Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்தமிழர் மனம் புண்படும்: விஜயின் புதிய படத்தில் அசின் நடிக்க எதிர்ப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

396991153Untitled-1.jpg

இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதை கண்டிக்கும் வகையில் நடிகர், நடிகைகள் யாரும் இலங்கைக்கு செல்லக்கூடாது என திரையுலக கூட்டமைப்பு தடை விதித்தது.

இதையடுத்து தமிழ் படங்களின் படப்பிடிப்புகள் அங்கு நடைபெறவில்லை. நடிகர், நடிகைகளும் இலங்கை பயணத்தை இரத்து செய்து விட்டனர். 

சினிமா பின்னணி பாடகர்கள் பலர் இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்க இலங்கைக்கு அழைக்கப்பட்டு இருந்தார்கள். தமிழ் அமைப்புகள் எதிர்ப்பால் அவர்களும் இசை கச்சேரியை இரத்து செய்துவிட்டு சென்னை திரும்பினர். 

ஆனால் அசின் மட்டும் எதிர்ப்பை மீறி இலங்கையில் நடந்த ரெடி ஹிந்தி படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்றார். இதற்கு நடிகர் சங்க செயற்குழுவில் பேசிய சத்யராஜ் உள்ளிட்ட நடிகர்கள் கண்டனம் தெரிவித்தனர். 

தமிழ் படங்களில் அசினை நடிக்க வைக்ககூடாது என்றும் எதிர்ப்பு கிளம்பியது. 

இதனால் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக தமிழ் படங்களில் நடிக்கவில்லை. தற்போது கே.வி.ஆனந்த் இயக்கும் புதுப்படத்தில் விஜய் ஜோடியாக அசின் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு இந்து மக்கள் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 

அக்கட்சியின் சென்னை மண்டல செயலாளர் எஸ்.எஸ். சிவா வெளியிட்ட அறிக்கையில் தமிழர்களை கொன்று குவித்த இலங்கைக்கு திரையுலகினரின் எதிர்ப்பை மீறி அசின் சென்று வந்தார். 

பிரபாகரனின் மகனான சிறுவன் பாலச்சந்திரன் கொலை செய்யப்பட்டதாக செய்திகள் தற்போது வெளியாகியுள்ள நிலையில் இதனால் தமிழர்கள் மனம் புண்பட்டு உள்ளனர். 

இந்த நிலையில் அசினை கே.வி. ஆனந்த் தனது படத்தில் நடிக்க வைப்பது தமிழர்களை மேலும் புண்படுத்துவதாக இருக்கும். எனவே அசினை நடிக்க வைக்க கூடாது என்று கூறியுள்ளார். 

  • கருத்துக்கள உறவுகள்

நியாயமே இல்லாமல் விஸ்வரூபத்தை எதிர்ப்பதில் முஸ்லீம்களுக்கு இருந்த தீவிரமும் ஒற்றுமையும்..எதிர்ப்பதற்கு நீதியான காரணங்களை கொண்டிருக்கும் அசின் எதிர்ப்பு விவகாரத்தில் தமிழர்களுக்கு இல்லை என்றால்..பிறகு தமிழ்நாடு என்பதை எடுத்துவிட்டு..அம்மணமாணவர்களின் நாடு என்று மாற்றிவிடலாம்..கொஞ்சப்பேர் வாழும் மலேசியாவில்கூட உப்பு போட்டு சாப்பிடும் தமிழர்கள் இருக்கிறார்கள்.தமிழ் நாட்டில்...?

தேவையில்லாத அற்ப விடயங்களில் எல்லாம் மினக்கெட்டு போராடுவதை விட தேவையான விடயங்களில் நேரங்களை செலவிட்டு போராடுவது மேல்.

