Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்கள தேசத்துப் பொருட்களை புறக்கணிப்போம்!

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எடுத்தவுடன் பொருட்களினைப் புறக்கணிக்ககூடாது என்று சிலர் இங்கே கருத்துக்கள் பதிந்திருக்கினம். உடனடியாக இலங்கைக்கு தேவையான அழுவல் இல்லாமல் செல்வதினைத்தவிர்க்கலாம். அப்படிப் போக வேண்டுமெனில் அவுஸ்திரெலியாவில் இருக்கிறவர்கள் சிங்கப்பூர் எயர்லைன்ஸ் அல்லது மலேசியன் எயர்லைன்ஸ் அல்லது தாய் எயர்லைன்சில் செல்லலாம்.சிறிலங்கன் எயர்லைன்ஸினைப் புறக்கணிக்கவேண்டும். சிங்கப்பூர் எயர்லைன்ஸில் செல்வதினால் எமக்கு Star Alliance Points கிடைக்கும். சிலர் இந்தியாவுக்கு செல்வதற்கு சிறிலங்கன் எயர்லைன்ஸில் மூலம் இலங்கையில் Transit மூலம் செல்கிறார்கள். அதனையும் தவிர்க்கலாமே.

  • 2 weeks later...
  • Replies 121
  • Views 40.9k
  • Created
  • Last Reply

புலம் பெயர் வாழ் தமிழிழா வர்த்தக உறவுகளுக்கு அன்பார்ந்த வேண்டுகோள்!

உங்கள் அனைவருக்கும் அன்பார்ந்த வணக்கம்!

நாம் எமது சொந்த ஊரைவிட்டு உறவுகளைவிட்டு, அகதி அந்தஸ்த்தில் இங்கு வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். நாம் ஏதோ உயிருக்கு பயமில்லாத நிம்மதியான உறக்கமும் வாழ்க்கையும் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். தாயகத்தில் எமது உறவுகள் அன்றாடம் உணவுமின்றி, உறக்கமுமின்றி, நிம்மதியில்லாத வாழ்க்கையே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். ஒரு பக்கம் பொருளாதாரத்தடை மறுபக்கம் ஆள் கடத்தல், கொலை இன்னும் சொல்லப்போனால் விமானத் தாக்குதல் செல் தாக்குதல் தஞ்சம் போவதற்கு ஓரிடமும் இல்லை. காரணம் கோயில்கள், பள்ளிவாசல்கள், பாடசாலைகள், தேவாலயங்கள் எதையுமே விட்டுவைக்கவில்லை சிறீலங்கா பேரினவாத அரசு. மத குருமார்கள், பாடசாலை மாணவர்கள், ஊடகவியலாளர்கள், புத்திஜீவிகள் மற்றும் எதையுமே அறியாத பச்சிலம்பாலகர்கள், வயோதிபர்கள் என்ற வேற்றுமைகள் இல்லாமல் எம் தமிழ் பேசும் உறவுகளை கொன்று குவிக்கின்றார்கள்.

இதை தட்டிக் கேட்பதற்கு உலகத்திலே எமக்கு யாருமேயில்லை. தமிழீழ விடுதலைப் புலிகள் எம் காப்பரணாக அன்று போல் இன்றும் எம் உறவுகளை காத்து வருகின்றார்கள். அதை புரிந்து கொள்ளாத சர்வதேச நாடுகள் அவர்களுக்கு பயங்கரவாதிகள் என்னும் பட்டத்தைச் சூட்ட எண்ணுகிறார்கள்;. அதே சந்தர்ப்பத்தை வைத்து சிறீலங்கா பேரினவாத அரசு எமது தாயகத்தில் வெறியட்டம் ஆடுகின்றனர். காரணம் சில நாடுகள் சிறீலங்காவிற்கு ஆயுத உதவிகள் வழங்கும் அதேவேளை, புலம் பெயர் வாழ் தமிழர்களாகிய நாமும் எம்மை அறியாமலே சிறீலங்கா அரசுக்கு ஆயுத கொள்வனவுக்கு நிதி உதவி வழங்கி வருகிறோம்.நீங்கள் சிந்திக்கலாம் சிறீலங்காவிற்கு எப்படி நாங்கள் நிதி உதவி வழங்குகின்றோம் என்று. நாங்கள் மிக நீண்ட காலமாக வெற்றிலையிலிருந்து நெக்ரோ சோடா வரைக்கும் சிறீலங்காவிலிருந்து இறக்குமதி செய்கின்றோம். இப் பொருட்களுக்கு கட்டும் வரிப்பணம் தான் எமது தாயக உறவுகளை அழிப்பதற்கு சிறீலங்கா அரசிற்கு நாமே உந்து சக்தியாக இருக்கின்றோம்.

