Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளின் இணக்கத்தை நிராகரித்து யுத்தத்தைத் தொடங்கியது சிங்க

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

` யுத்தப் பிரகடனம் எப்போதும் வரலாம்

கிழக்கில் கனன்ற பேராயுதங்கள் நேற்று முன்தினம் ஒரு நாள் தற்காலிகமாக அமைதி அடைந்திருந்தன. அந்த ஒரு நாள் அமானுஷ்ய அமைதி எவ்வளவு காலத்துக்கு நீடிக்கும் என்ற சந்தேகம் நீடித்திருக்க, நேற்று மாலையே அவை மீண் டும் கனலத் தொடங்கிவிட்டன.

முழு அளவிலான உக்கிரச் சமர் எங்கு, எப்போது, எவ் வாறு, எந்த வடிவத்தில் ஆரம்பிக்கும் என்று தெரியாத அந் தர நிலையே நீடிக்கின்றது.

மாவிலாறில் மூடப்பட்ட அணைக்கட்டைத் திறந்து, கால் வாயில் நீரோட்டத்துக்கு அனுமதிக்க நிபந்தனைகளுடன் புலிகள் நேற்றுக் காலை இணக்கம் தெரிவித்திருந்தனர்.

அப்பிரதேசத்தில், புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி மக் களின் ஆதங்கங்ளைத் தீர்த்து வைப்பதற்கான நடவடிக்கை கள் அடுத்த மூன்று வாரங்களுக்குள் நிறைவேற்றப்படும் என்று நோர்வே அனுசரணைத் தரப்பு பொறுப்பு நின்று உறுதி யளித்ததன் பேரிலும்

நோர்வேயே நடுவில் நின்று இந்த விடயத்தைக் கையாண்டு வற்புறுத்தியதன் காரணமாக நோர்வே அனு சரணைத் தரப்புக்கு மதிப்பளித்தும்

அணைக்கட்டு நீரைத் திறந்து விடப் புலிகள் பெரு மனது பண்ணி, இணங்கியிருந்தனர்.

ஆனால்

"வெண்ணெய் திரண்டு வரும் சமயத்தில் தாழியை உடைத்த கதையாக' மாவிலாறு தண்ணீர்ப் பிரச்சினைக்குத் தீர்வு வரும் சமயத்தில் மீண்டும் இணக்க முடிவுக்கான வாய்ப்பைப் போட்டுடைத்திருக்கின்றது இலங்கை அரசுத் தலைமை.

இலங்கை இனப்பிரச்சினைக்கு அனுசரணைப் பணி வழங்கும் நோர்வேயின் விசேட தூதுவர் ஹன்ஸன் போவர் தாமே நேரடியாகக் கிளிநொச்சியில் நின்று விடயங்களைக் கையாள

யுத்தநிறுத்த கண்காணிப்புக் குழுவின் தலைவரும் மற்றும் திருகோணமலைப் பொறுப்பாளரும் நேரடியாக மாவிலாறு அணைக் கட்டு வரை சென்று அதைத் திறந்து விட முயற்சிக்க

அச்சமயத்தில் அகோர ஷெல், பீரங்கித் தாக்குதல்களை நடத்தி விடயத்தை ஒரேயடியாகக் குழப்பியடித்திருக்கின் றது அரசுத் தரப்பு.

இந்த விவகாரத்தில் அரசுத் தலைமை நடந்துகொண்டிருக்கும் விதத்தைப் பார்க்கும்போது, சிங்களத் தலைமைக் கும், தமிழர் தரப்புக்கும் இடையில் நல்லிணக்கமும், சமர சமும், புரிந்துணர்வும் ஏற்படு வதற்கான வாய்ப்புக்கு புறச் சூழலுக்கு நிரந்தரமாகவே ஆப்பு வைத்தாகிவிட்டது என்றே தோன்றுகின்றது.

தன்னுடைய சிவில் அதிகாரி ஒருவரை சம்பூரில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்கு அனுப்பி, அங்குள்ள மக்கள் பிரதிநிதிகளுடன் உரையாடி, அவர்களின் அன்றாட, அத்தியாவசிய, மனிதாபிமானப் பிரச்சினைகளைக் கண்டறிந்து, அவற்றைத் தீர்த்து வைக்க உரிய நடவடிக்கை இன்ன காலக்கெடுவுக்குள் நிறைவேற்றப்படும் என உறுதியளித்து, அதன் மூலம் மாவிலாற்று நீரைத் திறந்து விட வைத்திருக்கலாம். 24 மணி நேரத்தில் முடிக்கக்கூடிய இலகுவான பணி அது. சம்பந்தப்பட்ட அரசுத் தலைவர்களுக்கு உரிய முறையில் தெளிவாக விளங்கப்படுத்தப்பட்ட விடயமும் கூட.

