Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உண்ணாவிரதத்தை கைவிடுமாறு விஜயகாந்த் கோரிக்கை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

vijayakanth300-100x100.jpg

இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டதும், பெண்கள் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டதும், சின்னஞ்சிறு சிறார்கள் கூட விட்டு வைக்கப்படாமல் சுட்டுக் கொல்லப்பட்டதும் படக் காட்சிகளாக அண்மையில் ஊடகங்கள் மூலம் வெளிக் கொணரப்பட்டுள்ளன.

 

அவற்றை கண்டு நெஞ்சு பதறாமல் யாராலும் இருக்க முடியாது. குறிப்பாக விடுதலை புலி இயக்கத் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் 12 வயது பாலச்சந்திரன் அப்பாவித்தனமாக இருப்பதும், பிறகு அவன் துப்பாக்கி குண்டுகளால் துளைக்கப்பட்டு சாகடிக்கப்பட்டதும் மனித உள்ளம் படைத்த எவராலும் தாங்கிக் கொள்ள முடியாத ஒன்றாகும்.

 

இந்த சூழ்நிலையில் ஐ.நா. மன்றத்தின் சார்பில் ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமை ஆணை குழுக் கூட்டம் நடைபெற்று கொண்டிருக்கிறது. சிங்கள இனவெறி அரசு போரின் கடைசி கட்டத்தில் கொத்துக் குண்டுகளை வீசி தமிழ் மக்களை கொன்று குவித்தது மனித உரிமை மீறல்கள் மட்டுமல்ல, அதிபர் மகிந்தே ராஜபக்ஷ ஒரு போர்க் குற்றவாளி என்பதும், சிங்கள இனவெறி அரசு தமிழினப் படுகொலையில் ஈடுபட்டுள்ளது என்பதும் மறுக்க முடியாத உண்மைகளாகும்.

 

அமெரிக்கா சிங்கள இனவெறி அரசின் மனிதாபிமானமற்ற போக்கை கண்டிக்கவும், பாரபட்சமற்ற நம்பத் தகுந்த சர்வதேச விசாரணை ஒன்று ஐ.நா. மன்றத்தின் மூலம் நடைபெறவும் ஒரு தீர்மானத்தை முன் மொழிந்துள்ளது. இந்த தீர்மானம் வரும் 21ம் திகதி இறுதி செய்யப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளது.

 

இதற்கிடையில் இந்திய அரசு ஒரு நாட்டின் இறையாண்மையில் ஐ.நா. மன்றம் தலையிடுவதை தான் ஏற்க முடியாது என்றும், சர்வதேச விசாரணையோ அல்லது மனித உரிமை மீறல்களோ இலங்கை அரசின் சம்மதத்தின் பேரிலேயே நடைபெற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. அமெரிக்காவினுடைய தீர்மானம் கடந்த 2012ஆம் ஆண்டில் எவ்வாறு இந்தியாவின் கருத்துக்கு ஏற்ப திருத்தப்பட்டதோ, அதேபோல் திருத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

மனிதாபிமான அடிப்படையிலும், தமிழ் இன உணர்வோடும் லயோலா கல்லூரி மாணவர்கள் கால வரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர். இதர இடங்களிலும் மாணவர்கள் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக சிங்கள இனவெறி அரசின் மீதும், அதன் ஜனாதிபதி மீதும் போர்க் குற்றம் இழைத்தது மற்றும் தமிழர் இனப்படுகொலை நடத்தியது பற்றி சுதந்திரமான, நம்பிக்கைக்குரிய, பாரபட்சமற்ற சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர்.

 

இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் நிம்மதியாகவும், அமைதியாகவும், கண்ணியத்துடனும், உரிமையுடனும் வாழ்வதற்கு இன்றைய அரசியல் சூழ்நிலையில் ஒரு நெடிய போராட்டம் தேவைப்படுகிறது.

 

இன்று உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள இளைஞர்கள் பட்டாளம் இத்தகைய வரலாற்று கடமையை செய்ய வேண்டி உள்ளது. இதற்கு மாறாக கால வரையற்ற உண்ணாவிரதத்தின் மூலம் தங்களை தாங்களே மாய்த்துக் கொள்வது என்பது தியாக உணர்வை காட்டுவதாக இருந்தாலும், அவர்களுடைய ஆற்றல் வருங்காலத்தில் மேலும் தேவைப்படுகிறது.

