Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

[காணொளி] இந்திய அரசை வேரறுக்க வேண்டும்: நடிகர் மன்சூரலிகான்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என் தொப்புள் கொடி உறவுகளை கொன்று குவித்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தும் சிறீலங்கா அரசுக்கு ஆதரவாக இருக்கும் இந்திய அரசினை நான் வெறுக்கிறேன். இந்திய அரசினை வேரறுக்க வேண்டும்... மண்ணின் மைந்தர்கள் விரைவில் தாயகம் திரும்புவார்கள் என்று நடிகர் மன்சூரலிகான் தெரிவித்துள்ளார்.

சென்னை வள்ளுவர்கோட்டத்தில் இன்று நடைபெற்ற தமிழகவாழ் ஈழத்தமிழர் பட்டினிப்போரில் கலந்துகொண்ட நடிகர் மன்சூரலிகான் தனது உரையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்..

அவரது உரையினை காணொளியாக காணுங்கள்..

நன்றி இணைப்பிற்கு.

 

இப்பதான் சரியான ஆள் களத்தில புகுந்திருக்கின்றார் .இனி இந்தியாவும் உடையும். எமக்கும் தனி நாடுதான் .

இப்பதான் சரியான ஆள் களத்தில புகுந்திருக்கின்றார் .இனி இந்தியாவும் உடையும். எமக்கும் தனி நாடுதான் .

ம்ம்ம்... அப்போ இனி சோத்து பாசலுக்கு அலையத்தேவை இல்லையா அர்ஜூன்?...கச்சதீவையும் கைப்பற்ற தேவை இல்லை என்று சொல்ல வாறீங்களா? :D  :icon_idea:

Edited by r.raja

  • கருத்துக்கள உறவுகள்

இப்பதான் சரியான ஆள் களத்தில புகுந்திருக்கின்றார் .இனி இந்தியாவும் உடையும். எமக்கும் தனி நாடுதான் .

 

இப்படியான கதைகளால்.. என்ன லாபத்தைக் கண்டீர்கள், அர்ஜூன்.

உங்களுக்கு, தனிநாடு ஒவ்வாததா?

சிங்களவனுடன், சேர்ந்து, இப்ப... என்ன, மயிரைப் புடுங்கினீங்கள்?

சொல்லுங்கோ அர்ஜூன், நாங்களும்... உங்கள் கதையை... கேட்கின்றோம்.

இனியும்... ஒன்றுக்கும், உதவாத பம்பாத்து கதை கதைத்தால்.... விளைவு, விபரீதமாக இருக்கும்.

புரிஞ்சுதா.... அர்ஜூன்.

2009 இல் இவர் பேசியதை இன்னும் என்னால் மறக்க முடியவில்லை. இவர் சிங்களத்தையும் , ராஜபட்ஷேவையும் ஒருமையில் சகிட்டு மேனிக்கு மேடையில் பேசிக்கொண்டிருக்கும் போது ஒருவர் ஒரு சீட்டை கொடுத்தார் அதில் " உளவுத்துறையினர் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் பார்த்து பேசுங்கள் இல்லையேல் கைது செய்துவிடுவார்கள் " என்று எழுதி இருந்தது. அப்போது அதையும் மைக்கில் படித்துக்காட்டி இந்திய உளவுத்துரையினரையும் சேர்த்து தனது வழக்கமான பேச்சால் நையப்புடைத்தார். #மனதில் பட்டதை எவனுக்கும் பயப்படாமல் பேசுபவர்.

  • கருத்துக்கள உறவுகள்

மன்சூர் அலிகான்: 90 களில் பாலியல் வல்லுறவு வழக்கில் தண்டனை பெற்றவர்.

 

இப்படியானவர்களின் ஆதரவை ஆதரிப்பதை விட இப்படியானவர்களின் ஆதரவு எமக்கு வேண்டாம் என்று உரத்துச் சொல்லும் போதுதான் சிங்கள இராணுவ மிருகங்களால் சிதைக்கப்பட்ட எம் பெண்களின் ஆத்மா கொஞ்சமாவது ஆறுதல் படும்.

 

கேடிகள் எமக்கு வேண்டாம்.

  • கருத்துக்கள உறவுகள்

மன்சூர் அலிகான் மீதான பாலியல் வழக்குகள் இரத்து செய்யப்பட்டு விட்டது.... பணத்திற்காக படுத்திட்டு கேஸ் கொடுக்கும் பொண்ணுங்க இருக்கும் போது அதை அடையாளம் கண்டு நீதி மன்றமே இரத்து செய்து விட்ட போதும் வீண் பழி சுமத்துவது வன்மையாக கண்டிக்க தக்கது.....

