Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்த ஜயா சொல்லுறதையும் கொஞ்சம் கேலுங்கோ...காணொளி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ஜயா

நாடாளும் தகுதியும் திறனும் உணர்வும் உள்ள தலைவர்கள் பலர் இருக்க தமது தலைவர்களை கோடம்பாக்கத்தில் தேடிக் கொண்டிருக்கும் தமிழகத்தின் அவலம் என்று நீங்கும். :(  :(  :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாடாளும் தகுதியும் திறனும் உணர்வும் உள்ள தலைவர்கள் பலர் இருக்க தமது தலைவர்களை கோடம்பாக்கத்தில் தேடிக் கொண்டிருக்கும் தமிழகத்தின் அவலம் என்று நீங்கும். :(  :(  :(

என்ன செய்ய அண்ணா..கருணாநிதி எனும் ஒரு கயவன் தமிழ் இனத்துக்கு வந்த சாவக் கேடு..மக்களின் பணத்தை கொள்ளை அடிப்பதே கொள்கையாய் கொண்ட கருணாநிதி குடும்பத்தை நினைத்தால் அருவருப்பாக இருக்கும்....

  • கருத்துக்கள உறவுகள்
உங்களின் கோரிக்கையை நிச்சயமாக மாணவர்கள் செவி மடுப்பார்கள் 
 
தங்களின் தூரநோக்கு தெளிவான நிந்தனை மக்களிடம் சென்றடையும் 
 
 
நன்றிகள் 
  • கருத்துக்கள உறவுகள்

உதயகுமாரின் பேச்சில் பல நியாயங்கள் உள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு அவட்ட பெயர் தெரிய வில்லை சிறி அண்ணா..அதாலை தான் ஜயா என்று போட்டன்..தெரிய படுத்தியமைக்கு நன்றி....ஒம் அந்த ஜயா சொல்வதில் நிரைய உண்மைகள் உன்டு.....

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு அவட்ட பெயர் தெரிய வில்லை சிறி அண்ணா..அதாலை தான் ஜயா என்று போட்டன்..தெரிய படுத்தியமைக்கு நன்றி....ஒம் அந்த ஜயா சொல்வதில் நிரைய உண்மைகள் உன்டு.....

 

கூடங்குளம் அணுமின் நிலையம் அமைக்கக் கூடாது என்று முன்னின்று, போராடுபவர்களில் உதயகுமார் முக்கியமானவர், பையன்.

உதயகுமாரைப் பற்றி தெரியாதது அவர் குற்றம் இல்லை. சீமான் அவரைப் பற்றி தன்னுடைய உரையில் குறிப்பிடுவது இல்லை. கருணாநிதி கயவன் என்று மட்டும்தான் அவர் சொல்லித் தந்திருக்கிறார். ஆகவே குற்றம் சீமானுடையதுதான். சீமானிடம் இருந்துதானே எங்கள் பையன்கள் தமிழக அரசியலை படித்துக் கொண்டிருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

உதயகுமாரைப் பற்றி தெரியாதது அவர் குற்றம் இல்லை. சீமான் அவரைப் பற்றி தன்னுடைய உரையில் குறிப்பிடுவது இல்லை. கருணாநிதி கயவன் என்று மட்டும்தான் அவர் சொல்லித் தந்திருக்கிறார். ஆகவே குற்றம் சீமானுடையதுதான். சீமானிடம் இருந்துதானே எங்கள் பையன்கள் தமிழக அரசியலை படித்துக் கொண்டிருக்கிறார்கள்.

 

சிரிப்பை அடக்க‌ முடியவில்லை..... சபேசன். :D  :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உதயகுமாரைப் பற்றி தெரியாதது அவர் குற்றம் இல்லை. சீமான் அவரைப் பற்றி தன்னுடைய உரையில் குறிப்பிடுவது இல்லை. கருணாநிதி கயவன் என்று மட்டும்தான் அவர் சொல்லித் தந்திருக்கிறார். ஆகவே குற்றம் சீமானுடையதுதான். சீமானிடம் இருந்துதானே எங்கள் பையன்கள் தமிழக அரசியலை படித்துக் கொண்டிருக்கிறார்கள்.

விட்டா நல்லா சொல்லுவீங்கள்...நான் அந்த ஜயாட பேச்சை முன்ன பின்ன கேட்டது இல்லை..அந்த ஜயாட‌ செய்தியல் வாசிச்சது இல்லை...இப்ப சிறி அண்ணா சொல்லிட்டார் தானே அவர் யார் என்று...ஒரு சில நாட்களில் அவரை பற்றி புள்ள தெரிந்து கொள்ளுவேன்...

