Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்கள ஆதிக்கக் கனவினுள் தீக்குச்சி கிழித்து எறிந்தவன்.- ச.ச.முத்து

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Jun 5, 2013

சிங்கள ஆதிக்கக் கனவினுள் தீக்குச்சி கிழித்து எறிந்தவன்.- ச.ச.முத்து

(தியாகி சிவகுமாரனனின் முப்பத்திஒன்பதாவது ஆண்டு நினைவாக.).

அந்தநாளுக்கு முந்தையபொழுதில் அதைப்போன்றஒரு காட்சியை தமிழீழம் பார்த்துஅறிந்து இருக்கவில்லை.மிகவும் உணர்ச்சி நிறைந்த ஒரு இறுதி நிகழ்வு அதற்குமுன்னர் நடந்ததில்லை.தமிழீழவிடுதலைக்கான போராட்டம் மெதுமெதுவாக ஆயுதப்போராட்டத்தைநோக்கி நகர்ந்துகொண்டிருந்த அந்த ஆரம்பபொழுதில் சிவகுமாரன் என்ற ஆயுதபோராட்ட வீரனுக்கு தமிழ்மக்கள் கொடுத்த திரளான இறுதிவழிஅனுப்பு நிகழ்வானது அப்போது தமிழீழவிடுதலைக்கான ஆயுதபோராட் டத்தில் நின்று கொண்டிருந்தவர்களுக்கும் அதற்குப்பின்னர் போராட்டகளத்துக்கு வந்தவர்களுக்கும் மிகப்பெரிய உந்துதலைக் கொடுத்தது.

பொன்.சிவகுமாரன் தான் வாழும்போதும் தமிழீழ விடுதலையை முன்னகர்த்து ஓயாது பாடுபட்டது போலவே தன் மரணத்தின்போதும் விடுதலைப் போராட்டத்துக்கு ஒருவிதமான மக்கள் அங்கீகாரத்தை பெற்றுத்தந்துவிட்டு போய்ச்சேர்ந்தவன்.

பொன்.சிவகுமாரனின் வாழ்வானது 1950ல் தொடங்கி 1974 யூன் மாதம் 5ம்திகதி தற்கொடையுடன் முடிவடைகின்றது என்பதற்கும் அப்பால் சிவகுமார் எறிந்ததும் வைத்ததுமான சில வெடிகுண்டுகளின் வெடிப்புகளுக்கும் அப்பால் சிவகுமாரால் குறிவைக்கப்பட்டும் தப்பிய தமிழினவிரோதிகளின் தலைவிதிக்கும் அப்பால் சிவகுமாரனின் வாழ்வு மிகவும் வீரியம்மிக்கதும் தியாகம் நிறைந்ததும் ஆகும்.

பொன்.சிவகுமாரன் விடுதலைக்கான போராட்டத்தை நடாத்தினான் என்று சொல்வதைவிட விடுதலைக்கான போராட்டத்துக்கான அமைப்பு ஒன்றை கட்டும்முயற்சியிலும் விடுதலைக்கான உண்மையான போராளிகளைதேடி அறியும் இடைவிடாத தேடலிலும் இறுதிவரை முயன்றவன். ஆயுதமுனையில் அடக்கிஒடுக்கப்பட்ட ஒருஇனத்தின் விடுதலைக்கான போராட்ட பாதை ஆயுதந்தரித்தாகவே இருக்கவேண்டும் என்று வரலாற்று பட்டறிவுடன் முற்றுமுழுதாக உணர்ந்துகொண்டவன் சிவகுமாரன்.

மென்வழிப்போராட்டங்களும் பாராளுமன்றத்துக்கூடான போராட்டங்களும் ஜனநாயகவழியிலான போராட்டங்களும் சிங்கள ஆயுதப்படைகளால் கொடூரமான முறையில் அடக்கிஒடுக்கப்பட்ட போது இயல்பாகவே எழும் ஆயுதஎதிர்வினை அப்போதைய தமிழ் இளைஞர்களுக்குள் வேர்விடத்தொடங்கிய பொழுதின் அடையாள இளைஞன்தான் சிவகுமாரன்.

