Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டெல்லியில் 13 வயது சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த 8 பேர்: 3 பேர் கைது

Featured Replies

டெல்லி: கிழக்கு டெல்லியில் 5 வயது சிறுமி பாலியல் பலாத்கார சம்பவத்தால் ஏற்பட்ட பரபரப்பு அடங்கும் முன்பு அதே பகுதியில் 13 வயது சிறுமியை 8 பேர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கிழக்கு டெல்லி பர்ஷ் பஜார் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமி மற்றும் அவரது 12 வயது தம்பி ஆகியோர் கடந்த மாதம் 15ம் தேதி வீட்டுக்கு முன்பு நின்று கொண்டிருக்கையில் அவர்களுக்கு தெரிந்த 2 பேரால் கடத்தப்பட்டனர். அந்த நபர்கள் அவர்களை நகருக்கு வெளியே இருக்கும் லோனி என்ற இடத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு வைத்து அந்த 2 பேரும், மேலும் அவர்களுடன் 6 பேரும் சேர்ந்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தனர்.

இதற்கிடையே பிள்ளைகளை காணவில்லை என்று அவர்களின் தந்தை போலீசில் புகார் கொடுத்தார். சிறுமியும், அவரது தம்பியும் கடந்த மாதம் 24ம் தேதி வீடு திரும்பினர். அதன் பிறகு சிறுமியின் தந்தை பாலியல் பலாத்கார புகார் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் போலீசார் தான் பாலியல் பலாத்கார புகார் வாங்க மறுத்ததாக சிறுமியின் குடும்பத்தார் தெரிவித்தனர்.

இந்நிலையில் டெல்லியில் 5 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட செய்தியை டிவியில் பார்த்த இச் சிறுமி நேற்று காலை தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து அவர் கிழக்கு டெல்லியில் உள்ள ஹெட்கெவார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது என்று கூறப்படுகிறது.

இதையடுத்து சிறுமியின் குடும்பத்தார் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து நேற்று தீபக்(21), ரஞ்சித்(20) மற்றும் சோஹன் லால்(24) ஆகிய 3 பேரை கைது செய்தனர். சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவர்களில் 4 பேர் அவருக்கு தெரிந்தவர்கள் தான் என்று போலீசார் தெரிவித்தனர் மீதமுள்ள 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
 

http://tamil.oneindia.in/news/2013/04/21/india-delhi-shamed-again-eight-men-gang-rape-minor-173829.html

 

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாருக்கும் பைத்தியம் பிடித்துவிட்டது..

  • கருத்துக்கள உறவுகள்

டெல்லியில் இருக்கும் பெண்களை எல்லாம் தூக்கி வேறு மாநிலத்துக்கு அனுப்புங்கப்பா...... என்ற கடவுளே இவனுங்களுக்கு தினமும் இதே வேலையா போச்சுப்பா....

  • கருத்துக்கள உறவுகள்

போற போக்கில... டெல்லியிலை இருக்கிற சோனியா, பிரியங்காவும் இதிலிருந்து தப்ப முடியாது போல கிடக்குது.

 

  • கருத்துக்கள உறவுகள்

தவறு செய்திருந்தால் தூக்கில் போடுங்கள்....

டெல்லி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானவரின் மனைவி கருத்து...

www.puthiyathalaimurai.tv

  • கருத்துக்கள உறவுகள்

போற போக்கில... டெல்லியிலை இருக்கிற சோனியா, பிரியங்காவும் இதிலிருந்து தப்ப முடியாது போல கிடக்குது.

எனக்கும் அப்படித்தான் தோன்றுகின்றது 

  • கருத்துக்கள உறவுகள்

போற போக்கில... டெல்லியிலை இருக்கிற சோனியா, பிரியங்காவும் இதிலிருந்து தப்ப முடியாது போல கிடக்குது.

 

உங்கட கேள்வியால  எனக்கு ஒரு சந்தேகம் சிறி

அவர்களுக்கே ஆபத்து என்கிறீர்கள்

அப்படியாயின் எம்மவர்கள் லட்சக்கணக்கில் போகிறார்களே அங்கு என்னத்துக்காக.......??

