Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

13ஆம் திருத்தச் சட்டம் குறித்து புதுடெல்லியில் இன்று பேச்சு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
13ஆம் திருத்தச் சட்டம் குறித்து புதுடெல்லியில் இன்று பேச்சு

 

logo.jpgமட்டக்களப்பு மாவட்டத்தில் இந்திய உதவி வீடுகளுக்கான பயனாளிகள் தெரிவு குறித்து இந்தியா மீது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் கவலையும் அதிருப்தியும் வெளியிட்டுள்ளனர்.  இன்று (16) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராரளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று இந்திய அரசின் அழைப்பின் பேரில் புதுடெல்லி செல்லவிருக்கும் இவ்வேளையிலேயே இந்தியா மீது தமது அதிருப்தியையும் கவலையையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர்.  மட்டக்களப்பு நகரில் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் அலுவலகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பொன்று மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

 

இந்தச் சந்திப்பில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சீனித்தம்பி யோகேஸ்வரன், பொன்.செல்வராசா மற்றும் பா. அரியநேந்திரன் ஆகியோர் இந்திய உதவி வீட்டுத் திட்டம், அண்மையில் இந்து ஆலயங்களில் இடம்பெற்ற கொள்ளைகள் உட்பட மாவட்டத்தில் தற்போதைய நிலைகள் குறித்து பத்திரிகையாளர்களுக்கு விளக்கமளித்தனர்.

 

´போரினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த மக்களுக்காக இந்தியாவினால் அறிவிக்கப்பட்ட இந்த வீட்டுத் திட்டத்தில் இடம்பெயராமல் தமது கிராமத்திலே வாழ்ந்த சிங்கள குடும்பங்களும் பயனாளிகளாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அதுமட்டுமல்ல எல்லைகளில் அத்து மீறிய சிங்களக் குடியேற்றத்திற்கும் இந்த வீட்டுத் திட்டம் உதவுவதாக உள்ளது´´ என பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியநேந்திரன் இங்கு கூறினார்.

 

ஏற்கனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் உள்ளடக்கிய குழுவினாலேயே பயனாளிகள் தெரிவு இடம்பெறும் என்ற உறுதி மொழியை இந்திய வழங்கியிருந்ததாக கூறும் அவர் தன்னைப் பொறுத்தவரை இந்தியாவின் செயற்பாடுகள் இரட்டை வேடமாகவே உள்ளது என்றும் குறிப்பிட்டார்.

 

பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரனும், இந்தியா மீது கடும் விமர்சனங்களை முன் வைக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்டார்.

 

´´போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இந்தியா மாத்திரம் வீடுகளை வழங்கவில்லை. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் போன்ற நாடுகளும் வீடுகளை வழங்கி வருகின்றன. எந்த வித அரசியல் தலையீடுகளுமின்றி பயனாளிகளுக்கு அவை வழங்கப்படுகின்றன. ஆனால் இந்திய வீட்டுத்திட்ட நடவடிக்கைகள் அதற்கு மாறாகவே உள்ளன.

 

சீனாவுடன் இலங்கை கொண்டுள்ள உறவு காரணமாக இலங்கையை திருப்திபடுத்தும் வகையிலேயே இந்தியா நடந்து கொள்கின்றது. இந்தியாவின் உறுதிப்பாடற்ற நிலை காரணமாகவே ராஜீவ் - ஜே. ஆர் ஒப்பந்தம் என கூறப்படும் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை தற்போது பாதுகாக்க முடியாமல் திண்டாடி கொண்டிருக்கின்றது´´ என யோகேஸ்வரன் கூறினார்.

இது தான் சார்ந்த கட்சியின் கருத்து அல்ல என்றும் மக்களால் தெரிவான பாராளுமன்ற உறுப்பினர் என்ற ரீதியில் வெளியிடப்பட்ட தனது கருத்து என்றும் அவர் கூறினார்.

 

அதே இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் கீழ் தற்போது நடைமுறையிலுள்ள 13வது அரசியல் யாப்பு திருத்தத்தில் இலங்கை அரசு கொண்டுவரவுள்ள மாற்றங்கள் மற்றும் அதன் மூலம் மாகாண சபைக்குரிய அதிகாரங்களை நீக்குதல் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து இந்தியவுடன் ஆராய்வதற்காக இன்று (16) புதுடெல்லி பயணமாகவுள்ள இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பு குழுவில் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சுமந்திரன், பொன். செல்வராசா, சுரேஷ் பிரேமச்சந்திரன், மாவை சேனாதிராஜா ஆகியோர் இடம்பெறுகின்றார்கள்.

