Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இராணுவத்தின் பிரச்சனத்தினால் மக்கள் அச்சப்படுவர்! கே.பி.

Featured Replies

KP.jpg

 

வடக்கில் இராணுவப் பிரசன்னம் குறைந்து சிவில் நிர்வாகம் அமைந்தால் அது மக்களின் வாழ்க்கை நிலை மேம்பாட்டிற்கு உதவும் என தமிழீழ விடுதலைப் புலிகளின் இயக்கத்தின் முன்னாள் சர்வதேச தொடர்பாளரும், மகிந்த அரசாங்கத்தின் அரசியல் விருந்தாளியுமான கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார்.

 

வடக்கில் இராணுவத்தினர் இருப்பது ஒரு வகையில் பாதுகாப்பு உறுதுணை என்றாலும் மக்கள் அச்சப்படுவர் என கே.பி. தெரிவித்துள்ளார்.

வடக்கில் யுத்ததால் கடுமையாக பாதிக்கப்பட்ட மக்களிடம் அரசியல்வாதிகள் அன்பாக நடந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

கிளிநொச்சியிலுள்ள செஞ்சோலை சிறுவர் காப்பக்தில் இருந்து இந்தியாவின் இந்து பத்திரிகைக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

 

இந்து பத்திரிகைக்கு கே.பி. வழங்கியுள்ள செவ்வியில், 30 வருடகால யுத்தம் வடக்கின் கல்வியை பின்நோக்கி நகர்த்தியதாகக் கூறியுள்ளார். 1970ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் அப்போது தம்மைப் போன்ற இளைஞர்களை ஆயுதப் போரில் இணைத்துக் கொள்வதற்காக தமிழ் அரசியல்வாதிகள் செயல்பட்டதாக கே.பி. கூறியுள்ளார்.

 

அதேபோல, ஆயுதப் போரில் ஈடுபட்டவர்களுக்கு தற்போது புனர்வாழ்வளித்து அவர்களுக்கு கல்வி கற்றலுக்கான வசதிகளை செய்துகொடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

 

அதேபோல, தமிழகத்தில் இலங்கைக்கெதிரான போராட்டத்திற்கு மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளமையானது விடுதலைப் புலிகளின் செயல்பாட்டிற்கு நிகரானது எனவும் கே.பி. தெரிவித்துள்ளார்.

 

அத்துடன், தமிழக மாணவர்களை இந்தப் போராட்டத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டமையானது மிகப்பெரிய தவறு எனக் கூறியுள்ள கே.பி., இதன்மூலம் ஈழத் தமிழர்களுக்கு எவ்வித நன்மையும் ஏற்பட்டுவிடாது எனக் கூறியுள்ளார்.

 

யுத்தத்தால் பாதிப்படைந்த சிறார்கள் அரசியல் காரணங்களுக்காக உணர்வுபூர்வமான செயல்பாடுகள் மேற்கொள்வதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

வெளிநாட்டு புலம்பெயர் தமிழர் நிதியுதவியில் இயங்கும் இந்த செஞ்சோலை சிறுவர் காப்பகத்தில் சுமார் 60 பேர் பராமரிக்கப்படுகின்றனர்.

 

http://tamilworldtoday.com/?p=10073

Edited by Kashni

  • கருத்துக்கள உறவுகள்

என்ன இது?

 

சற்றுநேரம் முன்னர் வரை, இந்த செய்தி "விடுதலைப் புலிகள் ஆயுதமேந்தியது வரலாற்றுப் பிழை" என கே.பி சொல்லியதாக தலைப்பும், உள்ளே சில செய்தியும் இருந்தது..! அதற்குள் மாற்றியாச்சா...? :o

 

நல்ல காமெடி! :)

 

என்ன இது?

 

சற்றுநேரம் முன்னர் வரை, இந்த செய்தி "விடுதலைப் புலிகள் ஆயுதமேந்தியது வரலாற்றுப் பிழை" என கே.பி சொல்லியதாக தலைப்பும், உள்ளே சில செய்தியும் இருந்தது..! அதற்குள் மாற்றியாச்சா...? :o

 

நல்ல காமெடி! :)

 

நானும் கவனித்தேன் :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.