Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பயணிக்க வேண்டிய தூரம் அதிகம்

Featured Replies

சிறீலங்கா அரசாங்கத்துக்கு அச்சத்தையும் உலகெங்கிலுமுள்ள தமிழர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியிருந்த 
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் கூட்டம் சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனிவா நகரில் 
ஐநா மனித உரிமைகள் ஆணையாளர்  நவநீதம்பிள்ளையின்
தலைமையில் ஆரம்பமாகியுள்ளது. அடுத்த மாதம் 22 ஆம் திகதி வரை  நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் உலகின் பல்வேறு நாடுகளில் நிலவும் ஏழ்மை, இன ரீதியிலான பாகுபாடு, ராணுவ நடவடிக்கைகள் உள்ளிட்டவை காரணமாக ஏற்பட்டுள்ள மனித உரிமை மீறல் குறித்தும், சம்பந்தப்பட்ட நாடுகள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் ; விவாதித்து முடிவெடுக்கப்பட உள்ளது.
முக்கியமாக இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல் தொடர்பான விவாதம் மார்ச் மாதம் 20-ஆம் திகதி எடுத்துக்கொள்ளப்பட இருக்கிறது.சிறலங்கா அரசின் போர்குற்றங்கள் மற்றும் மாநிடத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக காட்டமான அறிக்கையை வெளியிட்டிருந்த நவநீதம்பிள்ளை இந்தக் கூட்டத்தொடரின் ஆரம்ப உரையிலும் சிறீலங்கா அரசின் செயற்பாட்டை கடுமையாக விமர்சித்திருந்தார்
இந்தக் கூட்டத் தொடரில் பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சி சிறீலங்கா இisத்த போர்க்குற்றங்களை ஆதாரத்துடன் அம்பலப்படுத்தும் நோ பயர் சூன் என்ற ஆவணப்படத்தை திரையிடவுள்ளது சிறீலங்கா அரசை கிலிகொள்ள வைத்துள்ளது.இந்த ஆவணப்படத்தில் தமிழீழ தேசித்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் இளையபுதல்வர் பாலச்சந்திரனை சிறீலங்கா படையினர் பிடித்து வைத்து படுகொலை செய்ய நிழல்படம் உள்ளடக்கப்பட்டிருப்பது சர்வதேச அளவில் அதிர்வலைகளை தோற்றுவித்திருக்கிறது.இந்த ஆவணப்படத்தை மனித உரிமைகள் பேரவையில் திரையிடக் கூடாது என்று சிறீலங்கா அரசு எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறது.ஆனாலும் இந்தப்படம் திட்டமிட்டபடி திரையிடப்படும் என்று சனல் 4 தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
