Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பல்லிடுக்கில் மாட்டிய பாக்குத்தூள்!

Featured Replies

உலகத்துலே புரிஞ்சுக்க முடியாத விஷயம் ஒண்ணு இருக்குன்னா... அது நம்ம சொந்த பந்தங்கள் தான்... எப்போ கவுப்பாங்க.... எப்போ கழுத்தறுப்பாங்கன்னு யாருக்குமே தெரியாது.... என் அனுபவித்தில் நான் உணர்ந்தவையும், அக்கம் பக்கத்திலே பார்த்ததையும், கேட்டதையும் சொல்லுறேன்....

சொந்தங்களை நம்புறது காட்டிலும், அசலாரை நம்பலாம்னு.... பொதுவாவே எல்லோரும் சொல்வாங்க.... ஒத்துக்கவே மாட்டேன்... சில சொந்தங்கள் நம்மை வம்பிழுக்குதுன்னு சொல்லி ஒட்டுமொத்தமா எல்லாச் சொந்தத்தையும் இந்த மாதிரி திட்டக்கூடாது....

கொஞ்சம் வருஷம் முன்னாடி எங்கத் தெருவில ரெண்டு பேர் கட்டிப் புரண்டு சண்டை போட்டுக்கிட்டு இருந்தாங்க.... என்ன விஷயம்னு யாருக்கும் தெரியல... பக்கத்துலே போய் விசார்ச்சிப் பார்த்தப்புறம் தான் தெரிஞ்சது..... அண்ணன், தம்பிகள்.... நில விவகாரம்.... தம்பி காரனுக்கு வந்த பங்குல இருந்த இடத்துக்கு வழி இல்ல.... அண்னன் காரன் கிட்டே 3 அடி இடம் கேட்டு சண்டை போட்டுக்கிட்டு இருந்தார்.... சும்மாவா சொன்னாங்க ஆறேழு வயசுவரைக்கும் தான் அண்ணன், தம்பி.... பத்து வயசான்னா பங்காளின்னு.... தம்பி கோவமா சொன்னார்.... நீ செத்தாலும் சரி, நான் செத்தாலும் சரி... ரெண்டு பேரும் மூஞ்சியில முழிச்சிக்கக் கூடாதுன்னு.... ரெண்டு வருஷம் முன்னாடி எங்க தெருவில ஒரு வீட்டுல இழவு.... வாசல்லே ஒருத்தர் புரண்டு புரண்டு அழுதுக்கிட்டு இருந்தாரு.... கொஞ்சம் மப்பு போல..... செத்துப்போனவர் அதே அண்ணன்.... புரண்டு புரண்டு அழுதுக்கிட்டிருந்தவர் தம்பி.... என்னாத்தைச் சொல்லுறது?

இதுபோலத்தான் சின்ன வயசுல அண்ணன் - தங்கச்சி எப்பவும் சண்டை போட்டுக்கிட்டே இருப்பாங்க... அதே தங்கச்சிக்கு கல்யாணம் ஆகி புகுந்த வீட்டுக்கு போறப்போ அழற அண்ணன்களை ஏராளமாப் பார்த்திருக்கேன்.... கல்யாணம் முடிஞ்சி மண்டபத்தை காலி பண்ணுறப்போ அண்ணனுங்களுக்கு வர்ற பீலிங்.... நீங்க ஒரு தங்கச்சிக்கு அண்ணனா இருந்தாதான் தெரியும்.....

என் நண்பர் ஒருத்தரோட அப்பா ஒரு பிசினஸ் மேன்.... நிறைய பிசினஸ் பண்ணி ரொம்பவும் லாஸ் ஆயிட்டார்... தற்கொலை செஞ்சிக்க வேண்டிய சூழ்நிலை... அந்த நேரத்துலே அவர் தம்பிகள் ரெண்டு பேர் அவர் குடும்பத்தை தாங்கி.... அவரோட பசங்களுக்கு நல்ல கல்வி கொடுத்து இன்னைக்கு வரைக்கும் அண்ணன் குடும்பத்தை தாங்கிக்கிட்டு இருக்காங்க.... இத்தனைக்கும் அண்ணன் நல்லா இருந்தப்போ தம்பிகளுக்கு எந்த ஹெல்ப்பும் பண்ணதில்லே.....

