Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எல்லையை தாண்டி மீன்பிடிக்க செல்லக்கூடாது ; கடற்படை அதிகாரி எச்சரிக்கை

Featured Replies

ஆண்டுதோறும் ஏப்ரல் 15-ந் தேதி முதல் மே 31-ந் தேதி வரை மீன்களின் இனப்பெருக்க காலமாக கருதப்படுகிறது. இக்காலக்கட்டங்களில் கடலில் மீன்பிடிக்க தமிழகம் முழுவதும் தடைவிதிக்கப்படும். இந்நிலையில் 45 நாட்கள் தடை காலம் முடிந்து இன்று அதிகாலை முதல் ராமேசுவரம் மீனவர்கள் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் 800 விசைப்படகுகளில் மீன்பிடிக்க சென்றனர்.

முன்னதாக நேற்று மீனவர் சங்க கூட்டம் ராமேசுவரத்தில் நடைபெற்றது. இதில் இந்திய கடற்படை அதிகாரிகள், மீனவர் சங்க பிரதிநிதிகள், மீனவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், இந்திய கடற்படை ஏரியா கமாண்டர் அமிதாபா நந்தி பேசியதாவது:-

மீனவர்கள் சட்டத்திற்கு உட்பட்டு மீன்பிடிக்க செல்ல வேண்டும். சர்வதேச கடல் எல்லையை தாண்டி மீன்பிடிக்க செல்லக்கூடாது. மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் கட்டாயம் மீன்வளத் துறை அலுவலகத்தில் இருந்து அனுமதி அட்டை (டோக்கன்) பெற்றுத்தான் கடலுக்கு செல்லவேண்டும். மீறினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் கடலில் சந்தேகத்திற்குரிய படகுகள் சுற்றித் திரிந்தால் உடனே கடற்படை வீரர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மீனவர்கள் கடல் எல்லை பாதுகாப்பிற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் ராமேசுவரம் மீன்துறை உதவி இயக்குநர் பிலோமீன் தியாகராஜன் கூறுகையில், மீனவர்கள் தடைசெய்த இரட்டை மடி வலைகளை பயன்படுத்தக்கூடாது, எல்லை தாண்டி மீன்பிடிக்க கூடாது என்றார்.

இந்நிலையில் சர்வதேச எல்லையை தாண்டி இலங்கை கடற்பகுதிக்குள் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களுக்கு பல லட்சம் அபராதம் விதிக்கப்படும் என இலங்கை அரசு எச்சரித்துள்ளது. 45 நாட்களுக்கு பிறகு கடலுக்கு இன்று அதிகாலை சென்ற மீனவர்கள் கச்சத்தீவு பகுதியில் இலங்கை அரசு போர்க்கப்பல்களை நிறுத்தி உள்ளதால் தங்களால் மீன்பிடிக்க முடியுமா? என்ற சந்தேகத்துடனேயே கடலுக்கு சென்றனர்.

இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், கடந்த 45 நாட்களாக கடலுக்கு செல்லாததால் வருமானம் இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டோம். தற்போது இலங்கை போர்க்கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் போதிய மீன்கள் பிடிக்க முடியுமா? என தெரியவில்லை.

குட்டி நாடான இலங்கை இந்திய பேரரசின் கடல் எல்லையில் போர்க்கப்பல்களை நிறுத்தி மீனவர்களை மிரட்டி வருகிறது. இதற்கு உரிய பதிலடியை மத்திய அரசு அளிக்க வேண்டும் என்றனர்.

http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=15107:i-go-fishing-limits-naval-officer-warning&catid=36:tamilnadu&Itemid=102

 

  • கருத்துக்கள உறவுகள்

ஏழைகள் எல்லைதாண்டி மீன் பிடிக்ககூடாது அதேபோல் அரசியல்வாதிகள் எல்லை தாண்டி அரசியல் செய்யக்கூடாது :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குட்டி நாடான இலங்கை இந்திய பேரரசின் கடல் எல்லையில் போர்க்கப்பல்களை நிறுத்தி மீனவர்களை மிரட்டி வருகிறது. இதற்கு உரிய பதிலடியை மத்திய அரசு அளிக்க வேண்டும் என்றனர்.

 

 

இலங்கையின் ராஜிக வலிமை பல சந்தர்பங்களில் இந்தியாவை விட சிறந்தது என்பது பலருக்கு தெரிவதில்லை. இந்திய இந்தியாவாக இருப்பதற்கு காரணம், பல சொல்லப்பட்டாலும், அவர்களிடம் உள்ள/ இல்லாத, எல்லை பாதுகாப்பு திட்டங்கள்/எல்லைகள் ஒரு பக்கத்தால் சீனாகாரன் வந்து போகிறான், இன்னுமொரு பக்கத்தால், பங்கதேசகாரன் வருகிறான், இங்காலே இலங்கை..எல்லாப் பக்கமும் வளைந்து போவதால்தான், அதிகவிலான மத்திய தர வகுப்பு வாழகூடியதாக இருக்கிறது,.

இன்னுள்ள, புலம் பெயர்ந்த இந்திய மத்திய தர வகுப்பு சொல்லும்; தங்களுடைய வாழ்க்கை முறை இங்கே USA இருப்பதை விட பல மடங்கு நல்லது என்று. அது உண்மையே, அங்கு மரக்கறி மலிவாக இருக்கும், என்னெனில் ஒரு IT உத்தியோகத்திருக்கும், கிராமத்தில் களை பிடுன்குகிரவனுக்குமான வாழ்க்கை நிலை மலைக்கும் மடுவுக்கும் இடையானது. அந்த அடிமை/ சரியான அடிப்படை வசதி இல்லாத கூட்டம் இருக்கும் வரை  இந்திய மத்திய தர வாழ்க்கை நன்றாகவே இருக்கும்.

-ஒருவர் சொன்னார் தான் இங்கே செய்கிற வேலைக்கு இந்தியாவில காருக்கு டிரைவர்உம் , நானியும்  வைத்திருகால்ம் என்று, ஆனால் இங்கே நானி (பிள்ளை பார்கிறவர்கள் ) ஒரு தனியான தொழில். அவர்களுக்கும் அடிப்படையான வசதி கொடுக்க வேண்டும். அதற்கும் ஒரு IT தொழிலுக்கும் அதிகளவிலான சம்பளம் வித்தியாசம் இல்லை.

இலங்கையில் இந்த நிலை சிறிது நல்லம், சிறிய நாடாக இருப்பதால்.

மற்றும் படி, இந்தியர்  எல்லை தாண்டி மீன் பிடிக்க போகிறதை நிறுத்தட போவதும் இல்லை-மலிவான மீனுக்காக, அப்படி வருபவர்களை சிங்களவன் சூடாமல்/பிடிக்காமல் விடப்போவதும் இல்லை. இந்தியாவிற்கு தனது குடிமக்கள் எல்லோரும் சமம் என்கிற எண்ணம் வரும் வட்டும் இது தொடரவே செய்யும். ஆனால் அது நடக்க போவதில்லை . உலகத்தில் உள்ள 2/3மிக வறுமையான மக்கள் கூட்டம் இந்தியாவிலதான் இருக்கு. ஆனால் அவர்கள் தான் இந்திய மத்திய தர வர்க்கத்தின் எரிபொருள், அவர்கள் எரிவதையோ காரியாவதையோ யாரும் கணக்கில் எடுக்க போவதில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.