Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத் தமிழர்களின் தன்னாட்சியை அமெரிக்கா ஏற்றுக்கொண்டது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யூட் நீங்கள் சொல்லும் செய்தி உண்மையானதா? அப்படியாயின் plote இயக்கம் ஈழத்தில் இருந்து மட்டும் இல்லை உலகத்தில் இருந்தே அழிக்கப்படவேண்டியது

தமிழீழத்தில் காதல் கொண்ட வைகைபுயல் வடிவேலு

நண்பரே

90களில் தாராக்கியை யாரென்றே தெரியாமல் அவரது ஆக்கங்களை விரும்பிப்படித்த காலத்தில் நான் படித்த ஒரு ஆக்கத்திலேயே தாராக்கி இதை எழுதியிருந்தார். பிற்காலத்தில் கூட இவர் இது பற்றி இன்னும் ஒரு ஆக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். அந்த காலத்தில் அவர் விடுதலைப்புலிகளின் ஆதரவாளராக கருதப்பட்டதும் இல்லை.

இடையே திஸ்ஸ ஜெயக்கொடி இந்த விடயம் பற்றி எழுதிய ஒரு ஆக்கத்தையும் படித்த நினைவு உண்டு. நான் அறிந்து கொண்ட தகவல்களின் படி மக்கள் விடுதலைக்கழகத்துக்கும் சிறி லங்காவின் பாதுகாப்பு அமைச்சுக்குமான இரகசிய ஒப்பந்தம் உண்மை என்றே நம்புகிறேன்.

  • Replies 105
  • Views 12.4k
  • Created
  • Last Reply

ஜூட் இதில் ஆச்சரியப் பட ஒன்றுமில்லை,

உமா மகேசுவரனுக்கு ஜீவிபி,விஜே குமாரணதுங்க, ரோ வின் அதிகாரிகள் எல்லாரிடமும் தொடர்பு இருந்தது.அவருடன் இருந்த ஒருவர் நிதர்சனதில் இது பற்றி எழுதி உள்ளார்.அதுலத் முதலிக்கும் உமாவுக்கும் இருந்த தொடர்பு பற்றி அவர் வெகு விபரமாக எழுதி உள்ளார்.மாலை தீவுச் சிறையில் இருந்த தோழர்களை விடுவிக்க உமா அதுலத் முதலியின் உதவியை நாடினார்.

அஜீவன் நீங்கள் ப்லொட்டுக்கு வெள்ளை அடிக்காமல் உமாவுடன் நெருங்கியவர் என்ற ரீதியில் உங்களுக்குத் தெரிந்தவற்றை உண்மையாக எழுதுவதே , நீங்கள் தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்துக்குச் செய்யும் உதவியாக இருக்கும்.இன்றும் இவ்வாறு பல்வேறு சக்திகள் இவ்வாறான இயக்கங்களைப் பயன் படுதுகின்றன என்பதைப் பற்றி புரிந்து கொள்ள உதவும். நீங்கள் இருந்த காலத்தில் தான் உமாவினால் பெங்களூரில் கோட்டல் ஒன்று வாங்கப் பட்டது.இயக்கத்தின் நிதியில் இருந்து தனிப்பட்டவர்கள் கைக்கு இவ்வாறு சொத்துக்கள் கைமாற்றப்பட்டன.கேள்வி கேட்டவர்கள் காணாமல் போயினர்.உமாவுக்குப் பக்கத்திலயே இருந்த உங்களுக்கு இதெல்லாம் தெரியாமல் போகுமா?

உங்களுக்கு தெரிந்தெடுத்த சம்பவங்கள் மட்டுமே நாபகத்தில் வராது தானே?

இதுக்கும் சும்மா படம் போட்டு நழுவாம நேரடியாப் பதிலைச் சொல்வீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்,ஏனெனில் இங்கு பல பேர் வழிகள் பல்வேறு நோக்கங்களுடன் நுழைந்துள்ளனர், அவர்களுக்கு நீங்கள் துணை போக மாட்டீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது,ஆகவே நேர்மையான பதிலை எதிர் பார்க்கிறேன்.

