Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“சுதந்திர காஷ்மீர்!” :உருகும் யாசின் மாலிக்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

காஸ்மீர் தனி நாடக இருக்க வேண்டுமா அல்லது இந்தியா/பாக்கிஸ்தானோடு சேர வேண்டுமா என்பதை அங்கு வசிக்கும் மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.
 
இந்தியா ஜனநாயகத்தை மதிக்கும் நாடு என்டால் ஜநா முன்னிலையில் வாக்கெடுப்பு நடக்க அனுமதி வழங்க வேண்டும்.
 
இந்தியா எங்களுக்கு தமிழீழம் பெற்று தருகுதோ,இல்லையோ  எங்கட விசயத்தில் தலையீடாமல் இருப்பதே பெரிய உதவி.அந்த உதவி கிடைக்கும் மட்டுமாவது காஸ்மீர் மக்களுக்கு ஆதரவு கொடுக்காமல் இருப்பது நல்லது.நாடு கிடைத்த பின் காஸ்மீர் மக்களுக்காக நாம் போராடலாம் 

 

 

நான் விளக்கம் சொல்லியே ஓஞ்சு போவேன் போல .......

According to UN suggestions 1) Pakistan should withdraw its troops(POK) from Kashmir 2)India should stationed troops in that kashmir valley for protection 3) then bring referendum in Kashmir. Those are significance of UN dossiers towards Kashmir. First point never accepted by Pakistan government so don't blame India. 

 

தமிழ் ஈழம் கண்டிப்பாக மலரும் அதற்கான சாத்திய கூறுகள் தென்படுகின்றது , இந்தியாவின் பங்கு அதில் இருக்கும். This month India going to deploy a squadron of SuhoiMKI(air superiority fighter) in Thanjavur due to treat perception. If India feels threat from neighbor's side means she won't spare them.

 

    

 

 

Edited by Maravan123

  • Replies 89
  • Views 13k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

//KING is deciding factor not the people on that time.//

 

அதாவது அந்த நேரத்தில் அரசர்கள் சொன்னதே வேதம் என்று சொல்லியுள்ளீர்கள்.. அப்படியானால் அந்த சித்தாந்தம் ஏன் ஹைதராபாத் நிசாமுக்குப் பொருந்தவில்லை. வலுக்கட்டாயமாக இந்திய யூனியனுடன் ஆந்திர சமஸ்தானத்தை இணைத்தார்களே..

 

ஆகவே அரசன் சொன்னான் என்பதெல்லாம் ஏற்புடையது அன்று. மக்களாட்சியை அரசியல் யாப்பில் ஏற்றுக்கொண்ட இந்தியாவும், பாகிஸ்தானும் மன்னர் சொற்படி (தேவைக்கேற்றபடி) நடப்போம் என்பது வாதத்துக்கு உகந்ததல்ல..

 

இந்திய அரசுகூட இத்தகைய வாதத்தை வைக்கவில்லை. மன்னர் கேட்டதனால் உதவப் போனோம்.. பாகிஸ்தான் எல்லை மீறியதால் நாம் திரும்பிப் போகமாட்டோம் என்றுதான் கூறினார்கள். இவற்றுக்கிடையே, "பிரிந்து செல்லும் உரிமையுடன் கூடிய" அந்த ஹரிசிங்-இந்திய ஒப்பந்தத்தை இந்தியாவும் மறந்துவிட்டது.. நீங்களும் மறந்துவிட்டீர்கள்.. :D

 

எனது பதிவை திருப்பிபடிக்கவும் "இந்தியா 2 தேச கொள்கை மட்டும்தான்  ஒப்புகொண்டது அதனால் மதத்தின் பெயரால் 3வது நாடு நடுவில் அமைவதை ஏற்றுகொள்ள முடியாது பாகிஸ்தானை அனுமதிக்கவும்  முடியாது". அப்படி அனுமதித்தால் இந்தியவிற்கு மிகப்பெரிய அச்சறுத்தல் ஏற்படும் பக்கத்தில் கிழக்கு பாகிஸ்தான்(இன்றைய பங்களாதேஷ்) இருப்தை மறந்துவிடக்கூடாது.

 

அந்த இணைப்பு நடந்தது காரணம் to establish our strategic interest and ensure our unity and security.  1948இல் இந்தியா ஒரு ஜனநாயக நாடு கிடையாது , முதலில் ஜனநாயகம் என்றால் என்ன என்பது பலபேருக்கு  தெரியாது அந்த காலகட்டதில் . ஜனநாயகம் ஹிட்லர் போல யாரயும் கொண்டுவந்து விடுமோ என்ற பயமும் இருத்தது , ஜனநாயகம் இந்தியாவில் எடுபடுமா என்ற ஐயமும் மேலோங்கியது .

 

அந்த நேரத்தில் போர் மூண்டது காஷ்மீர் இந்தியாவின் ஒருகிணைத்த பகுதியாக மாறியது. 1950இல் ஜனவரி  25 நாள் இந்தியா குடியரசாக மாறியது means  Indian constitution established and election were conducted in early of 1950s then the people elected first democratic government.

அணைத்து மக்களிடம் கருத்து கேட்டபது சாத்தியம் இல்லாத செயல்.

For more detail see below link:

 

http://en.wikipedia.org/wiki/List_of_princely_states_of_India

 

Edited by Maravan123

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முதல்லை, இந்தியர்கள் என்று சொல்பவர்களுக்கு தன்னும் இந்தியாவில் அனைத்து உரிமையும் கொடுக்கப்பட்டிருக்கா? :icon_idea:  நீங்கள் செய்திகள் அதிகம் வாசிப்பதில்லை என்று நினைக்கிறேன். ஒரே ஒரு குண்டுவெடிப்பு மட்டும் தான் உங்களுக்கு தெரிகிறது. அங்குள்ள காஷ்மீர் மக்கள் கொல்லப்படுவது, பெண்கள் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்படுவது, மற்றும்பல பிரச்சினைகள் உங்களுக்கு தெரியவில்லை.

 

இந்திய ஊடகங்கள் முதலில் ஒழுங்காக செய்திகளை மறைக்காமல் போட்டால் தானே உங்களுக்கு தெரிய வருவதற்கு? :D

 

எனக்கும் காஷ்மீர் மக்கள் பிரச்சினை பெரிதாக தெரியாது. ஆனால் அவர்கள் போராட்டத்தில் நியாயம் உள்ளது என்பது தெரியும். :)

 

கொடுக்கபட்டுள்ளது. இந்தியா ஒரு இந்துக்கள் பெருபான்மையுள்ள மதசார்பு இல்லாத ஜனநாயக நாடு , காஷ்மிரி முஸ்லீம்ஸ்  ஹிந்துகளை கொன்று குவித்தனர் ,பெண்கள் சொல்ல முடியாததுயருக்கு ஆளாயினர்  சொந்த நாட்டில் அகதிகளாக ஆக்கப்பட்டனர் ( அதுவும் இந்துக்கள் பெருபான்மையுள்ள  நாட்டில்). மேலும்

பாகிஸ்தான் கொடியை ஏற்றுவது , சுதந்திரம் மட்டும் குடியரசு தினத்தை கருப்பு நாளாக கடைபிடிப்பது , தீவிரதிகளுக்கு உதவுதல் போன்ற செயல்களை  செய்தால் அரசு என்ன செய்யும். If you are in India you behave like an Indian and obey our laws/constitution otherwise you should face the music simple. True, We can't allow media's into Kashmir and few northeast states due to our national interests.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அங்கு வசிக்கும் மக்கள் தான் "no India no Pakistan we want free Kashmir" என்று போராடுகிறார்கள்.

 

free-kashmir.jpg

 

படம் : vinavu.com

 

இந்தியா ஜனநாயகத்தை மதிக்கும் நாடு என்றால் ஏற்கனவே பொது வாக்கெடுப்பை நடத்தியிருப்பார்கள். இன்னுமா இந்தியாவை ஜனநாயக நாடு என்று நினைக்கிறீர்கள்?

 

இந்தியா எங்கடை விடையத்தில் தலையிடவில்லையா? இறுதிக்கட்ட போர் தொடக்கம் ஐ.நா பிரேரணை, பொதுநலவாய நாடுகள் மாநாடு வரை இந்தியா எமது விடையத்தில் தலையிட்டு எமக்கெதிராக நடப்பது தெரியாதா?

 

Everywhere bad apples would be there those thugs are belongs to such category.

கஷ்மீர் மாநிலத்தில் மக்களால் தேர்த்துடுகபட்ட மாநில அரசு , பஞ்சாயத் அமைப்புகள் உள்ளன. பஞ்சாயத் தேர்தலில் 90% விழுக்காடு வாக்கு அளித்துள்ளனர்.

இணைப்பு :http://www.ndtv.com/article/india/record-turnout-in-jammu-and-kashmir-panchayat-polls-300625

 

செய்தது உண்மை ஒத்துகொள்கிறேன்.

 

 

நீங்கள் தவறான செய்தயை தருகிர்கள் , என் வழக்கு ஒழிந்தது ? ஐபெரும் மற்றும் ஐசிருங்க்காப்பியங்கள் புத்தம் சமண சமயத்தை தழுவி உள்ளன. பின்பு எதற்காக வழக்கு ஒழிந்தது? நமது வரலாறில் Dark ages of tamils  ஒரு பகுதி உள்ளது அதை படியுங்கள் பிறகு பேசுங்கள்.

Dharmic religions(Hinduism , Buddhism , Jainism , Sikhism) சொல்லாததை என்ன இஸ்லாமியமும் ,  கிறிஸ்தவமும் சொல்லிவிட்டது? ஒன்றை கூறுங்கள்? என்ன அம்சம் ஈர்த்தது?. அடிக்கும், பஞ்சத்திற்கும் மதம் மாறியவர்களை நான் மனிதர்களாகவே மதிபெதில்லை. எம் பெருமான் முருகனையும் , சிவனையும் , அகஸ்திரையும் வழிபாடாதூர் தமிழர்களாக இருக்க முடியாது ; மதம் , இனம் ,மொழி ,கலாசாரம் மொத்த உருவம் தான் நாகரிகம்.  நாகரிய தொட்டிலாக விளங்கிய மதங்கள் Dharmic religions and those religions discovered length and breath of life.