இதேவேளை சிறீலங்காவுக்கு எதிராக இந்தக் கூட்டத்தொடரில் அமெரிக்கா மீண்டும் தீர்மானம் கொண்டு வர உள்ளது முக்கியத்துவம் பெறுகிறது முந்தைய மனித உரிமை மாநாட்டில், இந்வாறான ஒரு தீர்மானத்தை அமெரிக்கா கொண்டுவந்திருந்தது.அந்த தீர்மானத்தில்  நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை விரைவாக அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.அத்துடன் இதை கண்காணிக்க அனைத்துலக கண்காணிப்புக் குழுக்களை நியமிக்கவும் ஆலோசனை முன்வைக்கப்பட்டிருந்த நிலையில் இந்தியா தலையிட்டு அதை தடுத்ததுடன் இந்தத் தீர்மானத்தை மென்போக்குடைய ஒரு தீர்மானமாக மாற்றி சிறீலங்கா அரசை சர்வதேச அழுத்தங்களில் இருந்து காப்பாற்றியது
இந்த நிலையில் இப்போது இரண்டாவது தடவையாக அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தின் தாக்கத்தில் இருந்து தங்களை இந்தியா காப்பாற்றும் என்று சிறீலங்கா மலைபோல நம்பியுள்ளது.
ஆனால் இம்முறை சிறீலங்காவுக்கு  எதிரான தீர்மானத்தை எந்தவித மாற்றமும் இல்லாமல் ஆதரிக்க வேண்டும் என பல்வேறு அமைப்புகள் இந்திய அரசை வலியுறுத்தி வருகின்றன.ஆனால் இந்த தீர்மானத்தை ஆதரித்து சர்வதேச போர் குற்ற விசாரணை ஒன்று நடந்தால் இந்த போர் குற்றங்களின் பின்னணியல் இந்தியாவின் பங்கு இருந்தது அம்பலத்துக்கு வந்துவிடும் என்பதால் இந்தியா கடந்த முறை செய்ததைப்போலவே இம்முறையும் அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை நீர்த்துப்போகச் செய்யும் வேலையையே செய்யும் என்று ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.அதே நேரம் அமெரிக்கா கொண்டுவரவுள்ள தீர்மானம் எவ்வாறான உள்ளடங்களை கொண்டிருக்கிறது. அது பாதிக்கப்பட்ட ஈழத்தமிழ் மக்களின் அபிலாசைகளை பிரதிபலிக்குமா? அல்லது அமெரிக்காவின் பிராந்திய நலன்கான நிகழ்ச்சி நிரலுக்குள் ஈழத்தமிழர்களை பயன்பயன்படுத்தும் ஒரு முயற்சியாக அமையுமா என்பது தெரியவில்லை.
இந்தக் கூட்டத்தில் அமெரிக்காவின் நிலைப்பாடு எப்படியாக இருக்கும் என்பதை சர்வதேச நிறுவனங்களுக்கான அமெரிக்காவின் துணைச் செயலர் எஸ்தர் பிரிம்மர் கோடிட்டுக் காட்டியுள்ளார்.
மனித உரிமைகள்  பேரவையின் இந்த நடப்பு அமர்வில் துவக்க உரையாற்றிய அவர், சிரியா, இஸ்ரேல் மற்றும் வட கொரியாவில் நிலவும் மனித உரிமைகள் சூழல் குறித்துக் கவலை வெளியிட்டார். சிறீலங்கா  அரசு தான் அமைத்த நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகளைக் கூட முழுமையாக அமல்படுத்தவில்லை என்று கூறிய அவர் இந்த ஆண்டு அமெரிக்கா மீண்டும் ஒரு தீர்மானத்தை முன்மொழியும் என்றார்.
