Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைக்கு வலுக்கிறது எதிர்ப்பு: இன்று மாநிலங்களவையில் விவாதம்

Featured Replies

   

இலங்கைக்கு வலுக்கிறது எதிர்ப்பு: இன்று மாநிலங்களவையில் விவாதம்

 


            
பதிவு செய்த நாள் - பெப்ரவரி 27, 2013  at   7:27:03 AM
 

        
        

        
        
lanka-issue-in-LS1.png
  

        

ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா மீண்டும்
தீர்மானம் கொண்டு வரவுள்ளது. மேலும், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின்
12 வயது மகன் பாலச்சந்திரன் உயிருடன் பிடிக்கப்பட்டு பின்னர்
ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பான புகைப்படங்கள் இலங்கை
அரசுக்கு நெருக்கடியை உருவாக்கியுள்ளது. இத்தகைய நிலையில், ஈழத் தமிழர்
விவகாரம் இந்தியாவிலும் முக்கிய விவாதப் பொருளாக மாறியுள்ளது. அது இன்று
மாநிலங்களவையிலும் எதிரொலிக்க உள்ளது.


இலங்கையின் போர்க்குற்றம் மற்றும் மனித
உரிமை மீறல்கள் தொடர்பாக மாநிலங்களவையில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு
வரக் கோரி எதிர்க்கட்சிகள் சார்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. இந்த
கோரிக்கையை வலியுறுத்தி அதிமுக சார்பில் மைத்ரேயன், திமுக சார்பில்
திருச்சி சிவா, இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் டி. ராஜா உள்ளிட்ட
எம்.பி.,க்கள் மாநிலங்களவையில் கடிதம் அளித்துள்ளனர். மேலும், பாரதிய ஜனதா
கட்சியைச் சேர்ந்த வெங்கையா நாயுடு, சிவசேனா கட்சியின் சஞ்சாய் ராட்
ஆகியோரும் இதே கோரிக்கையை வலியுறுத்தி கடிதம் சமர்ப்பித்துள்ளனர்.
இதையடுத்து, இதுதொடர்பாக இன்று மதியம் 12 மணியளவில் மாநிலங்களவையில்
சிறப்பு விவாதம் நடைபெறும் என தெரிகிறது.


இலங்கை விவகாரத்தில் இந்தியா கடைப்பிடித்து வரும் நிலைப்பாட்டுக்கு அதிமுக, பாரதிய ஜனதா உள்ளிட்ட
எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி கூட்டணிக் கட்சியான திமுகவும் எதிர்ப்பு
தெரிவிப்பது மத்திய அரசுக்கு அரசியல் ரீதியாக அழுத்தத்தை கொடுக்கும் என
கருதப்படுகிறது. மேலும், காங்கிரஸ் கூட்டணி அரசின் வெளியுறவுக் கொள்கை
குறித்து எதிர்க்கட்சிகள் இன்று கடும் விமர்சனங்களை முன்வைக்கலாம் என்றும்
கருதப்படுகிறது. மேலும், வெளியுறவுத்துறை அமைச்சர் இதுகுறித்து அவையில்
விளக்கம் அளிக்க கோரிக்கை விடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால், இலங்கை விவகாரத்தில் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா
உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.


ஜெனிவாவில், கடந்த முறை இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களித்தது போல், இம்முறையும் வாக்களிக்க வேண்டும் என்ற
கோரிக்கை ஒருபுறம் இருக்க, அந்நாட்டுக்கு எதிராக இந்தியாவே தீர்மானம்
கொண்டு வரவேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது. இதனிடையே,
அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானத்தில் தெளிவான நிலைப்பாடு இல்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.


இலங்கையில் மனித குலத்துக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட போர்க் குற்றங்களுக்கும் மனித உரிமை
மீறல்களுக்கும், இந்தியாவின் நடவடிக்கை என்ன என்பது மாநிலங்களவையில்
நடைபெறும் இன்றைய விவாதத்தின் மூலம் ஓரளவு தெரிந்துவிடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

 

http://puthiyathalaimurai.tv/lankan-war-crimes-ls-to-discuss-today

து. ராஜா மிகச்சிறப்பாக தமிழர்களின் பிரச்சனையை முன்வைத்தார். திட்டமிடப்பட்ட கட்டுமான இன அழிப்பு நிகழ்கிறது அதைத் தடுக்கவேண்டும், சர்வதேச விசாரணையை முன்வைத்தார்.

