Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் ராணுவத் தளபதி ஹத்துருசிங்கவின் கட்டளையின்படி மேஜர் பத்திரன தலமையிலான ராணுவக் குழுவே உதயன் பத்திரிக்கையாலயத்தை எரித்தது - லங்கா ஈ நியூஸ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாண சிங்கள ராணுவத்தின் தளபதி மகிந்த ஹத்துருசிங்கவின் கட்டளைப்படி கஜபாகு படைப்பிரிவின் இரண்டாவது கட்டளையிடும் அதிகாரியான  மேஜர் பத்திரண தலமையிலான இராணுவக்குழுவே யாழ் உதயன் பத்திரிக்கையாலயத்தை எரித்ததாக சிங்கள இணையத்தளமான லங்கா ஈ நியூஸ் செய்தி வெளியிட்டிருக்கிறது.

 

அது மேலும் தெரிவிக்கையில், மகிந்த ஹத்துருசிங்கவுக்கு மிகவும் நெருக்கமான மேஜர் பத்திரன, ஹத்துருசிங்க மனநோய் சிகிச்சை பெற்று வந்த வேளையில் அவருக்குத் தேவையான உதவிகளை வழங்கிவந்ததாகவும், இதனாலேயே அவரிடம் இந்த தாக்குதல் வேலை ஒப்படைக்கப்பட்டதாகவும் கூறப்பட்டிருக்கிறது.

 

அச்செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, உதயன் பத்திரிக்கையாலயம் மீதான தாக்குதலுக்கு ஒரு சில வாரங்களுக்கு முன்னர் ஹத்துருசிங்க தலமையில் நடைபெற்ற உயர் மட்ட ராணுவ ஆலோசனைக் கூட்டமொன்றில் உதயன் பத்திரிக்கை பற்றி பிரதானமாக ஆரயப்பட்டிருக்கிறது. " தனது சொற்படி உதயன் நடந்துகொள்ளாதபடியினால,  பாதுகாப்புச் செயலர் கோத்தபாய உதயன்மேல் கடுமையான கோபத்தில் இருக்கிறார், ஆகவே அதனை வழிக்குக் கொண்டுவர உதயன்மேல் நாம் நடவடிக்கையெடுப்பது உடனேயே அவசியமானது" . ஆகவே உதயன்மேல் தாக்குதல் நடத்தும் பொறுப்பை ஹத்துருசிங்க தனது நம்பிக்கைக்குப் பாத்திரமான மேஜர் பத்திரணவிடம் ஒப்படைத்திருக்கிறார்.

 

உதயன் மீதான தாக்குதலுக்கு முன்னோடியாக அந்நிறுவனத்தின் ஊழியர்கலை விசாரணைக்கு அழைத்து அவர்கள் எவ்வாறு செயற்பட வேண்டும் என்கிற பாணியில் மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது. அத்துடன், "நாங்கள் உங்கள் மாவட்டத்தில் பல அபிவிருத்தித் திட்டங்களைச் செய்து வருகிறோம், உங்களுக்குத் தேவையான அனைத்தையுமே நாம் செய்துவரும்போது நீங்கள் அவைபற்றி எழுதாமல் தேவையற்ற அரசியல் செய்கிறீர்கள்" என்றும் மிரட்டப்பட்டிருக்கிறார்கள். இந்த மிரட்டல்களுக்குப் பணிந்து உதயன் தமது அபிவிருத்தித் திட்டங்கள் பற்றி எழுதும் என்று எதிர்பார்த்து ஏமாற்றமடைந்த ராணுவம் இரண்டாவது கட்டமான தாக்குதலுக்கு ஆயத்தமானது.

 

தாம் முறைப்பாடு செய்தாலும் எந்தப்பயனும் வரப்போவதில்லை என்பதுமட்டுமல்லாமல், தாம் மீண்டும் தாக்கப்படுவோம் என்கிற அச்சத்தினால் உதயன் நிர்வாகமும், ஊழியர்களும் இத்தாக்குதல் பற்றியோ அல்லது அதற்கு முதல் நடந்த விசாரணை பற்றியோ வெளியே பேசப் பயப்படுவதாகவும் லங்கா ஈ நியூஸ் கூறுகிறது.

 

உதயன் பத்திரிக்கையாலயத்தில் தாக்குதல் நடைபெற்ற அன்று பத்திரண தாக்குதல் தொடங்கி முடியும்வரை அங்கே இருந்திருக்கிறார். காலை 4:20 அணியளவில் தாக்குதலுக்கு வந்த லாண்ட் குறூசர் வாகனம் மற்றும் இரு இராணுவ ஜீப் வண்டிகள், மூன்று உந்துருளிகளில் தாக்குதல் நடத்திய இராணுவ அணி அவ்விடத்தை விட்டு அகன்றிருக்கிறது. மஉந்துருளிகளில் வந்தவர்களிடம் இலகுரக யூ ஸி தானியங்கித் துப்பாக்கிகளும், ஜீப் வண்டிகளில் வந்தவர்களிடம் டி 56 ரக தானியங்கித் துப்பாக்கிகளும் இருந்திருக்கின்றன.