அதுபோலவே எனக்குத் தெரிந்த பெண் ஒருவர் திருமணமாகி இரு குழந்தைகளுக்கு தாயானதுக்கு அப்புறமா அவர் கணவர் விட்டுட்டு ஓடிட்டாரு.... கிட்டத்தட்ட 15 வருஷமா அந்தப் பெண்ணை கண்ணும், கருத்துமா கவனிச்சி அந்தப் பெண்ணோட குழந்தைகளை வளர்க்கிறது அவங்க அண்னன் - தம்பிகள் தான்.... இதுல பாசிட்டிவ்வான விஷயம் என்னன்னா அந்தப் பெண்ணுக்கு வந்த அண்ணிகள் கூட அவருக்கு ஆதரவா இருக்கறது தான்....

என்னோட உறவுக்கார பெண்மணி ஒருத்தர் கொஞ்சம் இராமாயண கூனி மாதிரி பொறாமை எண்ணம் கொண்டவர்.... அவருடைய சொந்த மச்சினன் பையன் +2ல பெயில் ஆயிட்டான்.... உறவுகள் எல்லாம் அந்தப் பையனுக்கு ஆறுதல் சொல்லி தேற்றிக்கிட்டு இருந்தப்ப இந்த அம்மா சம்பந்தமேயில்லாம அவங்களுக்கு தெரிஞ்ச ஸ்கூல் ஒன்ணுலே 100% பாஸ் அப்படின்னு சொன்னாங்க.... இந்த மாதிரி உறவுகளும் உண்டு.....

என்னோட தாய் மாமாவுக்கும், என் அம்மாவுக்கு ஏதோ ஒரு சின்ன பிரச்சினையிலே வாய் தகராறு ஆயிடுச்சி.... 15 வருஷமா எந்தப் பேச்சுவார்த்தையும் இல்ல.... எங்க வீட்டிலே நடக்கிற சுகதுக்க காரியங்களாகட்டும், அவங்க வீட்டிலே நடக்கிற சுகதுக்கங்களுக்கு பரஸ்பரம் நாங்க பங்கெடுத்துக்குறது இல்லே... எங்க அம்மாவுக்கு அவ்வளவு வைராக்கியம்.... இதுலே துரதிருஷ்டமான விஷயம் என்னண்ணா அந்த மாமாவுக்கு ஒரு அழகான பொண்ணு இருந்திச்சி.....

சமீபத்துலே எங்க தெருவுல ஒரு வயசான அம்மா கை கால் விழுந்து ரொம்ப நாளா இழுத்துக்கிட்டு இருந்தாங்க.... கிட்டத்தட்ட ரெண்டு வருஷம்.... அவங்க மருமக அவங்களை எந்த அளவுக்கு அந்தக் கடைசி நாட்கள்ல பார்த்துக்கிட்டாங்கன்னு எங்களுக்கு தான் தெரியும்... இத்தனைக்கும் அந்த கெளவி நல்லா இருந்தக் காலத்துலே மருமகளை ரொம்பவும் சித்திரவதைப் பண்ணிக்கிட்டு இருந்திச்சி.....

என் பிரண்டு ஒருத்தர் கல்யாணம் ரெண்டு வருஷம் முன்னாடி விழுப்புரத்துலே நடந்துச்சி... கல்யாணத்துக்கு போயிருந்தேன்... தாலி கட்டுற நேரத்துலே ஒருத்தர் பயங்கரப் பிரச்சினை பண்ணி கல்யாணத்தையே நிறுத்துற லெவலுக்கு வந்துட்டாரு... என்னய்யா பிரச்சினைன்னு பார்த்தா அவர் பையனுக்கு பெரியப்பாவாம்.... அவரு பேரை பத்திரிகையில போடாம அவமானப்படுத்திட்டாங்களாம்....

உறவு என்பது எல்லா விஷயத்துக்கும் மகிழ்ச்சியோ, வெறுப்போ எதுவாக இருந்தாலும் ரொம்ப அதீதமாக ரியாக்ட் செய்கிறது.... அதுதான் பிரச்சினையே.... பாசம் காட்டுவது என்றால் பாசமலர் ரேஞ்சுக்கு பாசம் காட்டுவார்கள்.... கோபம் என்றால் வெத்து, குத்து ரேஞ்சுக்கு கோபம் காட்டுவார்கள்.... மொத்தத்துலே உலகத்துலே புரிஞ்சுக்க முடியாத சில விஷயங்கள்ல நம்ப உறவுகளின் மனோபாவத்தையும் சேர்த்துக்கலாம்....

