Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விரைவில் மரணத்தை கொடு இறைவா...

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
காதல் இல்லாமல் வாழ முடியவில்லை
காதலோடு வாழவும் தெரியவில்லை
விரைவில் மரணத்தை கொடு இறைவா,

 
அவளை அதிகம் கேள்வி கேட்கின்றேன்
அவள் மீது அப்படி ஒரு பிரியம் - ஆனால்
எனது போக்கு அவளுக்கு கசப்பாய் இருக்கின்றது,

அது தெரிந்தும் என்னை மாற்றிக்க முடியவில்லை
மாறாவிட்டால் அவள் எப்படி இன்பமாய் இருப்பாள்
அவள் சந்தோசம் தான் எனக்கு வேண்டும்,

எனக்கு அவளை விட யாரும் இல்லை
அவள் இருந்தும் அநாதை போல் உணர்கின்றேன்
நான் மண்ணோடு மண்ணாக வேண்டும்,

அப்போது தான் அவள் பூமியில் பெண்ணாவாள்
இப்போது என் உயிராக அவள் இருப்பதால்
அந்த பெண் உணர்வுகள் அடங்கிவிட்டன,

முடக்கப்பட்ட அவள் உணர்வுகள்
விரைவில் தெளிவு பெற வேண்டுகிறேன்
ஆனால் அதை தாங்கும் சக்தி எனக்கில்லை,

அந்த பெண் பெண்ணாக வேண்டும்
அதற்கு நான் மண்ணோடு மண்ணாக வேண்டும்
விரைவில் எனக்கு மரணத்தை கொடு இறைவா.

 

  • கருத்துக்கள உறவுகள்

பார்க்கப் போனால்.. பொண்ணுங்க எல்லாம் ஒரே மாதிரியாய் இருக்கு..!

 

ஆனால் அதற்காக மரணத்தை தேடும்.. (பெண்கள் சார்ந்த எந்த நோக்கிற்காக என்றாலும்..!) சிந்தனை.. அடிப்படை பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட முட்டாள் தனமாகவே எனக்குத் தெரிகிறது.

 

யாரும் பிறக்கும் போது காதலோடு காதலியோடு..பிறக்கவில்லை. குழந்தைப் பருவம் என்பது எமக்கான  இயற்கையின்.. வழிகாட்டி. அப்பவருத்தில் பாலினத் தூண்டல் இல்லை.. ஆண்.. பெண் என்ற வேறுபாடில்லை.. போட்டி இல்லை.. பொறாமை இல்லை.. சூழ்ச்சி இல்லை.. பொய் இல்லை.. ஒளிவு மறைவு இல்லை.. எதிர்பார்ப்பில்லை.. கோபமில்லை. மகிழ்ச்சி மட்டும் தான் நிறைந்தது அங்கு. அந்தப் பருவத்தை இயற்கை தருவது.. இப்படியும் நீ வாழலாம் இந்தப் பூமியில் என்பதற்காகவே..! ஆனால் வளர்ந்ததும்.. நாமோ அதை மறந்து விடுகிறோம்.. தூண்டல்களுக்கு துலங்கப் போய் வீணே அழியவும் சிந்திக்கிறோம்..! அது மகா தவறு..! தூண்டல் வரும் போகும்.

 

அது தான் சொன்னாங்களில்ல.. காதல் தும்மல் போல என்று. தும்மி விட்டு அதை மறக்க முடியாமல் எவனாவது சாவை அழைக்கிறான்..??????????! தும்மல் வந்திச்சாம்.. போச்சுதாம்.. என்றிருப்பதும்.. எதையும் இயல்பா.. சாதாரணமாக எடுக்க காதல் அனுபவத்தை தருபவர்களிடம் இருந்து அதைக் கற்றுப் பாவித்துக் கொள்வதே புத்திசாலித்தனம்..! :):icon_idea:



நல்ல பகிர்வு..! :)

  • கருத்துக்கள உறவுகள்

உங்களைத் திருத்தி வாழப் பார்த்தீர்களானால் இருவருக்கும் நின்மதி சுதர்சன். முடியாதது என்று ஒன்றும் இல்லை.
இதில் எங்கே பெண்ணின் தவறு நெடுக்ஸ்?