புது டெல்லியிலிருந்து கிடைத்த அழைப்பின் பேரில் செல்லும் இக்குழுவினர் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை அங்கு தங்கியிருந்து பல்வேறு தரப்பு பேச்சுக்களில் கலந்து கொள்வார்கள் என தெரியவருகின்றது.

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி

 

13ஆம் திருத்தச் சட்டம் குறித்து புதுடெல்லியில் இன்று பேச்சு

 

´போரினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த மக்களுக்காக இந்தியாவினால் அறிவிக்கப்பட்ட இந்த வீட்டுத் திட்டத்தில் இடம்பெயராமல் தமது கிராமத்திலே வாழ்ந்த சிங்கள குடும்பங்களும் பயனாளிகளாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அதுமட்டுமல்ல எல்லைகளில் அத்து மீறிய சிங்களக் குடியேற்றத்திற்கும் இந்த வீட்டுத் திட்டம் உதவுவதாக உள்ளது´´ என பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியநேந்திரன் இங்கு கூறினார்.

 

ஏற்கனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் உள்ளடக்கிய குழுவினாலேயே பயனாளிகள் தெரிவு இடம்பெறும் என்ற உறுதி மொழியை இந்திய வழங்கியிருந்ததாக கூறும் அவர் தன்னைப் பொறுத்தவரை இந்தியாவின் செயற்பாடுகள் இரட்டை வேடமாகவே உள்ளது என்றும் குறிப்பிட்டார்.

 

´´போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இந்தியா மாத்திரம் வீடுகளை வழங்கவில்லை. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் போன்ற நாடுகளும் வீடுகளை வழங்கி வருகின்றன. எந்த வித அரசியல் தலையீடுகளுமின்றி பயனாளிகளுக்கு அவை வழங்கப்படுகின்றன. ஆனால் இந்திய வீட்டுத்திட்ட நடவடிக்கைகள் அதற்கு மாறாகவே உள்ளன.

 

 

இந்திய அரசின் கபட நோக்கம் தெளிவாக விளங்குகிறது.

சம்பந்தன் இந்தக் கபட வேலைகளுக்கு எவ்வளவுகாலம் முண்டு கொடுக்கப் போகிறார்?

 

  • கருத்துக்கள உறவுகள்

கிந்தியா வீடு கட்டிக் கொடுக்காமல் விட்டாலே...சிங்களக் குடியேற்றம் குறைந்து விடும்....

இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் இரத்தம் சிந்தியது 13வது திருத்தச் சட்டத்துக்காக அல்ல! இந்தியா உணர வேண்டும் மனித உரிமை ஆர்வலரும் எழுத்தாளருமான சண் மாஸ்டர் தெரிவிப்பு.

 

தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வைப் பெற்றுத் தரமுடியாத 13 ஆவது திருத்தச் சட்டத்தினுள் தமிழ் மக்களை முடக்கிவிட இந்திய அரசு முயன்று வருகின்றது. 13 ஆவது திருத்தச் சட்டம் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு ஒரு போதும் இறுதித் தீர்வாக அமையாது. இதனால் தமிழ் மக்களுக்கு எந்தப் பயனும் கிடைக்கப்போவதில்லை என மனித உரிமை ஆர்வலரும் எழுத்தாளருமான சண் மாஸ்டர் தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

1987 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய- இலங்கை ஒப்பந்தத்தின் முலம் கொண்டு வரப்பட்ட 13 ஆவது திருத்தச் சட்டம் மாகாணசபைகளுக்கான அதிகாரங்களையே கொண்டமைந்துள்ளது. அதிலும் மாகாண சபைகள் தீர்மானங்களை மாத்திரமே எடுக்க முடியும்.

 

இறுதி முடிவை மாகாண ஆளுநரே எடுப்பதாக அச்சட்டம் அமையப் பெற்றுள்ளது. அன்று ராஜீவுடன் ஜே.ஆர். ஜெயவத்தன செய்து கொண்ட இவ் ஒப்பந்தம் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கு ஒரு தீர்வாக ப+தாகாரமாகக் காட்டப்பட்டுள்ளது. இதனையே தற்போது இந்தியாவும் தமிழ் மக்கள் மீது திணித்துவிட முயற்சி செய்து வருகின்றது.

