Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)

Featured Replies

கனடாவில்...

 

401271_597302320281797_1882229413_n.jpg

 

483651_597303283615034_1996033427_n.jpg

 

(முகநூல்: loyolahungerstrike)


------------------------------------------------------------------------------------------------------------------------

 

 

Dear Friends,


Tomorrow (Sunday) evening around 6 clock people from Anna Univ, IIT-Madras, University of Madras, NIIT are conducting Human rally with Candle light to support for Tamil Eelam Liberation and all are come and join with Us to save tamil people and Tamil Fisherman. Plz share this message with our friends.

 

(முகநூல்)

Edited by துளசி

  • Replies 1.3k
  • Views 119.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • தமிழரசு
    தமிழரசு

    Indian Students Supporting TN Students protest for Tamil EELAM   Eventhough Indian govt and Indian media trying to supress the feelings of Tamil people and Srilankan Genocide , Indian stu

  • தமிழரசு
    தமிழரசு

    இதே எழுற்சி வன்னியில் முள்ளிவாக்காலில் மிகமோசமான யுத்தம் நடைபெற்ற வேளையில் இருந்திருக்குமேயானால் இவ்வளவு இழப்புகள் ஏற்பட்டிருக்காது 

  • வீரப் பையன்26
    வீரப் பையன்26

    நன்றி தோழர்களே , இடை விடாது தொடர்ந்து அக்கல்லூரி முதல்வரை கண்டித்ததில் அவர் தற்போது ரத்தகொதிப்புக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் . மேலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்ததால் ம

  • கருத்துக்கள உறவுகள்

விருதுநகரில் கண்ணில் கருப்புத்துணி கட்டி மாணவர்கள் மனிதச் சங்கி- பேராட்டம் நடத்தினர். தமிழ் ஈழ விடுதலை மாணவர் கூட்டமைப்பைச் சேர்ந்த 250 பேர் இந்த மனிதச் சங்கிலி பேராட்டத்தில் கலந்து கொண்டனர்.

வியாசர்பாடி,சத்தியமூர்த்தி நகரில் உள்ள புதுத்தெருவில் வசித்துவந்த மாணவி கௌதமி என்கிற ராசாத்தி ஈழ விடுதலை வேண்டி நேற்று மாலை 5.30 மணிக்கு தற்கொலை செய்து கொண்டார். அதனை அறிந்த காவல்துறை அந்த பெண்ணின் உடலை உடனடியாக அடக்கம் செய்ய வற்புறுத்தியதால் இன்று மாலை 5.00மணியளவில் அவரது உடலை வியாசர்பாடி இடுகாட்டில் அடக்கம் செய்தனர். இந்த மாணவி சென்னை எத்திராஜ் கல்லூரியில் முதலாம் ஆண்டு (B.sc Maths) கணிதத்துறையில் பயின்றுவந்தவர்.

தோழர்களே,தோழிகளே!!! ஈழத்தில் இலட்சக்கணக்கான மக்கள் போராடி தங்கள் உயிர் நீத்தனர் ஆனால் யாரும் தீக்குளித்து இறக்கவில்லை.

உங்களை வழி நடத்த ஆயிரம் ஆயிரம் அண்ணன்கள்,அக்காள்கள் உயிரோடு இருக்கிறோம். எங்களுடன் சேர்ந்து களமாடுங்கள் . எதிரிக்கு பாடம் புகட்டுவோம் . இனி ஒரு தமிழ் உயிரும் வீண் போகக் கூடாது ....

(முகநூல்)

Edited by துளசி

பொது நண்பர்களே நீங்கள் எந்த கட்சி விருப்பம் கொண்டும் இருந்து கொள்ளுங்கள் அல்லது எந்த இயக்கத்திலும் இருந்து கொள்ளுங்கள். மாணவர்களின் ஈழ விடுதலை போராட்டத்திற்கு, அவர்களோடு உடன் வரும் பொழுது ஈழம் விரும்பும் நபராக மட்டுமே வாருங்கள் . கட்சி அடையாளங்களை அப்படியே உங்களிற்குள் வைத்து கொள்ளுங்கள்.

உங்கள் கட்சி விருப்பத்தை மாணவர்களிடம், புதியவர்களிடம் காட்டி அதன் செல்வாக்கை அரசியல் அறியா புதியவர்களிடம் காட்ட நினைத்தீர்கள் என்றால் உங்களுக்கு கிடைப்பது ஏமாற்றமே .

