Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இரண்டாயிரம் சாரம் கட்டிய பொடியங்களை ஒரு சிகரெட்டை பற்றி முடிப்பதுக்குள் அழித்து விடுவேன்"--முன்னாள் இந்திய அமைதிப்படைத் தளபதி !

Featured Replies

942933_379962035439135_1762174845_n.jpg
"இரண்டாயிரம் சாரம் கட்டிய பொடியங்களை ஒரு சிகரெட்டை பற்றி முடிப்பதுக்குள் அழித்து விடுவேன்"--முன்னாள் இந்திய அமைதிப்படைத் தளபதி !

இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தியும்-அன்றைய இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவும் ஈழத் தமிழர்களின் சம்மதமின்றி தன்னிச்சையாக 1987 ஆடியில் செய்து கொண்டனர்.குறைந்தது இந்தியாவில் மாநிலங்களுக்கு உள்ள அதிகாரங்களைப் போல் இருந்தாலாவது ஓரளவு தமிழர்களை அன்று திருப்திப் படுத்தியிருக்க முடியும்.ஆனால் ஒரு மாநகர சபைக்கு உள்ள அதிகாரங்கள்கூட இல்லாத அந்த மாகாண சபைக்காகவா நாம் 12 வருடங்களாக போராடினோம்? என்று இந்தியாவிடம் நேரடியாகவே கேட்டார் தலைவர் பிரபாகரன்.ஆனால் அதையெல்லாம் பற்றி கவலைப்படும் நிலையில் அப்போது ராஜிவ்காந்தி இருக்கவில்லை. இந்தியாவின் பூகோள நலன்களையும்,இலங்கையின் வேண்டுகோளையும்,நட்பையும், மட்டுமே கருத்தில் கொண்டு அவர் செயல் பட்டார்.அங்கே வாழ்ந்த தமிழர்கள்

என்பவர்கள் வெறும் பிள்ளைப் பூச்சிகளாகவே அப்போது அவரது கண்களுக்கு தெரிந்திருக்கவேண்டும். எந்த நேரத்திலும்,எப்படியும், அவர்களை நசித்து அழித்துவிடலாம் என்று கனவு கண்டது காங்கிரஸ் அரசு.திலீபனின் உண்ணா நோன்புக்குப் பின்னர் திலீபன் தியாகச் சாவைத் தழுவிக் கொண்டதுக்கு ராஜிவின் அரசியல் சண்டித்தனமும்,

டிக்சித் போன்ற இந்திய உயர் அதிகாரிகளின் திமிரும்தான் அப்போது காரணமாக இருந்தது.தமிழர்கள் வெறும் கிள்ளுக் கீரைகள்தானே என்ற நினைப்பில் அப்போது இந்திய அமைதிப்படையின் தளபதியான திபேந்தர் சிங் பலாலியில் எமது முக்கிய உறுப்பினரிடம் இப்படிச் சொன்னாராம்."இரண்டாயிரம் சாரம் கட்டிய பொடியளாகிய உங்களை நான் நினைத்தால் ஒரு சிகரெட்டை பற்றி முடிப்பதுக்குள் அழித்துவிடுவேன் கவனம்"என்று.

வாய்க்கொழுப்பு அதன்பின் எப்படி சீலையால் வடிந்தது என்பதை உலகம்

இரு வருடங்களில் அறிந்துகொண்டது.எந்தப் புலிகளைச் சாரம் கட்டிய பொடியள் என்று அவர் ஏளனம் செய்தாரோ அந்தப் பொடியள் அடித்த அடியால் 60000 வீரர்களில் அனேகம்பேர் அட்டைகள்போல் வன்னியின்,நித்திகைக் குளம் பகுதியில் கொன்று அழிக்கப்பட்டார்கள்.தலைவர் பிரபாகரனை பிடிக்கவென்று காடுகளில் அங்குலம் அங்குலமாக தேடிவந்த படையினர்..அங்கங்களை

