Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு கிழக்கிலிருந்து படைகளை விலக்க அரசு தயார்!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வடக்கு கிழக்கிலிருந்து படைகளை விலக்க அரசு தயார்

ஆனால் புலிகள் ஆயுதங்களைக் கையளிக்கவேண்டுமாம்!

இப்படிக் கூறுகிறார் பாதுகாப்பு அமைச்சுப் பேச்சாளர் ரம்புக்வெல

வடக்கு கிழக்கில் இருந்து படைகளை விலக்க அரசு தயார். அதற்குமுன் விடுதலைப் புலிகள் ஆயுதங்களை அரசிடம் கையளிக்க வேண்டும்.

இப்படிக் கூறியுள்ளார் பாதுகாப்பு அமைச்சுப் பேச்சாளர் ஹெகலிய ரம்புக்வெல.

ஐரோப்பிய ஒன்றியத்தின் விசேட பிரதி நிதியாக கிளிநொச்சி சென்ற சுவீடனைச் சேர்ந்த சிறப்புத் தூதர் அன்ட்றோ ஒல்ஐன்ட் மூலம் அரசுக்கு விடுதலைப் புலிகள் அனுப்பியதாகக் கூறப்படும் செய்தி குறித்து ஊடகம் ஒன்றுக்குக் கருத்துக் கூறுகையில் அவர் இப்படித் தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கில் மக்கள் வாழ்விடங் களில் இருந்து படையினர் அகற்றப்படவேண் டும் என்ற செய்தி ஒன்றை ஐரோப்பிய ஒன் றிய விசேட பிரதிநிதி மூலம் விடுதலைப் புலிகள் அரசுக்கு அனுப்பியுள்ளனர் எனக் கூறப்படுகின்றது.

இது தொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட ரம்புக்வெல

மக்கள் வாழ்விடங்களில் அதாவது வடக்கு கிழக்கில் இருந்து படைகளை விலக்கு வது பிரச்சினையில்லை. அதற்கு முதல் விடு தலைப் புலிகள் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும் என்றார். http://www.uthayan.com/pages/news/today/02.htm

:lol::lol::lol: :!: :evil: :idea:

:lol::lol::lol::lol::lol:
  • கருத்துக்கள உறவுகள்

ஓமோம். இவர்களின் னதையில் நிறைய நம்பிக்கை எமக்கு! கட்டாயம் சொன்னமாதிரிச் செய்வார்கள்!

தேர்தல் காலத்தில் பிரபாகரன் தனது உறவுக்காரர் என்று கதை விட்ட, மங்கள சமரவீர, இப்போது பிரபாகனைப் பற்றிக் கதைக்கும் விதத்தினை பார்க்க புரியுது இல்லோ!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்போ, தாங்கள் "எங்கள் நிலத்தை" ஆக்கிரமித்துள்ளார்கள் என்பதை ஒப்புக்கொள்கிறார்கள் போலும்.

தாங்களாக வெளியேறினால் உயிர் தப்புவார்கள் என்று நினைக்கிறேன்!.

அது சரி இந்த "பூனைக்கு முதல், மணி கட்டுவது யார்" என்ற பிரச்சினையை ஏற்படுத்தி தாங்கள் சமாதான விரும்பிகள் என்று உலகுக்கு காட்ட விரும்புகிறார்களோ? :mrgreen:

அப்போ, தாங்கள் "எங்கள் நிலத்தை" ஆக்கிரமித்துள்ளார்கள் என்பதை ஒப்புக்கொள்கிறார்கள் போலும்.

தாங்களாக வெளியேறினால் உயிர் தப்புவார்கள் என்று நினைக்கிறேன்!.

அது சரி இந்த "பூனைக்கு முதல், மணி கட்டுவது யார்" என்ற பிரச்சினையை ஏற்படுத்தி தாங்கள் சமாதான விரும்பிகள் என்று உலகுக்கு காட்ட விரும்புகிறார்களோ? :mrgreen:

:P :P :P

:roll: குறளோவியம் :wink:

எற்றென் றிரங்குவ செய்யற்க செய்வானேல்

மற்றன்ன செய்யாமை நன்று.

`என்ன தவறு செய்துவிட்டோம்' என நினைத்துக் கவலைப்படுவதற்குரிய காரியங்களைச் செய்யக்கூடாது. ஒருகால் அப்படிச் செய்து விட்டாலும் அச்செயலை மீண்டும் தொடராதிருப்பதே நன்று.