மாணவர் போராட்டம் மாணவர் போராட்டமாகவே இருக்கட்டும். அது "அந்த கட்சி "மாணவர் போராட்டம் , "இந்த இயக்க " மாணவர் போராட்டம் என்று நமக்குள் நம்மை பிரித்து , அடையாள படுத்த நினைக்கும் யாரையும் முதலில் தூர விலக்கி வையுங்கள்.

போராட வேண்டிய காலமும் , சந்திக்க வேண்டிய களமும் அதிகம் உள்ளது .

ஈழம் வெல்லும் , ஈழம் தமிழர்களின் பூமி. அதை இப்போதைக்கு உலகத்தின் அனைத்து உதவியோடு ஆக்கிரமித்து இருக்கும் இலங்கை அந்த மண்ணை விட்டு வெளியேறி அங்கே தமிழர்கள் சுய நிர்ணய உரிமை பெறும் நாள் , நாளைக்கு மறுநாள் நடந்து விட கூடியது அல்ல.

இங்கே நாம் அடிக்கும் ஒவ்வொரு அடியும் போராட்ட விடைகளும் , இந்தியாவை இலங்கையில் இருந்து பிரிக்கும். இந்தியா பிரிந்தால் மொத்த உலகம் இலங்கையை விட்டு பிரியும். பிரிந்தால் பொது வாக்கெடுப்பு என்ற முழக்கத்தை நாம் அழுத்தலாம் . அழுத்த வேண்டும். அப்போது ஈழம் வரும் . வந்தே தீரும் .

எனவே பொதுவான நண்பர்களே எங்களிற்கு உதவுங்கள் ஆனால் உங்கள் கட்சி சாயத்தை எங்கள் மீது பூச நினைக்காதீர்கள் உங்கள் காலை பிடித்து கேட்டுகொள்கிறோம் , உங்கள் கைகளில் எங்கள் கண்ணீரை விட்டு அழுது மன்றாடுகிறோம் எங்களை பிரித்து அரசியல் கூட்டத்திற்குள் எங்களை அமிழ்த்து விடாதீர்கள் அண்ணன்களே !

நாம் அனைவரும் சேர்ந்து தமிழரின் மானத்தை காப்போம் . வீழ்ந்தான் செத்தான் என்ற நிலையில் உள்ள தமிழனின் வாழ்வை , உரிமையை போராடி பெற்றான் என்று மாற்றுவோம் .

வாருங்கள் உன்னத நோக்கத்தோடு கை கொடுங்கள்.

ஆங்காங்கே உள்ள மாணவர்கள் வீறு கொண்டு எழுங்கள் .

உங்களிற்கு அடையாளம் முக்கியம் அல்ல போராட்டமே முக்கியம் .
 

(முகநூல்)

கோவை மாணவர்களின் அற்புத முயற்சி..

அருமை மாணவர்கள் அருகேயுள்ள கிராமங்கள் சென்று பொதுமக்கள் ஆதரவு திரட்டுகிறார்கள்! பல கிராமங்களில் இலங்கையின் இன படுகொலை முழுதுமாய் உணரபடவில்லை என வருந்துகிறார்கள்.

 

ஏனெனில் சன் டீவி கலைஞர் டீவி தாண்டி அவர்கள் அறியாத போது அவர்களை குற்றம் சொல்ல இயலா!! அவர்கள் உணரும்படி மாணவர்கள் எடுத்துரைக்கிறார்கள்.. அவர்களின் முழு ஆதரவு தர உறுதியளிக்கப்பட்டிருக்கிறது. மற்ற மாவட்ட மாணவர்களும் முன்னெடுங்கள்!..மக்கள் ஆதரவு மட்டுமே.. நம்மை ஈழத்தை நோக்கி கொண்டு செல்லும்.


(முகநூல்: loyolahungerstrike)
 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Raj Kumar

கோவை மாணவர்களின் அற்புத முயற்சி..

அருமை மாணவர்கள் அருகேயுள்ள கிராமங்கள் சென்று பொதுமக்கள் ஆதரவு திரட்டுகிறார்கள்! பல கிராமங்களில் இலங்கையின் இன படுகொலை முழுதுமாய் உணரபடவில்லை என வருந்துகிறார்கள்.

ஏனெனில்.. சன் டீவி கலைஞர் டீவி தாண்டி அவர்கள் அறியாத போது.. அவர்களை குற்றம் சொல்ல இயலா!!