ஆகையால் இனியும் நாம் அந்த தவறுகளை தொடர்ந்து செய்யாமல், தமிழிழத்தில் எம் உறவுகளை பாதுகாத்து கொள்வதற்காக, புலம்பெயர் வாழ் தமிழ் மக்களாகிய நாம், சிறீலங்காவின் பொருளாதாரத்தை முடக்குவோம்.

சிறீலங்காவின் விமானத்தில் நாம் பயணம் செய்வதை நிறுத்துவோம்.

சிறீலங்காவின் உற்பத்திப் பொருட்களை கொள்வனவு செய்வதை தவிர்த்து கொள்வோம். வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகளை, சிறிலங்காவுக்கு செல்வதைத் தடுத்து நிறுத்துவோம். சிறிலங்கா வங்கிகளுக்கு பணம் அனுப்புவதையும்,சேமிப்பதையும

  • கருத்துக்கள உறவுகள்

என்னால் ஆன முயற்சிக்ளில் ஈடுபட்டு செயற்பட இருக்கின்றன்

முதலில் இப்படியான புறக்கணிப்புகளுக்கு மாற்று வழிகளை ஒழுங்கு செய்து விட்டு கோரிக்கை விடுவதே சிறந்தது. ஆனால் அப்படியான எந்தவித மாற்று வழிகளும் அறிமுகப்படுத்தாதவிடத்தில் இப்படியான கோரிக்கைகள் வெற்றி பெறுவது கேள்விக் குறியே????

  • கருத்துக்கள உறவுகள்

சாத்தியப்பாடானவை மட்டுமே மக்களால் சாத்தியப்படுத்தப்படும். மற்றெல்லாம் புறக்கணிக்கப்படும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்படியே சிறீலங்கன் எயார் லைன்ஸ் ஸ்பொன்சரில நடக்கிற தமிழர் போட்டிகளையும்..அதில பறக்கிறதுகளையும்..கட்டுநாயக்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அந்தப் புறக்கணிப்புகளின் பின் விளைவுகள் என்பது எமது தாயக மக்களுக்கு சாதகமாகுமா...??! நீங்கள் இங்கு புறக்கணிக..அவர்கள்..அங்கு முக்கியமானதைத் தடுப்பார்கள்..! குறிப்பா எரிபொருளைத் தடுக்கிறார்கள் என்று வையுங்கள்..யாருக்கு இலாபம்...யாருக்கு துன்பம்.

இப்ப மட்டும் தமிழ் மக்களுக்கு அள்ளி அள்ளிதானே குடுக்கினம்..?

உவையின்ர உந்த விறுத்தம்தான் அங்க யாழிலை மக்கள் தினம் தினம் உண்ண வழியில்லாமல் பட்டினியில் சாகுதுகள்.

இப்ப என்ன சொல்ல வாறியள்? நாங்கள் உதுகளை புறக்கணிக்காமல் இருப்பதால்தான் அங்க தமிழ் மக்கள் உண்ணினம் எண்டு சொல்லவாறியளோ..

