Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறுநீர் கற்களைக் கரைக்க மட்டுமல்ல "அது" க்கும் வெங்காயம் தான் சூப்பர்....!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
524711_503269956399114_403368732_n.jpg
 
வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம்... அதில் உள்ள 'அலைல் புரோப்பைல் டை சல்பைடு' என்ற எண்ணெய். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும், நமது கண்களில் கண்ணீர் வருவதற்கும் காரணமாக அமைகிறது. வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் ஆகியவை உள்ளன. அதன் பலன்களை இங்கே பார்ப்போம்,
 
* முருங்கைக்காயைவிட அதிக பாலுணர்வு தரக்கூடியது வெங்காயம்தான். தினமும் வெங்காயத்தை மட்டும் சாப்பிட்டு நீண்ட காலம் ஆரோக்கியமாகவும், பாலுறவுத் திறத்தோடும் வாழ்ந்ததாக ஒரு நபர் கின்னஸில் இடம் பிடித்திருக்கிறார்.
 
* வெங்காயம் ஒரு நல்ல மருந்துப் பொருள். இதை இதயத்தின் தோழன் என்றும் சொல்லலாம். இதிலுள்ள கூட்டுப் பொருட்கள் ரத்தத்தில் கொழுப்பு சேர்வதை இயல்பாகவே கரைத்து, உடலெங்கும் ரத்தத்தை கொழுப்பு இல்லாமல் ஓட வைக்க உதவி செய்கிறது.
 
* குளவியோ, தேனீயோ கொட்டிவிட்டால் பயப்பட வேண்டாம். அவை கடித்த இடத்தில் வெங்காயத்தை எடுத்துத் தேய்த்தாலே போதும். வெங்காயத்தில் உள்ள ஒரு வகை என்சைம், கொட்டியதால் ஏற்படும் உடலில் வலியையும், அழற்சியையும் உண்டாக்குகின்ற ப்ராஸ்டாகிளாண்டின்ஸ் என்ற கூட்டுப் பொருளை சிதைத்து விடுகிறது. விஷத்தையும் முறித்து விடுகிறது.
 
* சிறுநீர் அடக்கிவைக்கும் பழக்கம் ஆண்களைவிட பெண்களிடம் அதிகம் உண்டு. அவ்வாறு சிறுநீரை அடக்குவதால் அதில் நுண்ணுயிரிகளின் உற்பத்தி அதிகமாகி, நோய் உண்டாகும் வாய்ப்பு அதிகரிக்கும். இந்த பழக்கத்தை தொடர்பவர்களுக்கு சிறுநீர்த்தாரைத் தொற்று வரும். இவர்கள், வெங்காயத்தை உணவில் அதிகமாகச் சேர்த்துக்கொண்டால் போதும். வெங்காயம் கழிவுப் பொருட்களை கரைத்து, அழற்சியைக் குறைத்து கழிவுகளை வெளியே தள்ளிவிடும். இதனால் சிறுநீர்த் தாரைத் தொற்றும் குறையும்.
 
* யூரிக் அமிலம் அதிகமாக சிறுநீர்ப் பையில் சேர்ந்தால் கற்கள் தோன்றும். வெங்காயத்தை அடிக்கடி சாப்பிட்டால் அந்த கற்கள் கரைந்துவிடும்.
 
* முதுமையில் வரும் மூட்டு அழற்சியை கட்டுப்படுத்தும் ஆற்றல் வெங்காயத்திற்கு உண்டு. இதற்கு வெங்காயத்தையும், கடுகு எண்ணெயையும் சேர்த்து மூட்டு வலி உள்ள இடத்தில் தடவினால் போதும். வலி குறைந்துவிடும்.
 
* செலனியச் சத்து இருப்பவர்களுக்குத்தான் கவலை, மன இறுக்கம், களைப்பு போன்ற பிரச்சினை தோன்றும். இதைத் தவிர்க்க சுலபமான வழி வெங்காயத்தில் இருக்கிறது. வெங்காயத்தை தொடர்ந்து உணவில் எடுத்து வந்தாலே போதும். தேவையான செலினியச்சத்து கிடைத்துவிடும். வெங்காயம் தவிர, பூண்டையும் இதற்காக பயன்படுத்தலாம்.
 
* சீதோஷ்ண நிலை மாறும்போது அடிக்கடி இருமல் வரும். நுரையீரல் அழற்சி, மூக்கு எரிச்சல் போன்றவையும் ஏற்படும். சிறிது வெங்காயச் சாற்றில் தேன் கலந்து சாப்பிட்டால் மேற்கண்ட பிரச்சினைகள் நீங்கும்.
 
* புற்றுநோயைத் தடுக்கும் மருந்துப்பொருள் வெங்காயத்தில் இருப்பதாக சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புகைபிடித்தல், காற்று மாசுபடுதல், மன இறுக்கம் போன்றவற்றால் ஏற்படும் செல் இறப்புகள், செல் சிதைவுகளை இது சரிசெய்து விடுகிறது.
 
* நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.
 
* வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட உஷ்ணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்
 
* வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் கலந்து குடிக்க இருமல் குறையும்.
 
* வெங்காயச் சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.
 
* அடிக்கடி புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்றுவேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும். 
 