 

அந்த ஜிப்சீஸ் மரபியல் வழியாக இந்தியவிற்கு தொடர்பு உடையவர்கள் ,குறிப்பாக சாட் இனமக்களுடன் , செய்தியை திரித்து கூறுவதை நிறுத்துங்கள்.    

 

Hinduism , Buddhism , Sikhism    நான்கு மதங்களிலையும் சாதியம் ஊறிப்போய் இருக்கிறது...  வேறு மதத்தை சேர்ந்தவன் பஞ்சாபி பேசாமல் சீக்கியனாக மாற முடியாது...    

 

உங்கள் முருகனை தமிழ்நாடு தாண்டி யாரும் வணங்குவதாக உங்களுக்கு தெரியுமா...??   அல்லது கொண்டு போகதான் முடியுமா...??  

 

சரி தமிழர்களுக்கு  எப்போ இந்து மதம் முழு முதல் மதம் ஆகியது...??  சங்கரர் காலத்துக்கு பிறகுதானே....??  அதில் சைவ நெறி...?? கோயிலுக்குள் போன   கீழ்ச்சாதி எண்று சம்பந்தரை எரித்து கொண்ற நெறி..   சமண த்துக்கு மாறிய அப்பரை கல்லோடு கட்டி கடலிலை வீசிய நெறி...   சமணர்களை எல்லாம் சுண்ணாம்பு அறையில் அடைத்து கொண்ற நெறி... 

 

தஞ்சை பெரிய கோயிலை கட்ட 5 லட்ச்சம் பேரை  அடிமைகளாக  ஆக்கிய நெறியும்  அதுவே..   

 

 

மற்றது Jat  எண்று அறிய பட்ட மக்கள் பற்றிய பூரண அறிவை பெற்று உங்கள் வியாக்கியானத்தை ஆரம்பியுங்கள்.. 

 

கிறிஸ்துவுக்கு முன் பாரசீகத்தில் இருந்து படை எடுத்து வந்து  சிந்து நதிக்கரையில் பாக்கிஸ்தானில் உள்ள இப்போதைய சிந்து மாகானத்திலும் ,  காஸ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளிலும் ஆற்றுப்படுக்கைகளை அண்டி  குடியேறிய மக்களே 10ம் நூற்றாண்டுகளில் போர்வீரர்களான  தங்களை  பாரசீக மொழியில் Zutt எனும் பெயரால் தங்களை அழைக்க ஆரம்பித்தனர்....   Zutt  எண்றால்  பாரசீக மொழியில் மண்ணின் மைந்தர்கள்  எண்று பொருள்...   அவர்களே ராஜ்புத், புமிபுத்திரா எண்று அழைக்கப்படுகின்றனர்... 

 

மற்றது இசைக்கலைஞர்களான பாரசீக  மொழியில் Dom எனும்  இன மக்களோடு ரொமேனியர்களுக்கு நெருங்கிய தொடர்பு இருக்கிறது... 

 

நுணிப்புல் மேயும் உங்களை மாதிரி ஆக்களோ இனியும் நேரவிரையம் செய்ய நான் தயாராக இல்லை... 

Edited by தயா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Hinduism , Buddhism , Sikhism    நான்கு மதங்களிலையும் சாதியம் ஊறிப்போய் இருக்கிறது...  வேறு மதத்தை சேர்ந்தவன் பஞ்சாபி பேசாமல் சீக்கியனாக மாற முடியாது...    

 

உங்கள் முருகனை தமிழ்நாடு தாண்டி யாரும் வணங்குவதாக உங்களுக்கு தெரியுமா...??   அல்லது கொண்டு போகதான் முடியுமா...??  

 

சரி தமிழர்களுக்கு  எப்போ இந்து மதம் முழு முதல் மதம் ஆகியது...??  சங்கரர் காலத்துக்கு பிறகுதானே....??  அதில் சைவ நெறி...?? கோயிலுக்குள் போன   கீழ்ச்சாதி எண்று சம்பந்தரை எரித்து கொண்ற நெறி..   சமண த்துக்கு மாறிய அப்பரை கல்லோடு கட்டி கடலிலை வீசிய நெறி...   சமணர்களை எல்லாம் சுண்ணாம்பு அறையில் அடைத்து கொண்ற நெறி... 

 

தஞ்சை பெரிய கோயிலை கட்ட 5 லட்ச்சம் பேரை  அடிமைகளாக  ஆக்கிய நெறியும்  அதுவே..   

 

 

மற்றது Jat  எண்று அறிய பட்ட மக்கள் பற்றிய பூரண அறிவை பெற்று உங்கள் வியாக்கியானத்தை ஆரம்பியுங்கள்.. 

 

கிறிஸ்துவுக்கு முன் பாரசீகத்தில் இருந்து படை எடுத்து வந்து  சிந்து நதிக்கரையில் பாக்கிஸ்தானில் உள்ள இப்போதைய சிந்து மாகானத்திலும் ,  காஸ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளிலும் ஆற்றுப்படுக்கைகளை அண்டி  குடியேறிய மக்களே 10ம் நூற்றாண்டுகளில் போர்வீரர்களான  தங்களை  பாரசீக மொழியில் Zutt எனும் பெயரால் தங்களை அழைக்க ஆரம்பித்தனர்....   Zutt  எண்றால்  பாரசீக மொழியில் மண்ணின் மைந்தர்கள்  எண்று பொருள்...   அவர்களே ராஜ்புத், புமிபுத்திரா எண்று அழைக்கப்படுகின்றனர்... 

 

மற்றது இசைக்கலைஞர்களான பாரசீக  மொழியில் Dom எனும்  இன மக்களோடு ரொமேனியர்களுக்கு நெருங்கிய தொடர்பு இருக்கிறது... 

 

நுணிப்புல் மேயும் உங்களை மாதிரி ஆக்களோ இனியும் நேரவிரையம் செய்ய நான் தயாராக இல்லை... 

 

நீங்கள் இந்து இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. புத்திசம் , சிக்ஹிசம் ஜாதி இருக்கிறதாம் ? இதை நான் எங்கே போய்சொள்ள? அம்பேத்கர்(ஹிந்து)  சிக்ஹிசம் தழுவினார் அவருக்கு பஞ்சாபி தெரியாது.

மலேசியா, கனடா , அமெரிக்க ,  ஐரோபா முருகனை கேவிபட்டதிலையா ? என்ன விந்தையாக இருக்கிறது ?

அடுத்து வெறும் பொய் ..........

அதி சங்கரர் ஹிந்து மதத்தினை உயிர்பித்தார் அதற்கு முன்பே நெறி இருந்தது , you messed up all things together.

திருஞான  சம்பந்தர் சைவ பிள்ளைமார் மரபை சேர்த்தவர் எப்படி அவர் கீழ்ச்சாதி ஆனார் ?அவரை எரித்து கொன்றனர் எப்பபொழுது ? அதுவும் சைவர்கள் எரித்தனர்? எதற்கு தேவராம் பாடியர்தக்காகவா ? முதலில் சைவர்கள் யாரை வழிபடுவர் என்பதை தெரிந்து கொள்ளுங்கள் , சம்பந்தர் யாரை வழிபட்டார் என்பதையும்  தெரிந்து கொள்ளுங்கள்.

அப்பரை கல்லோடு கட்டி கடலிலை வீசினர் எப்பொழுது ? அனைத்து தமிழர்களும் அறிந்த ஒன்று ,  சுண்ணாம்பு காளவாசலில் அப்பரை தள்ளியபோது "மாசில் வீணையும்"(என்று சிவனை பற்றி பாடினார்)என்ற பாடலை பாடினார் என்பது அனைவர்க்கும் தெரியும்.

 

மாசில் வீணையும் மாலை மதியமும்

வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்

மூசு வண்டறை பொய்கையும் போன்றதே

ஈசன் எந்தை இணையடி நீழலே.

 

 

அப்பர் கொஞ்சகாலம் ஜைனிசம் தழுவினர் பின்பு பழயபடி சைவதிற்கு திரும்பினர்.

 

பண்டிதர்களையும் இந்த ஜிப்சியையும் இணைத்து  திருடர்கள் என கூறியது நீங்கள் தான் , அதனால் அவர்கள் ஜாட் இனத்தவரிடம் நெருங்கியவர்கள் என கூறினேன். Precisely they having same genetic markers like jats and they prone same kind of genetic diseases that jats encounters. You want me to say more.

Last line applicable to you not me if you have substantial evidence refute my post otherwise stay calm. No offense.........

 

 

 

Edited by Maravan123

  • கருத்துக்கள உறவுகள்

நான் விளக்கம் சொல்லியே ஓஞ்சு போவேன் போல .......

தமிழ் ஈழம் கண்டிப்பாக மலரும் அதற்கான சாத்திய கூறுகள் தென்படுகின்றது , இந்தியாவின் பங்கு அதில் இருக்கும். This month India going to deploy a squadron of SuhoiMKI(air superiority fighter) in .

 

அப்ப இந்தியாவின் தென்கோடியில் ஒரு கஸ்மீர் உருவாகப்போகிறது .....அது ஈழம்....என்று சொல்லுறீயள்.....ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.....அப்படி நடந்தால் இன்னும் 30 வருடத்தின் பின்பு இந்தியர்கள் சொல்லுவார்கள் ஈழம் தங்களுடைய நிலம் என்று .....

Edited by putthan

  • கருத்துக்கள உறவுகள்

 தமிழ் ஈழம் கண்டிப்பாக மலரும் அதற்கான சாத்திய கூறுகள் தென்படுகின்றது , இந்தியாவின் பங்கு அதில் இருக்கும். This month India going to deploy a squadron of SuhoiMKI(air superiority fighter) in Thanjavur due to treat perception. If India feels threat from neighbor's side means she won't spare them.