அது ஒண்டும் இல்லை அங்க இருக்கிற எங்கடை மக்களின்ரை பணத்திலை தங்களுக்கு இலாபம் வாறபடியாலைதான் போற பொருட்களும் தாயக பகுதிகளுக்கு போகுதே தவிர வேறை அங்க பாவம் பழி எண்டு சிங்களவன் ஒண்டும் தரவில்லை. ஒருபோதும் தரப்போவதும் இல்லை.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தேவை - சிறிலங்கா மீது பொருளாதாரத் தடை

http://www.tamilnaatham.com/articles/2006/.../sabesan/17.htm

இப்போழுதிருந்தே ஒன்றோன்றாய் ஆரம்பியுங்கள். முடியாததென்றோன்றில்லை. இம் முறை மகிந்தன் வெளிநாட்டிலுள்ள சிங்கள தேசத்து தூதுவர்களை அழைத்து சிறீலங்காவின் வியாபாரப் பொருட்களை சந்தைப்படுத்தலை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கச் சொல்லி உத்தரவிட்டுள்ளான். ஆதாலால் எம்மால் முடிந்ததை செய்வோம். ஒன்றோன்றாய் ஒன்றோன்றாய் புறக்கணிக்கப் பார்ப்போம். வெற்றி கிட்டும்

ஈழத்திலிருந்து

ஐhனா

இப்ப எங்கட சனத்திற்கு(யாழ்ப்பாணவாசிகளு

இப்ப மட்டும் என்னத்தையாம் வெட்டி முறிக்கினம். கப்பல்ல போரதுகளில இராணுவத்திற்கு கொடுத்ததில மிஞ்சின எக்ஸ்பயர் ஆனவை தான் எங்கட சனத்திற்கு. நேற்று தபால்கந்தோர்ல போய் யாழ். சாமன் அனுப்ப முடியுமோ என்டு கேக்க ஓம் முடியும் ஆனா பிள்ளைகளின்ட பால் மா போன்றவை அனுப்ப முடியாதாம். சமளிப்புகள் தேவையா?

ஈழத்திலிருந்து

ஐhனா

இப்ப மட்டும் என்னத்தையாம் வெட்டி முறிக்கினம். கப்பல்ல போரதுகளில இராணுவத்திற்கு கொடுத்ததில மிஞ்சின எக்ஸ்பயர் ஆனவை தான் எங்கட சனத்திற்கு. நேற்று தபால்கந்தோர்ல போய் யாழ். சாமன் அனுப்ப முடியுமோ என்டு கேக்க ஓம் முடியும் ஆனா பிள்ளைகளின்ட பால் மா போன்றவை அனுப்ப முடியாதாம். சமளிப்புகள் தேவையா?

ஈழத்திலிருந்து

ஐhனா

நீங்க போய் கேட்டனீங்களோ???!!!

ஓமோம் நானே நேரடியாப்போய் கேட்டன் அந்த தபாலகத்தில ஒரு தமிழர் கடமை புரிகின்றார். அவர் தான் சொன்னார். அரிசி பருப்பு சீனி அனுப்பலாம் தம்பி ஆனா பிள்ளையளுன்ட பால்மா அனுப்ப விடுகினமில்லை என்டு. நாங்கள் இங்க பாத்து எடுத்து பார்சல் பண்ணினலும் இன்னோரு இடத்தில எல்லாம் மறுபடியும் தலைகீழாக பரிசோதித்துப் பார்த்து இதுகளை எடுத்து எறிஞ்சுடுவான் என்று சொன்னார்.

ஈழத்திலிருந்து

ஐhனா

முதலில தி-முரசு பத்திரிகையை விற்கும் கடைகளை புறக்கணியுங்கள்.

ஓமோம் ஆண்டியள் மடம் கட்டுங்கோ. த.தொ.இணையத்திலை ஒரு கடை விளம்பரத்திலை தினமுரசு பத்திரிகை விளம்பரம் வருகிறது. ஆனால் அதை கண்டு கொள்ளாதையுங்கோ. :twisted: :twisted: :twisted:

நான் பாருங்கோ நெக்டோ குடிக்கிறதையும் மெலிபன் விசுக்கோத்து சாப்பிடதையும் நிறுத்திட்டேன்.

ஆனால் லயன் லாகரைத்தான் நிறுத்த...........திட்டேன்

நேற்றையில் இருந்து ஏனென்றால் அதுக்குள்ள ஏதோ கலக்கிறான்களாம் எங்கட வம்சத்தைப் பெருக்காமலிருக்க......

