Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்கக் கோரி கடலூரில் ஒருவர் தீக்குளிப்பு!

Featured Replies

இவ்வாறான தீக்குளிப்புகள் வேண்டாம் தமிழக உறவுகளே... அதனால் எந்த பிரயோசனமும் கிடைக்கப்போவதில்லை. இழப்பு மட்டுமே எஞ்சும்... ஈழத்தை நேசிக்கும் உங்களை போன்றவர்கள் உயிருடன் இருந்து வேறுவழிகளில் போராடுங்கள்.

ஆழ்ந்த அனுதாபங்கள்..

புலிக்கொடிகளின் மத்தியில் நிற்கும் படம்..

 

378372_615859805095781_521963947_n.jpg

 

- முகநூல் -

Edited by துளசி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அஞ்சலிகள்.இனியும் இப்படியான உயிரிழப்புகள் வேண்டாம்.


3.JPGஇலங்கை அதிபர் கொலைகார ராஜபக்சவை தண்டிக்க வேண்டும் எனவும், தமிழீழம் மலர வேண்டும் எனவும், அதற்கு இந்தியா துணை நிற்க வேண்டும் என வலியுறுத்தி
கடலூர் தமிழர் மணி தன்னையே தீக்கிரையாக்கினார்.

 அவரது உடல் சென்னை
மருத்துவனையில் இருந்து கடலூருக்கு எடுத்து செல்லப்பட்டது. மருத்துவனையில்
மதிமுக, நாம் தமிழர் கட்சி உட்பட பல கட்சி இயக்கத் தோழர்களும், தோழர்
மணிக்கு சிறப்பான வீர வணக்கத்தை செலுத்தினர். திரு பழ நெடுமாறன் , மதிமுக
மல்லை சத்தியா, நாம் தமிழர் ஆவல் கணேசன் மற்றும் பல தமிழர் அமைப்பு
தலைவர்களும் தங்கள் வீர வணக்கத்தை செலுத்தினர்.
 
கீழ்ப்பாக்கம்
மருத்துவமனை வாயில் வரை தமிழர்கள் வீர வணக்கம் செலுத்திய வண்ணம் ஊர்வலமாக
நடந்து வந்தனர். அதன் பின் காவல்துறை அவர்களை ஊர்வலம் நடத்த அனுமதி
மறுத்தது. தொடர்ந்து மணியின் உடல் அரசு ஊர்தியில் கடலூருக்கு பயணமானது.
கடலூரில் நடைபெறும் இறுதி சடங்கில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான்
கலந்து கொள்ளவுள்ளார்.

1.JPG2.JPG3.JPG4.JPG5.JPG

http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=13134:mani-kadalure&catid=36:tamilnadu&Itemid=102

எனது ஆழ்ந்த இரங்கல்கள்.


இத்தகைய முடிவுகளைவிட்டு ஆக்கபூர்வமான செயல்வீரர்களாக நம்மவர்கள்
மாறவேண்டும்.நம்மிடையே இத்தகைய அரசியல்விழிப்புணர்வு உள்ளவர்கள்
குறைவு.எனவே அவர்கள் மற்றவர்களிடமும் இத்தகைய விழிப்புணர்வைப்
பரப்பிச் செயல்வீரர்களாவதே மேலான பணியாகும்.

 

தமிழர்களாய் ஒன்றுபடுவோம்
 
மனிதநேயம் மிக்கவர் கடலூர் மணி: வைகோ கண்ணீர் அஞ்சலி
 
சென்னை: வாழும் போது போராளியாக வாழ்ந்து தனி ஈழம் மலர தீக்குளித்து
உயிரை மாய்த்த கடலூர் மணிக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வீரவணக்கமும்
கண்ணீர் அஞ்சலியும் செலுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியுள்ளதாவது:

கடலூர் நல்லவாடு பகுதியைச் சேர்ந்த மணி இளம் வயதில் இருந்தே நாட்டு
நலனுக்காகவும் அநீதியை எதிர்த்தும் போராளியாகவே வாழ்ந்து உள்ளார்.

வளைகுடா நாட்டில் கப்பல் துறையில் பணியாற்றி உள்ளார். மனிதநேயம்
மிக்கவராகவே வாழ்ந்து, 26 முறை குருதிக்கொடை அளித்து உள்ளார். சுனாமி வீடு
கட்டும் திட்டத்தில் நடந்த முறைகேடுகளை எதிர்த்தும், அதிகார வர்க்கத்தை
எதிர்த்தும் தொடர்ந்து போராடி வந்தார்.

ஈழத் தமிழர்களுக்கு நேர்ந்த கொடுந்துயர் குறித்து மனம் உடைந்தவராக பல
கட்டங்களில் தன் வேதனையைப் புலப்படுத்தி உள்ளார். இளந்தளிர் பாலச்சந்திரன்
படுகொலை, அவரை முற்றிலும் நிலைகுலையச் செய்ததாக அவரது நண்பர்கள்
வருத்தத்தோடு கூறினார்கள். அதனால்தான், மார்ச் 4-ந்தேதியைத் தேர்ந்தெடுத்து
உயிரை மாய்த்துக்கொள்ள முடிவு செய்து தீக்குளித்தார்.

"தமிழ் இனக்கொலை செய்த ராஜபக்சேவை தண்டிக்க வேண்டும்; தமிழ் ஈழம் தனி நாடாக
வேண்டும்" என்று அறிவித்து தன் உயிரை அர்ப்பணித்து உள்ளார். அவருக்கு எனது
வீரவணக்கம்.

பேரிடி தலையில் விழுந்த நிலையில், கதறித்துடிக்கும் அவரது
துணைவியாருக்கும், பிள்ளைகளுக்கும், உற்றார் உறவினர்களுக்கும் எனது கண்ணீர்
அஞ்சலியைத் தெரிவிக்கிறேன்.

தமிழ் ஈழ விடியலுக்காக வாழ்ந்து போராட வேண்டிய இளைஞர்கள் தங்கள் உயிரை
மாய்த்துக்கொள்ள வேண்டாம் என்றும் வைகோ தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Read more at: http://tamil.oneindia.in/news/2013/03/05/tamilnadu-vaiko-pays-tribute-cuddalore-mani-170979.html
 
  • கருத்துக்கள உறவுகள்

ஈழத் தமிழர்களுக்காகக்  கொடுக்கப்பட்ட கடைசிப் பலியாக இருக்கட்டும்


கண்ணீர்  அஞ்சலிகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.