ஒண்ணு ரெண்டு உறவுக்காரங்களைக் காரணம் காட்டி உறவுகளே மோசம்னு தள்ளி வெச்சுட முடியாது.... அதே நேரத்துலே ஓரிரு உறவுகளின் நேச, பாசத்தையும் பார்த்து உறவுகள் தான் சூப்பர்னு தூக்கி வெச்சி கொண்டாடவும் முடியாது... பல்லிடுக்கில் மாட்டிய பாக்குத்தூளைப் போல வாழ்க்கைப் புல்லா நெரடிக்கிட்டே இருக்கிற விஷயம் தான் உறவுகள்!!!!

(http://madippakkam.blogspot.com)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னோட தாய் மாமாவுக்கும்இ என் அம்மாவுக்கு ஏதோ ஒரு சின்ன பிரச்சினையிலே வாய் தகராறு ஆயிடுச்சி.... 15 வருஷமா எந்தப் பேச்சுவார்த்தையும் இல்ல.... எங்க வீட்டிலே நடக்கிற சுகதுக்க காரியங்களாகட்டும்இ அவங்க வீட்டிலே நடக்கிற சுகதுக்கங்களுக்கு பரஸ்பரம் நாங்க பங்கெடுத்துக்குறது இல்லே... எங்க அம்மாவுக்கு அவ்வளவு வைராக்கியம்.... இதுலே துரதிருஷ்டமான விஷயம் என்னண்ணா அந்த மாமாவுக்கு ஒரு அழகான பொண்ணு இருந்திச்சி.....

அடஅட :cry: :cry: :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சினிமாவில வாற மாதிரி நீங்க உங்கட மாமா பொண்ண லவ் பண்ணி பிரிஞ்ச உங்கட குடம்பத்தை சேர்த்திருக்கலாம் தானே!

  • தொடங்கியவர்

சினிமாவில வாற மாதிரி நீங்க உங்கட மாமா பொண்ண லவ் பண்ணி பிரிஞ்ச உங்கட குடம்பத்தை சேர்த்திருக்கலாம் தானே!

சினிமாவுக்கும், யதார்த்த வாழ்க்கைக்கும் கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லன்னு இதிலேர்ந்தே எல்லாரும் தெரிஞ்சுக்கலாம்.... :lol:

சினிமாவுக்கும், யதார்த்த வாழ்க்கைக்கும் கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லன்னு இதிலேர்ந்தே எல்லாரும் தெரிஞ்சுக்கலாம்.... :lol:

அந்த பெண்ணுக்காகவாவது குடும்பத்தை ஒண்று சேர்க்க வேணும் எண்று நினைக்காதது துரதிஸ்ரம்....!

பாவம் அந்த பெண்ணின் மனம் எவ்வளவு கஸ்ரப்படும்.... :wink: :P (சும்மா ஒரு உதார்தான்)

உறவு என்பது எல்லா விஷயத்துக்கும் மகிழ்ச்சியோ, வெறுப்போ எதுவாக இருந்தாலும் ரொம்ப அதீதமாக ரியாக்ட் செய்கிறது.... அதுதான் பிரச்சினையே.... பாசம் காட்டுவது என்றால் பாசமலர் ரேஞ்சுக்கு பாசம் காட்டுவார்கள்.... கோபம் என்றால் வெத்து, குத்து ரேஞ்சுக்கு கோபம் காட்டுவார்கள்.... மொத்தத்துலே உலகத்துலே புரிஞ்சுக்க முடியாத சில விஷயங்கள்ல நம்ப உறவுகளின் மனோபாவத்தையும் சேர்த்துக்கலாம்....

ஒண்ணு ரெண்டு உறவுக்காரங்களைக் காரணம் காட்டி உறவுகளே மோசம்னு தள்ளி வெச்சுட முடியாது.... அதே நேரத்துலே ஓரிரு உறவுகளின் நேச, பாசத்தையும் பார்த்து உறவுகள் தான் சூப்பர்னு தூக்கி வெச்சி கொண்டாடவும் முடியாது... பல்லிடுக்கில் மாட்டிய பாக்குத்தூளைப் போல வாழ்க்கைப் புல்லா நெரடிக்கிட்டே இருக்கிற விஷயம் தான் உறவுகள்!!!!