எனக்கான நெருக்கத்துக்கும்

அவரது அரசியல் தன்மைகளுக்கும் தொடர்பிருக்கவில்லை ஜுட் - நாரதர்.

அந்த வகையில் எனக்கு மகிழ்சியே.

அது கூட 1983ம் ஆண்டு கலவரம் பற்றிய செய்திகளை

சிங்களத்தில் திரட்டி தமிழில் சிங்கை

ஊடகங்களில் நான் முன் வைத்த விதம்.........பற்றி

இலங்கை தமிழர்கள் சொன்னதனால்தான்.

ஆரம்பத்தில் என்னை ஒரு சிங்கப்பூர் தமிழனாக

எண்ணியவர்களுக்கு இவை வித்தியாசமாகப் பட்டிருக்கலாம்.

அன்று

நான் பேசும் போது

இப்போது பேசும் இலங்கை தமிழ் வரவே வராது.

இந்திய அல்லது சிங்கை தமிழே வரும்.

அது என்னோடு பழகியவர்களுக்கு மட்டுமே புரியும்.

எப்படியோ என்னை பற்றிய தகவல்

சிங்கப்பூர் வந்த உமா மகேஸ்வரனுக்கு சொல்லப்பட்டடிருக்கிறது.

சில நண்பர்கள் வந்து

முக்கியமான ஒருவர் உன்னை

சந்திக்க விரும்புகிறார் என அழைத்துச் சென்ற போதுதான்

அவரை சிலோன் கிளப்பில் வைத்து முதன் முதலாக சந்தித்தேன்.

முதன் முதலாக

என்னை அவர் சிங்கப்பூரின் சிலோன் கிளப்பில் வைத்து

சந்தித்த போது தன்னை முகுந்தன்

என்று அறிமுகப்படுத்திக் கொண்டார்.

கண்டவுடன்

நான் உங்களை எங்கோ பார்த்ததாக ஞாபகம் என்றேன்.

அவர் முதலில் இருக்காது என்றாலும்

நான் தொடர்ந்து யோசித்துக் கொண்டிருப்பதை பார்த்து விட்டு

தான் உமா மகேஸ்வரன் என்ற உண்மையைச் சொன்னார்.

நான் இலங்கையில் இருக்கும் போது

பஸ்தியான் பிள்ளை கொலை சம்பந்தமாகத் தேடும்

புகைப்படங்கள் கொண்ட பிரசுரத்தில் உங்களை கண்டது

என் மனதில் விடுபடாமல் இருந்தது எனக் கூறினேன்.

பின்னர் புளொட் பற்றிய சில தகவல்களை சொன்னார்.

சிங்கப்பூரில் பணம் சேர்க்க ஏனையவர்களுக்கு உதவ முடியுமா என்று கேட்டு விட்டு

முடிந்தால் தமிழீழத்தின் குரல் பற்றிக் குறிப்பிட்டு

கொஞ்ச நாள் சென்னை வந்து போகும்படி கூறினார்.

யாருக்கும் எமது நட்பை வெளியே

தெரியப்படுத்த வேண்டாம் என்றும் கூறினார்.

நான் கொழும்பு வந்த போது

வாமதேவன் என்னை சிலாபம் உடப்பில் வைத்து சந்தித்தார்.

பலரும் நான் வாமனால் புளொட்டுக்குள் வந்தவன்

என்றே நம்பினார்கள்.

வந்த பின் யாரோடும் எதுவும் பேச வேண்டாம்

என்று சொன்னார்.

காலப் போக்கில் நான் எல்லோருடனும்

நட்பு பாராட்டத் தொடங்கினேன்.

ஏனைய இயக்க நண்பர்களோடும் பேசுவேன்.