சிரிப்பை அடக்க‌ முடியவில்லை..... சபேசன். :D  :lol:

என்ன குரு இப்படி சிரிக்கிறீங்கள்...சிஸ்சியங்கள் சின்ன பஸ்சங்கள் என்று தெரியும் தானே...இதுக்குப் போய் இப்படியா ஹிஹிஹி

இடிந்தகரையில் ஒரு பெரும் போராட்டம் நடந்ததே! நடக்கிறதே! கேள்விப்படவே இல்லையா? வைகோ கூட போய் நின்று தன்னை மணலுக்குள் புதைத்துக் கொண்டு போராடினாரே! கொளத்தூர் மணி போய் நின்று போராடினாரே! உதயகுமாரை பொலிஸ் கைது செய்ய விடமால் மக்கள் எல்லாம் அரணாய் நின்று போராடினார்களே! உண்மையான மக்கள் போராட்டம் அங்கே நடக்கிறது! எதுவுமே உங்கள் கவனத்திற்கு வரவில்லையா?

  • கருத்துக்கள உறவுகள்

சபேசன் தவிச்ச முயல் அடிக்கிறார். உதயகுமார் சொல்வதில் உள்ள நியாயத்தை தான் பையன் இனங்காட்டியுள்ளார். அந்த நியாயம் உதயகுமார் வாயால் வந்தால் என்ன எவர் வாயால் வந்தால் என்ன... நியாயம் வெளிவருவது தான் முக்கியம்.

 

சீமான்.. நாம் தமிழர் கட்சி.. உதயகுமாரின் போராட்டங்களுக்கு தமது தார்மீக ஆதரவை நல்கி நின்றிருக்கிறார்கள். தாங்கள் அறியவில்லைப் போலும்.

 

http://youtu.be/ouaiwRApUjY



சீமானின் கருத்தும்.. உதயகுமாரின் கருத்தும் ஒன்று தான். :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் ஆதரவு நல்கினார். ஆனால் அது போன மாசம். இல்லை போன வருசம். இல்லை போன வருசத்திற்கு போன வருசம். அதற்கு பிறகு ஜெயலலிதா கூப்பிட்டு இரண்டு அடி போட்டவுடன் அடங்கி விட்டார். இப்பொழுதும் அணுமின் நிலையத்திற்கு எதிராக உறுதியான குரலை கொடுக்கின்ற அரசியல் தலைவர் என்றால் அது வைகோ மட்டும்தான்.

அணுமின் நிலையம் வராத காரணத்தினால்தான் மின்வெட்டு நடைபெறுகிறது என்கின்ற எண்ணம் மக்கள் மத்தியில் திட்டமிட்டு பரப்பப்பட்டது. இத்தோடு மற்றைய ஓட்டுப் பொறுக்கி அரசியல்வாதிகள் அடங்கி விட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க எப்ப சீமானின் கொள்கை பரப்புச் செயலாளர் ஆகினனீங்க. அவரே சொல்லாததை நீங்க சொல்லுறீங்க. அவரோ.. மேடைக்கு மேடை இதைப் பற்றிக் கதைக்கிறார். கொள்கை பரப்புச் செயலாளர் நீங்க.. மாற்றிப் பேசுறீங்க.

 

சீமான்.. எப்ப திராவிடத்தைக் கைவிட்டு.. தமிழனானாரோ.. பெரியாரை கைவிட்டு தேசிய தலைவரை தலைவர் என்று சொல்ல ஆரம்பிச்சாரோ.. அப்ப இருந்து உங்களுக்கு அவர் மேல கடுப்பு. கருணாநிதிக்கும் அதே கடுப்பு..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

உதய குமாரிடம் நல்ல பேச்சாற்றல் இருக்கு.....

Super

  • கருத்துக்கள உறவுகள்

 

8 நிமிடம் 55வது வினாடியில்... மன்மோகன் சிங், "இன்னாங்கோ... அல்லா கோயிலுக்கு, கூட்டி வந்திரிக்கீங்கோ...." :D  :lol:

சீமான் கடந்த 6 மாதங்களில் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக பேசியிருந்தால், அது பற்றி அறிய ஆவாலாக இருக்கிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உதயகுமாரைப் பற்றி தெரியாதது அவர் குற்றம் இல்லை. சீமான் அவரைப் பற்றி தன்னுடைய உரையில் குறிப்பிடுவது இல்லை. கருணாநிதி கயவன் என்று மட்டும்தான் அவர் சொல்லித் தந்திருக்கிறார். ஆகவே குற்றம் சீமானுடையதுதான். சீமானிடம் இருந்துதானே எங்கள் பையன்கள் தமிழக அரசியலை படித்துக் கொண்டிருக்கிறார்கள்.

