Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூடங்குளம்: சோதனை ஓட்டத்திற்கே இத்தனை பஞ்சரு’ன்னா..?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கூடங்குளம்: சோதனை ஓட்டத்திற்கே இத்தனை பஞ்சரு’ன்னா..?

Posted by ஆதன்

20-kudankulam-nuclear-planet-3.jpg?w=604

கூடங்குளம் அணு உலைக்கு தரமற்ற உதிரிபாகங்கள் தரப்பட்டதாக ரஷியாவில் அந்நிறுவனங்கள் மீது வழக்கு தொடரப்பட்டு உள்ளதாக செய்திகள் வந்து உள்ள அதே நேரத்தில் தொடர்ந்து பலமுறை கூடங்குளம் அணு உலை சோதனை ஓட்டத்தில் வால்வுகள் பழுதடைந்து மாற்றப்பட்டு வருவதாக செய்திகள்வருகின்றன.

**************

அதிகாரப்பூர்வமான மின் உற்பத்திக்காக இயக்கத்தை தொடங்க வேண்டும் என போலீசை குவித்து மும்முரமாக வேலை செய்தும் இதுவரை கூடங்குளம் உலையிலிருந்து மின்சாரம் வர வைக்க முடியவில்லை.

எதிர்ப்புகளை முறியடித்து இதனை இயக்கி காண்பிக்காவிடில் இந்தியா முழுவதும் 30க்கும் மேற்பட்ட அணு உலைகளை கட்ட ஏற்கனவே போட்டு உள்ள திட்டத்திற்கு  மேலும் மக்கள் எதிர்ப்பு பெரிய அளவில் இருக்கும்.

300 மெகா வாட் கூட இந்த அணு உலையிலிருந்து மின்சாரம் வர வாய்ப்பு இல்லை எனவும், அதுவும் ஒரு குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு மட்டும் தான், அதன் பின் பல லட்சக்கணக்கான ஆண்டுகள் அதன் கழிவுகள் பாதுகாக்க வேண்டும் எனவும்… அணு உலை நிபுணர்களே கூறும் போதும், உலகம் முழுவதும் வாங்க ஆள் இல்லாத இந்த ஆபத்தான அணு உலைகள் அமெரிக்கா அணு  உலை வியாபாரிகளின் லாபத்திற்காக இந்தியா தலை மீது சுமத்தப்பட்டு உள்ளது என்பதே நிதர்சனம்.

அணு உலை முதல் வால்மார்ட் வரை எந்த விஷயமானாலும் இந்திய மக்கள் பாதிக்கப்படுவது குறித்து துளிவும் அக்கறை இல்லாமல் அனைத்தும் ‘நாட்டின் வளர்ச்சிக்கானது’ என்ற பன்னாடு கம்பெனிகள் மனிதவள அதிகாரிகள் போல மன்மோகன் , ப.சிதம்பரம் செயல்படும் போது நாளை ஒரு மிகப்பெரிய விபத்து ஏற்பட்டாலும் ஆட்சியாளர்கள் வேடிக்கை தான் பார்ப்பார்கள். இதற்கு போபால் விஷவாயு படுகொலையே  ஒரு உதாரணம். நாங்கள் யார்  என்று அவர்கள் அறிவித்து விட்டார்கள். நாம் தான் முடிவு செய்தாக வேண்டும்…!

http://adhansite.wordpress.com/2013/04/20/koodangkulam-2013/

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அனு உலை இல்லாமல் ஆயிரம் மெகாவாட் மின்சாரத்திற்கான வழியைச் சொல்லுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அனு உலை இல்லாமல் ஆயிரம் மெகாவாட் மின்சாரத்திற்கான வழியைச் சொல்லுங்கள்.

 

அந்தந்த மாநிலங்கள் தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதுதான் ஒரே வழி.. தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் மின்சாரம் தமிழகத்துக்கு போதுமானதாக இருக்க வேண்டும்.. நெய்வேலி, கல்பாக்கம், மேட்டூர் என்று தமிழ்நாட்டில் கிடைக்கும் மின் உற்பத்தி தமிழகத்திற்குப் போதுமானதாகவே இருக்கும்... அயல் மாநிலங்களுடன் கிறிட் எல்லாம் இடியப்பச் சிக்கல் ஆனதால் அந்த மாநிலங்கள் நோகாமல் நுங்கு சாப்பிடுகிறார்கள் என நினைக்கிறேன்..!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அனு உலை இல்லாமல் ஆயிரம் மெகாவாட் மின்சாரத்திற்கான வழியைச் சொல்லுங்கள்.

