Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

60 ஆண்டு போராட்டதின் பலன் தனி தெலுங்கானா; வெடித்தது கலவரம்: பஸ், ஆட்டோ ஓடவில்லை

Featured Replies

தனி தெலுங்கானா மாநிலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திராவில் ஒருங்கிணைந்த கூட்டுக் குழுவினர் இன்று பந்த் போராட்டம் நடத்தினர். இதனால் பஸ், லாரி, ஆட்டோ போன்ற எந்த வாகனமும் ஓடவில்லை. பள்ளி, கல்லூரிகள், சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. பல இடங்களில் மறியல் உள்ளிட்ட போராட்டங்களால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தை இரண்டாக பிரித்து தெலுங்கானா தனி மாநிலம் உருவாக்க ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகள் கூட்டத்தில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.

காங்கிரஸ் காரிய கமிட்டியும் நேற்று மாலை கூடி, தெலுங்கானாவுக்கு ஒப்புதல் அளித்தது. பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் இன்று நடக்கும் மத்திய அமைச்சரவை கூட்டத்திலும் இதற்கு ஒப்புதல் பெறப்படுகிறது. தனி தெலுங்கானா மாநிலம் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அப்பகுதி மக்கள் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்கள் வெற்றி கொண்டாட்டம் நடத்தினர்.

இதற்கிடையே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க ஆந்திரா முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. தெலுங்கானா மாநிலத்துக்கு காங்கிரஸ் காரிய கமிட்டி ஒப்புதல் அளித்ததை கண்டித்து கடலோர ஆந்திரா மற்றும் ராயலசீமா பகுதிகளில் இன்று பந்த் நடத்த ஒருங்கிணைப்பு கூட்டு குழு மற்றும் மாணவர் சங்கத்தினர் அழைப்பு விடுத்தனர்.

அதன்படி, நேற்றிரவு முதலே கடலோர ஆந்திரா மற்றும் ராயலசீமா பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டது. பஸ், ஆட்டோகள் ஓடவில்லை. சித்தூரில் எம்எல்ஏ சி.கே.பாபு தலைமையில் நள்ளிரவு வரை காந்தி சிலை அருகே மறியல் போராட்டம் நடந்தது. நெல்லூரில் மட்டும் 48 மணி நேர பந்த்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அறிவிக்கப்பட்டபடி, ஒருங்கிணைந்த ஆந்திரா பகுதிகளில் இன்று பந்த் நடந்தது. அதிகாலை முதல் அரசு, தனியார் பஸ்கள் இயக்கப்படவில்லை. ஆட்டோ, லாரி, வேன் உள்ளிட்ட எந்த வாகனங்களும் ஓடவில்லை.

வணிக வளாகம், கடைகள், அரசு மற்றும் தனியார் அலுவலகம், வங்கிகள், ஏடிஎம் மையங்கள், சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளன. திருப்பதியில் இருந்து திருமலைக்கு மட்டும் போலீஸ் பாதுகாப்புடன் அரசு பஸ்கள் இயக்கப்பட்டது. ரயில்கள் வழக்கம்போல் ஓடின. இதனால் ரயில்களில் கூட்டம் அலைமோதியது. மாணவர் அமைப்பினரும் ராயலசீமா, கடலோர ஆந்திரா ஒருங்கிணைப்பு கூட்டு குழுவினரும் பல இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பதியில் தெலுங்கு தாய் சிலைக்கு பாலாபிஷேகம் செய்தனர். இதேபோல் நெல்லூரில் உள்ள பொட்டி ஸ்ரீராமுலு சிலைக்கும் பாலாபிஷேகம் செய்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

பந்த்தையொட்டி கடலோர ஆந்திரா மற்றும் ராயலசீமா பகுதிகளில் 25 துணை ராணுவப்படை குவிக்கப்பட்டுள்ளது. மேலும் 15 கம்பெனி துணை ராணுவமும் கூடுதலாக வரவழைக்கப்பட்டுள்ளது. விசாகப்பட்டினம், விஜயவாடா, குண்டூர், பிரகாசம், கிழக்கு, மேற்கு கோதாவரி, நெல்லூர், கடப்பா, அனந்தப்பூர், திருப்பதி ஆகிய முக்கிய நகரங்களில் சுமார் 8 ஆயிரம் ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 

http://www.dinaithal.com/tamilnadu/india/17972-trs-is-the-result-of-60-year-struggle-riots-broke-out-bus-auto-failed-to.html

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தனித் தெலுங்கானா மட்டுமல்ல.இந்தியாவின் அனைத்து மாநிலங்களையும் தனித்தனி நாடுகளாக பிரித்து பல நாடுகளையும் உருவாக்க வேண்டும்.அஹன் மூலம் உலக வரைபடத்திலிருந்து இந்தியா என்ற பெயர் அகற்றப்படும் சூழ்நிலை உருவாக்கப்படவேண்டும்.பல்லாண்டுகாலத்தமிழர்களின் கனவு அன்றுதான் நிறைவேறும்.அதுதான் தனித்தமிழ் நாடு.

  • கருத்துக்கள உறவுகள்
தனித் தெலுங்கானா மட்டுமல்ல.இந்தியாவின் அனைத்து மாநிலங்களையும் தனித்தனி நாடுகளாக பிரித்து பல நாடுகளையும் உருவாக்க வேண்டும் .
அப்படி ஒரு நிலை வரும்போதுதான் தனித்தமிழ் நாடு ஒன்று உருவாகும் அந்த நாட்டின் உதவியுடன் தமிழீழம் அமைவதற்கான சாத்தியம் ஏற்படும். 

 

கடலோர ஆந்திரா மற்றும் ராயலசீமா பகுதிகளில் 25 துணை ராணுவப்படை குவிக்கப்பட்டுள்ளது. மேலும் 15 கம்பெனி துணை ராணுவமும் கூடுதலாக வரவழைக்கப்பட்டுள்ளது.

 

விசாகப்பட்டினம், விஜயவாடா, குண்டூர், பிரகாசம், கிழக்கு, மேற்கு கோதாவரி, நெல்லூர், கடப்பா, அனந்தப்பூர், திருப்பதி ஆகிய முக்கிய நகரங்களில் சுமார் 8 ஆயிரம் ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 

அங்குள்ள பெண்கள் தான் அதிக கவனமாக இருக்க வேண்டும்!

 

  • கருத்துக்கள உறவுகள்

தனித் தெலுங்கானா மட்டுமல்ல.இந்தியாவின் அனைத்து மாநிலங்களையும் தனித்தனி நாடுகளாக பிரித்து பல நாடுகளையும் உருவாக்க வேண்டும்.அஹன் மூலம் உலக வரைபடத்திலிருந்து இந்தியா என்ற பெயர் அகற்றப்படும் சூழ்நிலை உருவாக்கப்படவேண்டும்.பல்லாண்டுகாலத்தமிழர்களின் கனவு அன்றுதான் நிறைவேறும்.அதுதான் தனித்தமிழ் நாடு.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.