அவர்கள் உணரும்படி மாணவர்கள் எடுத்துரைக்கிறார்கள்.. அவர்களின் முழு ஆதரவு தர உறுதியளிக்கப்பட்டிருக்கிறது.

மற்ற மாவட்ட மாணவர்களும் முன்னெடுங்கள்!..மக்கள் ஆதரவு மட்டுமே.. நம்மை ஈழத்தை நோக்கி கொண்டு செல்லும்.

(முகநூல்)

லயோல கல்லூரி மாணவர்கள் மூட்டிய பெரும் தீ இன்று உலகம் எங்கும் பறவுகின்றது .

தமிழக மாணவர்களின் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக சுவிஸில் மக்கள் உண்ணாவிரதம்

 

562104_597357556942940_1429235199_n.jpg

 

 

Loyolahungerstrike

Lion Rajmohan

ALL INDIA IIT STUDENTS PROTEST AGAINST GENOCIDE:

=======================================

IIT BOMBAY, IIT KHARAGPUR, IIT KANPUR AND IIT MADRAS students propose to organize a human chain formation at Gandhi Mandapam Road (from CLRI Bus Stop to Kotturpuram Police Station) from 5:00 PM to 7:00 PM on Sunday, March 24, 2013.

The event is organized to create awareness and sensitize the SOCEITY regarding the human rights violations and genocide in Sri Lanka as a part of a coordinated protest with other IITs (each at their respective institutions). It is also to express discontent against the US backed resolution at the United Nations Human Rights Council that happened recently. We demand that the following actions be taken up:

- An independent inquiry into the alleged human rights violations that occurred during the final phase of the civil war in Sri Lanka.

- An early political settlement for the Tamils in Sri Lanka through holding a referendum.

Students, staff who are sympathetic to the cause and willing to participate are requested to be present at kotturpuram road by 5:00 PM tomorrow (Sunday, March 24, 2013).

 

 

 

Loyolahungerstrike

சஞ்சய் தத் பார்த்து பதறும் ரஜினி காந்த் எங்கள் தமிழ் உறவுகள் போராடுவதை பார்த்து குரல் கொடுக்க மாட்டாரா? ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்க காசு?
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நண்பர்களே தனி ஈழம் அமைய போராடும் மாணவர்களுக்கு ஆதரவாகவும் தனி ஈழம் அமையவும் நாளை ஞாயிறு (24.3.13) காலை 9 மணி அளவில் உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளோம்
இடம்: சேலம் ஆத்தூர்
தொடர்புக்கு : வேல்: 9965159508,  மதன்:9092683030

 

(முகநூல்: loyolahungerstrike)
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

24-03-2013 அன்று மலை 4.00 மணி அளவில் IPL கிரிக்கெட் மேட்ச் தடை விதிக்க கோரி சென்னை மெரினா கடற்கரையில் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள் ..

 

(முகநூல்)

246570_231152277031022_973499097_n.jpg

 

(முகநூல்)

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்சில் இளையோர் அணியின்  நிகழ்வு

 

img055jl.jpg

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=lThmBXWSA6c

நமது கவிஞர் ஐயாவும் பங்குபற்றியுள்ளார்..! :D

 

Spoiler
இதில் எத்தனை முறை "வந்து" என்கிற வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளார் கவிஞர்? :D

சென்னையில் ஐபிஎல் போட்டிகளை நடத்துவதை தவிர்க்க வேண்டும் என்று ஐபிஎல் குழு, இந்திய கிரிக்கெட் சபையிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

 

(முகநூல்: loyolahungerstrike)

தமிழீழத்திற்கு பேராதரவு அமெரிக்கச்சொந்தங்கள்.

 

601395_474723985916046_1206079947_n.jpg

 

(முகநூல்)

All Arts & Science College opens on 25-03-2013 by Tamilnadu goverment.

 

(முகநூல்)

8856_469501626438984_1173037186_n.jpg

 

(முகநூல்)

482326_432530226837139_1721040555_n.jpg

 

 

 

தற்பொழுது நடந்து வரும் போராட்டங்களும் உண்ணாவிரதங்களும் சில நாட்களுக்குத்தான்!! விரைவில் அனைவரும் விலகிச்சென்று விடுவார்கள், ஏப்ரல் மாதம் IPL தொடங்கியவுடன் அனைவரும் அதைக்காணச் சென்றுவிடுவாரகள் என்று பலரும் எண்ணுகின்றனர்

இது பொய்யாக்கப்பட வேண்டும்!! நாம் கருதியதை எட்டும் வரை ஓயமாட்டோம்

இந்த ஆண்டு நடைபெற உள்ள IPL ஐ தடை செய்ய முடியாவிட்டாலும் அதைக்காண மைதானத்திற்கு செல்லாமலும் வீட்டில் அமர்ந்து வெட்டியாக ஆட்டத்தை பார்த்து நேரத்தை வீணாக்காமல் தொடர்ந்து தனி ஈழத்திற்காக போராடுவோம் என்று உறுதிமொழி ஏற்போம்!!!