நெய்வேலியில் அமைந்துள்ள இது வருடத்துக்கு 24 மில்லியன் டன் பழுப்பு-எரிபொருள் உற்பத்தி செய்கிறது. மேலும் இதன் மின்சார உற்பத்தி நிறுவுதிறன் வருடத்திற்கு 2490 மெகாவாட். இதில் 1167 மெகாவாட் தமிழ்நாட்டாலும், எஞ்சியவை அண்டை மாநிலங்களாலும் பயன்படுத்தப்படுகிறது.

http://ta.wikipedia.org

 

1323  மெகாவாட் மின்சாரம் உங்களிடமே அதிகப்படியாய் உள்ளது எந்த மாநிலம் அதிகப்படியான மின்சாரம் கேட்கிறானோ அவங்கிட்டை அனு உலையை குடுத்து வேலையை பாருங்க

"கூடங்குளம் அணு உலைக்கு தரமற்ற உதிரிபாகங்கள் தரப்பட்டதாக ரஷியாவில் அந்நிறுவனங்கள் மீது வழக்கு தொடரப்பட்டு உள்ளதாக செய்திகள் வந்து உள்ள அதே நேரத்தில் உலகம் முழுவதும் வாங்க ஆள் இல்லாத இந்த ஆபத்தான அணு உலைகள் அமெரிக்கா அணு  உலை வியாபாரிகளின் லாபத்திற்காக இந்தியா தலை மீது சுமத்தப்பட்டு உள்ளது என்பதே நிதர்சனம்."

 

செய்தின்னா இப்படித்தான் இருக்கனும்.


 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அனு உலை இல்லாமல் ஆயிரம் மெகாவாட் மின்சாரத்திற்கான வழியைச் சொல்லுங்கள்.

 

 

அடுத்தவன் எக்கேடு கெட்டால் என்ன நான் வியர்க்காமல் வாழ, தொலைக்காட்சி பார்க்க, உல்லாசமாக வாழ மிசாரம் கிடைத்தால் போதும் என்ற மனநிலை கண்டிக்கத்தக்கது. அணுமின் நிலையத்தை ஆதரிப்பவர்கள் தங்களின் குடுப்பத்துடன் கூடங்குளத்தில் போய் குடியிருந்துகொண்டு ஆதரிக்கடுமே! தலைவலியும் காச்சலும் தனக்கு வந்தால்தானே தெரியும் இந்த சுயநல வாதிகளுக்கு

 

முதலில் ஒன்றைப்புரிந்துகொள்ளவேண்டும். அணுசக்தி துறை ஆயிரம் மெகாவாட்தயாரிக்கும் திறனுடன் ஒரு உலையை நிறுவினால் அதில் பாதிஅளவுகூட உற்பத்தியே செய்வதில்லை என்பதுதான் வரலாறு.கல்பாக்கம் உலைகளே கடந்த நான்கைந்து வருடங்களாகத்தான்மொத்த உற்பத்தி திறனில் 40 முதல் 50 சதவிகிதத்துக்கு மின்சாரம்தயாரிக்கும் நிலைக்கு வந்திருக்கின்றன.

ஆய்வாளர் மோகன் சர்மா கணக்கிட்டுள்ளபடி கூடங்குளத்தில்உள்ள இரண்டு உலைகளும் இயங்க ஆரம்பித்து மொத்த உற்பத்தித்திறனாகிய 2 ஆயிரம் மெகாவாட்டில் 60 சதவிகித மின்சாரம்தயாரித்தாலும், 1200 மெகாவாட்தான் வரும். இதில் பத்து சதவிகிதம்கூடங்குளம் வளாகத்துக்கே செலவாகிவிடும். (வழக்கமாக அணுஉலைகள் தங்கள் உபயோகத்துக்கே 12.5 சதம் செலவழிக்கின்றன).மீதி 1080 மெகாவாட்தான். இதில் தமிழகத்தின் பங்கு 50 சதவிகிதம்எனப்படுகிறது. (இதுவும் வழக்கமாக 30 சதவிகிதம்தான்.)ஐம்பது என்றே வைத்தாலும் கிடைக்கப் போவது 540 மெகாவாட்.இதில் 25 சதம் வழக்கமாக தமிழகத்தில் மின்கடத்துவதில் ஏற்படும்டிரான்ஸ்மிஷன் இழப்பு. எனவே நிகர மின்சாரம் கிடைக்கக் கூடியது405 மெகாவாட்தான்.

