Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முஸ்லீம் சிறீலங்கா இராணுவச் சிப்பாய் ஏமாற்றியதால் தமிழ் யுவதி தற்கொலை முயற்சி.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள இனவெறி ராணுவம் கொடியது  என அறிந்தும் அதனை நம்பி இறுதியில் தன்னைத்தானே அழிக்க முற்பட்டுள்ளார் யாழ் யுவதி ஒருவர்.

.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த யுவதி ஒருவர் நஞ்சு அருந்திய நிலையில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.  இராணுவத்தில் பணியாற்றிய சிப்பாய் ஒருவர் தன்னைக் காதலித்து திருமணம் செய்வதாக ஏமாற்றிய நிலையில் தான் மனமுடைந்து நஞ்சு அருந்தியுள்ளார்.
.
இது குறித்து குறித்த யுவதி தெரிவிக்கையில் ;   நான் எனது உறவினர்களுடன் கொழும்பு சென்று யாழ்ப்பாணத்துக்கு திரும்பிக் கொண்டிருந்த சமயம் (2010 ஆண்டு) பஸ்ஸில் இந்த இராணுவ சிப்பாயை சந்தித்தேன். அவர் எனது தொலைபேசியை வாங்கி இலக்கத்தைப் பெற்றுக்கொண்டார்.
.
பின்னர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இருவரும் பழகி வந்தோம். அவர் என்னை திருமணம் செய்வதாகக் கூறி நீண்ட நாள்களாக காதலித்து வந்தார். 2011 ஆம் ஆண்டு நான்காம் மாதம் என்னைப் பதிவுத் திருமணம் செய்வதாக தங்காலைக்கு அழைத்துச் சென்றார்.
.
அங்கு என்னை விடுதி ஒன்றில் தங்க வைத்திருந்த அவர் பணி நிமித்தம் தான் இராணுவ முகாமுக்கு திரும்ப வேண்டும் என்று கூறி இடைநடுவில் கிளிநொச்சிக்கு வந்துவிட்டார்.    தொலைபேசியில் தொடர்பைப் பேணி வந்த அவர் 2012.10.30 ஆம் திகதி என்னுடன் இறுதியாகப் பேசினார்.
.
அதன் பின்னர் என்னுடன் தொடர்பு கொள்வதை நிறுத்திக் கொண்டுவிட்டார். முஹமட் உவைஸ், முஹமட் நசூர்தீன் என்ற இவர் முஸ்லிம் வீதி, நலகம, தங்காலையைச் சேர்ந்தவர்.    இவர் கிளிநொச்சி பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை இராணுவ முகாமில்  கடமையாற்றி வந்தார். இந்த நிலையில் நான்  குறித்த சிப்பாய்க்கு எதிராக கிளிநொச்சி 57 ஆவது படைப் பிரிவில் முறைப்பாடு செய்தேன். அவர்கள் விசாரித்தனர். பின்னர் முறுகண்டியில் உள்ள சி.சி.எம்.பி. தலைமையகத்துக்கும் நான் சென்று முறையிட்டேன்.
.
அங்கு எனக்கு எந்த பதிலும் கிட்டவில்லை. இந்த நிலையில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டை பதிவு செய்தேன். கடந்த 5 ஆம் திகதி வெள்ளிக்கிழமை கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தின் பெண்கள், சிறுவர் முறைப்பாட்டு பிரிவுக்கு நான் அழைக்கப்பட்டேன்.    அன்றையதினம் நசூர்தீனும் அங்கு வந்திருந்தார்.
.
பொலிஸாரின் முன்னிலையில் எங்கள் இருவருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டது. அவரை நான் தாக்கினேன். அவர் என்னை தாக்கினார். பொலிஸார் தடுத்த நிலையில் நான் நஞ்சருந்தினேன். என்னை பொலிஸாரே வைத்தியசாலையில் சேர்த்தனர் என குறித்த யுவதி தெரிவித்தார்.
.
குறித்த சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் தொடர்பு கொண்டபோது, குறித்த யுவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தி வருவதாகவும் நேற்று இரவு கடமையில் இருந்த ஒருவர் தெரிவித்தார்.
 

Edited by nedukkalapoovan

நலம் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன்.