 

ஆகவே மாணவர்கள் தாங்கள் மேற்கொண்டுள்ள உண்ணாவிரதத்தை கைவிட்டு, இலங்கை வாழ் தமிழர்களின் வாழ்வுரிமைக்காக வருகின்ற காலங்களில் நடைபெறும் அறப்போராட்டங்களில் தங்களை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

 

 ஆகவே மாணவர்கள் தாங்கள் மேற்கொண்டுள்ள உண்ணாவிரதத்தை கைவிட்டு, இலங்கை வாழ் தமிழர்களின் வாழ்வுரிமைக்காக வருகின்ற காலங்களில் நடைபெறும் அறப்போராட்டங்களில் தங்களை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

 

எனவே அதற்கு முன்னுதாரணமாக உங்கள் சட்டமன்றபதவிகளை துறந்து ஒரு அறவழி போராட்டத்தை செய்யுங்கள்.

தமிழ்நாட்டிலே தமிழ் அரசியல்கட்சிகள் எமக்காக என்ன முறையில் போராட வேண்டும் என்பதை அங்கே உள்ள சூழ்நிலைகளைக் கொண்டு அவர்களே முடிவு செய்யட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் உண்ணாவிரதத்தை கைவிடச் சொல்லி ஏன் கேட்கிறார்கள். மாற்று வழியையும்... சொல்லி விட்டு, வேண்டு கோள் விடுக்கலாமே.....
 

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் உண்ணாவிரதத்தை கைவிடச் சொல்லி ஏன் கேட்கிறார்கள். மாற்று வழியையும்... சொல்லி விட்டு, வேண்டு கோள் விடுக்கலாமே.....

 

 

அது தானே...

மக்களின் உண்மையான உணர்வுகளுக்கு தமிழக அரசியல்வாதிகளிடம் பதில் இல்லை.புத்தி சிந்தனைகள் அணுகுமுறைகள் இவர்களிடம் இல்லை.

 

பழைய புளிச்ச சித்தாதங்களே இவர்களால் உச்சரிக்க முடிகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

எனவே அதற்கு முன்னுதாரணமாக உங்கள் சட்டமன்றபதவிகளை துறந்து ஒரு அறவழி போராட்டத்தை செய்யுங்கள்.

 

இது அவர்கள் பிழைப்பில மண் போடுற செயலாச்சே? :o

 

அனைத்து அரசியல்வாதிகளின் கண்களும் இப்போராட்டம் எப்படி மேலும் முன்னெடுத்துச் செல்லபடும்?  மக்களின் சமகால ஆதரவும், மற்ற கல்லூரி மாணவ சமுதாயத்திடம் இவை பற்றிக்கொள்ளப்போகிறதா? என்ற எதிர்பார்ப்பிலேயே எதற்கும் ஒரு 'விசிட்' செய்து வைப்போம்...பிற்கால அரசியலுக்கு உதவும்! என்ற சம்பிரதாய ஆதரவாகவே இருக்கிறது.

 

போராட்டம் இன்னும் ஓரிரு நாளில் மற்ற கல்லூரிகளுக்கும் பற்றிக்கொள்ளா விட்டால், இது கெளரவமாக முடித்து வைக்கப்படும்.

போராட்டம் இன்னும் ஓரிரு நாளில் மற்ற கல்லூரிகளுக்கும் பற்றிக்கொள்ளா விட்டால், இது கெளரவமாக முடித்து வைக்கப்படும்.

 

அப்படியே முடிந்தாலும் உணர்வலைகள் வேறு வழிகளில்  தொடரும் என்ற நம்பிக்கை உள்ளது.

 

அதை விட இந்த உணர்வுகளை இந்திய நடுவண் அரசு புரியும் வரை தொடரவேண்டும் என்ற ஆசையும் உள்ளது.

 

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
விஜயகாந்த் கட்சி சார்பாக உண்ணாவிரதம் இருப்பதாக உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்கள் அறிக்கை விட்டிருந்தால் உடனே அவர்களை கண்டிப்பாக உண்ணாவிரதம் இருக்கும்படி மாலை போட்டு வாழ்த்தி இருப்பார்.
 
எல்லாமே சுயநல அரசியல்தான்.  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.