எது முக்கியம் என்று மாணவர்களாகிய நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்!!!

இந்த உறுதி மொழியை தங்களது பக்கத்தில் பகிர்ந்து ஆதரியுங்கள்!!

Varadharaj Sukumar

(முகநூல்)

283220_447675355318166_1748312131_n.jpg

 

(முகநூல்)

வணக்கம் தோழரே...
நான் மும்பாயில் இருந்து எழுதுகிறேன்... எனக்கு இங்கு ஒரு தகவல் கிடைத்தது... சென்னை JPR கல்லூரியில் கறுப்பு (black) நிற shirt அணிந்து சென்ற மாணவர்களை தேர்வு எழுத அனுமதிக்கவில்லையாம். தயவு செய்து இந்த தகவலை உறுதி செய்யுங்கள். உண்மையெனில் அந்த மாணவர்களுக்கு உதவ முயலுங்கள்.

(முகநூலில் ஒரு தமிழக உறவு)

போராட்டம், திட்டமிடுதல்,ஒருங்கிணைப்பு, கவன ஈர்ப்பு, ஆதரவு பெறல், இலக்கை அடைதல்... அனைத்திற்கும் போராட்டமே மூலம்.

போராடினால் எந்த பயனுமில்லை என்று உங்கள் போராட்டத்தை திசை திருப்புவோருக்கும், சிதைக்க நினைப்பவருக்கும், கொச்சைப்படுத்துவோருக்கும் இதை தெரியப்படுத்துங்கள் நீங்களும் தெளிவு பெறுங்கள்.

 

(முகநூல்)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
ஈழத்தமிழருக்கு ஆதரவாக இந்திய அரசுக்கு வரிகொடா இயக்கம்

130311122627_loyola_students_624x351_bbc

ஆர்பாட்டத்தில் தமிழக மாணவர்கள் (ஆவணப்படம்)

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக போராடும் தமிழ்நாட்டு கல்லூரி மாணவர்கள் அடுத்த கட்டமாக இந்திய அரசுக்கான வரிகொடா இயக்கம் நடத்தப்போவதாக பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார் தமிழீழ விடுதலைக்கான மாணவர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த லயோலா கல்லூரி மாணவர் ஷண்முகப்பிரியன் என்கிற செம்பியன்.

 

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக கடந்த இரண்டு வாரங்களாக மாநிலம் தழுவிய அளவில் மாணவர்கள் பலரும் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்ததைத் தொடர்ந்து அனைத்துக் கல்லூரிகளையும் மூடும்படி மாநில அரசு உத்தரவிட்டிருந்தது.

 

 

எதிர்வரும் திங்கட்கிழமை (மார்ச்.25,2013) முதல் இந்த கல்லூரிகளை மீண்டும் திறக்க மாநில அரசு முயற்சிகளை முன்னெடுத்துவருவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருக்கும் பின்னணியில், தமிழக மாணவர்களின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்று போராடும் மாணவர்களுக்கான அமைப்பாக உருவாகியிருக்கும் அமைப்புக்களில் ஒன்றான தமிழீழ விடுதலைக்கான மாணவர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த லயோலா கல்லூரி மாணவர் ஷண்முகப்பிரியன் என்கிற செம்பியன் பிபிசி தமிழோசைக்கு அளித்த செவ்வியில் விளக்கினார்.

 

போராடும் தமிழக மாணவர்களின் கோரிக்கையை கண்டுகொள்ளாமல் புறக்கணித்த இந்திய நடுவணரசுக்கு தமிழ்நாட்டில் இருந்து செல்லும் வரியை தடுப்பதே தங்களின் அடுத்த கட்ட போராட்டம் என்று கூறிய செம்பியன், இதற்காக மாநிலம் தழுவிய அளவில் பரப்புரை செய்யப்போவதாக கூறினார்.