  • கருத்துக்கள உறவுகள்

இதில் எங்கே பெண்ணின் தவறு நெடுக்ஸ்?

 

இதில் எங்கே நான் பெண் தவறு என்றேன்.

 

ஒரு பெண்ணிற்காக தன்னை அழிக்கனுன்னு நினைக்கிற ஆணின் சிந்தனையை தான் பகுத்தறிவற்ற முட்டாள் தனம் என்றேன்..!

 

ஒருத்தி பெண்ணாவதும்.. மனிதனாவதும்.. அவள் பிறப்பின் பின் ஆணின் கையில் இல்லை. அது அவளின் பிரச்சனை. அதனை ஒரு ஆண் தனது தலையில் போட்டு.. மரணத்தைக் கூவிக் கூவி அழைப்பது படுமுட்டாள் தனம்..! இயற்கை தந்த வாழ்வை.. வாழ்த் தெரியாதவர்களின் கோழைத்தனம்..! அதைத் தான் சொல்லி இருக்கிறேன்.. அக்கா. :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதில் எங்கே நான் பெண் தவறு என்றேன்.

 

ஒரு பெண்ணிற்காக தன்னை அழிக்கனுன்னு நினைக்கிற ஆணின் சிந்தனையை தான் பகுத்தறிவற்ற முட்டாள் தனம் என்றேன்..!

 

ஒருத்தி பெண்ணாவதும்.. மனிதனாவதும்.. அவள் பிறப்பின் பின் ஆணின் கையில் இல்லை. அது அவளின் பிரச்சனை. அதனை ஒரு ஆண் தனது தலையில் போட்டு.. மரணத்தைக் கூவிக் கூவி அழைப்பது படுமுட்டாள் தனம்..! இயற்கை தந்த வாழ்வை.. வாழ்த் தெரியாதவர்களின் கோழைத்தனம்..! அதைத் தான் சொல்லி இருக்கிறேன்.. அக்கா. :)

 

சாகிறது பிழைதான் . ஆனால் ரெண்டு பேரின்ரை காதல் வலிக்கு என்ன மருந்து ?? காலம் எண்டு பழி சொல்லாதையுங்கோ . ஏமாத்திறது ரெண்டு பக்கத்துக்கும் இப்ப பாசனாய் போச்சுது .

  • கருத்துக்கள உறவுகள்

சாகிறது பிழைதான் . ஆனால் ரெண்டு பேரின்ரை காதல் வலிக்கு என்ன மருந்து ?? காலம் எண்டு பழி சொல்லாதையுங்கோ . ஏமாத்திறது ரெண்டு பக்கத்துக்கும் இப்ப பாசனாய் போச்சுது .

 

காதல் என்பது வாழ்க்கையில் இருக்கலாம். ஆனால் வாழ்க்கையை வாழக் கட்டாயம் இல்லை. காதலன் இன்றி குழந்தைகள் வாழ்கின்றன.. முதியவர்கள் வாழ்கின்றனர்.. இன்னும் எத்தனையோ ஜீவன்கள் வாழ்கின்றன. எனவே ஒரு பிரிவுத் துயரை வலி... வேதனை என்று மிகைப்படுத்தி மனிதர்களிடையே திணிப்பதும் கூட.. அது மிகைப்பட்ட தாக்கத்தை தர வகை செய்கிறது. உடலில எத்தனையோ வலிகள் இந்த உலகில். அவற்றை எல்லாம் தாங்கி வாழக் கற்றுக் கொள்கிறோம். காரணம் அவற்றை இலகுவாக எடுத்துக் கொள்வது தான். அப்படி இதனையும் எடுத்துக் கொள்வதுவே அழகும்.. அறிவார்த்தமும் ஆகும்..!