 

மறவனுக்கு உள்வீட்டு சங்கதிகள் தெரிந்திருக்கிறது.. இணைந்த வடக்கு-கிழக்கை மகிந்தவின் வாய்க்குள் திணிக்காமல் விடமாட்டார்கள் போல்தான் தெரிகிறது.. :D

 

  • கருத்துக்கள உறவுகள்

எனது பதிவை திருப்பிபடிக்கவும் "இந்தியா 2 தேச கொள்கை மட்டும்தான்  ஒப்புகொண்டது அதனால் மதத்தின் பெயரால் 3வது நாடு நடுவில் அமைவதை ஏற்றுகொள்ள முடியாது பாகிஸ்தானை அனுமதிக்கவும்  முடியாது". அப்படி அனுமதித்தால் இந்தியவிற்கு மிகப்பெரிய அச்சறுத்தல் ஏற்படும் பக்கத்தில் கிழக்கு பாகிஸ்தான்(இன்றைய பங்களாதேஷ்) இருப்தை மறந்துவிடக்கூடாது.

 

அந்த இணைப்பு நடந்தது காரணம் to establish our strategic interest and ensure our unity and security.  1948இல் இந்தியா ஒரு ஜனநாயக நாடு கிடையாது , முதலில் ஜனநாயகம் என்றால் என்ன என்பது பலபேருக்கு  தெரியாது அந்த காலகட்டதில் . ஜனநாயகம் ஹிட்லர் போல யாரயும் கொண்டுவந்து விடுமோ என்ற பயமும் இருத்தது , ஜனநாயகம் இந்தியாவில் எடுபடுமா என்ற ஐயமும் மேலோங்கியது .

 

அந்த நேரத்தில் போர் மூண்டது காஷ்மீர் இந்தியாவின் ஒருகிணைத்த பகுதியாக மாறியது. 1950இல் ஜனவரி  25 நாள் இந்தியா குடியரசாக மாறியது means  Indian constitution established and election were conducted in early of 1950s then the people elected first democratic government.

அணைத்து மக்களிடம் கருத்து கேட்டபது சாத்தியம் இல்லாத செயல்.

For more detail see below link:

 

http://en.wikipedia.org/wiki/List_of_princely_states_of_India

 

 

இந்த விடயத்தில் முதலில் தவறிழைத்தது பாகிஸ்தான் தான்.. ஆனால் 1947 இல் சுதந்திரம் பெற்ற இரு நாடுகள் ஒரு வயது முடியும் போது தங்கள் பாதுகாப்புக்காக நூற்றாண்டுகள் பழமையான ஒரு இனத்தின் சுதந்திர இருப்பைப்பற்றிக் கவலைப்படாது பங்குபோட்டுக்கொண்டு விட்டார்கள் என்பதே எனது ஆதங்கம்..

அந்த நேரத்தில் அது சரியான நடவடிக்கையாக இருந்திருக்கலாம்.. இந்தியாவின் பாதுகாப்பை உற்று நோக்கும்போது இன்றும் அது சரியான நடவடிக்கைதான்.. ஏனென்றால் சுதந்திரம் பெற்றவுடன் இலங்கையைப் போன்று சீனா, பாகிஸ்தானுடன் ஒப்பந்தம் போடமாட்டார்கள் என்பதற்கு நிச்சயம் இல்லை..

 

உலகப்போர் வந்து பல இனங்கள் விடுதலை பெற்றதுபோல் இன்னொரு போர் வந்தால்தான் பல இடியப்பச் சிக்கல்கள் தீரும் என நினைக்கிறேன்.. :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்ப இந்தியாவின் தென்கோடியில் ஒரு கஸ்மீர் உருவாகப்போகிறது .....அது ஈழம்....என்று சொல்லுறீயள்.....ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.....அப்படி நடந்தால் இன்னும் 30 வருடத்தின் பின்பு இந்தியர்கள் சொல்லுவார்கள் ஈழம் தங்களுடைய நிலம் என்று .....

 

தாங்கள்  என்ன கருத்தை முன்வைக்கிறிர்கள் என்பது எனது சிற்றறிவுக்கு எட்டவில்லை.

Edited by Maravan123

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மறவனுக்கு உள்வீட்டு சங்கதிகள் தெரிந்திருக்கிறது.. இணைந்த வடக்கு-கிழக்கை மகிந்தவின் வாய்க்குள் திணிக்காமல் விடமாட்டார்கள் போல்தான் தெரிகிறது.. :D

 

 

threat பதில் treat என எழுதிவிட்டேன் மன்னிக்கவும்.

 

http://www.thehindu.com/news/national/thanjavur-airbase-to-have-sukhoi-squadron/article4736822.ece

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த விடயத்தில் முதலில் தவறிழைத்தது பாகிஸ்தான் தான்.. ஆனால் 1947 இல் சுதந்திரம் பெற்ற இரு நாடுகள் ஒரு வயது முடியும் போது தங்கள் பாதுகாப்புக்காக நூற்றாண்டுகள் பழமையான ஒரு இனத்தின் சுதந்திர இருப்பைப்பற்றிக் கவலைப்படாது பங்குபோட்டுக்கொண்டு விட்டார்கள் என்பதே எனது ஆதங்கம்..

அந்த நேரத்தில் அது சரியான நடவடிக்கையாக இருந்திருக்கலாம்.. இந்தியாவின் பாதுகாப்பை உற்று நோக்கும்போது இன்றும் அது சரியான நடவடிக்கைதான்.. ஏனென்றால் சுதந்திரம் பெற்றவுடன் இலங்கையைப் போன்று சீனா, பாகிஸ்தானுடன் ஒப்பந்தம் போடமாட்டார்கள் என்பதற்கு நிச்சயம் இல்லை..

 

உலகப்போர் வந்து பல இனங்கள் விடுதலை பெற்றதுபோல் இன்னொரு போர் வந்தால்தான் பல இடியப்பச் சிக்கல்கள் தீரும் என நினைக்கிறேன்.. :D

 

நான் பாகிஸ்தானி இருந்தால் அதை தவறு என கூறமாட்டேன் . காஷ்மீர் பிரச்சினை பாகிஸ்தானுக்கு வாழ்வாதார பிரச்சினை , ஏனெனில் Indus river is the jugular vein of Pakistan. அந்த நதி  காஷ்மீரின் வழியாக பாகிஸ்தானிற்கு செல்கிறது அந்த பகுதியை எதிரி நாடான  இந்தியா தன்வசம் வைத்துள்ளது இது தான் பிரச்சினைக்கு முக்கிய காரணம். Pakistan never cared about Kashmir or Kashmiri people ,best eg: Pakistan gifted part of Kashmir to China now learn sincerity of Pakistan towards Kashmir, they need full control of Indus that it . பாகிஸ்தான் எப்பொழுதும் காஷ்மீரை விட்டுக்கொடுக்காது கொடுக்கவும் முடியாது  அதே போல  இந்தியாவும் விட்டுக்கொடுக்காது.

 

சிறிய போர் நடக்க வாய்ப்புண்டு.

நீங்கள் இந்து இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. புத்திசம் , சிக்ஹிசம் ஜாதி இருக்கிறதாம் ? இதை நான் எங்கே போய்சொள்ள? அம்பேத்கர்(ஹிந்து)  சிக்ஹிசம் தழுவினார் அவருக்கு பஞ்சாபி தெரியாது.

மலேசியா, கனடா , அமெரிக்க ,  ஐரோபா முருகனை கேவிபட்டதிலையா ? என்ன விந்தையாக இருக்கிறது ?

அடுத்து வெறும் பொய் ..........

அதி சங்கரர் ஹிந்து மதத்தினை உயிர்பித்தார் அதற்கு முன்பே நெறி இருந்தது , you messed up all things together.

திருஞான  சம்பந்தர் சைவ பிள்ளைமார் மரபை சேர்த்தவர் எப்படி அவர் கீழ்ச்சாதி ஆனார் ?அவரை எரித்து கொன்றனர் எப்பபொழுது ? அதுவும் சைவர்கள் எரித்தனர்? எதற்கு தேவராம் பாடியர்தக்காகவா ? முதலில் சைவர்கள் யாரை வழிபடுவர் என்பதை தெரிந்து கொள்ளுங்கள் , சம்பந்தர் யாரை வழிபட்டார் என்பதையும்  தெரிந்து கொள்ளுங்கள்.

அப்பரை கல்லோடு கட்டி கடலிலை வீசினர் எப்பொழுது ? அனைத்து தமிழர்களும் அறிந்த ஒன்று ,  சுண்ணாம்பு காளவாசலில் அப்பரை தள்ளியபோது "மாசில் வீணையும்"(என்று சிவனை பற்றி பாடினார்)என்ற பாடலை பாடினார் என்பது அனைவர்க்கும் தெரியும்.

 

மாசில் வீணையும் மாலை மதியமும்

வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்

மூசு வண்டறை பொய்கையும் போன்றதே

ஈசன் எந்தை இணையடி நீழலே.

 

 

அப்பர் கொஞ்சகாலம் ஜைனிசம் தழுவினர் பின்பு பழயபடி சைவதிற்கு திரும்பினர்.

 

பண்டிதர்களையும் இந்த ஜிப்சியையும் இணைத்து  திருடர்கள் என கூறியது நீங்கள் தான் , அதனால் அவர்கள் ஜாட் இனத்தவரிடம் நெருங்கியவர்கள் என கூறினேன். Precisely they having same genetic markers like jats and they prone same kind of genetic diseases that jats encounters. You want me to say more.

Last line applicable to you not me if you have substantial evidence refute my post otherwise stay calm. No offense.........

 

 

அரைவேக்காட்டுதனமான  ஆதரமில்லாத புலம்பல்...   

 

அம்பேத்தர் எப்போதும் சீக்கியத்தை தளுவியது கிடையாது... அவர் பௌத்த மதத்தையே தழுவினார்...   Ambedkar had considered converting to Sikhism, which saw oppression as something to be fought against and which for that reason appealed also to other leaders of scheduled castes. He rejected the idea after meeting with leaders of the Sikh community and concluding that his conversion might result in him having describes as a "second-rate status" among Sikhs...  