ஆனால், அந்த ஆலோசனைகளைப் புறக்கணித்து, இராணுவ நடவடிக்கை மூலம் புலிகளை அச்சுறுத்தி, கால்வாய்க் கதவுகளைப் பலவந்தமாகத் திறக்க வைக்கின்றோம் என்ற மமதையோடு நடவடிக்கைகளை எடுத்து, பெரும் உயிர், உடைமைச் சேதங்கள், எண்ணுக் கணக்கற்ற நிதி விரயம் போன்றவற்றுக்கு வழிகோலிய இராணுவவாதப் போக்கினர் இன்னமும் தமது தீவிரப் போக்கு அதிகாரத் தொனியில் இருந்து மீளவேயில்லை என்பதையே இப்போதைய நிலைமை எடுத்துக்காட்டுகின்றது.

சிவில் அதிகாரிகள் மூலம் தீர்த்து வைக்கவேண்டிய பிரச்சினையை பிணக்கை இராணுவ ரீதியாகக் கையாண்டதால் தம்மையும், தமது படைகளையும், தம்நாட்டையும் பெரும் தீங்கான நிலைக்குத் தள்ளிய இத்தலைவர்கள், இப்போது இவ்விடயத்தை மேலும் சிக்கலாக்கியிருக்கின்றனர்.

மாவிலாறு சிக்கலைத் தீர்க்க கையாளும் அதே இராணுவ வெறிப் போக்கில் அதிகார மமதைச் செருக்கில் இனப்பிரச்சினைத் தீர்வுக்கான அமைதி நடவடிக்கைகளையும் அரசுத் தலைவர்கள் கையாளுவதுதான் சமாதான எத்தனங்கள் இத்தகைய மோசமான நிலைமையை அடைந்தமைக்குப் பிரதான காரணம் என்பது கண்கூடு.

தொடர்ந்தும், மட்டுப்படுத்தப்பட்ட இராணு நடவடிக்கைகள் என்ற சாட்டில் தமிழர் தாயகத்தின் மீது விமானக் குண்டுவீச்சுகள், ஷெல் பீரங்கித் தாக்குதல்கள், படை நகர்வுகள் போன்ற வலிந்து தாக்கும் நடவடிக்கைகளை அரசுத் தலைமை மேற்கொள்ள முயற்சித்தால் அது யுத்த நிறுத்தத்தை முற்றாக முறித்துக்கொண்டு, முழுப் போர்ப் பிரகடனம் செய்யயும் நடவடிக்கையாகவே கருதப்படும் என்ற எச்சரிக்கையையும் நோர்வே அனுசரணைத் தரப்பு மூலம் அரசுக்குப் புலிகள் தெரியப்படுத்தியிருக்கின்றன

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களத்தில் கருத்துக் கணிப்பை நடத்துவதும் சரி...கிணற்றுத் தவளைகளிடம் கருத்துக் கேட்பதும் சரி..! இவற்றிற்கெல்லாம்...எவரும் பயப்பிடுவினமோ..!

புலிகளின் இணக்கத்தை சிங்கள அரசு நிராகரித்து போருக்கு தயாராகிவிட்டது. அப்போ..மட்டுப்படுத்தப்பட்ட புலிகளின் மனிதாபிமான இராணுவத் தாக்குதல்...என்பது அரச படையெடுப்பை நிறுத்தத் தவறிவிட்டது என்பதை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டி இருக்கிறது..! :idea:

கிணற்றுத் தவளை என்றால் நீர் ஏன் இங்கே படம் காட்டுகின்றீர்! உமது அறிவுக்கு உற்பட்ட, ஆங்கில, தோனி இணையங்களுக்குச் சென்று குப்பை கொட்டலாமே!

ஒரு தெளிவாக கருத்துமில்லாமல், மூலைக்குள் பதுங்கியிருந்தபடி, வீராப்புக் காட்டும் ஆட்களுக்கு கிணற்றுத் தவளையாம். கருத்திலே கூடத் தெளிவில்லாமல், ஒரே கருத்திலேயே தளம்பியடிக்கும் இந்த நபர், எத்தனை தடவை ஒரே பந்தியிலேயே, எதிரெதிர் கருத்து எழுதினவர் என்று பல தடவை சுட்டிக்காட்டியாகி விட்டது!

எந்த விசரனும் தன்னை அறிவாளி என்று சொல்லிக் கொண்டு தரிய முழு உரிமை உண்டு. ஆனால் அதைச் சமூதாயம் தான் தீர்மானிக்கவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

தொப்பி வீசி இருக்கு அளவானவை அவையவைக்கு ஏற்ற வகையில போட்டுக்கிறது. மிச்சவை அரசியல் பேசுங்கோ..! அநாவசியமா குருவிகளை வம்புக்கு இழுத்தா இப்படித்தான் ஆகும்..! :idea:

உந்த வசனம் கேட்டுப் புளிச்சுப் போச்சு! யாழ்களத்தில் உள்ளவர்கள் கிணற்றுத் தவளை என்று போட்டு, தொப்பி அளவானவர்கள் என்றால் என்ன அர்த்தம்? மண்டை கழண்டு போச்சு உமக்கு என்று சொன்னதில் தப்பே இல்லை!