:evil: :oops: :wink: :?: :!:

இல்லை விளங்கி விட்டது,எப்படியும் நாங்கள் போற ஆட்கள் தானே,இப்படி போனா நல்லது. பிறகு வேலுப்பிள்ளை யின் மகன் கட்டளை இட்டால் சுடுகாட்டுக்குக்கூட எலும்பு இருக்காது. எத்தனை பேரை காணாதவர் பட்டியலிலும் சேர்க்கிறது. அதுதான் ராஜபக்ச கடுமையா யோசிக்கிறார் போலும்

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவத்தளபதிகள் விரக்தியினால்/ பயத்தினால் ஏற்கனவே விலகத்தொடங்கிவிட்டினம்.

விரக்தியில் விலகும் சிறிலங்கா இராணுவ தளபதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு- அதிர்ச்சியில் மகிந்த சிறிலங்கா இராணுவத்தின் மீது நம்பிக்கையின்மை, பாதுகாப்பு குறித்த அச்சம் ஆகியவற்றால் விரக்தியடைந்து பணியிலிருந்து ஓய்வு பெற்றுச் செல்லும் இராணுவ அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

அவர்களை மீள பணியில் சேருமாறு சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச வலியுறுத்தி வருகிறார்.

அண்மையில் ஓய்வுபெற்றவர்கள் மற்றும் விரைவில் ஓய்வு பெறுவதற்காக காத்திருக்கும் பட்டியலில் பத்துக்கும் மேற்பட்ட இராணுவத் தளபதிகள் இடம்பெற்றுள்ளனர்.

மகிந்த ராஜபக்ச தனது முதல் நடவடிக்கையாக, ஓய்வு பெற்றுள்ள மேஜர் ஜெனரல் பி.சந்திரவன்சவை சந்திக்குமாறு தனது செயலாளர் லலித் வீரதுங்கவுக்கு அறிவுறுத்தினார். தனது ஓய்வுக் காலத்துக்கு முன்னமே கடந்த மாதம் இராணுவத்திலிருந்து மேஜர் ஜெனரல் பி.சந்திரவன்ச விலகிவிட்டார்.

இராணுவத்தில் மீண்டும் இணையுமாறு மகிந்த கேட்டுக்கொண்டதாக பி.சந்திரவன்சவிடம் லலித் வீரதுங்க கூறியுள்ளார். ஆனால் தன்னால் பணியில் மீண்டும் சேரமுடியாது என்று சந்திரவன்ச மறுத்துவிட்டார். எதனைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம்- எதிர்காலத்தில் அனைத்தையும் மகிந்த ராஜபக்ச கவனத்தில் எடுத்துக்கொள்வார் என்று லலித் வீரதுங்க வலியுறுத்திய போதும் அதனை பி.சந்திரவன்ச நிராகரித்துவிட்டார். இந்தச் சந்திப்பு ஒரு மணிநேரம் நடைபெற்றது.

கடந்த நவம்பரில் இராணுவத் தளபதியாக சரத் பொன்சேகா பதவியேற்ற போது கொழும்பு கட்டளைத் தளபதியாக பி.சந்திரவன்ச பணியாற்றினார். அதன் பின்னர் சந்திரவன்சவை யாழ்ப்பாணத்துக்கு பொன்சேகா மாற்றினார். அதை விரும்பாததால் சில மாதங்களுக்கு முன்பே தனது ஓய்வு பெறும் கடிதத்தை சரத் பொன்சேகாவிடம் சந்திரவன்ச கையளித்திருந்தார். சரத் பொன்சேகாவும் அதனை ஏற்றுக் கொண்டார்.

பி.சந்திரவன்சவைப் போல் இராணுவ புலனாய்வுப் பிரிவின் முன்னாள் இயக்குநரான பிரிகேடியர் ரிஸ்வி சக்கியையும் மீள பணிக்கு அழைக்கும் முயற்சியில் மகிந்த ராஜபக்ச ஈடுபட்டுள்ளார். புலனாய்வுப் பிரிவு இயக்குநராக இருந்த ரிஸ்வி சக்கியை சரத் பொன்சேகா யாழ்ப்பாணத்துக்கு இராணுவ அதிகாரியாக நியமித்தார். அப்பொறுப்பில் நியமிக்கப்பட்ட சில வாரங்களிலேயே தனது விலகல் கடிதத்தை ரிஸ்வி சக்கி கொடுத்துவிட்டு ஜனவரியில் பணியிலிருந்து விலகிக் கொண்டார்.

