Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கரூர் அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி - மீட்கும் பணிகள் தீவிரம்

Featured Replies

கரூர் அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி முத்துலட்சுமியை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மதுரையில் இருந்து வரவழைக்கப்பட்ட நவீன கருவியுடன் மீட்புப் பணி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அதில் பயன் கிட்டவில்லை. எனவே மறுபடியும் ஆழ்துளை கிணறு அருகே துளையிட்டு மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனிடையே ஆள்துளை கிணற்றில்  மண் சரிந்து விழுந்த காரணத்தினால் மீட்புப் பணியில் சிரமமும் ஏற்பட்டுள்ளது.

பாதிரிப்பட்டி என்ற இடத்தில் தந்தை முத்துப்பாண்டியுடன் முருங்கைக் காய் பறிக்க அந்த சிறுமி சென்றபோது அங்கிருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தாள்.

7 வயதாகும் சிறுமி முத்துலட்சுமி, கிட்டதட்ட 12 அடி பள்ளத்தில் சிக்கிக்கொண்டாள்.அந்த ஆழ்துளை கிணறு 600 அடி ஆழம் கொண்டது.. தகவல் கிடைத்து அந்த இடத்திற்கு தீயணைப்பு மற்றும் மீட்புப்படை வீரர்கள் உடனடி மீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

அந்த ஆழ்துளை கிணற்றில் சிறுமி சிக்கி இருப்பதால் 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு குழிக்குள் ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வருகிறது.

அதே நேரத்தில்சிறுமி வீழ்ந்துள்ள பள்ளத்தின் அருகே 3 பொக்லைன் இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டு பள்ளம் தோண்டப்படுகிறது.இதன் மூலம் சிறுமியை மீட்கும் முயற்சி நடந்து வருகிறது.

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையின் அசைவை கண்ணகாணிக்க கேமரா செலுத்தப்பட்டது. கேமரா காட்சிகள் பதிவினை ஆராய்ந்த போது குழந்தை தலைகீழாக இருப்பது தெரியவந்தது. கிணற்றில் விழுந்து 12 மணி நேரத்திற்கு மேலாக ஆனதால் குழந்தை மயக்க நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.

பாறைகள் நிறைந்த பகுதியாக இருப்பதால் மீட்பு பணியில் சற்று காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக தீயணைப்பு துறை அதிகாரி சத்தியநாராயணன் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

 

முதல் காட்சிகள்:

 

karur-live1.png

 

karur-live2.png

 

karur-live-3.png

 

karur-live4.png

 

karur-live-5.png

 

 

http://puthiyathalaimurai.tv/child-trapped-in-borewell

 

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

குழியை தோண்டிவிட்டு பாதுகாப்பு வேலி போடாத மந்தையை தூக்கி உள்ளே போடவேண்டும்.. இவ்வாறு சிக்கிக்கொள்ளும் குழந்தையின் நிலை சித்திரவதைக்கு ஒப்பானது.. :(

 

எப்படியாவது மீட்டுவிடுவார்கள் என்கிற நம்பிக்கை உள்ளது..

  • கருத்துக்கள உறவுகள்

குழந்தை மீண்டுவர இறைவனை வேண்டிநிற்கின்றேன்!

Edited by யாழ்வாலி

  • கருத்துக்கள உறவுகள்

குழியை தோண்டிவிட்டு பாதுகாப்பு வேலி போடாத மந்தையை தூக்கி உள்ளே போடவேண்டும்.. இவ்வாறு சிக்கிக்கொள்ளும் குழந்தையின் நிலை சித்திரவதைக்கு ஒப்பானது.. :(

எப்படியாவது மீட்டுவிடுவார்கள் என்கிற நம்பிக்கை உள்ளது..

தமிழ் நாட்டில் இது ஒரு தொடர்கதை.....

  • கருத்துக்கள உறவுகள்

261159_189960617729403_1432098782_q.jpg

  700 அடி போர்வெல் குழியில் விழுந்த சிறுமி மீட்பு!

கரூர் மாவட்டம், துரியம்பாளையம் அருகே 700 அடி கொண்ட போர்வெல் குழியில் இன்று காலை தவறி விழுந்த சிறுமி முத்துலட்சுமியை நீண்ட போராட்டத்துக்கு பின்பு மீட்டனர்.

 

  • கருத்துக்கள உறவுகள்

  • தொடங்கியவர்

நன்றி நந்து அண்ணா இணைப்பிற்கு. :)

 

குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்கிறார்கள். அதன் பின்னர் தான் குழந்தையின் நிலை குறித்து தகவல் தெரிவிப்பார்களாம். நல்ல செய்தி கிடைக்கும் என நம்புவோம். :rolleyes:

 

  • கருத்துக்கள உறவுகள்

க. பரமத்தி: கரூர் அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி 16 மணி நேர போராட்டத்துக்கு பின் மீட்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி கரூர் அரசு மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்தார்.

Dinamalar

  • தொடங்கியவர்

15 மணி நேர போராட்டத்திற்கு பின் ஆழ்குழாய் கிணற்றில் விழுந்து மீட்கப்பட்ட சிறுமி மரணம்

 

கரூர் அருகே சனிக்கிழமை காலை 7 மணியளவில் 700 அடி ஆழம் உள்ள ஆழ்குழாய் கிணற்றில் தவறி விழுந்து மீட்கப்பட்ட 7 வயது சிறுமி இரவு மருத்துவமனையில் உயிரிழந்தார். இதனால், அவரை உயிருடன் மீட்க நடைபெற்ற 15 மணி நேர போராட்டம் வீணானது.

திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூரைச் சேர்ந்தவர் பாண்டி பூசாரி. இவர் தனது மனைவி பெருமாயி, மகள் முத்துலட்சுமி (7) மற்றும் தாய், தந்தையருடன் கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தூரிபாளியை அடுத்த இனங்கனூரில் சக்திவேல் என்பவரது தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார். இவர் தோட்டத்துக்கு அருகிலேயே குடிசை வீடு கட்டி அங்கு குடியிருந்து வருகிறார்.

இந்நிலையில், சக்திவேல் தனது தோட்டத்தில் விவசாயத்துக்காக சில நாள்களுக்கு முன்னர் 700 அடி ஆழத்தில் ஆழ்குழாய் கிணறு அமைத்தார். அந்தக் கிணற்றில் தண்ணீர் கிடைக்காததால், அப்படியே விட்டுவிட்டனர். அந்த ஆழ்குழாயை சாக்கு பை கொண்டு மூடி வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

சனிக்கிழமை காலை சுமார் 7 மணி அளவில் பாண்டி பூசாரியின் மகள் முத்துலட்சுமி, தனது தோழிகளுடன் ஆழ்குழாய் கிணறு அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக அதில் முத்துலட்சுமி தவறி விழுந்தார். இதுபற்றி மற்ற குழந்தைகள் முத்துலட்சுமியின் தாத்தா முத்துப்பாண்டியிடம் கூறியுள்ளனர். முத்துப்பாண்டி ஆழ்குழாயை பார்த்தபோது, சுமார் 12 அடி ஆழத்தில் முத்துலட்சுமி சிக்கியிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து அரவக்குறிச்சி தீயணைப்பு மற்றும் மீட்புப் படை, போலீஸார், 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த அவர்கள் குழந்தையை உயிருடன் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும், கோட்ட தீயணைப்பு அலுவலர் சத்தியநாராயண், கோட்டாட்சியர் நெல்லைவேந்தன் ஆகியோர் விசாரணை மேற்கொண்டு மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

சிறுமி சுவாசிக்க குழாய் மூலம் ஆக்ஸிஜன் செலுத்தப்பட்டது. 3 பொக்லைன் இயந்திரங்கள் மூலம் ஆழ்குழாய் கிணற்றுக்கு அருகில் குழி தோண்டப்பட்டது. 5 அடிக்குமேல் பாறையாக இருந்ததால், துளையிடும் இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டு பள்ளம் தோண்டப்பட்டு சிறுமியை மீட்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

 

சம்பவ இடத்துக்குச் சென்ற கரூர் மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி, குழந்தையை உயிருடன் மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தினார்.

மீட்புப் பணியில் அடுத்தடுத்து இடையூறு: சனிக்கிழமை பிற்பகல் வரை சிறுமி விழுந்த ஆழ்குழாய் கிணற்றின் பக்கவாட்டில் 15 அடிக்கு பள்ளம் தோண்டி, அதன் மூலம் ஆழ்குழாய் கிணற்றுக்குள் தொடர்பை ஏற்படுத்தி சிறுமியை மீட்க முயன்றனர். அந்த இடத்தில் பாறையாக இருப்பதால் இந்த முயற்சி கைகொடுக்கவில்லை. இதையடுத்து, மதுரையிலிருந்து நவீன கருவி கொண்டு வரப்பட்டு, சிறுமியை மீட்க முயன்றனர். சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற அந்த முயற்சியும் தோல்வியில் முடிவடைந்தது.

இதையடுத்து, மாலை 6 மணிக்கு மேல் மீண்டும் பக்கவாட்டில் பள்ளம் தோண்டும் முயற்சி தொடங்கப்பட்டது. இரவு 10.30 மணியளவில் சிறுமி மீட்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

 

அங்கு மருத்துவர்கள் செயற்கை சுவாசம் அளித்து சிறுமிக்கு நினைவு திரும்ப மேற்கொண்ட முயற்சிகள் பலனில்லாமல் சிறுமி உயிரிழந்தார்.

 

http://www.newsalai.com/details/girl-who-fell-into-700-feet-borewell-rescued-but-dead.html

 

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

சிறுமி முத்துலட்சுமியின் ஆன்மா அமைதியடையட்டும்.. அடுத்தமுறையாவது செயல்களுக்கு பொறுப்புக்கூறும் ஒரு நாட்டினில் பிறப்பெடுக்கட்டும்!

  • தொடங்கியவர்

ஆழ்துளை கிணறு அமைத்த நிறுவனத்தின் மேலாளர் கைது
ஏப்ரல் 28, 2013

 

ஆழ்துளை கிணற்றில் விழுந்து சிறுமி உயிரிழந்தது தொடர்பாக, கிணறு அமைத்த நிறுவனத்தின் மேலாளர் கண்ணன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சூரிப்பாளி என்ற இடத்தில் தந்தை முத்துப்பாண்டியுடன் வயலுக்குச் சென்ற சிறுமி முத்துலட்சுமி, அங்கிருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தாள்.

700 அடி ஆழம் கொண்ட அந்த கிணற்றில் கிட்டதட்ட 12 அடி பள்ளத்தில் சிறுமி சிக்கிக்கொண்டாள். 16 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்ட சிறுமி முத்துலட்சுமி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாள்.

இந்நிலையில், கரூர் அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்து சிறுமி உயிரிழந்தது தொடர்பாக, கிணறு அமைத்த நிறுவனத்தின் மேலாளர் கண்ணன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.மேலும், கிணற்றின் உரிமையாளர் சக்தி வேல் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது, தலைமறைவாக உள்ள அவரை அரவக்குறிச்சி காவலர்கள் தேடி வருகின்றனர்.

 

http://puthiyathalaimurai.tv/formation-of-the-companys-manager-arrested-bore

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.