 

அதேபோல், ஐநா மன்றத்தீர்மானத்தில் இலங்கைக்கான சர்வதேச விசாரணை தேவை என்கிற தமிழக மாணவர்களின் கோரிக்கையை உள்வாங்காத அமெரிக்க அரசின் பொருட்களை புறக்கணிக்கும் போராட்டத்தை முன்னெடுக்கப்போவதாகவும் அவர் கூறினார்.

 
 

http://www.bbc.co.uk/tamil/india/2013/03/130323_notaxtoindiangovt.shtml

londan-hungerstrike

 

531507_597475306931165_797792405_n.jpg

 

(முகநூல்: loyolahungerstrike)

  • கருத்துக்கள உறவுகள்

Students bid to picket army zone

 

LANKA%20PROTEST_0_0_0.jpg
Picture for representation only

Chennai: Tension gripped the Army area headquarters here on Thursday after a group of students raising pro-Eelam slogans tried to enter the highly restricted defence zone in the city. 

The Army dispatched a few armed personnel to ease the tension at the gate. Meanwhile, the local police interfered and stopped the student protesters from scaling the gate and entering  the ATNK&K headquarters.      
 
Early morning, about 500 students belonging to the Students Federation for Freedom of Tamil Eelam protested opposite the Simpsons building on Anna Salai raising slogans against Sri Lanka’s alleged human rights violations. 
 
By noon, the protesters broke the barricade and reached the middle of the road, forcing policemen to take action. A few of them also ran towards the Army headquarters and began scaling the main gate. 
 
While the Army officials were alerted and a few armed Army personnel were rushing towards the gate, the local police controlled the situation and prevented the students from entering the restricted area. 
 

வணக்கம் தோழரே...

நான் மும்பாயில் இருந்து எழுதுகிறேன்... எனக்கு இங்கு ஒரு தகவல் கிடைத்தது... சென்னை JPR கல்லூரியில் கறுப்பு (black) நிற shirt அணிந்து சென்ற மாணவர்களை தேர்வு எழுத அனுமதிக்கவில்லையாம். தயவு செய்து இந்த தகவலை உறுதி செய்யுங்கள். உண்மையெனில் அந்த மாணவர்களுக்கு உதவ முயலுங்கள்.

(முகநூலில் ஒரு தமிழக உறவு)

 

அது ஒரு கல்லூரியே அல்ல சரியான காட்டுமிராண்டி பள்ளிக்கூடம். அங்கு மாணவர்கள் ரவுடிகளை வைத்து அடக்கப்படுவார்கள். அவ்வாரான கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் கொஞ்சம் தங்கள் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு செயல்படுவது நல்லது.

எந்த கல்லூரிகளும் நாளை திறக்கப்படாது. மாணவர்கள் இதுநாள் வரை நடத்திய போராட்டங்களின் போது மத்திய- மாநில அரசுகளின் பிரதிநிதிகள் தங்களை சந்தித்து பேசவேண்டும் என்றும், அப்போது ஈழத் தமிழர்களின் நலனுக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாக உறுதி அளிக்க வேண்டும் .

ஆனால் இதுதொடர்பாக யாரும் மாணவர்களுடன் எந்தவிதமான பேச்சு வார்த்தையும் நடத்தவில்லை. எனவே கல்லூரி மாணவர்கள் தங்களது போராட்டத்தை தொடர முடிவு செய்துள்ளனர். இதனால் கல்லூரிகளை உடனடியாக திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதுபோன்ற காரணங்களால் கலைக்கல்லூரிகள் மற்றும் என்ஜினீயரிங் கல்லூரிகளை உடனடியாக திறக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக கல்வி துறை உயர் அதிகாரி தெரிவித்தார்.

 

(முகநூல்: loyolahungerstrike)

மாணவர்கள் போராட்டம் எதிரொலி: திருவனந்தபுரத்துக்கு(கேரளா) போகிறது சென்னை இலங்கை தூதரகம்

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

வருகிற 27-ந் தேதி அன்று தமிழகம் முழுவதும் மத்திய அரசு அலுவலகங்களுக்கு பூட்டு போட்டு போராட்டம்.

 

(முகநூல்: loyolahungerstrike)

இலங்கை அரசைக் கண்டித்து நடிகர், நடிகைகள் உண்ணாவிரதம். ரஜினி, கமல் கலந்து கொள்கிறார்கள். :D

நாள்: ஏப்ரல் 2, இடம்: அபிபுல்லா சாலை (நடிகர் சங்க மைதானம்)

நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை


(முகநூல்)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.