நீர் யாழ்களத்தில் இல்லாத நபரா?

உந்த வசனம் கேட்டுப் புளிச்சுப் போச்சு! யாழ்களத்தில் உள்ளவர்கள் கிணற்றுத் தவளை என்று போட்டு, தொப்பி அளவானவர்கள் என்றால் என்ன அர்த்தம்? மண்டை கழண்டு போச்சு உமக்கு என்று சொன்னதில் தப்பே இல்லை!

நீர் யாழ்களத்தில் இல்லாத நபரா?

:lol: அவர் செக்குமாடு :lol:

ம்.. ஒரு கிழமைக்குள்ளை இரண்டாம்தரம் யுத்தநிறுத்தம் ரத்தாகியிருக்கு..  

உங்கடைதான் செப்ரெம்பர் முதல் தேதியிலை ரத்தாகுதே.. பிறகு என்ன பிரச்சனை?

:?:

இங்கை அடுத்து....!

மூதூரில அடி விளமுன்னமே மனிசீன்ர சீலை தலைப்புக்குள்ள இருந்துட்டு இப்ப வந்து 1ம் திகதி போர் நிறுத்தம் ரத்தாகுதாம்....

அதான் நேர்று நோர்வே ஐஸ்லாந்தும் நோர்வேயும் பணியை தொடரும் எண்று அறிவித்தது இதுக்கு தெரிஞ்சால் பெரியவிசயம்....! :idea:

பங்கைபார்.. நாரதர் எழுதினதை மேற்கோளா சொன்னதுக்கு என்னோடை பாயிறார்..

அப்ப நாரதர் விட்டது பீலாவோ?

ஏன் தல ஜனாதிபதி தேர்தலில் பகிஸ்கரித்தபோது சொன்னதுகூட உதுதானே.. அடிக்கடி அடி தான் தீர்வு எண்டு சொல்லுறதும் பிறகு குத்துக்கரணமடிக்கிறதும் சரியே..

இல்லை ஒரு விவாதத்துக்குத்தான் கருத்து வைச்சன்..

நானும் உங்களைப்போலை சண்டை தீர்வுக்கு எதிர்.. பேச்சுவார்த்தை தீர்வுக்குத்தாக் சப்போட்..

:P

இங்கை அடுத்து....!

மூதூரில அடி விளமுன்னமே மனிசீன்ர சீலை தலைப்புக்குள்ள இருந்துட்டு இப்ப வந்து 1ம் திகதி போர் நிறுத்தம் ரத்தாகுதாம்....

அதான் நேர்று நோர்வே ஐஸ்லாந்தும் நோர்வேயும் பணியை தொடரும் எண்று அறிவித்தது இதுக்கு தெரிஞ்சால் பெரியவிசயம்....! :idea:

பங்கைபார்.. நாரதர் எழுதினதை மேற்கோளா சொன்னதுக்கு என்னோடை பாயிறார்..

அப்ப நாரதர் விட்டது பீலாவோ?

ஏன் தல ஜனாதிபதி தேர்தலில் பகிஸ்கரித்தபோது சொன்னதுகூட உதுதானே.. அடிக்கடி அடி தான் தீர்வு எண்டு சொல்லுறதும் பிறகு குத்துக்கரணமடிக்கிறதும் சரியே..

இல்லை ஒரு விவாதத்துக்குத்தான் கருத்து வைச்சன்..

நானும் உங்களைப்போலை

புலிகள் எப்போதும் எதையும் சரியாக சொல்பவர்கள் செய்பவர்கள் அடிக்கடி மாறுவது கிடையாது....! ஜனாதிபதி தேர்தலை பகீஸ்கரிச்சா அதுக்கு காரணம் சிங்களவனில இல்லாத நம்பிக்கை... அது சரியானது எண்டு வந்த உடனேயே காட்டீட்டார் உம்மட ஆள்... !

மற்றது உங்கள மாதிரி பச்சோந்தி தனம் கிடையாது... எப்போதும் புலிகள் சொல்வது பேச்சுவார்த்தைகள் மூலம் எங்களின் உரிமைகளை பெற முடியாது என்பதுதான்....

இறுதி தீர்வு தமிழீழம்தான் என்பதில் இருந்து அவர்கள் மாறவும் இல்லை... அதனால்த்தான் "புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்" என்பது அப்பிடியே இருக்கிறது...!