 

இன்றைய மனித நாகரீகம் அருவருக்கும் வகையில் உள்ள அந்த கருணாநிதி அரசியல்; தங்கள் அறிவிடைமை அதை கோயில் போல் வணங்கும் போது, தாங்கள் சீமானிடம் எதிர்பார்க்கும் நாகரீகம் எந்தவகையானதாய் இருக்கும்?

தாங்கள் கருணாநிதியிடம் எவற்றை எல்லாம்  படித்திருக்கின்றீர்கள் என்பதையும் தான் நாம் பார்க்கின்றோமே!

 

2006ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் தேர்தல் நடைபெற தயாராகிக் கொண்டிருந்தது. அப்பொழுது அந்தத் தேர்தல் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். ஜெயலலிதா மிகக் கடுமையாக புலிகளை எதிர்த்துக் கொண்டிருந்த நேரம் அது. பல ஈழத் தமிழர்கள் கலைஞர் வர வேண்டும் என்று விரும்பிக் கொண்டிருந்தார்கள்.

அப்பொழுது ஜெயலலிதா வர வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம் என்று எழுதியருந்தேன். கருணாநிதி ஆதரவாக இருந்தாலும், மத்திய அரசை மீறி எதையும் செய்ய மாட்டார் என்றும், துணிச்சல் மிக்க ஜெயலலிதாவை எமக்கு ஆதரவளிக்க வேண்டிய நிலைக்கு தள்ளினால் அவருடைய ஆதரவு அதிரடியாக இருக்கும் என்றும் எழுதியிருந்தேன்.

நன்றாக நினைவிருக்கிறது. வேறொரு தளத்தில் எழுத்தாளர் யுவகிருஸ்ணா நான் ஓ.பன்னீர்செல்வத்தை விட அதிகமாக ஜெயலலிதாவிற்கு செம்பு தூக்குவதாக எழுதியிருந்தார். இன்றைக்கு நான் கருணாநிதிக்கு செம்பு தூக்குவதாக சிலருக்கு தெரியலாம். இதற்கான நியாமான காரணம் உங்களுக்கு புரிகின்ற பொழுது நான் மீண்டும் ஜெயலலிதாவிற்கு செம்பு தூக்கிக் கொண்டிருக்கலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சீமான் ஆதரவு நல்கினார். ஆனால் அது போன மாசம். இல்லை போன வருசம். இல்லை போன வருசத்திற்கு போன வருசம். அதற்கு பிறகு ஜெயலலிதா கூப்பிட்டு இரண்டு அடி போட்டவுடன் அடங்கி விட்டார். இப்பொழுதும் அணுமின் நிலையத்திற்கு எதிராக உறுதியான குரலை கொடுக்கின்ற அரசியல் தலைவர் என்றால் அது வைகோ மட்டும்தான்.

அணுமின் நிலையம் வராத காரணத்தினால்தான் மின்வெட்டு நடைபெறுகிறது என்கின்ற எண்ணம் மக்கள் மத்தியில் திட்டமிட்டு பரப்பப்பட்டது. இத்தோடு மற்றைய ஓட்டுப் பொறுக்கி அரசியல்வாதிகள் அடங்கி விட்டார்கள்.

 

சீமானை கூப்பிட்டு ஜெயெலலிதா கொடுத்த அந்த இருண்டு அடிகளையும் உங்கள் இரண்டு கண்கலாலும் பார்த்திருந்தீர்களா? இல்லை கருணாநிதி கூட்டத்திடம் இரவல் பெற்ற  பிதற்றலா?

திமுக கூட ஆறு மாதங்களுக்கு மேலாக காரணமே இல்லாமல் சிறையில் அடைத்து வைத்திருந்தது அன்று சீமானை, அந்தவகையில் அடிபணிய வைக்கப்பட முடியாத சீமானை இவ்வாறு இரண்டு அடிகொடுத்து அடக்க திமுகவிற்கு புத்தி இருந்திருக்க வில்லையா? இல்லை திமுக அராஜகத்தின் பாதை அறியாததா  என்று எதைச் சொல்ல விளைகின்றீர்கள்?

 

சீமானின் போக்குமீதான விமர்சனம் நியாயமானதுதான் ஆனால் அதை கருணாநிதியின் துரோகக் கறையை வெள்ளை அடிக்கும் பணி ஆக்காதீர்கள்!

தேவன்! உங்களுக்கு ஜெயலலிதாவின் அடிக்கும் கருணாநிதியின் அடிக்கும் வித்தியாசம் தெரியவில்லை. வைகோவை பொடாவில் தூக்கி ஜெயலலிதா உள்ளே போட்ட பொழுது இன்னும் சிலரும் உள்ளே போனார்களே நினைவிருக்கிறதா? அதில் எத்தனை பேர் இன்னும் அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று விசாரித்துப் பாருங்கள்!