அவர் தவறு செய்தார் என்று நிரூபிக்கப்பட்டதாக எனக்கு தெரியவில்லை. ஏனினும் அவரின் படங்களை பார்த்துவிட்டு இவர் இப்படித்தான் கேடி எனும் போக்கை வன்மையாக கண்டிக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

நடிகர் மன்சூர் அலிகான் கற்பழித்ததாக பொய் புகார் கொடுத்த இளம்பெண் ரூ.50 லட்சம் நஷ்டஈடு தர வேண்டும்: ஐகோர்ட்டு உத்தரவு

பிரபல வில்லன் நடிகர் மன்சூர்அலிகான் நுங்கம்பாக்கத்தில் வசித்து வருகிறார். கடந்த 1998-ல் இவர் மீது சினேகா சர்மா என்ற இளம்பெண் பாலியல் வல்லுறவு புகார் கொடுத்தார். அதன் பேரில் வடபழனி போலீசார் மன்சூர்அலிகான் மீது வழக்கு பதிவு செய்தனர். வழக்கை விசாரித்த சென்னை மாவட்ட செசன்ஸ் கோர்ட்டு மன்சூர் அலிகானுக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனையும் ரூ. 3 லட்சம் அபராதமும் விதித்தது.

தீர்ப்பை எதிர்த்து மன்சூர் அலிகான் சென்னை ஐகோர்ட்டில் அப்பீல் செய்தார். கடந்த 2007-ம் ஆண்டு நீதிபதி ஆர்.ரகுபதி அப்பீல் மனுவை விசாரித்து மன்சூர் அலிகான் குற்றமற்றவர் என்று கூறி விடுதலை செய்தார்.

விடுதலையை எதிர்த்து சினேகா சர்மா சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். சுப்ரீம் கோர்ட்டும் சினேகா சர்மாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இதையடுத்து நடிகர் மன்சூர் அலிகான் கடந்த 2011-ம் ஆண்டு சினேகா சர்மா மீது சென்னை ஐகோர்ட்டில் மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார். வழக்கை நீதிபதி மதிவாணன் விசாரித்தார். இன்று அவர் தீர்ப்பு கூறினார்.

அதில், நடிகர் மன்சூர் அலிகான் குற்றமற்றவர் என்றும், அவர் மீது சினேகா சர்மா பொய் புகார் கொடுத்து இருப்பதும் நிருபணம் ஆகி உள்ளது. எனவே மன்சூர்அலிகான் பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் விதத்தில் சினேகா சர்மா செயல்பட்டுள்ளார்.

எனவே மன்சூர் அலிகானுக்கு சினேகா சர்மா ரூ. 50 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று அதில் கூறியுள்ளார்.

http://www.maalaimalar.com/2012/12/10153006/actress-mansoor-alikhan-agains.html

பொய் புகார் கூறிய வைரவன் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கலாம்.......

அவர் தனது செய்திக்கு வருத்தம் தெரிவிக்கா விட்டால்.....

அவருடைய செய்தி இந்திய தலைமை நீதிமன்றையும் அதன் தீர்ப்பையும் விமர்சனம் செய்வதாக இருக்கின்றது.....

மன்சூர் அலிகான்: 90 களில் பாலியல் வல்லுறவு வழக்கில் தண்டனை பெற்றவர்.

 

இப்படியானவர்களின் ஆதரவை ஆதரிப்பதை விட இப்படியானவர்களின் ஆதரவு எமக்கு வேண்டாம் என்று உரத்துச் சொல்லும் போதுதான் சிங்கள இராணுவ மிருகங்களால் சிதைக்கப்பட்ட எம் பெண்களின் ஆத்மா கொஞ்சமாவது ஆறுதல் படும்.

 

கேடிகள் எமக்கு வேண்டாம்.

 

டொக்டர் எஞ்சீனீயர் லெவல்ல உள்ள ஆட்களிடம் ஆதரவை பெற்றால் மேலும் அவர்கள் ரைகட்டி கோட் சூட் போட்டு குரல் கொடுத்தால் ஆத்மாக்களை வேளைக்கு சாந்திப்படுத்திவிடலாம். போன வருடம் நாடுகடந்த அரசு நடத்திய யாகத்தி்ல் எல்லா ஆத்மாக்களும் சாந்தியடைந்துவிட்டதாக அறிவித்தது பொய் போல் உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

மாணவர் போராட்டம், மாணவர் போராட்டமாகவே... இருக்கட்டும்.
தயவு செய்து.... நடிகர்களே, அரசியல் வாதிகளே... ஒதுங்கி நில்லுங்கள்.
மாணவர் போராட்ட, மேடைக்கு... கிட்ட வந்தீர்களானால், தங்கபாலு தலையிருந்து சட்னி பாய்ந்த மாதிரி, உங்கள் தலையிருந்தும் சட்னி பாயும், ஓகேயா.....

  • கருத்துக்கள உறவுகள்

மன்சூர் அலிகான் ஒன்றும் மாணவர் போராட்டத்தில் கலந்து கொள்ள வில்லையே? தமிழ் நாட்டில் வாழும் ஈழத்தமிழர்களால் நாடத்தப்பட்ட உண்ணாவிரத போராட்டத்தில் தான் கலந்து கொண்டார்.....

அவர்கள் அழைத்தார்கள் இவர் வந்து உரையாற்றினார்.....

Thats all

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்பட்டினிப்போரில் இயக்குநர் சேரன் அவர்களும் கலந்துகொண்டார்...  ஆனால் அவர் பேச மறுத்துவிட்டார்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.