 

இந்த ராணுவ அணி, கஸ்தூரியார் வீதிச் சந்தியில் வரும்போது அதிகாலை தமது வேலைகளுக்குச் சென்று கொண்டிருந்த 3 தமிழர்களைக் கண்டிருக்கிறது. உடனேயே அவர்களை மறித்துஈங்கு கண்டதை எங்காவது சொன்னீர்களென்றால், உங்களைச் சுட்டுக் கொல்லுவோம் என்று துப்பாக்கிகளைக் காட்டி மிரட்டி விரட்டியடித்திருக்கிறது. 

 

தாக்குதலுக்கு முன்னர், உதயன் முன்வாசல் வழியாக வந்த இந்த ராணுவ அணி, அங்கே பாதுகாப்புக் கடமையிலிருந்த ஊழியரின் வாயினுள் துபாக்கியை அழுத்தி மிரட்டிவிட்டே உள்ச்சென்று தாக்குதலை ஆரம்பித்திருக்கிறது.

 

இதேவேளை, உதயன் மீதான தாக்குதலுக்குக் கண்டனங்கள் அதிகரித்து வரும் வேளையில், இதை மறைப்பதற்காக யாழ்ப் போலீஸார் ஒரு விசாரணைக் குழுவை அமைத்திருக்கிறார்கள். அவ்விசாரனைக் குழுவின் அறிக்கைகளின்படி, ராஜபக்ச சகோதரர்கள் மீது சேறும் பூசும் முகமாக புலம்பெயர் நாட்டிலிருந்து வரும் பனத்தின்மூலமே இத்தாக்குதல் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டதாக செய்தி கசிய விடப்பட்டிருக்கிறது.

 

ஆனால், விடயம் எல்லை மீறிப் போகும் பட்சத்தில், ஹத்துருசிங்கவிடம் இன்னொரு திட்டமும் இருப்பதாக அந்த இணையம் தெரிவிக்கிறது. அதாவது, யாழில் இவ்வாறான தாக்குதல்கள், படுகொலைகளைச் செய்யவென முன்னால் இராணுவத்திலுருந்து தப்பியோடிய 20 பேர் கொண்ட அணியொன்று கோத்தபாயவின் கட்டளையின்படி ஹத்துருசிங்கவினால் அமர்த்தப்பட்டிருக்கிறது. சிலவேளை வெளிநாட்டு அழுத்தங்களினால் தாக்குதலாளிகளை இனம் காட்ட வேண்டிவரும் பட்சத்தில் கண்துடைப்பிற்காக இந்த 20 பேரில் சிலரை சிங்களம் நீதிமன்றத்தின் முன்  நிறுத்தலாம் என்று கூறப்பட்டிருக்கிறது.

 

சிங்கலம் திட்டமிட்டு தமிழினத்தின் அரசியல் அபிலாஷைகளையும், சனநாயக உரிமைகளையும் அழித்துவரும்போது, இங்கே சிலர், "வன்னி மக்கள் மீதான உதயனின் யாழ் மைய்யவாதமே தாக்குதலுக்குக் காரனம்" என்று, "இது ஒரு உள்வீட்டுச் சதி" யென்றும், "தேர்தலில் அனுதாப வாக்குகளைப் பெறும் நோக்கத்தில் உதயனால் நடத்தப்பட்ட தாக்குதல்" என்றும் கூறுவதும், தாக்குதலை நியாயப்படுத்துவதும் மீண்டுமொருமுறை இவர்கள் யார், இவர்கள் யாருக்காக இயங்குகிறார்கள் என்பதையும் இலகுவாக அடையாளம் காட்டி விடுகிறது.

 

இதோ அந்த இணையத்தளச் செய்தி.........

 

http://lankaenews.com/English/news.php?id=13644

 

 

 

 

இது ஒரு பரகசியம், இயக்குபவர் கோத்தாவும் மகிந்தாவும்.

 

இந்த பயங்கரவாதிகளின் செயலை உலக நாடுகளின் முன்பாக எடுத்து செல்வது எமது கடமை.

  • கருத்துக்கள உறவுகள்

பத்திரிகையை  எரிப்பதற்கே இராணுவத்தை பயன்படுத்தும் நாடு சிறிலங்காவாகத்தானிருக்கும்

ஒரு மக்களாட்சி நாட்டின் முதுகெலும்பு பத்திரிக்கை சுதந்திரம். தமிழர்களுக்கு இருக்கும் கடைசி சுதந்திரத்தையும் அழிக்க நிற்கின்றது சிங்கள பயங்கரவாதம்.

  • கருத்துக்கள உறவுகள்

பெயருக்குத் தான் இலங்கையில் மக்கள் ஆட்சி

மற்றும்படி அங்கு குடும்ப அரசியலும் ராணுவ ஆட்சியும் தான் நடக்கின்றது .

 

பயங்கரவாதத்திற்கெதிரான நடவடிக்கை என்ற பெயரில்

தமிழ் மக்களை அச்சுறுத்தலுக்குள் வைத்திருக்கும் மகிந்தவிற்கும் 

அவரின் சிங்கள  ராணுவத்திற்கும் சர்வதேச ஆதரவு குறைந்து வருகின்றது.

 

ஊடக அச்சுறுத்தல் உள்ள  நாடுகளின் பட்டியலில் மிகவும் முன்னிலையான

 

இடத்தில் சிறிலங்கா உள்ளது குறிப்பிடத்தக்கது

 

Edited by வாத்தியார்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.