Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழ சுதந்திர சாசனத்தின் மொழிக் கொள்கை, எமது தேச விடுதலையின் அடிப்படையைத் தகர்த்தெறிந்து விட்டதா?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நேற்று முரசறையப்பட்ட தமிழீழ சுதந்திர சாசனத்தின் 14வது சரத்து, தமிழீழத்தின்  மொழிக் கொள்கையை விளக்குகிறது.

 

அதன்பிரகாரம் - தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மும்மொழிகளும் உத்தியோகபூர்வ மொழிகள்.

 

அப்படியாயின் தமிழ்+ ஈழம் சமன் தமிழீழம் என்ற சொற்கோர்வை தேவைதானா? என்ற வினா எழுகிறது.

 

இந்த சிங்கள மொழிச் சட்டத்தால் தான் 1958 கலவரம் அதனைத் தொடர்ந்த 1975ன் வட்டுக்கோட்டைத் தீர்மானம், 1977 கலவரம், 1981ன் யாழ் நூலக எரிப்பு, 1981ன் புத்தளப் பகுதியின் மினிக் கலவரம், 1983 பெரும் கலவரம், 1983 உடன் தொடர்ந்த தீவிர ஆயுதப் போராட்டம் போராட்ட நசுக்கல் என்ற பெயரில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை என்று எம் இனம் அழிக்கப்பட்டது.

 

சுருங்கக் கூறின், ஈழத் தமிழர் தமிழீழம் கோரியதே இந்தச் சிங்கள மொழியால் ஏற்படுத்தப்பட்ட புறக்கணிப்பால் தான்.

 

ஆனால் இன்று;

 

நான் மதிப்பு வைத்த பிரதமரே எம் இனத்திற்கு எமனாக இருந்த சிங்கள மொழியை அமையப் போகும் அல்லது தமிழீழ மக்களாகிய நாம் பல இடர்களின் பின் அமைக்கவிருக்கும் தமிழீழத்தில் உத்தியோகபூர்வ மொழியாக அறிவித்திருக்கிறார்.

 

தமிழ் மற்றும் ஆங்கிலம் உத்தியோகபூர்வ மொழிகள் என்பது ஏற்புடையது. ஆனால் சிங்களமும் உத்தியோகபூர்வ மொழி எனும் போது அது அடிப்படைத் தமிழீழக் கோரிக்கையை குழி தோண்டிப் புதைப்பதாகப்படுகிறது.

 

நாடு கடந்த அரசாங்கத்திற்குள், கறுப்பு ஆடுகள் நுழைந்து விட்டனவா? இல்லை நாடு கடந்த அரசாங்கத்தினர் விலை போய் விட்டனரா? இல்லை நாடு கடந்த அரசாங்கத்தினர் தாம் ஜனநாயகவாதிகள் என்று சர்வதேசத்திற்குக் காட்டுவதாக எண்ணித் தம் தலையில் தாமே மண்ணை அள்ளிக் கொட்டி விட்டனரா?

 

முரசறையப்பட்ட சுதந்திர சாசனத்தின் முழு ஆங்கில வடிவத்தை இணைப்பில் காண்க. தமிழ் வடிவம் இன்னும் எனக்குக் கிடைக்கவில்லை.

 

http://www.colombotelegraph.com/index.php/tgte-launched-tamil-eelam-freedom-charter/

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் .... தமிழ் தான் தமிழீழத்தின் அதிகாரப்பூர்வமான மொழி என அறிவிக்க துப்பில்லையெனில் தமிழீழம் தேவையா?.

 

ஆங்கிலம், சிங்களம், இந்தி, ஜெர்மனி, காஷ்மீரி, குர்முகி....... என உலகின் அத்தனை மொழிக்கல்விகளும் தமிழீழத்தில் இருக்கலாம். தமிழ் மட்டுமே அதிகாரப்பூர்வமான தமிழீழ அரசின் அரசு மொழி.

தமிழ் .... தமிழ் தான் தமிழீழத்தின் அதிகாரப்பூர்வமான மொழி என அறிவிக்க துப்பில்லையெனில் தமிழீழம் தேவையா?.

 

ஆங்கிலம், சிங்களம், இந்தி, ஜெர்மனி, காஷ்மீரி, குர்முகி....... என உலகின் அத்தனை மொழிக்கல்விகளும் தமிழீழத்தில் இருக்கலாம். தமிழ் மட்டுமே அதிகாரப்பூர்வமான தமிழீழ அரசின் அரசு மொழி.