 

சீக்கியர்களின் தலைப்பாகையில் தெரியும் அவர்களின் படி நிலை...    இலங்கையில் இருக்கும் பௌத்தர்கள் யாரையும் நீங்கள் அறிந்து வைத்தும் இருக்க வில்லை போலும் அவர்களின் சாதிய வெறி வேறு யாருக்கும் கிடையாது...  

 

மற்றது மலேசியா சிங்கப்பூரில் கனடாவில் எல்லாம் சீனர்களும் வெள்ளைகளும் முருகனை கும்பிடுகிறார்கள் எனும் வினோத மனப்பாவம் யாருக்கு வரும்... 

 

 

இதே யாழ்களத்தில் மெய்யன படுவது பகுதியில் ஆண்டுக்கணக்காக நடத்தப்பட விவாதங்கள் இவை...  முதலிலை வரலாறுகளை தெரிந்த பின் விவாதம் செய்ய பாருங்கள்...  எத்தின தடவை பேச்சுக்களை மாற்றி சமாளிப்பீர்,... 

 

 

 

Edited by தயா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரைவேக்காட்டுதனமான  ஆதரமில்லாத புலம்பல்...   

 

அம்பேத்தர் எப்போதும் சீக்கியத்தை தளுவியது கிடையாது... அவர் பௌத்த மதத்தையே தழுவினார்...   Ambedkar had considered converting to Sikhism, which saw oppression as something to be fought against and which for that reason appealed also to other leaders of scheduled castes. He rejected the idea after meeting with leaders of the Sikh community and concluding that his conversion might result in him having describes as a "second-rate status" among Sikhs...  

 

சீக்கியர்களின் தலைப்பாகையில் தெரியும் அவர்களின் படி நிலை...    இலங்கையில் இருக்கும் பௌத்தர்கள் யாரையும் நீங்கள் அறிந்து வைத்தும் இருக்க வில்லை போலும் அவர்களின் சாதிய வெறி வேறு யாருக்கும் கிடையாது...  

 

மற்றது மலேசியா சிங்கப்பூரில் கனடாவில் எல்லாம் சீனர்களும் வெள்ளைகளும் முருகனை கும்பிடுகிறார்கள் எனும் வினோத மனப்பாவம் யாருக்கு வரும்... 

 

 

இதே யாழ்களத்தில் மெய்யன படுவது பகுதியில் ஆண்டுக்கணக்காக நடத்தப்பட விவாதங்கள் இவை...  முதலிலை வரலாறுகளை தெரிந்த பின் விவாதம் செய்ய பாருங்கள்...  எத்தின தடவை பேச்சுக்களை மாற்றி சமாளிப்பீர்,... 

 

புலம்பல் ??? நான்  புலம்பவில்லை  நீங்கள் தான் அர்த்தமற்று  பேசுகிறிர்கள்,என்பது உங்கள் பதிவுகளை பார்த்தாலே எளிதில் விளங்கும்.

 

 

 

I know he adopted some dharmic religion and I forgot that exact religion; of course I agreed my mistake. But still you lost the argument you said buddhism also practicing caste discrimination ,then why he adopted such religion .If your argument is true he suppose to skip the both religion ryt but such things not happened. And those lines were said by Stephen P Cohen(see the back references) journalist so credibility(I know its coming from Cambridge press) matters. Ok wat about rest like Samanthar? Appar? Jipsies? Shaivism? ,have you given fitting reply for that...

 

.      

 

Edited by Maravan123

இந்தியா காஸ்மீரில் பொது வாக்கெடுப்பு நடத்தியிருக்கும் பாகிஸ்தான் குள்ளவேலைகள் செய்திருக்காவிட்டால்...
இந்தியாவிற்கு தெரியும் எப்படி போராட்டங்களை அடக்குவது என்று :)
1) பஞ்சாப் - முழுக்க அடக்குபட்டு விட்டது
2) காஸ்மீர் - ஆயுத போரட்டம் நசுக்க பட்டு விட்டது..
3) ஈழம் - முழுக்க அழிக்க பட்டு விட்டது
4) மிசோராம்/நாகலாந்து  - ஆயுத போரட்டம் கிட்டதட்ட நலிந்து விட்டது - போரளிகளுக்குல்லேயே அடி/பிடி 
5) Maoists - இது தான் இப்போது கொஞ்சம் வலிமையாக உள்ளது ஆனால் அவர்களிடமும் ஒரு முன்னேற்றம் இல்லை

 

யாசின் மாலிக்கை அழைத்தால் என்னடா பிரச்சினை ?

 

கடலூரில் நாம் தமிழர் கட்சி நடத்திய கருத்தரங்கில் ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியின் தலைவர் யாசின் மாலிக் பங்கேற்றதை காந்தி பெயரை வைத்துக் கொண்டு கொலைவெறி ஆட்டம் போடும் காங்கிரசும், பலான விசயம் மற்றும் பயங்கரவாதம் இரண்டையும் விடாது செய்யும் பாரதீய ஜனதா கட்சியும் கண்டித்துள்ளன.

“வெளிநாடுகளின் தொடர்பு இருப்பதாக யாசின் மாலிக் பலமுறை கைது செய்யப்பட்டவர். இந்தியாவின் இறையாண்மையை கேள்வி கேட்டு காஷ்மீரத்தை துண்டாடத் துடிக்கும் அவர், கடலூருக்கு எப்படி வந்தார்? கூட்டம் நடத்தியவர்களுக்கும் அவருக்கும் என்ன தொடர்பு? அவரை கடலூருக்கு அழைத்து வர உதவிய இயக்கங்கள் எவை? இவற்றையெல்லாம் மத்திய, மாநில அரசுகள் விசாரிக்க வேண்டும். இலங்கைத் தமிழர்களுக்கு குரல் கொடுப்பதாக சொல்லிக் கொண்டு தமிழகத்தின் அமைதியைக் குலைக்க விரும்பும் சக்திகளை அடையாளம் கண்டு அவர்கள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவர்கள் தூவும் விஷவித்துக்கள் எதிர்காலத்துக்கு நல்லதல்ல என்பதை உணர்ந்து தேசபக்தியுள்ள எல்லா கட்சிகளும் இதனை எதிர்க்க வேண்டும்.” என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

“இலங்கைத் தமிழர் உரிமை காக்கும் போராட்டம் என்று கூறி காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் யாசின் மாலிக்கை பங்கேற்கச் செய்திருப்பது தமிழர்களையும், தமிழ் ஆர்வலர்களையும் தலைகுனியச் செய்துள்ளது. இலங்கைத் தமிழர்கள் தங்களது சொந்த நாட்டிலேயே இரண்டாம்தர குடிமக்களாக வாழ்ந்து வருகின்றனர். ஜாதி, மதம் என்ற வேறுபாடுகள் இன்றி ஈழத் தமிழர் என்ற அடையாளத்துடன் உரிமைகளுக்காகப் போராடி வருகின்றனர். ஆனால், சுதந்திரம் அடைந்தது முதல் நாட்டின் மற்ற மாநிலங்களைவிட அதிக சலுகைகள் காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வருகின்றன. அதற்காக இந்திய அரசியல் சட்டத்தில் 370 என்ற சிறப்பு விதியே உருவாக்கப்பட்டுள்ளது. அப்படி சலுகைகள் வழங்கினாலும் மதத்தின் அடிப்படையில் முஸ்லிம்கள் மட்டுமே வாழ முடியும் என இந்துக்களை துரத்தியடித்து பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்படுவதற்கு காரணமாக இருந்தவர் யாசின் மாலிக். எனவே, இலங்கைத் தமிழர்களின் நியாயமான போராட்டத்தை காஷ்மீர் பிரிவினைவாதிகளோடு இணைத்துப் பார்ப்பதை யாரும் ஏற்க மாட்டார்கள். மரக்காணம், தருமபுரி போன்ற பகுதிகளில் கலவரம் ஏற்பட்டபோது அங்குச் செல்ல தமிழகத் தலைவர்கள் சிலருக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால், இந்தியாவைத் துண்டாட நினைக்கும் யாசின் மாலிக் போன்றவர்களை தமிழகத்தில் அனுமதித்தது அபாயகரமானது” என்று பாரதீய ஜனதா கட்சியின் தமிழ்நாடு தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா பேசவில்லையே தவிர அவர் இவர்களை விட இன்னும் ஒருபடி அதிகம் உறுமக்கூடியவர். மேற்கண்ட அறிக்கைகளின் படி காங்கிரஸ், பா.ஜ.க இரண்டும் நாங்கள் பாசிச கட்சிகள்தான் என்பதை ஒரே குரலில் உறுதி செய்கின்றன.

“ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு அரசியல் சட்டம் பிரிவு 370-ன் கீழ் சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன, நாட்டின் பிற பகுதி மக்கள் அங்கு போய் நிலம் வாங்கக் கூட அனுமதி இல்லை” என்று பாரதீய ஜனதா தலைவர்கள் புலம்பியிருக்கின்றனர்.

ஆனால் உண்மையில் காஷ்மீர் மக்கள் கடைக்கு போய் காய்கறி வாங்குவதற்கு கூட சுதந்திரம் இல்லாமல் 1 லட்சம் இராணுவப் படையினரை குவித்துள்ளது இந்திய அரசு. வீட்டிலிருந்து கடைக்குப் போவதற்குள் 10 இராணுவ தடை அரண்களை கடந்து போக வேண்டும், அதில் 9-வது அரணில் கூட தடுத்து நிறுத்தப்பட்டு கொல்லப்படலாம் என்ற அடக்குமுறையின் கீழ் காஷ்மீர் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். 1990-ம் ஆண்டு முதல் ஆயுதப் படை சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தின் கீழ் கேட்பாரன்றி மக்கள் மீது அடக்கு முறையை செயல்படுத்தும் உரிமை இந்திய இராணுவ படைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

1980-முதல் 1 லட்சத்துக்கும் அதிகமான பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதைத்தான் சிறப்பு சலுகை என்று புளுகுகின்றனர் பாரதீய ஜனதா கட்சியினர்.