எனக்கு அரசியல் தெரியாதது மட்டுமல்ல

இந்த சாதி மத பிரதேச வேறுபாடுகளே தெரியாதவனாக

இருந்த நேரம் அது.

இது பற்றிய சில கேள்விகள் தொடுக்கும் போதெல்லாம்

இந்த மடையனுக்கு ஒரு மண்ணும் விளங்குதில்லயடா

என்று கோபப் பட்ட நண்பர்கள் எத்தனை?

எனக்கு சிவராமைத் தெரியும்.

அந்த நேரம் ஏதோ ஒரு விதத்தில் அவர் ஒதுக்கப்பட்டிருந்தார்.

நான் கூட அவரை கண்டு கொள்ளவில்லை.

சிங்கள மக்களை கம்யூனிச சித்தாந்தங்களை வைத்து

ஒட்டு மொத்த ஒரு பாட்டாளி வர்க்க

போராட்டத்துக்கு எடுப்பதும்

தமிழர் போராட்டம் சிங்கள மக்களுக்கு எதிரானதல்ல

என்று நியாயப்படுத்துவதுமே

புளொட் வானோலியின் தேவையாக இருந்தது.

அதையே சிங்கள வானோலி மூலம் செய்தோம்.

3 மாதத்துக்கு வந்தவன்.................. :oops:

கடந்த வருடம் எதிர்பாராமல்

பாரீசில் வைத்து உமாவின் மனைவி

பேபி அக்கா என்னைக் கண்டதும்

தழுவிக் கொண்ட போதுதான்

பலருக்கு நான் புளொட்டில் இருந்த விடயமே தெரிந்தது.

என் குணத்துக்கும் இயக்கத்துக்கும்

ஏணி வைத்தால் கூட சரி வராது என்பது

என் குணத்தை பார்த்தாலே புரியும்.

தூயவன் சொல்வது போல

நான் ஒரு கலைஞன்................

இருந்தாலும் தெரியாததை தெரிந்து கொள்வதில் தப்பில்லையே? :P

மற்றப்படி தேவையற்ற விடயங்கள் எதுவுமே

நான் கை போடாதவை..............

:( அதுவரை மகிழ்சி ஜுட்.+ நாரதர் :P

  • கருத்துக்கள உறவுகள்

அங்கால பூட்டுப்போட்டு புளியும் அடைத்தாயிற்று. :( இங்கால வந்து பார்த்தால், பழைய கதைகள் அசைபோடப்படுவதாகத் தெரிகின்றது. அஜீவன் அண்ணாவின் அநுபவங்களை குறும்படமாகத் தயாரித்தால் வரலாற்று ஆவணமாக வரச் சந்தர்ப்பம் உள்ளது. :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உமா மகேஸ்வரன் கொல்லப்பட்ட விதத்தையும் இங்கு பகிர வேண்டும். ஏனென்றால் அவர் ஏன் கூட இருந்தவர்களால் கொல்லப்பட்டார் என்ற விடயத்தை பலர் அறியாமல் இருக்கின்றனர். வழமை மாதிரி புலிகளின் மீது பழியைப் போட்டுக் கொண்டு நிற்கின்றனர்!

உமா மகேஸ்வரன் கொல்லப்பட்ட விதத்தையும் இங்கு பகிர வேண்டும். ஏனென்றால் அவர் ஏன் கூட இருந்தவர்களால் கொல்லப்பட்டார் என்ற விடயத்தை பலர் அறியாமல் இருக்கின்றனர். வழமை மாதிரி புலிகளின் மீது பழியைப் போட்டுக் கொண்டு நிற்கின்றனர்!

தவறான இடத்தில் கேட்கப்பட்ட கேள்வி தூயவன் :P

கொன்றவர்களிடம் கேட்க வேண்டும்.

அல்லது

கொலையை விசாரித்த போலீசாரிடம் கேட்க வேண்டும்

ராஜீவ் கொலை போல................ :P

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.