இழந்து மனநோய் பிடித்தவர்கள்போல் ஆயினர்.குருதியை காணாமல் கத்தியை வைக்கமாட்டார்கள் என்ற நேபாளப் படை அணியினர் அங்கொன்றும் இங்கொன்றுமாக புலிகளால் அழிக்கப்பட்டு, எடுத்த கத்திகளை வைக்காமலே வன்னிக் காடுகளில் இருந்த கறையான் புற்றுகளில் கிடந்த வரலாற்றை உலகம் கண்டு வியந்தது.பஞ்சாப் படை அணியினரோ புலிகள் அடித்த அடியில் பஞ்சாகிப் போயினர்.மராத்தியப் படையணியோ மண்ணோடு மண்ணாகி மக்கிப் போனார்கள்.அந்த சிகரெட்டை பிடித்து முடிப்பதற்கு இந்திய அமைதிப்படைத் தளபதிக்கு மூன்று வருடங்கள் ஆகியும் முடியவில்லை.இது கடந்த கால எமது வீரத் தலைவனின் வரலாறு.

 
நன்றி முகனூல் 

 

அன்று  இந்தியா தென் ஆசியப்பிராந்தியத்தில் பலமாய் இருந்தபோது கூறிய வார்த்தைகள் .அந்தநிலையில் எம் தேசியத்தலைவர் இந்தியாவிற்கு ஒரு தூசு ..........ஆனால் அவர் எம்மை விற்கவில்லை .............................இந்தியாவையும் விற்கவில்லை 

 
இன்று இந்தியா ஒரு தூசு ...............இன்றும் நாம் இந்தியாவை விற்க தயாராய் இல்லை ........எனனில் அன்று எம் தலைவர் பார்த்த பார்வையின் உண்மையை  .................இன்று தமிழ்நாட்டு மாணவர்கள் ஆரம்பித்துவிட்டனர்........................
ஈழத்தமிழினம் உயர்ந்த இலட்சியங்களுக்கு அப்பால் நடைமுறை யதார்த்தம் என்ன என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.
 
எம்முடைய ஆகக்கூடிய மொத்த பலம் எவ்வளவு ? அந்தப் பலத்தினால் நாம் எவ்வளவு தூரம் இலக்கை நோக்கி முன்னேறுவோம் ?
 
எமக்கு எதிர்ப்பான பலம் எவ்வளவு ? அதன் மூலம் நாம் எவ்வளவு தூரம் இலக்கிலிருந்து பின் தள்ளப்படுவோம் ?
 
இத்தகைய ஆய்வுகளின்றி நாம் ஒரு முயற்சியில் இறங்கினால் நாம் ஆரம்பித்த இடத்திலிருந்து பின் தள்ளப்பட்டு எம்முடைய நிலை இன்னும் மோசமாகக் கூடிய சந்தர்ப்பமும் உண்டு.
 
இன்று வடகிழக்கில் தமிழரின் ஜனநாயக பிரதிநிதித்துவம் கூட இல்லாமற் போகும் அளவிற்கு குடியேற்றமும் திட்டமிட்ட வகையில் தமிழரின் குடியகழ்வும் வீச்சாக நடக்க இன்னும் சில வருடங்களில் வடகிழக்கு தமிழரின் பாரம்பரிய பிரதேசம் என்ற கருத்து அறவே ஒழிக்கப்பட இருக்கிறது.
 
தன்னுடைய சுயநல அரசியலுக்கு அப்பால் தமிழருக்கு உதவக்கூடிய சக்தி அன்று, இன்றும் இந்தியா தான். தமிழ்நாடு இணைந்து தான் இந்தியா. ஆகவே உலகத்தில் யாருக்கும் இல்லாத கடப்பாடு இந்தியாவிற்கு உண்டு.
 
போதிய உலக அரசியல் தெளிவுமின்றி, அந்நிய சக்திகளின் சூழ்ச்சிகளை புரிந்து கொள்ளாமல், இலட்சிய நோக்கம் என்ற ஒன்றிற்க்காக எம்மக்கள் இழந்தது கடவுளுக்குத்தான் வெளிச்சம்.
 
தொடர்ந்தும் இதே பாதையில் பயணித்து சீரழிந்தவர்களை சிதைத்து அழிக்காமல் அவர்களை வாழவிடுங்கள்.
  • கருத்துக்கள உறவுகள்

வீராவேசம் கொள்வதை விட்டு வடக்கு கிழக்கில் இன்னும் அகதிகளாக இருக்கும் தமிழ் மக்களுக்கு உதவுவோம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.