 

13 ஆவது திருத்தச் சட்டத்தை தமிழ்த் தலைவர்கள் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கு ஒரு தீர்வாக ஏற்றுக்கொண்டால் அதுவே அவர்கள் தமிழ் சமுகத்திற்குச் செய்யும் பாரிய வரலாற்றுத் துரோகமாக அமையும். 13 ஆவது திருத்தச் சட்டத்தில் குறிப்பிட்டுள்ள மாகாண சபையின் அதிகாரங்களுடன் தமிழ் மக்கள் முடக்கிவிடப்படக் கூடாது.

 

இது அவர்களின் நீண்டகால அரசியல் அபிலாசைக்கு ஈடாக அமைந்து விடாது. இதனை தமிழரின் அரசியல் பிரச்சினைக்குத் தீர்வாக தமிழ்த் தலைவர்கள் ஏற்றுக் கொண்டால் கடந்த காலங்களில் தமிழர்கள் நடத்திய போராட்டங்கள் அனைத்துமே வீணற்றவையாகப் போய்விடும்.

 

இந்திய அரசாங்கம் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் அடிப்படையிலேயே தமிழ் மக்களுக்கு தீர்வினை வழங்குவதில் உறுதியாக இருந்து வருகின்றது. அதனையே வழங்குமாறு இலங்கை அரசாங்கத்திற்கும் அதை ஏற்குமாறு தமிழ் மக்களின் பிரதிநிதிகளுக்கும் சொல்லி வருகின்றது.

 

ஆனால் இலங்கை அரசாங்கமோ இன்னும் கீழ் இறங்கி 13 ஆவது திருத்தச் சட்டத்திலுள்ள அதிகாரங்களைக் குறைத்துக்கொண்டு அதன் பின்னரே தீர்வை வழங்க முயற்சி செய்து வருகின்றது. ஒட்டு மொத்தத்தில் இந்திய அரசாங்கம் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரமே தமிழ் மக்களுக்கு தீர்வினை வழங்குமாறு இலங்கைக்கு கூறியுள்ளது.

 

இதனையே தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமெனவும் இந்தியா விரும்புகின்றது. இதனை வலியுறுத்தவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை புதுடில்லிக்கு அழைத்துள்ளதோ என தமிழர்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது.

 

விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் இந்த 13 ஆவது திருத்தச் சட்டத்தை ஏற்றுக்கொள்ளுமாறு இந்தியா அப்போது அவர்களை நிர்ப்பந்தித்து வந்தது. அதனை விடுதலைப் புலிகள் ஏற்கவில்லை.

 

பின்னர் யுத்தம் முடிவுக்கு வந்ததும் தமிழ் அரசியல் கட்சிகளை அழைத்து இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன் 13 ஐ தீர்வாக ஏற்றுக்கொள்ளுமாறு வலியுறுத்தினார். இவரைப்போலவே 2011 இல் இந்திய காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பரும் 13 ஐ தமிழர் பிரச்சினைக்குத் தீர்வாக காட்டி விடுவதில் தீவிரம் காட்டி வந்தார்.

 

இவ்வாறாக இந்திய அரசாங்கம் 13 ஆவது திருத்தச் சட்டத்தை தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கு இறுதித் தீர்வாக்கிவிடுவதில் பல முனைகளில் முயற்சி செய்து வந்துள்ளது.

 

கடந்த இரு தசாப்த காலங்களுக்கு மேலாக தமிழ் மக்களால் பயனற்றது என நிராகரிக்கப்பட்ட 13 ஆவது திருத்தச் சட்டத்தை தமிழர் பிரச்சினைக்கு ஒரு இறுதியான நிரந்தரத் தீர்வாக ஏற்றுக்கொள்ள முடியாது.

 

மாகாணசபைகளின் அதிகாரங்களையே முழுமையாக தமிழ் மக்களின் கைகளுக்கு வழங்கிவிட முடியாத 13 ஆவது திருத்தச் சட்டம், எப்படி 60 வருட கால சாத்வீகமற்றும் ஆயுத போராட்டங்களை நடத்தி அரசியல் தீர்வுக்காக காத்திருக்கும் மக்களின் இனப்பிரச்சினைக்கு தீர்வாக அமைந்துவிடப்போகிறது.