தமிழீழத்தின் சில இடங்களில் அப்போதே ஆயுதப்போராட்டத்துக்கான தயாரிப்பு களும்,ஆயுதப்போராட்ட அமைப்புகளின் தோற்றத்துக்கான முன்னெழுச்சிகளும் நிகழ்ந்துகொண்டே இருந்தன.சிவகுமாரன் அவர்களை தேடிதேடிச்சென்று சந்தித்தான்.ஆயுதங்களின் பாவனைபற்றிய அறிவு பரிமாறப்பட்டன. வெடிகுண்டு செய்யப்படும் முறைகள் அறிந்துகொள்ளப்பட்டன.

சிவகுமாரனின் முதலாவது குண்டுவைக்கும் முயற்சி 1970ம் ஆண்டுயூலை மாதம் அரங்கேறியது.சிவகுமாரன் படித்த உரும்பராய் சைவப்பிரகாசவித்தியாசாலைக்கு வருகைதந்த சிங்களபிரதி அமைச்சர் சோமவீரசந்திரசிறீயின் வாகனத்தின் கீழ்வைக்கப்பட்ட இந்த முயற்சி வெற்றியீட்டாத போதிலும் ஆயுதஎதிர்வினை பரணாமம் கொள்வதை சிங்களத்துக்கு புரியவைத்த

நிகழ்வாக இதுஇருந்தது. அதன்பின்னர் பலபல முயற்சிகள்.வெற்றியளிக்காத முயற்சிகள்.

ஆனாலும் சிவகுமாரன் ஒருபோதும் தன்னுடைய இலக்கினில் சமரசம் செய்து கொண்டதோ பின்வாங்கியதோ இருந்திருக்கவில்லை. தமிழீழம் சம்பந்தமான எல்லா தளங்களிலும் தன்னுடைய ஒப்புயர்வான ஈடுபாட்டை வெளிக்காட்டியவன் அவன். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற உலகத்தமிழராய்ச்சி மாநாட்டின்போது நடைபெற்ற ஊர்திகளின் பவனியின்போது அன்னபூரணிகப்பல் ஊர்திக்கு பின்னால் வந்து

கொண்டிருந்த பண்டாரவன்னியன் ஊர்தியின் முகப்பில் எழுதப்படடிருந்தஉயிர் தமிழுக்கு உடல் மண்ணுக்கு' என்ற வாசகத்தை அகற்றும்படி சிங்கள காவல்துறை வற்புறுத்தியபோது சிவகுமாரன் அதனைஎதிர்த்து கொதிக்கும் வீதியிலேயே மறியல் செய்தவன்.அவனுடைய உறுதியான எதிர்ப்புடன் மற்ற

இளைஞர்களும் இணைந்தபோது சிங்களம் பணிந்து பின்வாங்கியது.

இப்படியாக எமது சமூகத்தின் அவலங்கள் அனைத்துடனும் மல்லுக்கட்டியவன் சிவகுமாரன்.ஆயிரமாயிரம் ஆண்டுகளாக தொடரும் சாதியஏற்றத்தாழ்வுக் கொடுமைக்குஎதிராக அவன் நிறையவே முயன்றவன்.

இன்று அவனின் நினைவுநாள் ஒரு ஊமைப்பொழுதில் வந்து இருக்கின்றது. அவன்போராடி காலத்தைப்போன்ற ஒரு காலகட்டத்தில் அவனின் நினைவை ஏந்துகிறோம்.எமது முழு இனமும் ஒரு மௌனப்பொழுதுக்குள் முகம்புதைத்துநிற்கும் அவநம்பிக்கைப்பொழுது இது.

சிவகுமாரனின் நினைவு இந்த பொழுதை ஊடறுத்து நம்பிக்கையை விதைக்கட்டும்.பொன்.சிவகுமாரன் எந்த நம்பிக்கையுடன் விடுதலைக்காக அலைந்தானோ, அந்த நம்பிக்கையை எமக்குள் நாமே ஊட்டுவோம்.புன்னகைமாறாத அந்த போராளியின் முகமும் அவனின் தியாகமும் வரலாற்றின் மிகப்பெறுமதியான தடங்களாக என்றும் இருக்கும்.

நம்பிக்கையை விதைக்கும்

நீளும் பொழுதுகள் கரைந்து

நிமிடங்களாகி விரிந்து நாட்களாகி

நகர்ந்து வருடங்களான பொழுதும்

நினைவுகளுக்குள் தேங்கி நிற்கிறது

அவன் சிதைஎரிந்த பொழுது.