ஆச்சி ஊருல எனக்கு பொம்புள வேறு பார்க்கிற இந்த நேரத்திலே வேற :P :P :idea:

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்காவில் உற்பத்திப் பொருட்களை புறக்கணியுங்கள் -தமிழ் பெண்கள் அமைப்பு. சிறீலங்காவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களை தமிழ் மக்கள் முழுமையாக புறக்கணியுங்கள் என புலம் பெயர் தமிழ் மக்களிற்கு யேர்மனி தமிழ்ப் பெண்கள் அமைப்பு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது.

அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

கடந்த மாதம் 28,29ம் திகதிகளில் விடுதலைப்புலிகளிற்கும் சிறீலங்கா அரசிற்கும் இடையில் ஜெனிவா- 2 பேச்சுக்கள் நடைபெற்றன. இப் பேச்சுக்களில் விடுதலைப்புலிகளால் முன்வைக்கப்பட்ட தமிழ் மக்களின் மனிதபிமானப் பிரச்சினைகள் சிறீலங்கா அரசால் நிரகாரிக்கப்பட்டுள்ளது.

முக்கியமாக மனித உரிமைகளின் மையமாக திகழும் ஜெனிவாவில் வைத்து 6 லட்சம் தமிழ் மக்களின் பெரும் மனிதபிமானப் பிரச்சினையான தற்போது மூடப்பட்டுள்ள ஏ 9 பாதை திறப்பை சிறீலங்கா அரசு தனது இராணுவ நலன் கருதி முற்றாக நிராகரித்ததை அடுத்து ஜெனிவா ௨ பேச்சுக்கள் தோல்வியடைந்துள்ளன.

சிறீலங்கா அரசின் இந் நடவடிக்கையானது தமிழ்மக்கள் மற்றும் சர்வதேச சமூகத்தின் மத்தியில் பலத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. 2002ம் ஆண்டு சர்வதேச சமூகத்தின் பேரதரவுடன் விடுதலைப் புலிகளிற்கும் சிறீலங்கா அரசிற்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களில் ஒன்றாக ஏ 9 பாதை திறப்பு உள்ளது. இவ் ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே இப் போக்குவரத்து பாதை 2002 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது.

தற்போது இப் பாதையை மூடி 6 லட்சம் குடா நாட்டு மக்களை திறந்த வெளி சிறைச்சாலையில் அடைத்ததிற்கு ஒப்பான நிலையை ஏற்படுத்தியதுடன், உணவு பொருட்களுக்குப் பெரும் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி குடா நாட்டு மக்களை பட்டினி சாவு நிலைக்கு சிறீலங்கா அரசுகொண்டு சென்றுள்ளது.

தமிழ் மக்களின் மனிதபிமானப் பிரச்சினைகளை கருத்தில் எடுக்காது மக்களை மேலும் மேலும் நசுக்குவதில் குறியாகவுள்ளது அரசு. எனவே சிறீலங்காவில் உற்பத்தியாகி புலம் பெயர் நாடுகளில் குறிப்பாக யேர்மனியில் விற்பனையாகிக் கொண்டிருக்கும் சிறீலங்கா பொருட்களை வர்த்தக நிலையங்களில் இருந்து வாங்குவதை தவிர்ப்பதன் மூலம் சிறீலங்கா அரசிற்கு புலம்பெயர் தமிழ் மக்களின் எதிர்பைக் காட்டும் படி புலம்பெயர் தமிழ் மக்களிடம் யேர்மனிய தமிழ் பெண்கள் அமைப்பினர் ஆகிய நாம் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

-பதிவு

கந்தப்பு அப்பு,

இந்த திரியின் தலையங்கத்தை கீழ்தந்தவாறு நீங்கள் போட்டிருக்கலாம்.

"வெளிநாடுகளில் வசிக்கும் யாழ்கள உறவுகளே, சிறீலங்காவின் உற்பத்திப் பொருட்களை வெளிநாடுகளில் உபயோகிப்பதை புறக்கணிப்போம்".