Quote:"அங்கு என்னை விடுதி ஒன்றில் தங்க வைத்திருந்த அவர் பணி நிமித்தம்"

 

காமத்தில் பிறந்த காதல்

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு இளைஞனும், யுவதியும் காதலிக்கிறார்கள்!

 

இதற்குள் 'தமிழ்' ஏன் வருகின்றது? :o

 

ஒரு வியாபார முயற்சியில் 'றிஸ்க்' இருக்கும் தானே! :icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புங்கை.. இந்த வியாதி நெடுங்காலமா இருக்கிறது. தமிழ் பெண்கள் மீதான பாலியல் சேட்டை என்பது வெறும் இளைஞன் யுவதி காதல் விவகாரம் மட்டுமல்ல.. அது ஒரு இன அழிப்பின் அம்சமாகவும் தொடர்கிறது.

 

போர் காலத்தில்.. கிருசாந்தி குமாரசாமி போன்ற மாணவிகளை இதே நோக்கங்களோடு அணுகி.. நோக்கம் முடித்து படுகொலை செய்தார்கள். இன்று.. கைவிடப்படுகிறார்கள்.. விபச்சாரத்துக்குள் இழுக்கப்படுகிறார்கள்.. அல்லது அரசியல் ஆதாயம் தேடும் திருமண விளம்பரப் பொருளாக்குகின்றனர். அதன் பின்னர் அவர்களுக்கு என்ன நடக்குது என்பது பற்றி யாருக்கும் தெரியாது.

 

அப்போதும் இப்போதும்.. விளைவு எல்லாம் ஒன்று தான். அது தான் இன அழிப்பு. தமிழின அழிப்பில் சிங்கள இராணுவச் சிப்பாய்களுக்கு.. தமிழ் ஒட்டுக்குழுக்களுக்கு.. நிகராக முஸ்லீம்  இராணுவ சிப்பாய்களின் மற்றும் முஸ்லீம் மதவாதக் காடைக்குழுக்களின் பங்களிப்பும் இருந்து வருகிறது. இவை.. சாதாரண காதல் விவகாரமாக காட்டி அமுக்கப்பட கூடியவையாகத் தெரியவில்லை. இவை ஒரு நிகழ்ச்சி நிரலின் உப அம்சங்கள்..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களம் சகல வழிமுறைகளையும் பாவித்துத் தமிழர்களை உடல்ரீதியாகவும்

உளரீதியாகவும்  அழித்து வருகின்றது.

சிங்கள ராணுவம் முற்று முழுதாக தமிழர் பிரதேசங்களில் இருந்து அகற்றப்படுவரை

 தமிழ்ப் பெண்களுக்கு  இப்படியான அவல நிலை ஏற்படுவதைத் தடுக்க முடியாது

அவன் முஸ்லீம் என்றபடியால் தமிழன் என்றும் சொல்லலாம்....

அந்த பெண்ணை மதம் மாற சொல்லி இருக்கலாம்..பெண்ணும் மறுத்திருக்கலாம்....என்றபடியால்...அவன் வேறுபெண்ணை மதம் மாத்த சென்றிருக்கலாம்..

 

எல்லாம் ஒரு அனுமானம் தான் :)

அவா இன்னும் உயிரோட இருக்கிறாவோ? இருந்தால் நஞ்சை செலைன்னோட ஏத்த சொல்லுங்கோ.

அவன் முஸ்லீம் என்றபடியால் தமிழன் என்றும் சொல்லலாம்....

அந்த பெண்ணை மதம் மாற சொல்லி இருக்கலாம்..பெண்ணும் மறுத்திருக்கலாம்....என்றபடியால்...அவன் வேறுபெண்ணை மதம் மாத்த சென்றிருக்கலாம்..

 

எல்லாம் ஒரு அனுமானம் தான் :)

எதை செய்தாலும் வலிந்த பிரிவினை வாதாட்டதை ஆரம்பித்து வைக்காவிட்டால் சரி. 

  • கருத்துக்கள உறவுகள்

அவா இன்னும் உயிரோட இருக்கிறாவோ? இருந்தால் நஞ்சை செலைன்னோட ஏத்த சொல்லுங்கோ.

நஞ்சை

நஞ்சு

ஒன்றும் செய்யாது..............

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.