இந்திய இராணுவ ஆக்கிரமிப்பால் ஒடுக்கப்படும் காஷ்மீர் மக்களின் உரிமைகளுக்காக போராடியதற்காக யாசின் மாலிக் ராஜஸ்தான், காஷ்மீர், டெல்லி ஆகிய இடங்களில் உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கிறார். யாசின் மாலிக்கின் அமைப்பான ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி, ஜம்மு காஷ்மீரை இந்திய, பாகிஸ்தானிய ஆதிக்கத்திலிருந்து விடுவித்து சுதந்திர தேசமாக உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டது. மத வேறுபாடுகள் அற்று, ஜம்மு காஷ்மீரை சேர்ந்த அனைத்து மக்களையும் காஷ்மீர் என்ற அடையாளத்துடன் இணைத்து இந்திய/பாகிஸ்தானிய அரசுகளின் பயங்கரவாதத்துக்கு எதிராக போராடி வருகிறது ஜே.கே.எல்.எப்.

இந்திய அரசால் காஷ்மீர் ஆளுனராக நியமிக்கப்பட்ட ஜக்மோகனால் தூண்டப்பட்டு வெளியேறிய காஷ்மீர் பண்டிட்டுகளையும் திரும்ப காஷ்மீரில் குடியேற்ற வேண்டும் என்று பேசி வருபவர் யாசின் மாலிக்.

1983 தில்லியில் சீக்கியருக்கு எதிரான கலவரத்தில் நூற்றுக்கணக்கான சீக்கியர்களை கொன்ற காங்கிரசுக் கட்சியும், 2002 கலவரத்தில் குஜராத் முசுலீம் மக்களை நூற்றுக்கணக்கில் கொன்ற பாரதீய ஜனதாக் கட்சியும்தான் இந்நாட்டின் பயங்கரவாதக் கட்சிகளே அன்றி ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி அல்ல.

சிங்கள இனவெறி அரசால் ஒடுக்கப்படும் ஈழத் தமிழ் மக்கள் தமது உரிமைக்காக போராடும் போது இந்திய அரசால் ஒடுக்கப்படும் காஷ்மீர் மக்களே நமது நேச சக்தியாக இருக்க முடியும். ஆனால் காங்கிரசும், பாரதிய ஜனதாவும் ஈழத்தமிழரின் உரிமைகளை ஒடுக்கி ஆட்டம் போடும் சிங்கள இனவெறி அரசை ஆதரிப்பவர்கள். புலி ஆதரவாளர்கள், தமிழின ஆர்வலர்கள் பலரும் கூட பாரதிய ஜனதா கட்சி காங்கிரசுக்கு தேவலாம் என்ற சந்தர்ப்பவாத பார்வை கொண்டவர்களே. அப்படிப்பட்டவர்கள் பாஜகவின் காஷ்மீர் குறித்த ஒடுக்குமுறைப் பார்வையை பார்த்தாவது திருந்தட்டும்.

போர்க்குற்றவாளியும், இனப்படுகொலை செய்தவருமான ராஜபக்சேவை இந்தியாவிற்கு அழைத்து உபசரிக்கும் காங்கிரசும், பாஜகவும்தான் பயங்கரவாதத்திற்கு உதவி செய்கின்ற கட்சிகளே அன்றி யாசின் மாலிக் அல்ல.
 

http://www.vinavu.com/2013/05/22/yasin-malik-kashmir-fighter/

 

Edited by துளசி

1980 பிற்பகுதியில் பிரச்னைகுரிய இடமாக காஷ்மீர் மாறியது , கஷ்மிர்களும் மற்ற இந்தியர்கள் போல அணைத்து உரிமையும் உள்ளது. இப்பொழுது காஷ்மீர் அமைதியான பகுதியாக மாறிவருகிறது , குண்டுவெடிப்பு வெகுவாக குறைத்துவிட்டது சென்ற ஆண்டில் ஒரே ஒரு குண்டுவெடிப்பு நடந்தது.

 

காஷ்மீர்: அம்பலமானது இந்திய அரசின் இனப்படுகொலை!

November 4, 2011

 

kashmir-mass-graves.jpg

 

 

தீவிரவாத  பிரிவினைவாத எதிர்ப்பு என்ற பெயரில் காஷ்மீரில் நடத்தப்பட்டுவரும் ‘தேசபக்த’ இனப்படுகொலைகள் பற்றிய உண்மைகள், அண்மையில் ஜம்மு  காஷ்மீர் மாநில மனித உரிமைகள் கமிசன் வாயிலாக வெளிச்சத்துக்கு வந்து நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. காஷ்மீரில் அப்பாவிகளான 2730 பேர் தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தப்பட்டு, போலி மோதல்களில் சுட்டுக் கொல்லப்பட்டு பாரமுல்லா, பண்டிபோரா, ஹந்த்வாரா, குப்வாரா ஆகிய நான்கு மாவட்டங்களில் 38 இடங்களில் ‘அடையாளம் தெரியாதவர்கள்’ என்ற பெயரில் கல்லறைகளில் புதைக்கப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்களின் உடல்கள் இரகசியமாக இடுகாட்டுக்குக் கொண்டுவரப்பட்டு, காஷ்மீர் போலீசாரால் புதைக்கப்பட்டுள்ளன.

1990  களில் காஷ்மீரில் சுயநிர்ணய உரிமைப் போராட்டம் புதிய வேகத்தில் முன்னேறத் தொடங்கியதிலிருந்து இதுவரை பல்லாயிரம் பேர் ‘காணாமல் போயுள்ளனர்’. ஆனால், மாநில அரசாங்கமோ 3744 பேர் மட்டுமே காணாமல் போயுள்ளதாகவும், 1990லிருந்து அவர்கள் பாகிஸ்தானில் தங்கி ஆயுதப் பயிற்சியில் ஈடுபட்டுத் தீவிரவாதிகளாக மாறியுள்ளதாகவும் தெரிவித்தது. இதை ஏற்க மறுத்து கணவரையும் புதல்வர்களையும் உறவினர்களையும் பறிகொடுத்த காஷ்மீரிகள் “காணாமல் போனவர்களின் பெற்றோர் சங்க’’த்தின் மூலம் தொடர்ந்து போராடியதன் விளைவாக, அம்மாநிலத்தின் மனித உரிமை கமிசன் தனது புலனாய்வுப் பிரிவைக் கொண்டு விசாரணையை மேற்கொண்டது. காணாமல் போனவர்களின் உறவினர்கள் அளித்த சாட்சியங்களின் அடிப்படையில், அடையாளம் தெரியாதவர்கள் என்று புதைக்கப்பட்ட கல்லறைகளில் 574ஐத் தோண்டிப் பிணங்களைச் சோதித்தபோது, அனைவரும் காஷ்மீரின் உள்ளூர்வாசிகள் என்று இப்போது ஆதாரத்துடன் நிரூபணமாகியுள்ளது.

காணாமல் போனவர்களின் பெற்றோர்கள் சங்கத்தின் கூற்றுப்படி, கடந்த 1989 முதல் 2009 வரையிலான காலத்தில் 70,000 பேர் காணாமல் போயுள்ளனர். அவர்கள் தீவிரவாதிகளாக முத்திரை குத்தப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர்.  அம்மாநிலத்தை ஆக்கிரமித்துள்ள 6 இலட்சத்துக்கும் மேற்பட்ட இந்திய இராணுவ மற்றும் துணை இராணுப்படைகள் கண்மூடித்தனமாக இப்படுகொலைகளை நடத்தியுள்ளன. தீவிரவாதிகளைக் கொன்றொழித்தால் பரிசுகளும் பதவி உயர்வும் இந்திய அரசால் அளிக்கப்படுவதால் போட்டிபோட்டுக் கொண்டு மோதல் என்ற பெயரில் உதிரத்தையே உறைய வைக்கும் படுகொலைகளும், போலீசு கொட்டடிக் கொலைகளும் கேள்விமுறையின்றி நடத்தப்பட்டுள்ளன.

இந்திய இராணுவத்தின் அரசு பயங்கரவாத இனப்படுகொலை அம்பலமானதைத் தொடர்ந்து, அனைத்துலக பொதுமன்னிப்புக் கழகமும் (ஆம்னஸ்டி), அமெரிக்கா மற்றும் பிற நாடுகளின் மனித உரிமைக் கங்காணி அமைப்புகளும் மாநிலம் முழுவதுமுள்ள அடையாளம் தெரியாதவர்களின் கல்லறைகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும், அக்கல்லறைகளும் பாதுகாப்புப் படையினரால் பாதுகாக்கப்பட்டு, மரபணுவியல்  தடயவியல் நிபுணர்கள் மூலம் சிதைந்த எலும்புகளைக் கொண்டு சோதனை நடத்தப்பட வேண்டும் என்று கோரியுள்ளது. மனித உரிமைகள் கமிசனிடம் சாட்சியமளித்தவர்களுக்கும், மனித உரிமை இயக்கச் செயல்வீரர்களுக்கும், கமிசனின் புலனாய்வுப் பிரிவினருக்கும் உரிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும்; காணாமல் போனவர்கள் பற்றி முழுமையான நீதியான வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும்; குற்றம் சாட்டப்பட்டவர்களும் சந்தேகப்படுபவர்களும் அனைத்துலக நீதிமன்றத் தரத்தின்படி விசாரிக்கப்பட வேண்டும்; பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் அளிக்கப்பட வேண்டும் என்று இந்திய அரசைக் கோரியுள்ளன.

காஷ்மீர் மாநில அரசும் மைய அரசும் இது குறித்து இன்றுவரை மௌனம் சாதிக்கின்றன. மனித உரிமைக்கும் உயிர் வாழும் உரிமைக்கும் இந்திய அரசு பயங்கரவாதிகளால் மிகப் பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள போதிலும், நாட்டுக்கே அவமானத்தை ஏற்படுத்தியுள்ள இந்த இனப்படுகொலையைக் குறித்து அரசியல் கட்சிகளும் ஊடகங்களும் இன்னமும் வாய்திறக்காமல் இருப்பதுதான் அதைவிடப் பெருத்த அவமானம்.

