Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

என் மீதான தாக்குதலின் பின்னணியில் அரசிலுள்ள பிரபல அரசியல்வாதிகள் சிலரும் உள்ளனர்! பொன்சேகா

Featured Replies

sarath-fonseka.jpg

 

முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் வாக்குமூலம் பெற்றுக் கொண்டுள்ளனர்.

குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு வழங்கிய வாக்குமூலம் குறித்து கொழும்பு ஊடகமொன்றுக்கு கருத்துதெரிவித்த சரத் பொன்சேக்கா இவ்வாறு தெரிவித்தார்.

 

''என்மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல் குறித்தே வாக்குமூலமொன்றைக் கோரியிருந்தனர். இதன்போது எனது கருத்துக்களை நான் தெரிவித்தேன். இந்தத் தாக்குதலுடன் குண்டைக் கட்டிக்கொண்டு பாய்ந்த பெண், அவரைப் பாதுகாத்த விடுதலைப் புலிகள் மாத்திரம் தொடர்புபடவில்லை. இது அவர்களுக்க மாத்திரம் வரையறுக்கப்படவில்லை. இது மேல் மட்டத்திலுள்ளவர்களும் செய்த சூழ்ச்சித் திட்டமாகும். விடுதலைப் புலிகளுடன் பல வழிகளிலும் தொடர்புகளைக் கொண்டிருந்த குறிப்பாக அரசாங்கத்திலுள்ள பிரபல அரசியல்வாதிகள் சிலரும் அதன் பின்னணியில் இருப்பதாக நான் எனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டேன்.''

 

2006 ஆம் ஆண்டு ஏப்ரல் 25ம் திகதி இராணுவத்தலைமையகத்தில் வைத்து, முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகாவை இலக்குவைத்து தற்கொலைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

 

கோட்டே மத்தியம்பலத்திலுள்ள சரத்பொன்சேகாவின் அலுவலகத்தில் வைத்தே குற்றப்புலனாய்வு பிரிவினர் வாக்குமூலத்தை பெற்றுக்கொண்டுள்ளனர்.

 

2006 ஆம் ஆண்டு ஏப்ரல் 25 ஆம் திகதி விடுதலைப்புலிகளின் பெண் தற்கொலை குண்டுதாரியினால், இராணுவத் தலைமையகத்திற்குள் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டதுடன் 27 பேர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

 

சரத் பொன்சேக்கா வழங்கிய வாக்குமூலத்தின் இன்னும் சில முக்கியமான கருத்துக்களுக்கு

http://tamilworldtoday.com/?p=10827

 

Edited by Kashni

  • கருத்துக்கள உறவுகள்

என்ன இப்போ பேச்சு மாறுகிறார். விடுதலை புலிகள் தன்னை கொல்லவில்லை என்றவர் இப்போ வி.புலிகளுடன் தொடர்பில் உள்ள பிரபல அரசியல்வாதிகள் என கதையை மாற்றுகிறார்.

 

  • கருத்துக்கள உறவுகள்

sarath-fonseka-in-jail-colombo-telegraph

 

பொன்சேகா, அந்த அரசியல்வாதிகளின் பெயரை வெளிப்படையாகச் சொல்ல வேண்டியது தானே....
திரும்பவும் சிறைக்குள்.. போட்டுவார்கள் என்ற பயமா? :D

 

  • தொடங்கியவர்

தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்திய பெண்ணுக்கும் சரத் பொன்சேக்காவிற்கும் இடையில் காதல் தொடர்பு இருந்துள்ளதாம். இதனால் இவருக்கும் இடையில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாம். ஆத்திமடைந்த பெண் பலிவாங்குவதற்காகவே தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளாராம்.

இப்படி நான் கூறவில்லை. அமைச்சர் மகிந்தானந்த கூறியதாக சரத் பொன்சேக்காவே வாக்குமூலத்தல் கூறியுள்ளார்.

http://tamilworldtoday.com/archives/10827

 

Edited by Kashni

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு காலத்தில் தமிழக அரசியல்வாதிகளை கோமாளி என்றவர் இப்ப தானே சார்க்கஸ் கோமாளி கணக்கா ஆகிட்டார்..! :lol::D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.