அப்பிடி புலிகள் மாற்றி இருந்தால் அது "புலிகளின் தாகம் தமிழீழ சுயாட்ச்சி" எண்று உங்கட சிலர் வச்சிருக்கிறது போல வந்திருக்கும்....

அப்ப ஏன் புலிகள் சண்டையை தொடக்கவில்லை என்கிறீரா...?? பொறும் இப்பதான் கிராமிய படையணிகள் எல்லாம் பயிற்ச்சி முடித்து வந்துள்ளது....! அதோட பக்கத்து நாடு தந்த ஆயுதங்களை கொண்டுவந்து சேர்த்து முடியவில்லை( நிறைய ஆயுதம் இல்லையா) இதை நீர் உண்மை எண்டு நினைச்சால்(நம்பினால்) நான் பொறுப்பு இல்லை.... :wink:

உங்கட ஆக்களை மேலதிகமாக தோலுரிக்க வேண்டி இருக்கெல்லே.... மேலதிகமாக உரிக்க வேண்டிய தயாரிப்புக்கள் எல்லாம் செய்யவேணும்... உளவியல் யுத்தம் எப்பவோ ஆரம்பிச்சாச்சு எண்டதையும் கவனத்தில் கொள்க....!

பங்கைபார்.. நாரதர் எழுதினதை மேற்கோளா சொன்னதுக்கு என்னோடை பாயிறார்..  

அப்ப நாரதர் விட்டது பீலாவோ?  

ஏன் தல ஜனாதிபதி தேர்தலில் பகிஸ்கரித்தபோது சொன்னதுகூட உதுதானே.. அடிக்கடி அடி தான் தீர்வு எண்டு சொல்லுறதும் பிறகு குத்துக்கரணமடிக்கிறதும் சரியே..  

இல்லை ஒரு விவாதத்துக்குத்தான் கருத்து வைச்சன்..  

நானும் உங்களைப்போலை சண்டை தீர்வுக்கு எதிர்.. பேச்சுவார்த்தை தீர்வுக்குத்தாக் சப்போட்..

இங்கை பாரு **** இருந்து எப்ப வந்தது வெளியே :P :roll: :idea:

******* நீக்கம் யாழ்பாடி

பங்கைபார்.. நாரதர் எழுதினதை மேற்கோளா சொன்னதுக்கு என்னோடை பாயிறார்..  

அப்ப நாரதர் விட்டது பீலாவோ?

மதி கெட்டது நான் என்ன எழுதினான் ? செப்ரம்பர் வரை கண்காணிப்பாளர் விலகுவதற்கான காலக்கேடு உள்ளது என்று.இதனைத் திரித்து இங்கே நான் போரை ஆரம்பிப் பதற்கான் காலக்கெடுவாக இதனை கூறியதாக இங்கே கதை விட்டிருகிறீர்.உமக்கு மதி கெட்டா அதற்கு நான் என்ன செய்வது?

தமிழ் ஈழம் தான் எமக்குத் தீர்வு என்பதையும் அது ஆயுதப் போராலயே தான் சாத்தியப் படும் என்பதிலும் எந்த வித கேள்விகளும் இல்லை.உபாயங்களும் பேச்சுவார்த்தைகளும் அந்த அந்த சந்தர்ப்பத்திற்கு ஏற்ப மாறுபடும்.ஈற்றில் நடக்கப் போவது ஒன்று தான்.பொறுதிருந்து பாரும்.அதுவரை உம்மை மாதிரி மதி கெட்டதுகள் இப்படி ரேடியோவில் பழைய பாட்டுக் களைப் போட்டுக் கொண்டிருக்க வேன்டியது தான்.

தாத்தாக்கு வயசு போயிட்டுதல்லோ இப்படித்தான் உளறுவார் கண்டுக்காதீங்கப்பா :P :lol::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கண்ணாடியையும் பிடுங்கீட்டாங்களாம் அதுதான் கண் ஒழுங்காத் தெரியல. பிடுங்கினாலும் ஒட்டியிருப்பம் எண்டு தொங்கிட்டுத் திரியிறார். :P :lol:

அவசரமாக தேவைப்படும் அடிப்படை மனிதாபிமான தேவைகளை பூர்த்தி செய்யிறதுக்கு கீழ்நிலை நிர்வாக அதிகாரிகளுடன் பேச்சுக்கள் நடத்தி நடமுறைத்தீர்வு காணுவதற்கும் ஒரு தேசியம் விடுதலை அடைந்து சுயநிர்ணய உரிமையை காத்துக் கொள்வதற்கு ஆக்கிரமிப்பாளர்களோடு அரசியல்ரீதியில் பேசிப்பயனில்லை என்பதற்கும் வித்தியாசம் இல்லையா.

:roll:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.