புரட்சி செய்யப் புறப்பட்ட மாணவர்கள் கூட மம்மியிடம் பம்மிக் கொண்டிருக்கிறார்கள். சீமானை கலைஞர் சிறையில் போட்டு வளர்த்து விட்டார். ஜெயலலிதா போட்டால் ஏதோ ஒரு நடிகை விவகாரத்தில்தான் போடுவார். அதுதான் சீமான் பெட்டிப் பாம்பாகக் கிடக்கிறார். அது கிடக்கட்டும். ஒன்று ஞாபகம் வருகிறது. விஜயலக்ஸ்மி விவகாரம் வந்து பொழுது ஒரு ஈழத்துப் பெண்ணைத்தான் சீமான் திருமணம் செய்வார் என்று சொன்னார்களே! அது என்ன ஆனது?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தேவன்! உங்களுக்கு ஜெயலலிதாவின் அடிக்கும் கருணாநிதியின் அடிக்கும் வித்தியாசம் தெரியவில்லை. வைகோவை பொடாவில் தூக்கி ஜெயலலிதா உள்ளே போட்ட பொழுது இன்னும் சிலரும் உள்ளே போனார்களே நினைவிருக்கிறதா? அதில் எத்தனை பேர் இன்னும் அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று விசாரித்துப் பாருங்கள்!

புரட்சி செய்யப் புறப்பட்ட மாணவர்கள் கூட மம்மியிடம் பம்மிக் கொண்டிருக்கிறார்கள். சீமானை கலைஞர் சிறையில் போட்டு வளர்த்து விட்டார். ஜெயலலிதா போட்டால் ஏதோ ஒரு நடிகை விவகாரத்தில்தான் போடுவார். அதுதான் சீமான் பெட்டிப் பாம்பாகக் கிடக்கிறார். அது கிடக்கட்டும். ஒன்று ஞாபகம் வருகிறது. விஜயலக்ஸ்மி விவகாரம் வந்து பொழுது ஒரு ஈழத்துப் பெண்ணைத்தான் சீமான் திருமணம் செய்வார் என்று சொன்னார்களே! அது என்ன ஆனது?

 

"இந்த சீமான், ஏன் எதிர்காலத்தில் இன்னொரு கருணாநிதி ஆக மாட்டார் என்று கேட்டால்"  அவ்வாறு ஆனால் கூட பறவாயில்லை அதிமுக, திமுக என்ற அத்திவாரம் உடைக்கப்படல்தால் தமிழ்நாட்டு ஜனனாயகத்திற்கு முதல் விடியல். இங்கே ஜெயாவின் ஆட்சி எமது வேண்டுதல் அல்ல. அது எமது இயலாமையின் பழிவாங்கல்.

சு.சுவாமியின் தலையில் முட்டை அபிஷேகம் செய்தமைக்காக பெரியாரிசம் பேசித்திரியும் அதிகாரம் ஒரு இனதின் தலைகளை உடைத்தமை ஜெயாவின் கடுமைகளைத்தாண்டியும் கருணாநிதியின் அதிகாரம் எந்த அவலட்ச்சண அவாதாரதையும் எடுக்கக் கூடியது என்பது புலனாகின்றது.

 

இங்கே! கருணாநிதியின் துரோக வாள்  தமிழர் நெஞ்சங்களில் பாய்ந்த அளவை விட ஜெயாவின் துரோகம் தான் அதிகம் பாய்ந்திருக்கின்றது என்ற கூற்று எம்மை உணர வைக்கின்ற வலி இதுதான்; வாள் பாய்ந்தவனின் வலியை விட்டுவிட்டு கட்சி விசுவாசக் கணக்கு பார்கின்ற வகைதான்! இரண்டு. மக்கள் துரோகத்தனங்களின் அத்திவாரங்களான இரு கட்சிகளையும் இந்தவகையான பொறுப்பான ஆராட்சிகள் அவசியம்தானா?

இரு நல்லவகை மனிதர்களின் மீதான தீர்ப்பில் அங்கே துடிப்பது நியாயம். அவ்வாறு அல்லாமல் இரண்டு தீயவர்களின் மீதான தீர்ப்பு பிழையானால் நியாயம் துடிப்பது நியாயம் ஆகுமா? இதனால் ஒருவர் நல்லவர் என்று அடம்பிடித்தல் போன்றது அல்லவா? அந்த பிழையான தீர்ப்பை விட மிகப்பிழையான போக்கு இது அல்லவா?

Edited by தேவன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.