 

இந்திய அரசாங்கம் இலங்கை அரசாங்கத்துடன் கூட்டுச் சேர்ந்து இந்த 13 ஆவது திருத்தச் சட்டத்தை தமிழர்களின் தலையில் கட்டிவிடப் பார்க்கின்றது. ஏககாலத்தில் 13வது திருத்தச்சட்டத்துக்கு எதிராக பேரினவாத சக்திகளால் முன்னெடுக்கப்படும் பிரசாரங்களும், புதுடெல்கியின் நகர்வுகளும் தமிழர்களுக்கு தனிநாட்டையே கொடுத்துவிட்டதாக தோரணையை காட்ட முனைவது வேடிக்கையாகவுள்ளது.

 

இதற்கு நாம் ஒரு போதும் இடமளிக்கக் கூடாது. தமிழ்த் தலைவர்களும் இதற்கு உடன்பட்டு போகக் கூடாது. தமிழர்களின் உரிமைகளை வென்றெடுக்கும் தற்போதைய சாத்வீகப் போராட்டத்தில் மீண்டும் ஒரு தவறை தமிழ்த் தலைவர்கள் செய்து விடக்கூடாது.

 

கூடவே இந்தியாவும் தமிழர் போராட்டத்தின் தோற்றப்பாட்டையும், அதை முடிவுக்கு கொண்டு வருவதற்கான தனது வகிபாகத்தையும் விளங்கிக்கொண்டு, தனது பூகோள பிராந்திய நலன்களுக்கு அப்பாலும், தனது மாநிலங்களுக்கிடையேயான அதிகார கையளிப்புடன் தமிழர் இனப்பிரச்சினைக்கான அதிகார எல்லையை வரையறுத்துக்கொள்ளும் கொள்கை வகுப்பிலிருந்தும் விலகி, 13வது திருத்தச்சட்டம் எனும் மாயையிலிருந்து விடுபட்டு, தமிழர் உரிமை போராட்டத்தின் நியாயப்பாட்டை உணர்ந்து, அரசியல் தீர்வே தமது இறுதி மூச்சென ஏங்கி நிற்கும் தமிழ் மக்களுக்கு இதய சுத்தியுடன் தீர்வை முன்வைக்க, இலங்கை அரசை அவசரமும் அவசியமுமாக வலிறுத்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

 

http://kalaisudar.com/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a3%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d


13ஆம் திருத்தச் சட்டத்தில் மாற்றங்கள் செய்வதனை விரும்பவில்லை என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. தற்போதைய அரசியல் சாசனத்தில் காணப்படும் 13ஆம் திருத்தச் சட்டத்தை அதேவாறு முன்னெடுக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளது.

 

உத்தேச திருத்தங்களை இன்னமும் பார்வையிடவில்லை என இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதி பேர்னாட் சவேஜ் தெரிவித்துள்ளார். 13ஆம் திருத்தச் சட்டத்திற்கு பதிலீடாக 19ஆம் திருத்தச்சட்டம் அமுல்படுத்தப்பட உள்ளதாக அறிந்து கொண்டதாகவும், அதன் உள்ளடக்கங்கள் பற்றி போதிய தெளிவு கிடையாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வடமாகாணசபைத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

http://kalaisudar.com/13%e0%ae%86%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2


13ஆம் திருத்தச் சட்டத்தில் மாற்றங்கள் செய்வதனை விரும்பவில்லை என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. தற்போதைய அரசியல் சாசனத்தில் காணப்படும் 13ஆம் திருத்தச் சட்டத்தை அதேவாறு முன்னெடுக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளது.

 

உத்தேச திருத்தங்களை இன்னமும் பார்வையிடவில்லை என இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதி பேர்னாட் சவேஜ் தெரிவித்துள்ளார். 13ஆம் திருத்தச் சட்டத்திற்கு பதிலீடாக 19ஆம் திருத்தச்சட்டம் அமுல்படுத்தப்பட உள்ளதாக அறிந்து கொண்டதாகவும், அதன் உள்ளடக்கங்கள் பற்றி போதிய தெளிவு கிடையாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வடமாகாணசபைத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

http://kalaisudar.com/13%e0%ae%86%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.