Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சங்கரிக்கு 50இலட்சம் கொடுத்து வேட்பாளர் பட்டியலில் இடம்பிடித்த தம்பிராசா -

Featured Replies

ananthasankari-150x150.jpgதமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரிக்கு 50 இலட்சம் ரூபாவை கொடுத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாணசபை தேர்தலில் யாழ். மாவட்ட வேட்பாளர் பட்டியலில் பிரபல வர்த்தகரும் கனடா குடியுரிமை பெற்றவருமான காரைநகரை சேர்ந்த தம்பிராசா இடம்பிடித்துள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடுவதற்கு தகுதியான பலர் இருந்த போதிலும் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு வழங்கிய பங்கீட்டின் அடிப்படையில் தம்பி கொமினிக்கேசன் உரிமையாளராக இருக்கும் தம்பிராசாவுக்கு வேட்பாளர் பட்டியலில் இடம் கிடைத்துள்ளது.

இதற்காக ஆனந்தசங்கரிக்கு அவர் 50 இலட்சம் ரூபாவை நன்கொடையாக வழங்கியதாகவும் தெரியவருகிறது.

வர்த்தகரான தம்பிராசா கனடாவில் குடியேறி அங்கு குடியுரிமை பெற்றுக்கொண்டார். பின்னர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய மற்றும் ஆனந்தசங்கரி ஆகியோரின் அனுசரணையுடன் சிறிலங்கா கனடா இரட்டை குடியுரிமையையும் பெற்றுக்கொண்டார்.

தமிழ் தேசிய விடுதலைப் போராட்டம் என்றால் என்ன விலை என கேட்கும் தம்பிராசா வியாபாரி பணத்தை அள்ளி வீசியதால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.

இவர் ஆனந்தசங்கரிக்கு 50 இலட்சம் கொடுத்தது மட்டுமன்றி தனது தேர்தல் பிரசாரத்திற்காக ஒரு கோடியை செலவழிக்க இருப்பதாகவும் கூறி வருகிறார்.

: http://www.thinakkathir.com/?p=51597#sthash.DB5Kpqqz.dpuf

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் தமிழ் தேசிய உழைப்பாளர்கள் எவ்வளவு திருடினம் என்று கணக்குப் பார்க்கிற ஆக்கள்.. உந்தத் துரோகிகள் மக்கள்.. ஒற்றுமை.. என்ற பசப்பு வார்த்தைகள் உதிர்த்து.. கோடிக்கணக்கில் இலட்சக்கணக்கில் சுருட்டுவதை யார் கேட்கினம்..!

 

தமிழ் தேசியத்துக்கு எதிரான பரப்புரைகளுக்கு முக்கியம் அளிப்பவர்கள்.. இவற்றைப் பற்றி ஏன் மூச்சும் விடுவதில்லை..! :icon_idea::):rolleyes:

மகிந்தாவை ஜனாதிபதியாக்க வாங்கிய தொகை இதைவிட கூடவா குறையவா ?

காசி அண்ணாவிடம் ஒருக்கா போன் அடிச்சு கேட்க சொல்லவும் .

  • கருத்துக்கள உறவுகள்

சித்தார்த்தன்.. உமா மகேஸ்வரன்... வாங்கினதவை விட குறைவாத் தான் இருக்கும் என்று காசி அண்ணை சொல்லுறார். :D

அருச்சுனுக்கு அரசியல் அறிவு பூச்சியமாக இருந்தால் கூட அப்படி இரண்டை ஒப்பிட்டிருக்க முடியாது. பிரபாகரன் செய்தது சரியென்கிறாரா. அல்லது இரண்டும் பிழை என்கிறாரா என்பது புரியவில்லை. இது வரை, பிரபாகரன், மகிந்தா வந்தால்த்தான் தனி நாட்டு கோரிக்கைகள் முன்னால் போகாலாம் என்று நினைத்ததற்கு மாற்று வைக்கத்தாக சம்பவங்கள் நடை பெறவில்லை. மகிந்தா, தலைவர் எதிர்பார்த்தற்கு மாறாக, உலக நாடுகள் எதுவுக்கும் நல்லவராக நடக்கவில்லை. ஏமாற்றம் உலக நாடுகள் மகிந்தாவை விட கேவலமான கையீனாக்களாகளாக நடந்து கொண்டமைதான். புஸ் தான் தோற்றாலும் பரவாயில்லை என்ற கொள்கையில் நடந்தவர். அமெரிக்காவின் நாலாவது தாழ்வுநிலை அதிபராக பெயர் எடுத்தவர். இந்தியா தனக்கு மூக்கு போனாலும் எதிரிக்கு சகுனப்பிழையாகட்டும் என்று நடந்து, வெளிப்படையாக சீனா , இந்திய மீனவர்கள் என்ற பெயரில், இந்தியாவை உளவு பார்க்கிறது. அவர்கள் அப்படித்தான் நடப்பார்கள் என்பதால் பிரபாகரன் அவர்களை நம்பாமல் தனது சொந்த காலில் நிற்க முயன்றார். செய்தது சரி என்பது அருசுனிற்கும் புரிகிறது. ஆனால் நையாண்டிக்கு இடம் கிடைத்தவுடன் தோல்வியை வைத்து கிண்டல் பண்ணுகிறார். அவர் அதை விவாதமாக வைக்கத் தயார் இல்லை. 

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.