காஷ்மீரில் மட்டுமல்ல, இதற்கு முன் பஞ்சாபில் பயங்கரவாதத்தை முறியடிப்பது என்ற பெயரில் 1984 முதல் 1995 வரை இதேபோல மோதல் படுகொலைகளும் சாமானியர்கள் காணாமல் போவதும் நடந்துள்ளன. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் இத்தகைய அரசு பயங்கரவாதப் படுகொலைகளும் அட்டூழியங்களும் இன்றும் கேள்விமுறையின்றித் தொடர்கின்றன.

ஈழத்தில் இனப்படுகொலை பயங்கரவாதத்தை நடத்திய ராஜபக்சே அரசு போர்க்குற்றவாளி என்றால், காஷ்மீரில் துடிக்கத் துடிக்க இனப்படுகொலைகளை இரகசியமாக நடத்தியுள்ள இந்திய அரசும் அதன் இராணுவமும் புனிதர்களா? இத்தகைய அட்டூழியங்களை நடத்திவரும் போலீசு  இராணுவத்துக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு, காஷ்மீரில் காலனிய அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விடுவதுதான் தேசிய ஒருமைப்பாடா?  ஜனநாயக உணர்வு கொண்ட ஒவ்வொருவரையும் உலுக்கும் கேள்விகளே இவை.

 

http://www.vinavu.com/2011/11/04/kashmir-mass-graves/

  • கருத்துக்கள உறவுகள்

ராஜபக்சவை ஆதரிக்கும் காங்க்ரஸ்காரர்கள் காஷ்மீர் கொலைகளை ஆதரிக்க மாட்டார்களா.. என்ன?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாசின் மாலிக்கை அழைத்தால் என்னடா பிரச்சினை ?

 

கடலூரில் நாம் தமிழர் கட்சி நடத்திய கருத்தரங்கில் ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியின் தலைவர் யாசின் மாலிக் பங்கேற்றதை காந்தி பெயரை வைத்துக் கொண்டு கொலைவெறி ஆட்டம் போடும் காங்கிரசும், பலான விசயம் மற்றும் பயங்கரவாதம் இரண்டையும் விடாது செய்யும் பாரதீய ஜனதா கட்சியும் கண்டித்துள்ளன.

“வெளிநாடுகளின் தொடர்பு இருப்பதாக யாசின் மாலிக் பலமுறை கைது செய்யப்பட்டவர். இந்தியாவின் இறையாண்மையை கேள்வி கேட்டு காஷ்மீரத்தை துண்டாடத் துடிக்கும் அவர், கடலூருக்கு எப்படி வந்தார்? கூட்டம் நடத்தியவர்களுக்கும் அவருக்கும் என்ன தொடர்பு? அவரை கடலூருக்கு அழைத்து வர உதவிய இயக்கங்கள் எவை? இவற்றையெல்லாம் மத்திய, மாநில அரசுகள் விசாரிக்க வேண்டும். இலங்கைத் தமிழர்களுக்கு குரல் கொடுப்பதாக சொல்லிக் கொண்டு தமிழகத்தின் அமைதியைக் குலைக்க விரும்பும் சக்திகளை அடையாளம் கண்டு அவர்கள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவர்கள் தூவும் விஷவித்துக்கள் எதிர்காலத்துக்கு நல்லதல்ல என்பதை உணர்ந்து தேசபக்தியுள்ள எல்லா கட்சிகளும் இதனை எதிர்க்க வேண்டும்.” என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

“இலங்கைத் தமிழர் உரிமை காக்கும் போராட்டம் என்று கூறி காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் யாசின் மாலிக்கை பங்கேற்கச் செய்திருப்பது தமிழர்களையும், தமிழ் ஆர்வலர்களையும் தலைகுனியச் செய்துள்ளது. இலங்கைத் தமிழர்கள் தங்களது சொந்த நாட்டிலேயே இரண்டாம்தர குடிமக்களாக வாழ்ந்து வருகின்றனர். ஜாதி, மதம் என்ற வேறுபாடுகள் இன்றி ஈழத் தமிழர் என்ற அடையாளத்துடன் உரிமைகளுக்காகப் போராடி வருகின்றனர். ஆனால், சுதந்திரம் அடைந்தது முதல் நாட்டின் மற்ற மாநிலங்களைவிட அதிக சலுகைகள் காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வருகின்றன. அதற்காக இந்திய அரசியல் சட்டத்தில் 370 என்ற சிறப்பு விதியே உருவாக்கப்பட்டுள்ளது. அப்படி சலுகைகள் வழங்கினாலும் மதத்தின் அடிப்படையில் முஸ்லிம்கள் மட்டுமே வாழ முடியும் என இந்துக்களை துரத்தியடித்து பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்படுவதற்கு காரணமாக இருந்தவர் யாசின் மாலிக். எனவே, இலங்கைத் தமிழர்களின் நியாயமான போராட்டத்தை காஷ்மீர் பிரிவினைவாதிகளோடு இணைத்துப் பார்ப்பதை யாரும் ஏற்க மாட்டார்கள். மரக்காணம், தருமபுரி போன்ற பகுதிகளில் கலவரம் ஏற்பட்டபோது அங்குச் செல்ல தமிழகத் தலைவர்கள் சிலருக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால், இந்தியாவைத் துண்டாட நினைக்கும் யாசின் மாலிக் போன்றவர்களை தமிழகத்தில் அனுமதித்தது அபாயகரமானது” என்று பாரதீய ஜனதா கட்சியின் தமிழ்நாடு தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா பேசவில்லையே தவிர அவர் இவர்களை விட இன்னும் ஒருபடி அதிகம் உறுமக்கூடியவர். மேற்கண்ட அறிக்கைகளின் படி காங்கிரஸ், பா.ஜ.க இரண்டும் நாங்கள் பாசிச கட்சிகள்தான் என்பதை ஒரே குரலில் உறுதி செய்கின்றன.

“ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு அரசியல் சட்டம் பிரிவு 370-ன் கீழ் சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன, நாட்டின் பிற பகுதி மக்கள் அங்கு போய் நிலம் வாங்கக் கூட அனுமதி இல்லை” என்று பாரதீய ஜனதா தலைவர்கள் புலம்பியிருக்கின்றனர்.

ஆனால் உண்மையில் காஷ்மீர் மக்கள் கடைக்கு போய் காய்கறி வாங்குவதற்கு கூட சுதந்திரம் இல்லாமல் 1 லட்சம் இராணுவப் படையினரை குவித்துள்ளது இந்திய அரசு. வீட்டிலிருந்து கடைக்குப் போவதற்குள் 10 இராணுவ தடை அரண்களை கடந்து போக வேண்டும், அதில் 9-வது அரணில் கூட தடுத்து நிறுத்தப்பட்டு கொல்லப்படலாம் என்ற அடக்குமுறையின் கீழ் காஷ்மீர் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். 1990-ம் ஆண்டு முதல் ஆயுதப் படை சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தின் கீழ் கேட்பாரன்றி மக்கள் மீது அடக்கு முறையை செயல்படுத்தும் உரிமை இந்திய இராணுவ படைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

1980-முதல் 1 லட்சத்துக்கும் அதிகமான பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதைத்தான் சிறப்பு சலுகை என்று புளுகுகின்றனர் பாரதீய ஜனதா கட்சியினர்.

இந்திய இராணுவ ஆக்கிரமிப்பால் ஒடுக்கப்படும் காஷ்மீர் மக்களின் உரிமைகளுக்காக போராடியதற்காக யாசின் மாலிக் ராஜஸ்தான், காஷ்மீர், டெல்லி ஆகிய இடங்களில் உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கிறார். யாசின் மாலிக்கின் அமைப்பான ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி, ஜம்மு காஷ்மீரை இந்திய, பாகிஸ்தானிய ஆதிக்கத்திலிருந்து விடுவித்து சுதந்திர தேசமாக உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டது. மத வேறுபாடுகள் அற்று, ஜம்மு காஷ்மீரை சேர்ந்த அனைத்து மக்களையும் காஷ்மீர் என்ற அடையாளத்துடன் இணைத்து இந்திய/பாகிஸ்தானிய அரசுகளின் பயங்கரவாதத்துக்கு எதிராக போராடி வருகிறது ஜே.கே.எல்.எப்.

இந்திய அரசால் காஷ்மீர் ஆளுனராக நியமிக்கப்பட்ட ஜக்மோகனால் தூண்டப்பட்டு வெளியேறிய காஷ்மீர் பண்டிட்டுகளையும் திரும்ப காஷ்மீரில் குடியேற்ற வேண்டும் என்று பேசி வருபவர் யாசின் மாலிக்.

1983 தில்லியில் சீக்கியருக்கு எதிரான கலவரத்தில் நூற்றுக்கணக்கான சீக்கியர்களை கொன்ற காங்கிரசுக் கட்சியும், 2002 கலவரத்தில் குஜராத் முசுலீம் மக்களை நூற்றுக்கணக்கில் கொன்ற பாரதீய ஜனதாக் கட்சியும்தான் இந்நாட்டின் பயங்கரவாதக் கட்சிகளே அன்றி ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி அல்ல.

சிங்கள இனவெறி அரசால் ஒடுக்கப்படும் ஈழத் தமிழ் மக்கள் தமது உரிமைக்காக போராடும் போது இந்திய அரசால் ஒடுக்கப்படும் காஷ்மீர் மக்களே நமது நேச சக்தியாக இருக்க முடியும். ஆனால் காங்கிரசும், பாரதிய ஜனதாவும் ஈழத்தமிழரின் உரிமைகளை ஒடுக்கி ஆட்டம் போடும் சிங்கள இனவெறி அரசை ஆதரிப்பவர்கள். புலி ஆதரவாளர்கள், தமிழின ஆர்வலர்கள் பலரும் கூட பாரதிய ஜனதா கட்சி காங்கிரசுக்கு தேவலாம் என்ற சந்தர்ப்பவாத பார்வை கொண்டவர்களே. அப்படிப்பட்டவர்கள் பாஜகவின் காஷ்மீர் குறித்த ஒடுக்குமுறைப் பார்வையை பார்த்தாவது திருந்தட்டும்.