 

மைத்திரேயன் ஆவணங்களையும், காணொளி குறுந்தகடுகளை முன்வைத்தது முக்கியமானதே...

 

சிவாவின் பேச்சு அமெரிக்கா தீர்மானத்தினை சுற்றியே இருந்தது, ஒருவழியாய் சர்வதேச விசாரனைக்கு வந்து சேர்ந்தார்.

 

வெங்கய நாயுடுவின் இலங்கை சாதகமான பேச்சு சர்வதேச விசாரணையை கோரியது. “போர் நடந்த போது காங்கிரஸின் தமிழக பங்காளிகள் என்ன செய்தார்கள்” என்கிற கேள்வி முக்கியமானது.

 

திரிணாமுல், சிவசேனாவும் ஆதரவு குரல் எழுப்பியது. திரிணாமுல் பந்தோஉபாத்யாய ” இன அழிப்பு” என்கிற வார்த்தையே முக்கியம் அது மனித உரிமை மீறல் என்பது மட்டுமல்ல என்பது முக்கியப் பதிவு....

 

தொடர்ந்து நடக்கிறது விவாதம்

 

http://puthiyathalaimurai.tv/

http://rajyasabha.nic.in/rsnew/webcast/rstvlive.html

 

 

- Thirumurugan Gandhi

மத்திய அரசின் மீதான நம்பிக்கை இழந்து விட்டோம்- திமுக:

 

இலங்கை விவகாரத்தில் மத்திய அரசின் மீதான நம்பிக்கையை இழந்து விட்டோம் என திமுக உறுப்பினர் திருச்சி சிவா பேசினார்.இலங்கையில் திட்டமிட்ட இனப்படுகொலை நடக்கிறது என்பதை சுட்டிக்காட்டினார்.

 

இலங்கை போர்குற்றம் புரிந்ததற்கான ஆதாரம் அதிகரித்துக் கொண்டே வருகிறது.இந்நிலையில் இந்தியா ஒரு கண்டனம் கூட இலங்கைக்கு எதிராக தெரிவிக்கவில்லை. இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியாவே கொண்டு வந்திருக்க வேண்டும். அதை செய்ய இந்தியா தவறி விட்ட நிலையில் அமெரிக்க தீர்மானத்தையாவது இந்தியா ஆதரிக்க வேண்டும்.

 

siva-dmk.png



இலங்கையில் இன்றளவும் தமிழ் பெண்கள் மானம் சூறையாடப்படுகிறது. ஒவ்வொரு தமிழனும் ஒரு சிங்கள ராணுவ வீரனின் கண்காணிப்பில் இருக்கும் அவல நிலையே இருக்கிறது.பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் கொல்லப்பட்ட விதம் மிகக் கொடூரமானது என்று கண்டனத்தை பதிவு செய்தார்.

அரசியல் கட்சிகள் கண்டனக் குரலை பதிவு செய்துள்ள நிலையில், மாநிலங்களவையில் பதிலளித்துப் பேசிய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் மிகவும் சூசகமான விளக்கங்களை அளித்தார்.

 

 

சல்மானின் சூசக வார்த்தைகள்.. நெருக்கடிக்கு பணியுமா மத்திய அரசு?

 

இலங்கையை எதிரியாக கருத முடியாது. போர் நடைபெற்றது இலங்கை வரலாற்றில் மிகவும் மோசமான காலம். குற்றம் புரிந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். தமிழர்களின் உணர்வுகளுக்கு காங்கிரஸ் மதிப்பளிக்கிறது. ஜெனிவாவில் கொண்டு வரப்பட இருக்கும் ஐ.நா., மனித உரிமைக் கவுன்சில் தீர்மானம் குறித்து இப்போது எதுவும் கூற முடியாது. ஜெனீவா தீர்மான விவகாரத்தில் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கப்படும். இலங்கை தமிழர்கள் பிரச்னைக்கு சட்டரீதியாக தீர்வு காணப்பட வேண்டும். இலங்கை பிரச்னை குறித்து தமிழக மக்களுக்கு மட்டுமல்ல நாட்டு மக்கள் அனைவருக்கும் கவலை. இருந்தாலும் வேறு நாட்டின் பிரச்னையில் தலையிட முடியாது என்றார்.