 

http://tamileelamfreedomcharter.org/wp-content/uploads/2013/04/Preamble-and-questionnaire-Tamil-March-182013.pdf

 

இதை நீங்க நிரப்பி அனுப்பினீர்களா?  இதில் 22 வது கேள்வியை பார்தனீர்களா?

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=120787

மிகச்சரியான தெரிவையே மேற்கொண்டுள்ளார்கள். வடக்கு, கிழக்கு மற்றும் தமிழீழம் என்று கோரப்படும் நிலப்பரப்பில் கணிசமானளவு சிங்களவர்கள், முஸ்லீம்கள் வாழ்கின்றார்கள். எனவே, அதிகாரபூர்வ மொழியாக ஆங்கிலம், தமிழ், சிங்களம் ஆகிய மூன்றையும் தேர்வு செய்ததில் தவறேதும் உள்ளதாக தெரியவில்லை. தமிழீழம் என்பது சாத்தியமா இல்லையா என்பதற்கு அப்பால், அதிகாரபூர்வ உத்தியோகபூர்வ மொழியாக தமிழ் மட்டும் அறிவிக்கப்பட்டு பயன்படுத்தப்படும் நிலையில் அது பெரியதோர் பின்னடைவையே உலக அரங்கில் ஏற்படுத்தும். தமிழர்களிற்கு மட்டுமே தமிழீழம் எனும் நாடு உருவாக்கப்படவேண்டும், அங்கு வேற்றினத்தவர்களிற்கு இடமில்லை எனும் போக்கில் செயற்பட்டால் அது எந்தக்காலத்திலும் சாத்தியப்படப்போவது இல்லை.

தமிழீழம் பிரிப்பது என்பதை களுத்தை வெட்டி தலையை எடுப்பதாக அவசரப்பட்டு தீர்மானிக்க தேவை இல்லை.  பிரிந்த பின்னர் இரண்டு நாடுகளின் மக்கள், பொருளாதாரம், முலவளங்கள் நீதியின் பால் கையாளப்பட வேண்டும்.

 

சிங்களத்திடம் இருந்து பிரிந்த பின்னர் அயல் நாடு என்ற உறவுகளை ஏற்படுத்த வழிகளைத் திறந்து வைத்திருக்க வேண்டும்.

 

சிங்கள மகிந்த சித்தாந்தை  தமிழீழத்தில் தமிழில் நடை முறைப்படுத்தக் கூடாது. தமிழீழம் பிரித்த பின்னர் கணிசமான தமிழ் மக்கள்(யாழ்ப்பாண-மட்டக்களப்பு) மக்கள் வெளியே இருப்பார்கள்.  இந்த சாசனத்தில் தீர்வு பற்றி பேசப்படாததால் மலையக தமிழ் மக்களின் எஞ்சியிருக்கும் பிரச்சனைகளை தீர்த்துவைக்க சிங்களத்துடன் பாதைகளை திறப்பிக்கத்தக்க வழியில் சர்வதேசம் எற்க நடந்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு பங்களா தேஷ், பாகிஸ்தானில் இருக்கும் இந்துக்களுக்கு நடப்பது நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.  கர்நாடகம்-தமிழகம் போல சண்டைகளை குறைக்க வழி காண வேண்டும்.

Edited by மல்லையூரான்

தமிழ் .... தமிழ் தான் தமிழீழத்தின் அதிகாரப்பூர்வமான மொழி என அறிவிக்க துப்பில்லையெனில் தமிழீழம் தேவையா?.

 

ஆங்கிலம், சிங்களம், இந்தி, ஜெர்மனி, காஷ்மீரி, குர்முகி....... என உலகின் அத்தனை மொழிக்கல்விகளும் தமிழீழத்தில் இருக்கலாம். தமிழ் மட்டுமே அதிகாரப்பூர்வமான தமிழீழ அரசின் அரசு மொழி.

இது தமிழ் மக்களின் அபிப்பிராயத்துடன் வரையப்பட்டது.

 

மனச்சாட்சியான 13+ தீர்வு ஒன்று கிடைத்தாலே தமிழைக் காப்பாற்றிவிடலாம்.  ஆனால் பாதுகாப்பு மட்டும் எதன் மூலமும் வந்து சேராது.  எனவே இரண்டு நாடு தேவை.