  • கருத்துக்கள உறவுகள்

நியாயமே இல்லாமல் விஸ்வரூபத்தை எதிர்ப்பதில் முஸ்லீம்களுக்கு இருந்த தீவிரமும் ஒற்றுமையும்..எதிர்ப்பதற்கு நீதியான காரணங்களை கொண்டிருக்கும் அசின் எதிர்ப்பு விவகாரத்தில் தமிழர்களுக்கு இல்லை என்றால்..பிறகு தமிழ்நாடு என்பதை எடுத்துவிட்டு..அம்மணமாணவர்களின் நாடு என்று மாற்றிவிடலாம்..கொஞ்சப்பேர் வாழும் மலேசியாவில்கூட உப்பு போட்டு சாப்பிடும் தமிழர்கள் இருக்கிறார்கள்.தமிழ் நாட்டில்...?

 

வருந்துகிறேன், தங்களின் வார்த்தை பிரயோகத்தைப் பார்த்து. ஈழத்தமிழர்களுக்காக பதினைந்திற்கும் மேற்பட்டவர்களின் உயிர் ஈகையை நினைத்தாவது கட்டுப்படுத்தி இருக்கலாம்.

 

நன்றி.

 

  • கருத்துக்கள உறவுகள்

வருந்துகிறேன், தங்களின் வார்த்தை பிரயோகத்தைப் பார்த்து. ஈழத்தமிழர்களுக்காக பதினைந்திற்கும் மேற்பட்டவர்களின் உயிர் ஈகையை நினைத்தாவது கட்டுப்படுத்தி இருக்கலாம்.

 

நன்றி.

 

வன்னியன் அண்ணா...இது உணர்வும் மானமும் உள்ள தமிழர்களை நினைத்து எழுதவில்லை அண்ணா...இந்த சினிமாக்கூத்தாடிகளை கொண்டாடும் ஆனால் தமிழினவிடயங்களில் தூங்கிக்கிடக்கும் இன உணர்வில்லாதவர்களை எண்ணி எழுதியது..ஆனாலும் அந்த வார்த்தைப்பிரயோகத்தை தவிர்த்திருக்கவேண்டும்..அதுதங்களைப்போன்ற இன உணர்வுள்ள மனிதர்களையும் தாக்கிவிடும் என்பதை நான் உணர மறந்துவிட்டேன் உணர்ச்சி வேகத்தில்...மன்னிக்கவும் அண்ணா..மன்னிக்கவும் இன உணர்வுள்ள தமிழக உறவுகள்.. :(  :(

  • கருத்துக்கள உறவுகள்

வன்னியன் அண்ணா...இது உணர்வும் மானமும் உள்ள தமிழர்களை நினைத்து எழுதவில்லை அண்ணா...இந்த சினிமாக்கூத்தாடிகளை கொண்டாடும் ஆனால் தமிழினவிடயங்களில் தூங்கிக்கிடக்கும் இன உணர்வில்லாதவர்களை எண்ணி எழுதியது..ஆனாலும் அந்த வார்த்தைப்பிரயோகத்தை தவிர்த்திருக்கவேண்டும்..அதுதங்களைப்போன்ற இன உணர்வுள்ள மனிதர்களையும் தாக்கிவிடும் என்பதை நான் உணர மறந்துவிட்டேன் உணர்ச்சி வேகத்தில்...மன்னிக்கவும் அண்ணா..மன்னிக்கவும் இன உணர்வுள்ள தமிழக உறவுகள்.. :(  :(

கூத்தாடிகளின் கூத்துக்களை ரசிக்கலாமேயன்றி, உயிர்போகும் பிரச்சனைகளில் நியாய சிந்தனையை  அவர்களிடம் எதிர்பார்க்க இயலாதுதானே? உணர்வுள்ளவர்கள்தான் அவர்களையும், பின் செல்வோரையும் நெறிப்படுத்த முடியும்,

 

சிறு கவனக்குறைவுக்கு, மன்னிப்பு என்பது பெரிய வார்த்தை...தவறேதும் இல்லை,  பொடியர் தானே? :rolleyes:

 

 

 

இந்துமக்கள் கட்சியின் போராட்டம்  அசின்ல போய்   தொங்கிக் கொண்டு இருக்கு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.