ரொம்ப உணர்ந்து அருமையா எழுதி இருக்கிறியள் லக்கிலுக்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடடா உறவுகளை பத்தி நல்லா சொல்லி இருக்கிறீங்களே... :lol: சொன்னதல்லாம் 100% உண்மைதாங்க... :lol:

  • கருத்துக்கள உறவுகள்

தலைப்புக் கூட நன்றாக இருக்கின்றது லக்கிலுக்! நான் என்னவோ, தலைப்பைப் பார்த்தபோது பாக்குத் தூள் பற்றி தத்துவம் ஏதும் சொல்லப் போகின்றீராக்கும் என நினைத்தேன்!

தலைப்புக் கூட நன்றாக இருக்கின்றது லக்கிலுக்! நான் என்னவோ, தலைப்பைப் பார்த்தபோது பாக்குத் தூள் பற்றி தத்துவம் ஏதும் சொல்லப் போகின்றீராக்கும் என நினைத்தேன்!

குடும்பத்தோட கஸ்ரப்பட்டு பாக்குத்தூள் எண்டுறார்.... யாழ்களத்தில பட்டதை வச்சு என்ன எண்டு சொல்லுவாராம்....! ( அதே பாக்குதூளா இல்லை பாண்பராகா..?? :wink: :P :P )

  • கருத்துக்கள உறவுகள்

குடும்பத்தோட கஸ்ரப்பட்டு பாக்குத்தூள் எண்டுறார்.... யாழ்களத்தில பட்டதை வச்சு என்ன எண்டு சொல்லுவாராம்....! ( அதே பாக்குதூளா இல்லை பாண்பராகா..?? :wink: :P :P )

ஏனப்பா இந்தக் கேள்வியை என்னிடம் கேட்டு வம்பில் மாட்டப் பார்க்கின்றீர்கள்! அதை அவரே சொல்லட்டும்! :roll:

(எங்கு எல்லாம் பிரச்சனை உருவாக்கலாம் என்று ஒரு போக்கோடு தான் திரிகின்றீர்கள் போல கிடக்குதே :wink: :P )

  • தொடங்கியவர்

தலைப்புக் கூட நன்றாக இருக்கின்றது லக்கிலுக்!

இந்தத் தலைப்பு நம் சொந்தச் சரக்கல்ல.... கலைஞர் ஒரு முறை எதுக்கோ கூறிய உவமானம்....

இந்தத் தலைப்பு நம் சொந்தச் சரக்கல்ல.... கலைஞர் ஒரு முறை எதுக்கோ கூறிய உவமானம்....

அருமையா எழுதி இருகிறீர்கள். ஆனா கடைசியில் தலைப்பு உங்களது இல்லை எண்று கவுத்து புட்டியளே. சரி கருத்தும் எழுத்தும் நல்லா இருக்கு. தலைப்பை பற்றி நான் ஒண்டும் சொல்லேல்லை. :wink:

  • 1 month later...

ஒண்ணு ரெண்டு உறவுக்காரங்களைக் காரணம் காட்டி உறவுகளே மோசம்னு தள்ளி வெச்சுட முடியாது.... அதே நேரத்துலே ஓரிரு உறவுகளின் நேச, பாசத்தையும் பார்த்து உறவுகள் தான் சூப்பர்னு தூக்கி வெச்சி கொண்டாடவும் முடியாது... பல்லிடுக்கில் மாட்டிய பாக்குத்தூளைப் போல வாழ்க்கைப் புல்லா நெரடிக்கிட்டே இருக்கிற விஷயம் தான் உறவுகள்!!!!

எல்லோருடைய அனுபவத்தையும் அப்படியே பேட்டி கண்டு எழுதியிருக்கின்றீர்கள் போல. நான் சந்தித்த பெரும்பலான உறவுகள் சுயநலக்கரார் போல தான் இருக்கின்றார்கள். அவர்களிடம் இருந்து எவ்வித எதிர்பார்ப்புகளும் இன்றி நாம் பழகினால் தான் பல வேதனைகளிலிருந்து தப்பிக்கலாம்.

பதிப்புக்கு நன்றி லக்கிலுக்.

தாய்வழி சொந்தம்..தகப்பன்வழி சொந்தம்....

இதெல்லாம் நாம அமைச்சுக்கிறது இல்ல தானே.. அமைஞ்சது...

உறவுகளை சரியானமுறையிலே கொண்டாடணும்..

எல்லா உறவுகளுக்கும் பழகுறதுக்கும்..கொண்டாடுறதுக்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.