  • கருத்துக்கள உறவுகள்

உங்கட கேள்வியால  எனக்கு ஒரு சந்தேகம் சிறி

அவர்களுக்கே ஆபத்து என்கிறீர்கள்

அப்படியாயின் எம்மவர்கள் லட்சக்கணக்கில் போகிறார்களே அங்கு என்னத்துக்காக.......??

 

விசுகு,  நீங்கள்.... எனது வாயை கிளறுகிறீர்கள். வேண்டாம் ஐயா.... :D  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு,  நீங்கள்.... எனது வாயை கிளறுகிறீர்கள். வேண்டாம் ஐயா.... :D  :lol:

கண்டு பிடித்து விட்டீர்களா?

நிதானமாக உள்ளீர்கள்

நல்ல  மாற்றம்

வாழ்த்துக்கள் சொல்லலாமா???? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

கண்டு பிடித்து விட்டீர்களா?

நிதானமாக உள்ளீர்கள்

நல்ல  மாற்றம்

வாழ்த்துக்கள் சொல்லலாமா???? :lol:

 

அவசரப் பட்டு வாழ்த்து சொல்லாதீர்கள் விசுகு.

2,3 நாள் கழித்து எதுவும் நடக்கலாம். :D  :lol:  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

அவசரப் பட்டு வாழ்த்து சொல்லாதீர்கள் விசுகு.

2,3 நாள் கழித்து எதுவும் நடக்கலாம். :D  :lol:  :icon_idea:

 

அது தான் ஐயா

அதைக்கேள்வியாக்கினேன்

 

நாங்களாவது அடங்குவதாவது..............

சிறியா

கொக்கா.................. :lol:  :D  :D

  • கருத்துக்கள உறவுகள்

உங்கட கேள்வியால  எனக்கு ஒரு சந்தேகம் சிறி

அவர்களுக்கே ஆபத்து என்கிறீர்கள்

அப்படியாயின் எம்மவர்கள் லட்சக்கணக்கில் போகிறார்களே அங்கு என்னத்துக்காக.......??

 

எம்மவர்கள் பொதுவாக டில்லிக்குப் போவதில்லை. தமிழ்நாட்டுக்குத் தான் போவார்கள்.

 

அங்கே புதிய டிசைன் சாறி, சுரிதார், சோளி, பாவாடை, நகை என்பனவற்றை வாங்கப் போவார்கள். மட்டுமில்லாமல் பிறவிப் பெருங்கடலை நீந்திக் கடப்பதற்கு திருத்தல யாத்திரை செய்வார்கள்.

 

இவற்றை விட வேறென்ன காரணம் இருக்கும் சரி அப்பிடி டில்லிக்குப் போறதாத்தான் இருந்தாலும் :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

எம்மவர்கள் பொதுவாக டில்லிக்குப் போவதில்லை. தமிழ்நாட்டுக்குத் தான் போவார்கள்.

 

அங்கே புதிய டிசைன் சாறி, சுரிதார், சோளி, பாவாடை, நகை என்பனவற்றை வாங்கப் போவார்கள். மட்டுமில்லாமல் பிறவிப் பெருங்கடலை நீந்திக் கடப்பதற்கு திருத்தல யாத்திரை செய்வார்கள்.

 

இவற்றை விட வேறென்ன காரணம் இருக்கும் சரி அப்பிடி டில்லிக்குப் போறதாத்தான் இருந்தாலும் :unsure:

 

சிறியின் கவனத்துக்கு........... :lol:  :D  :D

  • தொடங்கியவர்

அது தான் ஐயா

அதைக்கேள்வியாக்கினேன்

 

நாங்களாவது அடங்குவதாவது..............

சிறியா

கொக்கா.................. :lol:  :D  :D

 

விசுகு அண்ணா,

 

இரண்டு மூன்று திரிகளில் பார்த்து விட்டேன். தமிழ்சிறி அண்ணாவே தானாக இனி எச்சரிக்கை புள்ளி வாங்க கூடாது என நினைத்து சிலவற்றை தவிர்த்து எழுத நினைக்கும் போது நீங்கள் அவர் எப்படி எழுதினாலும் அவர் எழுதுவதெல்லாம் சரி என்ற ரீதியில் கதைக்கிறீர்கள். :unsure: அல்லது எச்சரிக்கை புள்ளி பெற்றாலும் கூட அவர் மீளவும் அவ்வாறே எழுத வேண்டும் என அவரை ஊக்குவிக்கிறீர்கள். :unsure: இது சரியான செயலா? :rolleyes:

 

உங்கள் ஊக்குவிப்புகள் அவரை இன்னும் தவறாக எழுத தூண்டுவதாகவே அமையும் என்பதை உணர்ந்து இனி இதை தவிருங்கள். ஏற்கனவே 5 எச்சரிக்கை புள்ளி பெற்ற தமிழ்சிறி அண்ணா  இன்னொரு எச்சரிக்கை புள்ளி பெற்றால் ஒருமாத தடை என்பதையும் மறந்து விடாதீர்கள். :rolleyes:

 

தடை பெற்ற பின் நிர்வாகத்துடன் சண்டை பிடிப்பது ஏற்புடையதல்ல. தவறுகளை முன்னமே சுட்டிக்காட்ட வேண்டும் அல்லது அவரை தவறு செய்ய தூண்டுவதையும் நிறுத்த வேண்டும். :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணா,

 

இரண்டு மூன்று திரிகளில் பார்த்து விட்டேன். தமிழ்சிறி அண்ணாவே தானாக இனி எச்சரிக்கை புள்ளி வாங்க கூடாது என நினைத்து சிலவற்றை தவிர்த்து எழுத நினைக்கும் போது நீங்கள் அவர் எப்படி எழுதினாலும் அவர் எழுதுவதெல்லாம் சரி என்ற ரீதியில் கதைக்கிறீர்கள். :unsure: அல்லது எச்சரிக்கை புள்ளி பெற்றாலும் கூட அவர் மீளவும் அவ்வாறே எழுத வேண்டும் என அவரை ஊக்குவிக்கிறீர்கள். :unsure: இது சரியான செயலா? :rolleyes:

 

உங்கள் ஊக்குவிப்புகள் அவரை இன்னும் தவறாக எழுத தூண்டுவதாகவே அமையும் என்பதை உணர்ந்து இனி இதை தவிருங்கள். ஏற்கனவே 5 எச்சரிக்கை புள்ளி பெற்ற தமிழ்சிறி அண்ணா  இன்னொரு எச்சரிக்கை புள்ளி பெற்றால் ஒருமாத தடை என்பதையும் மறந்து விடாதீர்கள். :rolleyes:

 

தடை பெற்ற பின் நிர்வாகத்துடன் சண்டை பிடிப்பது ஏற்புடையதல்ல. தவறுகளை முன்னமே சுட்டிக்காட்ட வேண்டும் அல்லது அவரை தவறு செய்ய தூண்டுவதையும் நிறுத்த வேண்டும். :rolleyes:

நன்றி  துளசி

எம்மீதான  அக்கறைக்கும் நேரத்திற்கும்

 

எனக்கும் சிறிக்குமிடையில் ஒரு புரிந்துணர்வுண்டு

அது எல்லைகளை மீறாது

இதுவரை எனது எழுத்துக்களால் சிறிக்கு எந்த ஒரு இடைஞ்சலும் வந்ததில்லை

எச்சரிக்கைப்புள்ளிகள் கிடைக்குமாப்போல் அல்லது அதற்கு தூண்டுமாப்போல் அவரை நான் பயன்படுத்தியதில்லை.

(எழுத முதலே அவரை நான் எச்சரித்து விடுவேன்  சிறி  கவனம் என்று)

  • தொடங்கியவர்
எச்சரிக்கைப்புள்ளிகள் கிடைக்குமாப்போல் அல்லது அதற்கு தூண்டுமாப்போல் அவரை நான் பயன்படுத்தியதில்லை.

(எழுத முதலே அவரை நான் எச்சரித்து விடுவேன்  சிறி  கவனம் என்று)

 

அவருக்கு எச்சரிக்கைப்புள்ளிகள் கிடைக்குமாப்போல் அல்லது அதற்கு தூண்டுமாப்போல் அவரை நீங்கள் பயன்படுத்தியதாக நான் சொல்லவில்லை. :) ஆனால் உங்கள் எழுத்துகள் தெரிந்தோ தெரியாமலோ அவர் தவறு செய்வதை ஊக்குவிக்கலாம் என்பதை சுட்டிக்காட்டினேன். :)

 

ஏதும் தவறுதலான அர்த்தத்தை தந்திருந்தால் மன்னிக்கவும். :rolleyes:

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.