ஏனெனில் இலங்கைத்தீவில் வாழும் நாம் இவற்றை உபயோகிகாமல் இருக்கமுடியாது. எல்லாப் பொருட்களும் ஏழத்தில் உற்பத்தி செய்யப்படுவதில்லை. உதாரணத்திற்கு பேனையை எடுத்துக் கொள்ளுங்கள். இது அனைவருக்கும் தெவையான அத்தியவசியப் பொருளாகா மாறிவிட்டது. சிறீலங்க உற்பத்தி அல்லாத பேனைகள்(வெளிநாட்டு) விலை கூடியவை. இதை சாதாரண மக்கல் தொடர்ந்து வாங்கமுடியாது. ஈழத்தில் இதன் உற்பத்தி இல்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ரீலங்கா உற்பத்திப் பொருட்கள் மற்றும் சேவை இரண்டையும் புறக்கணியுங்கள்

ஸ்ரீலங்கா அரசு விதித்துள்ள பாரிய பொருளாதாரத் தடையால் தாயகத்தில் வாழும் நம் உறவுகள் நாளும் பட்டினி கிடந்து பசியால் மெலிந்து வாடுகின்றனர். ஏ௯ பாதை மூடப்பட்டதே இந்த உணவுத் தட்டுப்பாட்டுக்கும் பட்டினிக்கும் பசிக்கும் முக்கிய காரணியாகும். இந்தப் பாதையைத் திறக்க ஸ்ரீலங்கா அரசு பிடிவாதமாக மறுத்து வருகிறது.

ஜெனிவா௧ பேச்சு வார்த்தைக்குப் பின்னர் 1,339 தமிழ்மக்கள் கொல்லப் பட்டுள்ளார்கள். 408 பேர் காணாமல் போயுள்ளார்கள். இவர்களில் 98 பேர் சிறார்கள். வட-கிழக்கில் 1,81,643 மக்கள் இடம்பெயர்ந்து கொட்டில்களில் வாழ்கிறார்கள். அவர்களுக்கு அரச சார்பற்ற நிறுவனங்கள் நிவாரணம் வழங்குவதை ஸ்ரீலங்கா அரசு தடுத்து வருகிறது. வட-கிழக்கில் 149 பள்ளிக்கூடங்கள் ஒன்றில் அழிக்கப்பட்டு அல்லது இயங்கமுடியாது முடக்கப்பட்டுள்ளன.

ஸ்ரீலங்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு நாம் கொடுக்கும் பணம் ஸ்ரீலங்கா அரசு குண்டுகளை வாங்கி எமது மக்கள் மீது போடவே பயன்படுகிறது. இதை எழுதிக் கொண்டிருக்கும் போது ஸ்ரீலங்கா விமானப் படை மேற்கோண்ட குண்டுத் தாக்குதலில் பூனகரியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் இறந்துள்ளார்கள். கிளிநொச்சி மருத்துவமனைக்கு அருகில் 3 குண்டுகள் விழுந்து வெடித்ததில் மருத்துவமனைக் கண்ணாடி யன்னல்கள் உடைந்துள்ளன. மின்விசிறிகள் அறுந்து விழுந்துள்ளன.

இந்தப் பின் புலத்தில் சிறிலங்காவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களைப் புறக்கணிக்க வேண்டும் என்ற எண்ணம் புலப்பெயர் நாடுகளில் வலுப்பெற்று வருகிறது. இதில் மலேசிய தமிழ் அமைப்புக்கள் முந்திக் கொண்டு தமிழீழத்தில் அப்பாவித் தமிழ்மக்கள் கொன்று குவிக்கப்படுவதைக் கண்டிக்கும் வகையில் ஸ்ரீலங்காவின் உற்பத்திப் பொருட்களை ஒட்டு மொத்தமாகப் புறக்கணிக்க வேண்டும் என்று உலகளாவிய தமிழர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளன.

ஒரு காலத்தில் ஸ்ரீலங்காவின் பொருளாதாரம் தேயிலை, இறப்பர், தென்னை ஆகியவற்றின் ஏற்றுமதியிலேயே தங்கி இருந்தது. அண்மைக் காலத்தில் இந்த நிலைமை மாறிவிட்டது.

