Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடைகொடுதாயே.......

Featured Replies

பூங்குயில்களே-உங்கள்

முகாரியைக்கொஞ்சம்

முடக்கிப்போடுங்கள்

காற்றில்கலந்த கந்தகநெடியிலே -என்

வெற்றிச்சேதியை விட்டுச்செல்கிறேன்

அப்போதுபாடுங்கள்-புதிய

பூபாள ராகங்கள்.

எனை வளர்த்தபாசறையில்

நான்வளர்த்த பூஞ்செடியே

நாளைய சேதிகேட்டு

புதிதாய் மொட்டுவிடுவாயா-இலயேல்

உயிர்பட்டு விடுவாயா?

நாணல்களே....ஏன்..

கோணல்களானீர்கள்

பனித்துளி என்ன

உங்களுக்குப்பெருஞ்சுமையோ

தலைநிமிர்ந்துநில்லுங்கள்

ஆதவனின் அனல்க்கரங்கள்

அள்ளிச்செல்கயிலே அறிவீர்கள்

நீங்கள் சுமந்தது

வைரக்கிரீடமெண்று.

வீரதேசத்தின்

விடுதலைக்காற்றே-என்

மண்ணின் மணம்சுமந்து

உயிர்க்கூண்டில் நிறைந்து

உறவாடிச்செல்லேன் ஒருநொடி.

தமிழீழத்தாயே....

எண்றெண்றும்

இறவாத வரஞ்சுமந்து

கரும்புலியென -இவன்

களமேகும் கணமிது-உன்

விழுப்புண்ணில் வளியும்

குருதி தொட்டு

வழ்த்திவிடைகொடு-ஒரு

வெற்றித்திலகமிட்டு.

தமிழீழத்தாயே....

எண்றெண்றும்

இறவாத வரஞ்சுமந்து

கரும்புலியென -இவன்

களமேகும் கணமிது-உன்

விழுப்புண்ணில் வளியும்

குருதி தொட்டு

வழ்த்திவிடைகொடு-ஒரு

வெற்றித்திலகமிட்டு.

உணர்வுபூர்வமான வரிகள் பாராட்டுக்கள் தொடர்ந்து எழுதுங்கள் :wink: :arrow:

  • தொடங்கியவர்

உங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றி கெளரிபாலன்.

நல்ல உணர்ச்சிமிக்க கவிதை ஈழநேசன். கவிதைக்குப் பாராட்டுக்கள்.

சில எழுத்துப் பிழைகள் உண்டு அதனைத் திருத்தவும்.

மேலும் உங்கள் கவிதையை எதிர்பார்க்கிறோம். தொடர்ந்து எழுதுங்கள்

அற்புதமான வரிகள் - ஈழநேசன்!

கரும்புலிகளை நினைவுகூர்ந்து கவி எழுதிய உங்களுக்கு - நன்றியுடையோம்!

நல்ல கவிவரிகள் வாழ்த்துக்கள்

வணக்கம் தமிழ்நேசன், பாராட்டுக்கள்

உணர்வுபுூர்வமான கவிதை

அன்புடன்

மணிவாசகன்

  • கருத்துக்கள உறவுகள்

வீதியிலே இவர் நகர்ந்தால்

வீட்டுநாய்கள் வாலாட்டும்.

வாசற்கதவோரம் வரவேற்றுக்

குழைந்து இழையும்.

சீறிச் சிலிர்க்கின்ற

சின்னஞ்சிறு புூனைக்குட்டி

செத்தை மறைப்பிலிருந்து

விழி விரித்து வியத்திருக்கும்.

கங்குல் போர்த்திய

கரிய வானிடையே................

கரும்புலிகளை காணும் ஆவலுடன்

உடுக்கூட்டம் கால் கடுக்கும்.

சரசரக்கும் சருகொலியில்

சங்கதியை அறியும்

சாமத்துக் காக்கைகள்

சலசலத்து அடங்கும்.

இந்தத்.....................................

தென்றல் வருடும்

தேசத்து நாயகர்களின்

முன்றலில் வீழ்வதற்கே

முகைகள் முகம் மலரும்.

கரும்புலிகள் காலத்தை வென்றவர்கள்.

கொடை எனும் சொல்லிற்கே தனித்துவத்தைக் கொடுத்தவர்கள்.

ஈழநேசன் உங்கள் உணர்வுகள் எழுத்தென்னும் முகவரிக்கு அப்பால்

முகம் காட்டுகிறது

சாதாரணமாக நினைக்க முடியவில்லை.

உள்ளத்தைத் தொடும் வார்த்தைகளுக்க அப்பாற்பட்ட ஒன்று

வல்வை சகாறா

  • தொடங்கியவர்

--------------------------------------------------------------------------------

நல்ல உணர்ச்சிமிக்க கவிதை ஈழநேசன். கவிதைக்குப் பாராட்டுக்கள்.

சில எழுத்துப் பிழைகள் உண்டு :oops: அதனைத் திருத்தவும்.

மேலும் உங்கள் கவிதையை எதிர்பார்க்கிறோம். தொடர்ந்து எழுதுங்கள்

உங்களின் பராட்டுக்கு மிக்க நன்றி ரசிகை கடந்த இரண்டு நாட்கள் இந்தப்பக்கம் வரமுடியாமற்ப்போய் விட்டது. எந்த இடத்தில் எழுத்துப்பிழை இருக்கின்றது என்பதைக்குறிப்பிட்டு இருந்தால் திருத்துவதற்கு மிக உதவியாய் இருக்கும். :oops:

  • தொடங்கியவர்

--------------------------------------------------------------------------------

அற்புதமான வரிகள் - ஈழநேசன்!

கரும்புலிகளை நினைவுகூர்ந்து கவி எழுதிய உங்களுக்கு - நன்றியுடையோம்!

நன்றி சொல்லி எனையேன் உணர்வுகளின் சங்கமத்திலிருந்து தள்ளி வைக்கின்றீர்கள்????உங்களைப்போன்ற கவிஞர்களே என் ஆக்கத்தைப்பாராட்டும் போது என்னுடயதும் கவிதைதானோ????? என்னும் தயக்கம் தீர்ந்து போய் விடுகின்றது.மிக்க நன்றி, தங்களின் தட்டிகொடுத்தலுக்கு

  • தொடங்கியவர்

மணிவசகன்,இலக்கியன் மற்றும் வல்வைசகாரா. உங்களின் பராட்டுக்களுக்கு என்றென்றும் நன்றியுடையேன்.....

வல்வைசகாரா... உங்களின் கவிதை அருமையாக இருக்கின்றது. தனித்தலைப்பில் பதிவுசெய்திருக்கலாமே பலரும் படித்திருப்பார்கள் :idea: :idea: :idea: :idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.