'கடந்த ஆண்டு மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானமானது, இலங்கையில் இருக்கும் சிவில் உரிமைக் குழுக்கள் களத்தில் தமது பணிகளை முன்னேடுக்க உத்வேகமளித்ததாகவும் இந்த ஆண்டு தாங்கள் கொண்டுவரும் தீர்மானம்  இலங்கையில் ஏற்படும் முன்னேற்றங்கள் குறித்து சர்வதேச சமூகம் கண்காணிக்கிறது என்பதை உறுதிப்படுத்தவும் நல்லிணக்கப்பாட்டை காண்பது மற்றும் பொறுப்புக் கூறல் விடயம் தொடர்பான உதவிகளை வழங்குவது தொடர்பாகவும்  இருக்கும் என்றும் இந்த தீர்மானம் சிறீலங்கா  அரசுடன் இணைந்த ஒரு கூட்டு முயற்சியாக இருக்கும் என்று அமெரிக்கா நம்புகிறது'என்றும் சர்வதேச நிறுவனங்களுக்கான அமெரிக்காவின் துணைச் செயலர் எஸ்தர் பிரிம்மர் குறிப்பிட்டார்.
அவரது இந்த உரை இரண்டு விடயங்களை மறைமுகமாக சுட்டிக்காட்டியிருக்கிறது.
ஒன்று சிறீலங்கா அரசு அமெரிக்காவின் ஆலோசனையை ஏற்று அதனுடன் ஒத்துழைத்து செயற்பட ஒப்புக்கொண்டால் போர்குற்றம் மாநிடத்துக்கு எதிரான குற்றங்கள் என்ற வார்த்தைப்பிரயோகங்கள் எல்லாம் நல்லிணக்கம் என்ற ஒன்றை சொல்லுக்குள் அமுக்கப்பட்டுவிடும்.
மற்றது சிறீலங்கா அரசு இந்த விடயத்தில் முரண்டுபிடித்தால் போர்குற்றம் மாநிடத்துக்கு எதிரான குற்றங்கள் என்கின்ற குற்றச்சாட்டுக்கள்  முன்னரை விட அதிக வீச்சம் பெறுவதுடன் சிறீலங்கா மீது பொருளாதார தடை விதிக்குமளவுக்கு நிலைமை செல்லக் கூடும்.
இந்த இரண்டில் எந்த தேர்வை சிறீலங்கா மேற்கொள்ளப் போகிறது என்பதற்கான பதிலை கண்டுபிடிப்பதற்கு அவ்வளவு சிரமப்;படத்தேவையில்லை 
அதாவது முதலில் வாய் வீரம் காட்டுவதும்  பின்னர் சரணாகதியடைவதும் தான் சிறீலங்காவின் அரசியல் வரலாறு. எனவே என்னதான் தனக்கெதிரான குற்றசாட்டுக்களை சிறீலங்கா முதலில் மறுத்தாலும் பின்னர் நல்லிணக்கம் அரசியல் தீர்வுக்கான கால அவகாசம் என்ற வார்த்தை ஜாலங்களை முன்வைத்து இந்தக் கண்டத்திலிருந்து தப்பத்துக்கொள்ளவே முயலும் என்பது பொதுவான கருத்தாகும். ஏற்கனவே இந்த ஆலோசனையை இந்தியா சிறீலங்காவுக்கு வழங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது கவனிக்கத்தக்கது
.வியட்நாம் யுத்தம் நடந்த போது அமெரிக்க விமானப்படையின் குண்டுவீச்சில்  எரிகாயங்களுக் குள்ளாகிய நிலையில் வீதியில் நிர்வாணமாக ஓடிய ஒரு சிறுமியின் புகைப்படம் வியட்நாமின் தலைவிதியை மாற்றியது. இப்போது அதையொத்த நிலையிலே பாலகன் பாலச்சந்திரனின் புகைப்படம் வெளியாகி இருக்கிறது.இதுவும் சர்வதேச அளவில் அதிர்வலைகளை தோற்றுத்திருந்தாலும் அது சிறீலங்காவின் தலைவிதியை மாற்றியமைக்குமா என்பது இன்னமும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.தமிழர்களாக நாம் உலகத்தமிழர்களாக ஒன்றுபட்டு அதற்காக இன்மும் அதிகமான உழைக்கவேண்டும் என்பதையும் அதற்காக நாங்கள் பயணிக்க வேண்டிய தூரம் அதிகம் உள்ளது என்பதையும் சமீபத்திய நிகழ்வுகள் உணர்த்துகின்றன.