யாழ்ப்பாணத்துக்கு ரிஸ்வி சக்கியை மாற்றியதையடுத்தே சிறிலங்கா இராணுவப் புலனாய்வுத்துறை பாரிய சிதைவுக்குள்ளானதாக கூறப்படுகிறது. அதன் தொடர்ச்சியாகவே மூன்றாம் நிலை தளபதி பாரமி குலதுங்க கொல்லப்பட்டதாகவும் இராணுவத்தினர் கருதுகின்றனர்.

ரிஸ்வி சக்கியின் விலகலைத் தொடர்ந்து காலி கட்டளைத் தளபதியான பிரிகேடியர் ரொகான் ஜயசிங்கவும் விரக்தியடைந்து பணியிலிருந்து விலகிவிட்டார்.

மேலும் வெலி ஓயா கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் நிமல் ஜயசூர்ய, மன்னார் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் உதேனி முனசிங்க ஆகியோரும் பணியிலிருந்து விலகும் முடிவில் உள்ளதாகத் தெரிகிறது.

வரணி 52 ஆம் டிவிசன் கட்டளை அதிகாரியாக இருந்தவர் மேஜர் ஜெனரல் ஜயசூர்ய. அவர் வகித்து வந்த பதவிக்கு கீழான நிலையில் வெலி ஓயாப் பகுதி தளபதியாக மாற்றப்பட்டதால் அவர் விரக்தியடைந்துள்ளார்.

இராணுவ செயலாளராக இருந்த உதேனி முனசிங்கவும் மன்னார் தளபதியாக நியமிக்கப்பட்டார்.

பெருந்தொகையான இராணுவத்தினர் வாகனேரியில் ஊருடுவியும் தெளிவான திட்டமிடல் இல்லாமையால் 12 இராணுவத்தினரை இழக்க நேரிட்டது என்று கொழும்பு ஊடகம் ஒன்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

சிறிலங்கா இராணுவம் பலவீனமாகி வரும் நிலையில் இராணுவத்தின் முக்கிய தளபதிகள் பலரும் இப்படி தொடர்ச்சியாக விலகி வருவது குறித்து அதிர்ச்சியடைந்த மகிந்த ராஜபக்ச அவர்களை மீண்டும் பணியில் இணைக்க தீவிரம் காட்டி வருவதாக அலரி மாளிகைச் செய்திகள் தெரிவிக்கின்றன.

-புதினம்

புலிகள் ஏற்கனவே ஆயுதங்களை ஒருமுறை கையளித்தவை.... இன்னும் ஒருக்கா கையளிக்க வேணுமா....????

உதுல உவருக்கு பிறேமதாசா குடுத்த ஆயுதக்கணக்கு என்ன எண்டு தெரிஞ்சாலே பெரிய விசயம்....!

புலிகள் ஆயுதங்களை முழுமையாக எப்பவுமோ கையளிக்கல்ல..கையளிச்சிட்டு ஏமாறவும் தயாரில்லை..! தாயகத் தமிழ் மக்களின் அபிலாசைகளைத் தீர்க்கக் கூடிய தீர்வு எட்டும் வரை..இதை கூற...சிறிலங்காவுக்கு உரிமையில்லை... என்பதை கதிர்காமர் கூட இப்படி ஒரு கருத்தை முன்வைத்த போது சொல்லப்பட்டாயிற்று..! :idea:

புலிகள் ஆயுதங்களை முழுமையாக

புலிகள் ஆயுதங்களை ஒப்படைக்கவே இல்லையா இல்லை முழுமையாக ஒப்படைக்க இல்லையா...??? ஏதாவது சொல்லவேணும் எண்டு காள்ப்புண்ச்சியில சொல்லுறாப்போல கிடக்கு....! :roll:

அதுசரி கதிர்காமரை புலிகளின் ஆயுதங்களை ஒப்படைக்க சொன்னதினால்த்தான் சிங்களவன் ஒருவன் சுட்டு கொண்றானா...??? எதுக்காக இந்த கருத்து எண்டு ஒருக்கா தெளிவு படுத்துவீரா...???

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.