிரச்சினைகளை நமது நாட்டுக்குள்ளேயே பேசித் தீர்த்துக் கொள்வோம் என்ற
ஒரு சமிக்ஞை இலங்கை அரசாங்கத்துக்கு காட்டப்பட்டது.

இங்கே எனக்கு
அருகில் அமர்ந்திருக்கும் நண்பர் அசாத் சாலி கடந்த ஜெனீவா காலத்தில்
அரசாங்கத்துக்கு ஆதரவாக செயற்பட்டு தமது இனத்தின் பிரச்சினைகளை
தீர்த்துக்கொள்ள முயன்றார். ஆனால் அது நடக்கவில்லை. அவரது நம்பிக்கை
நிறைவேறவில்லை. அரசாங்கம் இன்று முஸ்லிம் மக்களையும் ஓட ஓட விரட்டுகிறது.
அவர்களைத் தேடி, தேடி அவமானப்படுத்துகின்றது. இதனால் இன்று அசாத் சாலியும்
எங்களுடன் கரங்கோர்த்துள்ளார். முஸ்லிம் மக்கள் இன்று அரசாங்கத்தின் மீது
கடும் வெறுப்புக் கொண்டுள்ளார்கள். இதுதான் முஸ்லிம் மக்களின் இன்றைய மனோ
உணர்வு. அதை இன்று அவர் எங்களுடன் இணைந்து பிரதிநிதித்துவம் செய்கிறார்.

தமிழர்களும்,
முஸ்லிம்களும், ஐ.நா. சபையும் இந்த அரசாங்கத்துக்கு வழங்கிய
சந்தர்ப்பங்களை இந்த முட்டாள் அரசாங்கம் புரிந்துகொண்டு செயற்படவில்லை.
தமது சொந்த தயாரிப்பான, கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க
ஆணைக்குழுவின் பரிந்துரைகளைக்கூடக் இதுவரை இந்த அரசு அமுல் செய்யவில்லை.
இதை அமுல் செய்கிறேன் என்று தான் இவர்கள் ஐ.நா.வில் வாக்குறுதி
அளித்தார்கள். ஆனால் கொடுத்த வாக்குறுதிகளை இந்த அரசாங்கம்
நிறைவேற்றவில்லை.

கடந்த அறுபத்து ஐந்து வருடங்களாக இந்த நாட்டை
ஆண்ட அரசாங்கங்கள் தமிழ் தலைவர்களுக்கு தந்த வாக்குறுதிகளை
நிறைவேற்றவில்லை. ஒப்பந்தங்கள் செய்து கைகுலுக்கிவிட்டு, கிழித்து
எறிந்தார்கள். உள்நாட்டில் நம்மை ஆண்ட ஐக்கிய தேசியக் கட்சி, ஸஸ்ரீலங்கா
சுதந்திரக் கட்சி ஆகிய இரண்டு கட்சிகளின் அரசாங்க பிரதமர்களும் இதையே
தமிழருக்கு செய்தார்கள்.

ஆனால் தமிழரை ஏமாற்றியதைப்போல், இன்று
உலகத்தை ஏமாற்ற முடியாது என்பதை இந்த அரசாங்கம் உணர வேண்டும். எம்முடன்
செய்துகொண்ட ஒப்பந்தங்களை கைகுலுக்கி, கிழித்தெறிந்ததைப்போல், கற்றுகொண்ட
பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை கிழித்தெறிய
முடியாது என்பதையும், ஐ.நா.வுக்கும், உலகத்துக்கும் வழங்கிய மனித உரிமை,
அதிகாரப்பகிர்வு ஆகியவை சம்பந்தமான வாக்குறுதிகளை மீற முடியாது என்பதையும்
இந்த அரசாங்கம் இனியாவது தெரிந்துகொள்ளவேண்டும்.

இந்த சூழ்நிலையில்,
ஐ.நா.வுக்கு செல்லாதீர்கள் என்று எங்களை சொல்லாதீர்கள். எமக்கும் எமது
உள்நாட்டு சிக்கல்களை எடுத்துகொண்டு வெளிநாட்டுக்காரனிடம் ஓடிச் சென்று
முறையிட விருப்பம் இல்லைத்தான். ஆனால், என்னசெய்வது? அந்த சூழ்நிலையை
நீங்கள்தான் உருவாக்கிவிட்டுள்ளீர்கள். நியாயமாக நடந்துகொள்ளுங்கள். ஐக்கிய
இலங்கைக்குள், அதிகாரத்தை பகிர்ந்து நாம் சமத்துவமாக வாழும் உரிமையை
அங்கீகரியுங்கள். எமக்கு உலகத்தைத் தேடிச் சென்று முறையிடும், தேவை
இருக்காது என அவர் மேலும் தெரிவித்தார்.

 

http://www.virakesari.lk/article/local.php?vid=3229

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்

VD250213-PG02-R1.jpg

  • தொடங்கியவர்

கூட்டமைப்பு தானாக முடிவு எடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் உள்ளன. ஒரு காரணம் அவர்களுக்குள் உள்ள பயம். தாம் கொலை செய்யப்படுவோம், அதற்கு நீதியும் கிடைக்காது என்பதே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.