நன்றி உங்கள் ஆய்வுக்கு.

 

உலகத் தமிழர்கள் ஒற்றுமையாக ஒன்றுபட வேண்டிய நேரமிது.

 

அமெரிக்கா இலங்கையை தன் நலன்களுக்கு ஏற்பவே நெருக்கும், அதுவும் மெல்ல மெல்லவே.

  • கருத்துக்கள உறவுகள்

.......

ஒன்று சிறீலங்கா அரசு அமெரிக்காவின் ஆலோசனையை ஏற்று அதனுடன் ஒத்துழைத்து செயற்பட ஒப்புக்கொண்டால் போர்குற்றம் மாநிடத்துக்கு எதிரான குற்றங்கள் என்ற வார்த்தைப்பிரயோகங்கள் எல்லாம் நல்லிணக்கம் என்ற ஒன்றை சொல்லுக்குள் அமுக்கப்பட்டுவிடும்.
 
மற்றது சிறீலங்கா அரசு இந்த விடயத்தில் முரண்டுபிடித்தால் போர்குற்றம் மாநிடத்துக்கு எதிரான குற்றங்கள் என்கின்ற குற்றச்சாட்டுக்கள்  முன்னரை விட அதிக வீச்சம் பெறுவதுடன் சிறீலங்கா மீது பொருளாதார தடை விதிக்குமளவுக்கு நிலைமை செல்லக் கூடும்.
 
இந்த இரண்டில் எந்த தேர்வை சிறீலங்கா மேற்கொள்ளப் போகிறது என்பதற்கான பதிலை கண்டுபிடிப்பதற்கு அவ்வளவு சிரமப்படத்தேவையில்லை 
 
அதாவது முதலில் வாய் வீரம் காட்டுவதும்  பின்னர் சரணாகதியடைவதும் தான் சிறீலங்காவின் அரசியல் வரலாறு. எனவே என்னதான் தனக்கெதிரான குற்றசாட்டுக்களை சிறீலங்கா முதலில் மறுத்தாலும் பின்னர் நல்லிணக்கம் அரசியல் தீர்வுக்கான கால அவகாசம் என்ற வார்த்தை ஜாலங்களை முன்வைத்து இந்தக் கண்டத்திலிருந்து தப்பத்துக்கொள்ளவே முயலும் என்பது பொதுவான கருத்தாகும். ஏற்கனவே இந்த ஆலோசனையை இந்தியா சிறீலங்காவுக்கு வழங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது கவனிக்கத்தக்கது.
 
.......தமிழர்களாக நாம், உலகத்தமிழர்களாக ஒன்றுபட்டு அதற்காக இன்மும் அதிகமான உழைக்கவேண்டும் என்பதையும் அதற்காக நாங்கள் பயணிக்க வேண்டிய தூரம் அதிகம் உள்ளது என்பதையும் சமீபத்திய நிகழ்வுகள் உணர்த்துகின்றன.

 

நல்ல ஆய்வு. பயணிக்க வேண்டிய தூரம் அதிகமானாலும், தமிழர்கள் தங்களுக்குள் காலை வாரிக் கொண்டிராமல் அனைவரும் (மாற்றுக்கருத்து மகா மாணிக்கங்களும் சேர்த்து) ஒன்று சேர்ந்து பயணித்தால், சீக்கிரம் எல்லையை-இலக்கை அடையலாம். இல்லையெனில், "ஈழத்தில் தமிழர்கள் வாழ்ந்தார்கள்" என்று எம் சந்ததியினர் காலச் சுவடுகளில் படித்துக் கொள்ளவேண்டியதுதான்.

 

  • தொடங்கியவர்
எந்த உலக ஒழுங்கின் தேவைகளுக்காக நாங்கள் அழிக்கப்பட்டோமோ யாரெல்லாம் எங்களை அழிப்பதற்கு துணைபோனார்களோ அவர்களே எங்களுக்குரிய நீதியை வழங்குவார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.நாங்கள் பலமான நிலையில் இருந்த போது எங்களைப் புறக்கணித்த சக்திகள் இப்போது பலவீனமான நிலையில் இருக்கும் போது எங்கள் மீது கரிசனை கொண்டு எங்களுக்கு ஓடொடி வந்து உதவுவார்கள் என்று நம்புகிறோம்.என்னபை; பொறுத்த வரை தனிப்பட்ட முறையில் இது இலவு காத்த கிளியின் நிலைக்கு ஒப்பானது  என்பதே எனது அபிப்பிராயமாகும்.
இந்த உலக ஒழுங்கில் தமிழ் இனம் என்ற ஒரு இனக்குழுமத்ததை புறந்தள்ளிவிட்டு யாரும் பயணிக்க முடியாது என்ற நிலையை உருவாக்காதவரை எமக்கான விடிவு என்பது கானல் நீராகவே இருக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.