இதற்கு இத்தனை கோடி செலவு செய்து படு ஆபத்தான வம்பைவிலைக்கு வாங்கத் தேவையே இல்லை. தமிழகம் முழுக்கவும்இருக்கும் குண்டு பல்புகளை மாறி குழல் பல்புகளாக்கினாலே 500மெகாவாட்டுக்கும் மேலே மின்சாரம் மிச்சமாகிவிடும். இப்போதுடிரான்ஸ்மிஷன் லாஸ் என்ப்படும் மின் கடத்துதலில் ஏற்படும்இழப்பால் இந்தியாவில் நாம் தயாரிக்கும் மின்சாரத்தில் 25 முதல் 40சதவிகிதத்தை சுமார் 72 ஆயிரம் மெகாவாட்டை விநியோகிக்கும்போதே இழந்து கொண்டிருக்கிறோம். ஸ்வீடன் நாட்டில் இந்த இழப்பு வெறும் 7 சதவிகிதம்தான். அதுதான் உலக சராசரி. விநியோகத்தில் இழப்பை குறைக்க விஞ்ஞானிகள் வேலை செய்தாலே, சுமார் 60 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் நமக்குக் கிடைத்துவிடும். வெறும் பத்து சதவிகிதமாகக் குறைத்தாலே தமிழகத்தில் 1575 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும்.

 

இந்த மாதிரி நடைமுறைக்கேற்ற மாற்றுவழிகள் இன்னும் நிறையவே இருக்கின்றன. தமிழ்நாட்டில் மொத்தம் 5500 மெகாவாட்மின்சாரத்தை காற்றாலைகளிலிருந்து தயாரிக்கலாம். ஆனால் இதில்4700 மெகாவாட்தான் இப்போது தயாரிக்கிறோம். அதிலேயே இன்னும் 700 மெகாவாட் மீதம் இருக்கிறது. தமிழ்நாட்டில் இருக்கும் மொத்த வீடுகளில் வெறும் 25 சதவிகித வீடுகளின் கூரைகளில் மட்டும் இரண்டு கிலோவாட் மின்சாரம் தயாரிக்கும் சக்தியுடைய சூரிய ஒளி பேனல்கள் அமைத்தால் அதிலிருந்தே மொத்தம் ஏழாயிரம் மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். இதையே பள்ளிகள்,கல்லூரிகள், அலுவலகங்கள், வணிக வளாகங்கள், மருத்துவமனைகள், என்று பெரிய பெரிய கட்டடங்களின் மேற்கூரைகளில் அமைத்தால் தமிழகத்தில் மின்சாரம் உபரியாகிவிடும்.

 

அணுமின்சாரத்தின் அசல்விலையை அவர்கள் மூடி மறைத்துவிட்டு மற்றவற்றை விலைஅதிகம் என்று பொய் பிரசாரம்தான் செய்கிறார்கள். ஜெய்தாபூரில்பிரெஞ்ச் கம்பெனியிடமிருந்து அணு உலை வாங்கி நிறுவுவதற்குஅவர்கள் போட்டிருக்கும் மதிப்பீடு ஒரு மெகாவாட்டுக்கு 21 கோடிரூபாய். ஆனால் ஏழு இடங்களில் சூரிய சக்தி மின் நிலையங்கள்அமைக்க தனியாருக்கு இந்திய அரசு அனுமதி கொடுத்திருக்கிறது.அங்கே நிறுவும் செலவு ஒரு மெகாவாட்டுக்கு 12 கோடி ரூபாய்தான்.நிறுவியபின்னர் பராமரிப்பு செலவும் அணு உலையை விடக் குறைவு. ஆபத்து துளியும் இல்லை. அணு உலையை லட்சக்கணக்கான வருடத்துக்குப் பாதுகாத்தே திவாலாகிவிடுவோம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.