 

இரண்டு மனிதர்களிடையே ஏமாற்றங்கள்.. பித்தலாட்டங்கள்.. ஒளிப்பு மறைப்புக்கள்.. துரோகங்களை.. சதா கண்காணிச்சிட்டு இருக்க முடியாது. அதுவே வாழ்க்கையை சிதைச்சிடும். இரண்டு மனிதர்கள் தம்மளவில் ஒருவர் மற்றவருக்கு நம்பிக்கையூட்டும் வகையில் இல்லை என்றால்.. அந்த நிமிடத்தில் இருந்து காதலாவது கத்தரிக்காயாவது. அவர்கள் இரண்டு சாதாரண மனிதர்கள். வீதியால் எத்தனை மனிதர்கள் போகிறார்கள். அவர்களிடம் எல்லாம் நாம் என்ன அக்கறையா காட்டுக்கிறோம். அப்படியே தான் இதுவும். இதற்குப் போய்.. சாவு என்ற ஒரு உயிரின் அத்தியாய முடிவை அழைப்பது மிகவும் முட்டாள் தனம்.. கோழைத்தனம். உயிரினப் பண்பற்ற தனம். :)

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாகிறது பிழைதான் . ஆனால் ரெண்டு பேரின்ரை காதல் வலிக்கு என்ன மருந்து ?? காலம் எண்டு பழி சொல்லாதையுங்கோ . ஏமாத்திறது ரெண்டு பக்கத்துக்கும் இப்ப பாசனாய் போச்சுது .

சிலர் கத்தி கொண்டு குத்தினாலும் எனக்கு வலிப்பதில்லை ஆனால் அவள் பஞ்சினால் குத்த நினைத்தாலும் அந்த வலியை தாங்க முடியவில்லை, ம்ம் அவள் பஞ்சினால் குத்தி வலித்து கவிதை வரைந்த பின் தான் உணர்ந்தேன் நான் அவள் மீது கொண்ட அன்பை விட அவள் என் மீது உள்ள அன்பின் வித்தியாசத்தை

உண்மையை சொன்னால் என்னால் அவளை நினைத்து நன்றாக புலம்பவே தெரியும் ஆனால் அவளுக்கு என்னை எப்படி உலகிற்கு அறிமுகம் செய்து வைக்கலாம் என்ற தந்திரம் தெரிந்திருக்கின்றது இன்று நான் ஒரு கவிஞனாக, பாடலாசிரியனாக உங்கள் முன் வலம் வருகின்றேன் என்றால் யார் காரணம்? அவள் இன்றி யாரும் இல்லை ,,,,,,,,,,,, ஆம் அவள் இன்றி நானும் இல்லை நான் இன்றி அவளும் இனி இருக்கமாட்டாள்.

கவிதைக்குப் பாராட்டுகள் சுதர்சன் . உங்கள் திறமைகள் வானுயர எட்டிப்பறக்கும் பொழுது வானமே வசப்படும், காதலி உட்பட . தொடருங்கள் :) :) .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்களைத் திருத்தி வாழப் பார்த்தீர்களானால் இருவருக்கும் நின்மதி சுதர்சன். முடியாதது என்று ஒன்றும் இல்லை.

இதில் எங்கே பெண்ணின் தவறு நெடுக்ஸ்?

அவள் பெண் என்றால் தானே தவறிழைக்க நேரிடும், அதனால் தான் அவளை என் உயிராக மாற்றிவிட்டேன், ஆம் அண்ணா நான் தான் இன்னும் திருந்த வேண்டும் என்பது எனக்கு நன்றாகவே தெரிகின்றது மட்டுமன்றி அவள் மீது தப்பு சொல்பவனை பார்த்து சிரித்து விட்டு போவேன் என்பதும் உண்மை,   

 

என்ன வருடங்கள் ஏழு தாண்டி அவள் வரவுக்காய் காத்திருந்தேனா? அவள் மீது நான் கொண்ட அன்பிற்கு அளவற்று விட்டது, சில காலம் என்னை பைத்தியம் என்று கூட அழைத்தார்கள் சிலர் (என் வலி அறியாதவர்கள்)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவிதைக்குப் பாராட்டுகள் சுதர்சன் . உங்கள் திறமைகள் வானுயர எட்டிப்பறக்கும் பொழுது வானமே வசப்படும், காதலி உட்பட . தொடருங்கள் :) :) .

 

நன்றி அண்ணா, உங்கள் ஆசியால் என் ஆசைகள் நிறைவேறும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.