நன்றி :
கலை செல்வி.

செலனியச் சத்து இருப்பவர்களுக்குத்தான் கவலை, மன இறுக்கம், களைப்பு போன்ற பிரச்சினை தோன்றும். என்ன இது?

 

மல இறுக்கமா?

 

  • கருத்துக்கள உறவுகள்

எட்டாப்பழம் புளிக்கும் எண்டு சொல்லிக்கொண்டு இங்க ஒரு நரி தோட்டத்தையே சுத்தி சுத்தி வருது  :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எட்டாப்பழம் புளிக்கும் எண்டு சொல்லிக்கொண்டு இங்க ஒரு நரி தோட்டத்தையே சுத்தி சுத்தி வருது  :lol:

கலோ..அண்ணா..இதெல்லாம் யாழ் வாசகர்களின் ஒரு பொதறிவுக்கு.. :D

  • கருத்துக்கள உறவுகள்

கலோ..அண்ணா..இதெல்லாம் யாழ் வாசகர்களின் ஒரு பொதறிவுக்கு.. :D

நாங்க கரை கடந்து காண காலமாச்சு பாஸ்  :D

கலோ..அண்ணா..இதெல்லாம் யாழ் வாசகர்களின் ஒரு பொதறிவுக்கு.. :D

நாங்க கரை கடந்து காண காலமாச்சு பாஸ்  :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாங்க கரை கடந்து காண காலமாச்சு பாஸ்  :D

நாங்க கரை கடந்து காண காலமாச்சு பாஸ்  :D

அங்காளி பங்காளியை..யாராவது வாசகன்னு சொல்லுவாய்ங்களா..? நீங்க எல்லாம் உள்ளவந்தீட்டீங்க பாஸ்.. :D

  • கருத்துக்கள உறவுகள்

"அது"க்கு நல்லம் எண்டு கனக்க வெங்காயத்தை மண்டினால், பார்ட்னர் பக்கத்திலயே நிக்கமாட்டினம்.. தெரியுதா? :D

"அது"க்கு நல்லம் எண்டு கனக்க வெங்காயத்தை மண்டினால், பார்ட்னர் பக்கத்திலயே நிக்கமாட்டினம்.. தெரியுதா? :D

 

எனக்கு மன இறுக்கம் என்ன வியாதி என்று தெரியவில்லை?  எதோ உண்மையான வருத்தததை பற்றித்தான் பேசுகிறார்.  :(

 

ஏன் பாட்னர் வெங்காயம் மணக்குது என்று தள்ளிபோய்விடுவார்களா?

 

அல்லது பாட்னர் தனக்கு இல்லாமல் சாப்பிட்டாச்சு என்று கோபப்படுவாவ. அவவுக்கும் ஒரு வாய் வெங்காயத்தை கொடுத்துப் பார்க்கலாம் தானே பிடிபடுகிறதா என்று?

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எட்டாப்பழம் புளிக்கும் எண்டு சொல்லிக்கொண்டு இங்க ஒரு நரி தோட்டத்தையே சுத்தி சுத்தி வருது  :lol:

 

என்னயிருந்தாலும் தம்பி சுபேஸும் மனிசன்தானேயப்பா. :lol:  :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

செலனியச் சத்து இருப்பவர்களுக்குத்தான் கவலை, மன இறுக்கம், களைப்பு போன்ற பிரச்சினை தோன்றும். என்ன இது?

 

மல இறுக்கமா?

அது மன இறுக்கம் அண்ணா...இப்ப நந்தன் அண்ணையை பாருங்கோ..சில நேரம்..சிகன் கடையை வித்ததில் இருந்து மன இறுக்கத்தில்தான் இருக்கிறார்.. :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"அது"க்கு நல்லம் எண்டு கனக்க வெங்காயத்தை மண்டினால், பார்ட்னர் பக்கத்திலயே நிக்கமாட்டினம்.. தெரியுதா? :D

ஆசையில அளவுகணக்கிலாமல் அள்ளி சாப்பிட்டிட்டு போய்..திட்டு வாங்கி இருக்கிறியள் போல..திட்டம் பெயிலியறாய்ப்போனதில அந்த நாள் முழுக்க மூட் அவுட்டாகி மன இறுக்கத்தில் இருந்திருப்பியளே..?அதுக்கும் கொஞ்ச வெங்காயம் சாப்பிட்டிருக்கலாம் அண்ணா.. :D

  • கருத்துக்கள உறவுகள்

வெங்காய‌த்தில‌யும், முருங்கைக் காயிலும் ஒக்ச‌லேற்றும் அதிக‌ம் இருக்கு. இத‌ன் அர்த்த‌ம் என்ன‌ண்டா, அதிக‌ம் சாப்பிட்டால் சிறு நீர‌க‌க் க‌ல் வ‌ர‌க் கூடும். எதையோ கூட்டுற‌ன் எண்டு அள்ளிச் சாப்பிட்டு பிற‌கு "லைன்" முழுக்க‌ அடைப‌ட்டு மூத்தாவும் வ‌ராம‌ "அது"வும் வ‌ராம‌க் க‌ஷ்ட‌ப் ப‌ட‌வேண்டியிருக்கும். க‌வ‌ன‌ம் த‌ம்பி மார்! :D

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.