Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு தேர்தல் களத்தில் கே.பி., தயாமாஸ்டர், தமிழினி!

Featured Replies

Daya_KP_Thamilni.jpg

இவர்களை நேரடியாக தேர்தலில் போட்டியிட வைப்பதா? அல்லது பிரசாரப் பணிகள், தேர்தல் செயல்பாடுகளில் ஈடுபடுத்துவதா? என்பது குறித்து தற்போது ஆராயப்பட்டு வருகிறது.

தொடர்ந்து வாசிக்க... http://tamilworldtoday.com/archives/20153

  • கருத்துக்கள உறவுகள்

தமிழினி... ஏற்கெனவே, "இனி அமைதியான வாழ்க்கை, வாழப் போகின்றேன்" என்று அறிவித்துள்ள நிலையில்...
அவரை ஏன்... அரசியலுக்குள் இழுத்து, அசிங்கப் படுத்துறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இதில் ஓன்று விடுதலைப்புலி முன்னாள் உறுப்பினர்களை போட்டியிட வைத்து அவர்கள் தோல்வியை தழுவினால் புலிகளுக்கு வடக்கில் ஆதரவு இல்லை என்று அரசு பாரிய பிரச்சாரம் செய்யும் ஆக மொத்தம் தோற்றாலும் வென்றாலும் அரசுக்கு லாபம் தான் ....

  • கருத்துக்கள உறவுகள்

'வெற்றிலை'யில் போட்டியிட கே.பி, தயா மாஸ்டர், தமிழினி விண்ணப்பம்
[ புதன்கிழமை, 03 யூலை 2013, 01:48 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ]


வடக்கு மாகாணசபைத் தேர்தலில், விடுதலைப் புலிகளின் முன்னாள் பிரமுகர்களான, கே.பி.எனப்படும் செல்வராசா பத்மநாதன், தயா மாஸ்டர், தமிழினி ஆகியோர், அரசதரப்பு வேட்பாளர்களாக களமிறக்கப்படவுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இவர்கள் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடுவதற்கு ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிடம் விண்ணப்பித்துள்ளதாக, சிறிலங்கா அமைச்சர் மைத்திரிபால சிறிசேன உறுதிப்படுத்தியுள்ளார்.

எனினும், இவர்கள் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர் தெரிவுக்குழுவினால், நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டே தெரிவு செய்யப்படுவர் என்றும் அவர் கூறியுள்ளார்.

இவர்கள் மூவரும் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும், நீதிமன்றங்களில் இவர்கள் மீது எந்தக் குற்றங்களும் நிரூபிக்கப்படவில்லை என்பதால், இவர்களின் விண்ணப்பங்களை நிராகரிக்க முடியாது என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

இதற்கிடையே, கடந்தவாரம் விடுதலை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழினி, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமையைப் பெறவுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
வடக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காகவே அவர் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமையை பெறுவுள்ளதாவும், வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பிய பின்னர், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, தமிழினியின் உறுப்புரிமைக்கு அனுமதி வழங்குவார் என்றும் அந்த ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

தன்சானியா, சிசெல்ஸ் தீவுக்கான பயணத்தை முடித்துக் கொண் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச நேற்றைய தினமே நாடு திரும்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.puthinappalakai.com/view.php?20130703108595

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தாவின் நிலைமை கவலைக்கிடம்

எந்தப் பெரிய கொம்பனாக இருந்தாலும் அவர் போட்டியிடும் சின்னம் இங்கு முக்கியம்.

தமிழர்களின் சின்னம் இன்றைய நிலையில் வீடு மட்டுமே.

வீட்டுச் சின்னத்திற்கு வாக்களித்து வெற்றிலையைச் சப்பித் துப்புவார்கள் தமிழர்கள்  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.