சிதைஎரிந்து சாம்பலாகி

துகள்களாகி காற்றில் கரைந்திட்டபொழுதும்

இன்னும் சிதை மீது கிடந்த இவனின்

மாறாப்புன்னகை முகமே மனமெங்கும்

என்றும் பூத்துக்கிடக்கிறது.

பொன்.சிவகுமாரன்இ

புரட்சிவிதைகளை எங்கள் புழுதித்தெருவெங்கும்

விதைக்க எழுந்த முதல்வர்களில் ஒருவன்.

அடர் இருளொன்றில் விடுதலையின் ஒளிதேடி

நீண்ட பெரும்பாதையில்

முதல்தடம் பதித்த கால்கள் இவனது.

பயமூட்டும் கொடும் மௌனனப் பொழுதொன்றில்

விடுதலையின் பிரகடனத்தை உரத்து சொன்னவன்.

எல்லோரினதும் செவிப்பறையில்

ஓங்கி அடித்துப்போனது இவனின் மரணம்.

தூங்கிக் கிடந்த எல்லோர் விழிகளுக்குள்ளும்

விழிப்பெழுதிப் போனது சிவகுமாரன் மரணம்.

விடுதலைக்காக மரணிப்பது என்பது

உன்னதத்திலும் உன்னதம் என்றே

ஈழத்து வாழ்வு வட்டத்துள்

அழியாது எழுதிவைத்துபோனவன் இவன்.

ஏதுமே இல்லாத பொழுதொன்றில்

போராடபோனவன் சிவகுமாரன்.-இப்போது

எதுவே இல்லாமல எல்லாம்; இழந்த

பொழுதொன்றில் அவன் நினைவு மீண்டும்.

எல்லாம் இழந்த பொழுது இது

என்ற போதிலும்

அவன் சொல்லாமல்

சொல்லிச் சென்ற ஈகமும்

ஈழவிடுதலையும் எல்லோர்

மனமெங்கும் ஏற்றிவைப்போம்.

விடுதலை என்ற வார்த்தையின்

வீரியத்துக்குள் சிவகுமாரனும்இ

சிவகுமாரன் என்ற பெயருக்குள்

விடுதலையின் பெரு வெளிச்சமும்

எப்போதும் ஒளிவிடும்.-அன்று

எரிந்த பொழுதில் ஒளிதந்த

அவனின் சிதைபோலவே....!

ச.ச.முத்து

நன்றி - பதிவு

http://www.pathivu.com/news/25199/57//d,article_full.aspx

  • கருத்துக்கள உறவுகள்

வீரவணக்கம்!

  • கருத்துக்கள உறவுகள்

வீரவணக்கம்!

 

மாவீரனுக்கு வீரவணக்கம் .

 

  • கருத்துக்கள உறவுகள்

வீரவணக்கம்!!

  • கருத்துக்கள உறவுகள்

இவரை எனக்குத் தெரியாது. ஆனால்  80 களின் இடைப்பகுதியில் ஒவ்வொரு நாளும் இவரது சிலையினைத் தாண்டிச் செல்லும்போதும் இவரைப் பார்க்கத் தவறுவதில்லை. உறும்பிராய்ச் சந்தியிலுள்ள சந்தைப் பகுதியில் இவரது உருவச் சிலை இருந்தது. சிங்கள நாய்கள் அந்தச் சிலைக்குக் குண்டுவைத்து தகர்த்திருக்க வேண்டும், சில காலமாய் அவரது உருவச்சிலை இடிந்து கீழே தொங்கிக் கொண்டிருந்தது. எவருமே அதைச் சரிசெய்ய நினைக்கவில்லையோ என்னவோ. அன்று எனக்கு அவர் பற்றித் தெரிந்திருக்கவில்லை. 89 இல் நானும் ஊரை விட்டு கிளம்பிவிட்டேன். அதன்பிறகுதால் அவர்பற்றித் தெரிந்துகொண்டேன். அவர் பிறந்த மண்ணில் வாழ்ந்ததிலும் பிரபாகரன் எனும் ஒப்பற்ற மனிதன் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்ததற்காகவும் பெருமை கொள்கிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.