 

75%(ஒரு பேச்சுக்கு) பாதுகாப்புக்காக பிரிய விரும்புகிறது.  25%  தூய தமிழ் அழிவைத் தடுக்க இதுதான் வழி என்று நம்புகிறது.

 

பலருக்கு இரண்டு நாட்டிலும் கால் உண்டு. அவர்கள் தாய் பிள்ளைகள், சகோதரங்கள் பாகிஸ்தானில் பிரிய நேர்ந்த பிரிவை தவிர்க்க விரும்புகிறார்கள்.

 

நாடு பிரிந்து தமிழை படிக்க, பாவிக்க சந்தர்ப்பம் கிடைத்தவுடன், மக்கள் பொறுப்பை கையில் எடுத்து, தமிழை வளர்க்க முன் வரவேண்டும். இல்லையேல் அரசு அதை செய்ய முயன்றால் ஊழல்தான் வளரும்.

 

மேலும் இதையேதான் இதுவரை சிங்களத்திடம் தமிழர் கேட்டு வந்தது.  அதை வெளிநாடுகளுக்கு வெளிப்படையாக காட்டுவதின் அம்சம் தான் இந்த மும்மொழிக்கொள்கை. மேலும் இதை வக்குக்க தமிழ் நாட்டு அறிஞ்ஞர்களுடன் பல வெளிநாட்டு அறிஞ்ஞர்கள் சேர்ந்து தொழில் பட்டிருந்தார்கள்.  சர்வதேசம் தமிழ் ஈழத்தை ஏற்று அங்கீகரிக்க அதன் ஜனநாயக பண்புகள் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்பது அவர்களின் கருத்து. சொல்லப்பட்ட முஸ்லீம்களின் சமய உரிமை, பெண்களின் உரிமை, மாற்று இயக்க போராளிகளுக்கு மாவீரர் அங்கீகாரம் போன்றவை மலர இருக்கும் தமிழ் ஈழத்தில் ஜனநாக விழுமியங்கள் பாதுகாப்படும் என்பதை வெளிப்படையாக காட்டும் முயற்சியே.

Edited by மல்லையூரான்

 

தமிழீழ சுதந்திர சாசனம் குறித்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தனது மே-18 தமிழீழத் தேசிய துக்க நாள் உரையில் தெரிவிக்கையில் :

"இத் தமிழீழ சுதந்திர சாசனம் தமிழீழத்தை வென்றெடுப்பதற்கான அனைத்துலக உறவுகளை வென்றெடுப்பதற்கு அடிப்படையாக அமையக்கூடிய ஆவணமாக அமையும். தமிழீழம் எத்தகைய நிலைப்பாடுகளைக் கொண்டிருக்கப் போகிறது? எத்தகைய கொள்கைகளைக் கடைப்பிடிக்கப் போகிறது? போன்றவற்றை நாம் இந்த சுதந்திர சாசனம் மூலம் கோடிட்டுக் காட்டியுள்ளோம். உதாரணமாக தமிழீழத்தின் வெளியுறவுக் கொள்கை ஜனநாயக நாடுகளுடன் கூடுதல் நட்புறவைக் கொண்டதாக அமையும் என்பதனையும் இந்தியாவினை தமிழீழம் நட்பு நாடாகக் கொள்ளும் எனவும் தமிழீழ சுதந்திர சாசனம் முரசறைந்துள்ளது. இது போன்று நிலைப்பாடு, கொள்கை சார்ந்து பல்வேறு விடயங்களை தமிழீழ சுதந்திர சாசனம் தெளிவுபடுத்தயுள்ளது. இதனால் ஒரு தொலைநோக்குடன் தமிழீழத்துக்கான ஆதரவை வென்றெடுப்பதற்கான செயற்பாடுகளை மேற்கொள்வதங்கு தமிழீழ சுதந்திர சாசனம் துணைசெய்யும். அரசுகளின் ஆதரவினை வென்றெடுப்பதற்கு முதற்படியாக பல்வேறு நாடுகளிலும் வாழும் குடியியில் சமூகத்தின், அறிவியல் சமூகத்தின் ஆதரவினை நாம் தமிழீழத்துக்கு வென்றெடுப்பதில் தமிழீழ சுதந்திர சாசனம் காத்திரமான பங்கை வழங்கும் என்பது நமது நம்பிக்கை" என வி.உருத்திரகுமாரன் தெரிவித்திருந்தார்.

 

 

 

http://www.puthinappalakai.com/view.php?20130521108303

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.