போர்க்குற்றவாளியும், இனப்படுகொலை செய்தவருமான ராஜபக்சேவை இந்தியாவிற்கு அழைத்து உபசரிக்கும் காங்கிரசும், பாஜகவும்தான் பயங்கரவாதத்திற்கு உதவி செய்கின்ற கட்சிகளே அன்றி யாசின் மாலிக் அல்ல.

 

http://www.vinavu.com/2013/05/22/yasin-malik-kashmir-fighter/

 

தங்கள் இணைப்பிற்கு நன்றி.

 

என்று காஷ்மீர் முன்னணி ஆட்சிக்கு வர்றது உங்களுக்கு எப்ப நல்லது செய்யுறது ??? ஏன் புரிதல் இல்லாமல் பேசுகிறார்கள் என தெரியவில்லை. இந்திய அரசை யாரும் காஷ்மீர் விசையத்தில் நிர்பந்திக்க முடியாது அதே போல சென்செனிய விசையத்தில் ருச்சியவையும்  , திபெத் விசையத்தில் சீனாவையும் , பலுசிஸ்தான் விசையத்தில் பாகிஸ்தானையும்  நிர்பந்திக்க முடியாது என்பது உலகம் அறிந்த விசையம் . பிஜேபி மட்டும் ஈழ விடுதலையின் நம்பிக்கை ;வாஜ்பாய் ஆட்சி காலத்தில் புலிகலைகொல்ல GOSL ஆயுதம் கேட்டது எங்கள் ரத்த உறவுகளை கொள்ள ஆயுதம் கொடுக்கமுடியாது என கூறினார் . யாசின் ஆதரிப்பதின்மூலம் இந்திய மக்களின் வெறுப்பை சம்பாதிக்க போகிறிர்கள் என்பது திண்ணம்.

 

 

அவர்கள் கூறுவதை போல அவ்வளவு கட்டுப்பாடு இல்லை அனால் கட்டுப்பாடு இருக்கிறதை ஒப்புகொள்கிறேன்   , AFPSA இருக்கிறது  அவ்வாறன சட்டம் அப்பகுதில் தேவை. கடந்த 3-4 நாள்களில் மட்டும் வெவ்வேறு சம்பவங்களில்  5-6 இந்திய பாதுகாப்பு படையினர் கொல்லபட்டனர். இவ்வளவு கெடுபுடி இருந்தும் அவ்வாறு நிகழ்கிறது என்றால் பார்த்துகொள்ளுங்கள். அந்த பகுதி எல்லை தாண்டிய தீவிரவாதத்தால் கடுமையாக பாதிகபட்டுள்ளது அதனால் வேறுவழி கிடையாது.

இணைப்பு :http://newindianexpress.com/nation/Injured-soldier-dies-in-Kashmir-toll-is-five/2013/05/24/article1604023.ece

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காஷ்மீர்: அம்பலமானது இந்திய அரசின் இனப்படுகொலை!

November 4, 2011

 

kashmir-mass-graves.jpg

 

 

தீவிரவாத  பிரிவினைவாத எதிர்ப்பு என்ற பெயரில் காஷ்மீரில் நடத்தப்பட்டுவரும் ‘தேசபக்த’ இனப்படுகொலைகள் பற்றிய உண்மைகள், அண்மையில் ஜம்மு  காஷ்மீர் மாநில மனித உரிமைகள் கமிசன் வாயிலாக வெளிச்சத்துக்கு வந்து நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. காஷ்மீரில் அப்பாவிகளான 2730 பேர் தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தப்பட்டு, போலி மோதல்களில் சுட்டுக் கொல்லப்பட்டு பாரமுல்லா, பண்டிபோரா, ஹந்த்வாரா, குப்வாரா ஆகிய நான்கு மாவட்டங்களில் 38 இடங்களில் ‘அடையாளம் தெரியாதவர்கள்’ என்ற பெயரில் கல்லறைகளில் புதைக்கப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்களின் உடல்கள் இரகசியமாக இடுகாட்டுக்குக் கொண்டுவரப்பட்டு, காஷ்மீர் போலீசாரால் புதைக்கப்பட்டுள்ளன.

1990  களில் காஷ்மீரில் சுயநிர்ணய உரிமைப் போராட்டம் புதிய வேகத்தில் முன்னேறத் தொடங்கியதிலிருந்து இதுவரை பல்லாயிரம் பேர் ‘காணாமல் போயுள்ளனர்’. ஆனால், மாநில அரசாங்கமோ 3744 பேர் மட்டுமே காணாமல் போயுள்ளதாகவும், 1990லிருந்து அவர்கள் பாகிஸ்தானில் தங்கி ஆயுதப் பயிற்சியில் ஈடுபட்டுத் தீவிரவாதிகளாக மாறியுள்ளதாகவும் தெரிவித்தது. இதை ஏற்க மறுத்து கணவரையும் புதல்வர்களையும் உறவினர்களையும் பறிகொடுத்த காஷ்மீரிகள் “காணாமல் போனவர்களின் பெற்றோர் சங்க’’த்தின் மூலம் தொடர்ந்து போராடியதன் விளைவாக, அம்மாநிலத்தின் மனித உரிமை கமிசன் தனது புலனாய்வுப் பிரிவைக் கொண்டு விசாரணையை மேற்கொண்டது. காணாமல் போனவர்களின் உறவினர்கள் அளித்த சாட்சியங்களின் அடிப்படையில், அடையாளம் தெரியாதவர்கள் என்று புதைக்கப்பட்ட கல்லறைகளில் 574ஐத் தோண்டிப் பிணங்களைச் சோதித்தபோது, அனைவரும் காஷ்மீரின் உள்ளூர்வாசிகள் என்று இப்போது ஆதாரத்துடன் நிரூபணமாகியுள்ளது.

காணாமல் போனவர்களின் பெற்றோர்கள் சங்கத்தின் கூற்றுப்படி, கடந்த 1989 முதல் 2009 வரையிலான காலத்தில் 70,000 பேர் காணாமல் போயுள்ளனர். அவர்கள் தீவிரவாதிகளாக முத்திரை குத்தப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர்.  அம்மாநிலத்தை ஆக்கிரமித்துள்ள 6 இலட்சத்துக்கும் மேற்பட்ட இந்திய இராணுவ மற்றும் துணை இராணுப்படைகள் கண்மூடித்தனமாக இப்படுகொலைகளை நடத்தியுள்ளன. தீவிரவாதிகளைக் கொன்றொழித்தால் பரிசுகளும் பதவி உயர்வும் இந்திய அரசால் அளிக்கப்படுவதால் போட்டிபோட்டுக் கொண்டு மோதல் என்ற பெயரில் உதிரத்தையே உறைய வைக்கும் படுகொலைகளும், போலீசு கொட்டடிக் கொலைகளும் கேள்விமுறையின்றி நடத்தப்பட்டுள்ளன.

இந்திய இராணுவத்தின் அரசு பயங்கரவாத இனப்படுகொலை அம்பலமானதைத் தொடர்ந்து, அனைத்துலக பொதுமன்னிப்புக் கழகமும் (ஆம்னஸ்டி), அமெரிக்கா மற்றும் பிற நாடுகளின் மனித உரிமைக் கங்காணி அமைப்புகளும் மாநிலம் முழுவதுமுள்ள அடையாளம் தெரியாதவர்களின் கல்லறைகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும், அக்கல்லறைகளும் பாதுகாப்புப் படையினரால் பாதுகாக்கப்பட்டு, மரபணுவியல்  தடயவியல் நிபுணர்கள் மூலம் சிதைந்த எலும்புகளைக் கொண்டு சோதனை நடத்தப்பட வேண்டும் என்று கோரியுள்ளது. மனித உரிமைகள் கமிசனிடம் சாட்சியமளித்தவர்களுக்கும், மனித உரிமை இயக்கச் செயல்வீரர்களுக்கும், கமிசனின் புலனாய்வுப் பிரிவினருக்கும் உரிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும்; காணாமல் போனவர்கள் பற்றி முழுமையான நீதியான வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும்; குற்றம் சாட்டப்பட்டவர்களும் சந்தேகப்படுபவர்களும் அனைத்துலக நீதிமன்றத் தரத்தின்படி விசாரிக்கப்பட வேண்டும்; பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் அளிக்கப்பட வேண்டும் என்று இந்திய அரசைக் கோரியுள்ளன.

காஷ்மீர் மாநில அரசும் மைய அரசும் இது குறித்து இன்றுவரை மௌனம் சாதிக்கின்றன. மனித உரிமைக்கும் உயிர் வாழும் உரிமைக்கும் இந்திய அரசு பயங்கரவாதிகளால் மிகப் பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள போதிலும், நாட்டுக்கே அவமானத்தை ஏற்படுத்தியுள்ள இந்த இனப்படுகொலையைக் குறித்து அரசியல் கட்சிகளும் ஊடகங்களும் இன்னமும் வாய்திறக்காமல் இருப்பதுதான் அதைவிடப் பெருத்த அவமானம்.

காஷ்மீரில் மட்டுமல்ல, இதற்கு முன் பஞ்சாபில் பயங்கரவாதத்தை முறியடிப்பது என்ற பெயரில் 1984 முதல் 1995 வரை இதேபோல மோதல் படுகொலைகளும் சாமானியர்கள் காணாமல் போவதும் நடந்துள்ளன. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் இத்தகைய அரசு பயங்கரவாதப் படுகொலைகளும் அட்டூழியங்களும் இன்றும் கேள்விமுறையின்றித் தொடர்கின்றன.

ஈழத்தில் இனப்படுகொலை பயங்கரவாதத்தை நடத்திய ராஜபக்சே அரசு போர்க்குற்றவாளி என்றால், காஷ்மீரில் துடிக்கத் துடிக்க இனப்படுகொலைகளை இரகசியமாக நடத்தியுள்ள இந்திய அரசும் அதன் இராணுவமும் புனிதர்களா? இத்தகைய அட்டூழியங்களை நடத்திவரும் போலீசு  இராணுவத்துக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு, காஷ்மீரில் காலனிய அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விடுவதுதான் தேசிய ஒருமைப்பாடா?  ஜனநாயக உணர்வு கொண்ட ஒவ்வொருவரையும் உலுக்கும் கேள்விகளே இவை.

