Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கேகாலை பள்ளிவாசல் மீது தாக்குதல் - விசாரணை ஆரம்பம் என்கிறது அரசாங்கம்:-

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கேகாலை பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இன்று அதிகாலை வேளையில் இந்தத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதாகக் குறிப்பிடப்படுகிறது.

 

தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 

கேகாலை ஜூம்மா பள்ளிவாசல் மீது இன்று அதிகாலை இனந்தெரியாத நபர்கள் கற்களை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

 

இந்தத் தாக்குதல் சம்பவம் குறித்து சபரகமுவ மாகாண முதலமைச்சர் மஹீபால ஹேரத், காவல்துறையினருடன் அவசர பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

 

தாக்குதல் சம்பவத்தில் பள்ளிவாசலின் சில ஜன்னல்கள் சேதமடைந்துள்ளன.

குறித்த பள்ளிவாசல் வளாகத்திற்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/89148/language/ta-IN/article.aspx

'ஹிஜாப் அணிய வேண்டாம்" : மாத்தறையில் முஸ்லிம் மாணவிகள் மீது தாக்குதல்

 

மாத்தறை திக்வல்லை பகுதியைச் சேர்ந்த மூன்று முஸ்லிம் மாணவிகள் மாத்தறையில் வைத்து இனந்தெரியாதோரினால் தாக்கப்பட்டுள்ளனர். நேற்று புதன்கிழமை மாலை 5.30 மணியளவில் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.

 

 

திக்வல்லையில் இருந்து மாத்தறைக்கு மாலைவகுப்புக்கு மூன்று முஸ்லிம் மாணவிகளும் தனியாக சென்றுள்ளனர். வகுப்பு முடிந்து வீடு திரும்பும் போது மாத்தறை மகானாம பாலத்தின் அருகில் வைத்து தடிகளுடன் வந்த பேரினவாத இளைஞர்கள் சிலர் இவர்களைத் தாக்கியுள்ளனர். இனிமேல் ஹிஜாப், அபாயா அணியக் கூடாது என்றும் பொலிஸில் புகார் செய்யக் கூடாது என்றும் எச்சரித்துள்ளனர்.


பயத்தினால் பொலிஸாருக்கு அறியப்படுத்தாது வீடு திரும்பியுள்ளனர். பிறகு பெற்றோருடன் வந்து பொலிஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளனர். பொலிஸார் உடன் சம்பவ இடத்துக்கு விரைந்து வினவிய போது அப்படி எதுவும் நடக்கவில்லையென சம்பவ இடத்துக்கு அருகில் இருந்தோர் கூறியுள்ளனர்.

 

http://www.virakesari.lk/article/local.php?vid=3248

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Hijab.jpg

face.jpg By Farhan 
2013-02-28 16:56:20

மாத்தறை திக்வல்லை பகுதியைச் சேர்ந்த மூன்று முஸ்லிம் மாணவிகள் மாத்தறையில் வைத்து இனந்தெரியாதோரினால் தாக்கப்பட்டுள்ளனர். நேற்று புதன்கிழமை மாலை 5.30 மணியளவில் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.


திக்வல்லையில் இருந்து மாத்தறைக்கு மாலைவகுப்புக்கு மூன்று முஸ்லிம் மாணவிகளும் தனியாக சென்றுள்ளனர். வகுப்பு முடிந்து வீடு திரும்பும் போது மாத்தறை மகானாம பாலத்தின் அருகில் வைத்து தடிகளுடன் வந்த பேரினவாத இளைஞர்கள் சிலர் இவர்களைத் தாக்கியுள்ளனர். இனிமேல் ஹிஜாப், அபாயா அணியக் கூடாது என்றும் பொலிஸில் புகார் செய்யக் கூடாது என்றும் எச்சரித்துள்ளனர்.

பயத்தினால் பொலிஸாருக்கு அறியப்படுத்தாது வீடு திரும்பியுள்ளனர். பிறகு பெற்றோருடன் வந்து பொலிஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளனர். பொலிஸார் உடன் சம்பவ இடத்துக்கு விரைந்து வினவிய போது அப்படி எதுவும் நடக்கவில்லையென சம்பவ இடத்துக்கு அருகில் இருந்தோர் கூறியுள்ளனர்.

 
  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பு உடை வெப்பத்தைத் தக்கவைக்கும். குளிர்நாடுகளுக்கே இது பொருந்தும்.. இவர்கள் ஏன் இந்த நிற உடையை அணிகிறார்கள்? :unsure:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அவர்களுக்கு இந்த உடையில் இருப்பது சௌவ்கரியமாக இருக்குது போல பாவம் அவர்கள் விட்டுவிடுங்கள். :D     

 

 

இப்படி சொல்லி தெய்வக்குற்றத்துக்கு  ஆளாகப் போகின்றீர்கள்.  :o
 

அரசின் அமைச்சர்கள் இதை எதிர்க்காத போது இவை உள்வீட்டு சதிகள் போலவும் எனக்கு சந்தேகம் வருகிறது. தமிழ்ர் பிரச்சனைகளுக்கான தீர்வு கூட்டங்களுக்குள் கஸ்டப்பட்டு முஸ்லீம்களை செருகிவிட்டால் அப்புறம் தீர்வு என்றது என்றுமே வராது பார்த்துக்கொள்ளலாம் என்பது அஸ்வர், கக்கீம், பௌசி போன்றோரால் அரசுடன் சேர்ந்து போட்ட திட்டமாக இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

கல்வீசியதையெல்லாம் தாக்குதல் என்று சொல்லக்கூடாது.. :D பிறகு கொத்தணிக்குண்டுகளுக்கு மதிப்பில்லாமல் போய்விடும்.. :o

  • கருத்துக்கள உறவுகள்

வரும் விளைவுகளை பற்றி யோசிப்பதை விட முஸ்லிம்களுக்கும் ஒரு பாடம் படிப்பிக்க வேண்டும் என்பதில் சிங்களவர்கள் முனைப்பாக உள்ளனர்.தெற்கில் இனவாதம் பேசுபவரும்,இனவாத செயலை செய்பவரும் சிறிலங்கா எனும் நாடு உள்ள வரை மாறாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.