 

541583_426917287386825_1847996246_n.jpg

இலங்கையில் போர்குற்றம் நடந்தது : காங்கிரஸ்

 

இலங்கை ராணுவம் போர்குற்றம் புரிந்ததை மறுப்பதற்கில்லை என காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஞானதேசிகன் பேசினார்.


போர்குற்றத்தில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

 

இந்திய அரசுக்கு அளித்த உறுதிமொழிகளை இலங்கை நிறைவேற்ற வேண்டும் என கூறிய அவர் இலங்கை விவகாரத்தில் உணர்ச்சிவசப்படுவதை விட தீர்வு காண்பதே முக்கியம் என்றார். இலங்கை தமிழர்களுக்கு காங்கிரஸ் கட்சி மட்டுமே உதவுகிறது என்றார்.


ஞானதேசிகனின் இந்த கருத்துக்கு திமுக எம்பி திருச்சி சிவா, இந்திய கம்யூ கட்சியின் ராஜா ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

 

 

சிவசேனா கண்டனம்: இலங்கைப் பிரச்னையை தமிழர் பிரச்னையாக மட்டும் கருதக்கூடாது, தேசிய பிரச்னையாக பார்க்க வேண்டும் என சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவுத் கூறினார்.


 

தெலுங்கு தேசம் கண்டனம்: இலங்கை போர்குற்றம் குறித்து சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை தேவை என தெலுங்கு தேச கட்சி வலியுறுத்தியுள்ளது. மேலும் இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைகளுக்கு இந்தியா கண்டனம் தெரிவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.

 

 

முன்னதாக பேசிய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் : தமிழருக்கு அரசியல் சாசன உரிமை கிடைக்க இந்தியா தொடர்ந்து இலங்கையிடம் வலியுறுத்தி வருகிறது என்றார்.

"வேடிக்கை பார்க்க முடியாது": பா.ஜ., விவாதம்இலங்கை போர்குற்றம் மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய பா.ஜ., உறுப்பினர் வெங்கையா நாயுடு:இலங்கை, இந்தியாவின் நட்பு நாடாகவே இருந்தாலும், ஒரு சிறுவன் படுகொலை செய்யப்பட்டுள்ளதை எப்படி வேடிக்கை பார்க்க முடியும். இந்தியா, இலங்கைக்கு உதவிகள் பல செய்து வருகிறது. அந்த வகையில் ஏன் இலங்கையை தட்டிக் கேட்கக் கூடாது. இலங்கை போர்குற்றம் குறித்து நேர்மையான, சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும்.

 

இலங்கைத் தமிழர்களுக்கு சமஉரிமை, அதிகார பங்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெங்கையா நாயுடு வலியுறுத்தினார்.

 

venkiah-naidu.png

 

 

இலங்கையில் ஊடகம், செஞ்சிலுவைச் சங்கம் என யாருக்கும் சுதந்திரம் இல்லை. தமிழர்களை கொல்லும் இலங்கைக்கு இந்தியா எப்படி உதவி செய்தது என கேள்வி எழுப்பினார்.

அதிமுக உறுப்பினர் மைத்ரேயன் பேசுகையில்: இலங்கை தமிழர் உரிமையை பாதுகாக்க ஐமு கூட்டணி அரசு தவறி விட்டதாக குற்றஞ்சாட்டினார்.

 

 

இலங்கைத் தமிழர்களின் உண்மையான நிலை குறித்து மத்திய அரசுக்கு தெரியவில்லைஎன்றும் இலங்கையில் தமிழர்களின் அடையாளம் திட்டமிட்டு அழிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.போர் முடிந்த பிறகும் தமிழர்கள் மீது அடக்குமுறை தொடர்வதாக அவர் தெரிவித்தார்.

 

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி உறவுகளே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.