துணி, உடுப்பு ஏற்றுமதி இன்று அதிகரித்து விட்டது. 2002 இல் இதன் ஏற்றுமதி பெறுமதி 2,424 மில்லியன் அமெரிக்க டொலராகும். இது மொத்த ஏற்றுமதியில் 53 விழுக்காடாகும். மாறாக தேயிலை ஏற்றுமதி 660 மில்லியன். இரப்பர் 27 மில்லியன். தென்னை 84 மில்லியன் ஆகக் குறைந்துள்ளது.

ஸ்ரீலங்காவின் முக்கிய ஏற்றுமதி பின்வரும் நாடுகளுக்குச் செல்கிறது.

ஐக்கிய அமெரிக்கா - 34.0 விழுக்காடு ஐக்கிய இராச்சியம் - 14.2 விழுக்காடு இந்தியா - 7.00 விழுக்காடு கனடா - 1.00 விழுக்காடு அவுஸ்திரேலியா - 1.00 விழுக்காடு

புள்ளி விபரங்கள் கனடாவிற்கான ஸ்ரீலங்காவின் ஏற்றுமதி 1992 இல் 40.7 மில்லியனாக இருந்து 2000 இல் 137.05 மில்லியன் டொலராக அதிகரித்துள்ளது. இன்று இது மேலும் அதிகரித்திருக்கும் என உறுதியாக நம்பலாம். உணவுப் பொருட்கள், தைத்த துணிமணிகள் மற்றும் புடவைகள் (51.40 விழுக்காடு) இரப்பரால் செய்யப்பட்ட பொருட்கள் (17.1 விழுக்காடு) தேயிலை, கோப்பி, வாசனைப் பொருட்கள் ( 17.1) மரக்கறி மற்றும் மீன் (3.5 விழுக்காடு) ஆகியவை கனடாவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கனடா தனது மொத்த தேயிலை இறக்குமதியில் 10 விழுக்காட்டை ஸ்ரீலங்காவில் இருந்து இறக்குமதி செய்கிறது. இவற்றைவிட ஸ்ரீலங்கா விமான சேவையைப் பயன்படுத்துவதால் பெருந்தொகையான டொலர்கள் ஸ்ரீலங்காவின் மத்திய காப்பகத்துக்குப் போய் சேருகிறது.

எனவே பின்வரும் சிறிலங்காவின் உற்பத்தி பொருட்களையும் சேவைகளையும் ஒட்டு மொத்தமாகப் புறக்கணிக்குமாறு கனடிய தமிழ்மக்கள் உட்பட புலம்பெயர் தமிழர்களை அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

ஸ்ரீலங்கா விமான சேவை, ஸ்ரீலங்கா தயாரிப்பு உடுபுடவைகள், தேயிலை, மரக்கறி, கடலுணவு, பானம், ஜாம், பிஸ்கட்

இந்தப் பட்டியல் நிறைவானதல்ல. ஸ்ரீலங்கா தயாரிப்பு என வருகிற சகல பொருட்களையும் தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டும். மக்கள் இந்தப் பொருட்களைப் புறக்கணிக்கும் போது அங்காடிகள் அவற்றுக்கு உரிய மாற்றுப் பொருட்களை வேறு நாடுகளிடம் இருந்து இறக்குமதி செய்வார்கள் என்பது திண்ணம். மேலும் ஸ்ரீலங்கா சிங்களப் பகுதியில் முதலீடு செய்வதையும், சுற்றுலா போவதையும் ஸ்ரீலங்கா காப்பகங்களில் கணக்கு வைப்பதையும் தவிருங்கள்.

-தமிழ் படைப்பாளிகள் கழகம் - கார்த்திகை 2, 2006

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ரீலங்கா விமான சேவை, ஸ்ரீலங்கா தயாரிப்பு உடுபுடவைகள், தேயிலை, மரக்கறி, கடலுணவு, பானம், ஜாம், பிஸ்கட்

தேயிலையைப் புறக்கணிக்கச் சொல்கிறார்கள். இதனால் மறைமுகமாகப் பாதிக்கப்படப் போவது நாளுக்கு 100 ரூபார் ( கிட்டத்தட்ட 1 டொலர்) சம்பளத்துக்கு வேலை செய்யும் தோட்டத்தொழிலாளர்கள். அதிலும் ஏழை மலையகத் தமிழ் மக்கள்.