 

http://www.vinavu.com/2011/11/04/kashmir-mass-graves/

 

இதில் உண்மை இல்லை , I agreed unmarked graves is there in Kashmir. முன்பே சொல்லிருந்தேன் எல்லை தாண்டிய தீவிரவாதத்தால் காஷ்மீர் பாதிக்கப்பட்டுள்ளது என்று , சுட்டுகொல்லபட்ட பாகிஸ்தான்  தீவிரவாதிகளை எப்படி இந்தியாவில் அடையாளம் காண்பது ? எந்த நாடும் தீவிரவாதிகளை உரிமை கொண்டாதது அதில் பாகிஸ்தானும் விதிவிலக்கு  இல்லை . இந்தியா கொன்றது என்றே வைத்து கொள்ளலாம் (வாதத்திற்கு) , அப்படியென்றால் அந்த உடல்களை ஏன் எரிபதற்கு பதில் புதைத்தனர்  (nobody wants to leave evidences after they executed a murder , so its purely baseless accusation). 

 

 

Edited by Maravan123

தங்கள் இணைப்பிற்கு நன்றி.

 

என்று காஷ்மீர் முன்னணி ஆட்சிக்கு வர்றது உங்களுக்கு எப்ப நல்லது செய்யுறது ??? ஏன் புரிதல் இல்லாமல் பேசுகிறார்கள் என தெரியவில்லை. இந்திய அரசை யாரும் காஷ்மீர் விசையத்தில் நிர்பந்திக்க முடியாது அதே போல சென்செனிய விசையத்தில் ருச்சியவையும்  , திபெத் விசையத்தில் சீனாவையும் , பலுசிஸ்தான் விசையத்தில் பாகிஸ்தானையும்  நிர்பந்திக்க முடியாது என்பது உலகம் அறிந்த விசையம் . பிஜேபி மட்டும் ஈழ விடுதலையின் நம்பிக்கை ;வாஜ்பாய் ஆட்சி காலத்தில் புலிகலைகொல்ல GOSL ஆயுதம் கேட்டது எங்கள் ரத்த உறவுகளை கொள்ள ஆயுதம் கொடுக்கமுடியாது என கூறினார் . யாசின் ஆதரிப்பதின்மூலம் இந்திய மக்களின் வெறுப்பை சம்பாதிக்க போகிறிர்கள் என்பது திண்ணம்.

 

அவர்கள் கூறுவதை போல அவ்வளவு கட்டுப்பாடு இல்லை அனால் கட்டுப்பாடு இருக்கிறதை ஒப்புகொள்கிறேன்   , AFPSA இருக்கிறது  அவ்வாறன சட்டம் அப்பகுதில் தேவை. கடந்த 3-4 நாள்களில் மட்டும் வெவ்வேறு சம்பவங்களில்  5-6 இந்திய பாதுகாப்பு படையினர் கொல்லபட்டனர். இவ்வளவு கெடுபுடி இருந்தும் அவ்வாறு நிகழ்கிறது என்றால் பார்த்துகொள்ளுங்கள். அந்த பகுதி எல்லை தாண்டிய தீவிரவாதத்தால் கடுமையாக பாதிகபட்டுள்ளது அதனால் வேறுவழி கிடையாது.

இணைப்பு :http://newindianexpress.com/nation/Injured-soldier-dies-in-Kashmir-toll-is-five/2013/05/24/article1604023.ece

 

நீங்கள் காஷ்மீர் மக்களுக்கு எதிராகவும் இந்தியாவுக்கு ஆதரவாகவும் கருத்து எழுதுகிறீர்கள். :icon_idea:

 

5, 6 இந்தியப்படையினர் கொல்லப்பட்டதற்கு நீங்கள் காஷ்மீர் மக்களை தீவிரவாதி என்கிறீர்கள். ஆனால் 1990 இன் பின்னர் ஒரு லட்சத்துக்கும் அதிகமான காஷ்மீர் மக்கள் அங்கு கொல்லப்பட்டிருக்கிறார்கள். பலர் காணாமல் போயுள்ளார்கள், பலர் விதவைகளாக்கப்பட்டிருக்கிறார்கள், பலர் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டிருக்கிறார்கள். அப்படியானால் இந்திய இராணுவத்தை இந்தியப்பயங்கரவாதிகள் அல்லது இந்திய தீவிரவாதிகள் என்று சொல்லலாம். :)

 

ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி ஆட்சிக்கு வந்து அவர்கள் எமக்கு தமிழீழம் வாங்கி தருவார்கள் என்று நினைத்து தான் அவர்களை ஆதரிக்கிறோம் என நினைக்கிறீர்களா?  :lol:

 

ஏற்கனவே தயா அண்ணா எழுதியதன் படி காஷ்மீர் மக்களுக்கு எம்மால் உதவி கிடைக்குமோ அல்லது அவர்களால் எமக்கு உதவி கிடைக்குமோ தெரியாது. ஆனால் எம்மை போல் பாதிக்கப்பட்டுள்ள அவர்களுக்கு நாம் ஆதரவளிப்பது ஒரு ஆறுதலாகவும் அவர்கள் எமக்கு ஆதரவளிப்பது எமக்கு ஒரு ஆறுதலாகவும் இருக்கும்.

அதே போல் ஒடுக்கப்பட்ட இனங்களிடையே நாம் கைகோர்க்கும் போது நிச்சயம் எமது அவலமும் அவர்களை சென்றடையும். அவர்கள் அவலமும் எமக்கு தெரிய வரும். ஒன்றிணைந்து போராடினால் நிச்சயம் விடிவு பிறக்கும். :)

 

நீங்கள் பி.ஜே.பி சார்ந்தவரா? :) இந்த காணொலியை பாருங்கள். :D

 

http://www.youtube.com/watch?v=5B9YvPg7J84&feature=youtu.be

Edited by துளசி

கொடுக்கபட்டுள்ளது.

 

இந்தியர்கள் அனைவருக்கும் சம உரிமை கொடுக்கப்பட்டுள்ளது, அனைவரும் பாதுகாக்கப்படுகிறார்கள் என்று சொல்லும் நீங்கள் 600 க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டமைக்கு இந்தியா என்ன நடவடிக்கை எடுத்தது, அவர்கள் மேலும் மேலும் கைது செய்யப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்படுவதை தடுக்க என்ன செய்தது? அவர்கள் பாதுகாப்புக்கு என்ன உத்தரவாதம் என்றும் சொன்னால் நல்லது.

 

இதில் உண்மை இல்லை , I agreed unmarked graves is there in Kashmir. முன்பே சொல்லிருந்தேன் எல்லை தாண்டிய தீவிரவாதத்தால் காஷ்மீர் பாதிக்கப்பட்டுள்ளது என்று , சுட்டுகொல்லபட்ட பாகிஸ்தான்  தீவிரவாதிகளை எப்படி இந்தியாவில் அடையாளம் காண்பது ? எந்த நாடும் தீவிரவாதிகளை உரிமை கொண்டாதது அதில் பாகிஸ்தானும் விதிவிலக்கு  இல்லை . இந்தியா கொன்றது என்றே வைத்து கொள்ளலாம் (வாதத்திற்கு) , அப்படியென்றால் அந்த உடல்களை ஏன் எரிபதற்கு பதில் புதைத்தனர்  (nobody wants to leave evidences after they executed a murder , so its purely baseless accusation). 

 

இதில் உண்மை இல்லை என்று எப்படி நீங்கள் சொல்வீர்கள்? அதில் உண்மை தான் எழுதப்பட்டிருக்கிறது.

 

அவர்கள் விடுதலைக்காக போராடுகிறார்களே தவிர தீவிரவாதிகள் இல்லை என்று நான் சொல்கிறேன். கொல்லப்பட்டது காஷ்மீர் மக்கள். அதை ஏன் பாகிஸ்தான் தீவிரவாதிகள் என்கிறீர்கள்?

 

கொன்ற பின்னர் ஏன் எரிக்காமல் புதைத்தார்கள் என்று இந்திய இராணுவத்திடம் போய் கேளுங்கோ. :D சிலவேளை அடுத்தமுறை கொன்று விட்டு புதைப்பதற்கு பதிலா எரிப்பார்கள். :D

 

ஈழத்திலும் தமிழ் மக்கள் வகைதொகையின்றி கொல்லப்பட்டு புதைக்கப்பட்டார்கள். புதைகுழிகள் பல கண்டுபிடிக்கப்பட்டன. அதை விட இறுதிக்கட்ட போரிலும் தமிழ் மக்களை கொன்று சிங்கள இராணுவம் புதைத்துக்கொண்டு வந்தது. பாதுகாப்புக்காக பங்கரினுள் ஒதுங்கிய மக்களை உயிருடனேயே மண்ணை போட்டு மூடி புதைத்தும் உள்ளது.

 

Edited by துளசி

சத்யம் டிவியில் சீமான் அண்ணா சூடான பேட்டி :)

 

http://www.youtube.com/watch?v=vog96KJQPCI

 

(facebook)

 

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

 

 

1980 பிற்பகுதியில் பிரச்னைகுரிய இடமாக காஷ்மீர் மாறியது , கஷ்மிர்களும் மற்ற இந்தியர்கள் போல அணைத்து உரிமையும் உள்ளது. இப்பொழுது காஷ்மீர் அமைதியான பகுதியாக மாறிவருகிறது , குண்டுவெடிப்பு வெகுவாக குறைத்துவிட்டது சென்ற ஆண்டில் ஒரே ஒரு குண்டுவெடிப்பு நடந்தது.

 

 

   

 

 

 

பாரிய கொலை அச்சுறுத்தல் இன்றி பாதுகாப்பாக இருப்பதற்கு.

 
சிறை ஒரு சிறந்த இடம்.
அப்படி இறந்தாலும் ................ சிறை அதிகாரிகள் வையை திறந்தால்தான் வெளியில் தெரியும்.
 
ஒரு மகிழ்ச்சியான செய்தி உங்களுக்கு.............
ஈழத்திலும் இப்போது குண்டுகள் வெடிப்பதில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.