இன்று மரக்கறி விளைச்சல் என்றாலும் மலையகம் தான். யாழில் இருந்து உற்பத்திப் பொருட்கள் வராத சமயங்களில் மலையக மரக்கறிகள் தான் ஏற்றுமதிக்கும் உள்நாட்டுத் தேவைகளுக்கும் பயன்படுகின்றன.

கடலுணவைப் பொறுத்தவரை யாழ் மாவட்டம் மன்னார் மாவட்டம் முல்லைத்தீவு மாவட்டம் நீர் கொழும்பு காலி அம்பாந்தோட்டை ஆகியனவே முக்கியமான ஏற்றுமதி பெறுமதி வாய்ந்த உடன் கடலுணவுகள் கருவாடுகள் என்பனவற்றை உற்பத்தி செய்து தென்னிலங்கைச் சந்தைகளையும் ஏற்றுமதியையும் நம்பி வாழ்க்கையை ஓட்டுகின்றன.

ஜாம் கோடியல் போன்றனவற்றிற்கான மூலப்பொருட்கள் கூட வடக்கில் இருந்தும் கிழக்கில் இருந்தும் பெறப்படுகின்றன. இவற்றைப் புறக்கணிக்கக் கோருவதன் மூலம் ஏழை உற்பத்தியாளர்களின் வருமானத்தை குறைக்கும் செயலாகவே அது அமையும்.

வெளிநாடுகளில் இருந்து அனுப்பி பெருந்தொகைப் பணம் வைப்பிடப்படல், பெருந்தொகை முதலீடு செய்து தொடர்மாடிகள் கட்டுதல் விற்பனை செய்தல் வரி செலுத்துதல், ஆடம்பர வாகனங்களின் கொள்முதலும் வரி செலுத்தலும் என்று எம்மவர் வாரி வாரி வழங்கும் கணக்குகளை விட்டிட்டு ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் விடயங்களுக்கு அதிமுக்கியம் வழங்குவதைப் பற்றி சிறிது சிந்திக்கலாமே..! :roll: :idea:

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பின் புலத்தில் சிறிலங்காவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களைப் புறக்கணிக்க வேண்டும் என்ற எண்ணம் புலப்பெயர் நாடுகளில் வலுப்பெற்று வருகிறது. இதில் மலேசிய தமிழ் அமைப்புக்கள் முந்திக் கொண்டு தமிழீழத்தில் அப்பாவித் தமிழ்மக்கள் கொன்று குவிக்கப்படுவதைக் கண்டிக்கும் வகையில் ஸ்ரீலங்காவின் உற்பத்திப் பொருட்களை ஒட்டு மொத்தமாகப் புறக்கணிக்க வேண்டும் என்று உலகளாவிய தமிழர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளன.

தென் கிழக்கு ஆசிய நாடுகளில் மலேசியா சிங்கப்பூர் தாய்லாந்து மற்றும் தெற்காசியாவில் இந்தியா என்று சிறீலங்காவுக்கு வர்த்தகப் போட்டியுள்ள நாடுகளாக விளங்குகின்றன. மலேசியா தமிழர்களுக்கு ஆதரவாக மலேசியத் தமிழர்களை பாவிக்க நினைப்பதிலும் சிறீலங்காவுடனான வர்த்தகப் போட்டியில் அதை எப்படிக் கையாள்வது என்றுதான் சிந்தித்துச் செயலாற்றுகிறது. மலேசியா சிங்கப்பூர் என்பன சிறீலங்காவை தங்களின் வர்த்தகப் போட்டி நாடாகவே பார்த்து வருகின்றன.

சிறீலங்காவின் பொருளாதார பிரச்சனை என்பது தாயக மக்களை நேரடியாகத் தாக்கப் போகும் பிரச்சனை.

சிறீலங்காவுக்கு கடனடிப்படையில் ஆயுதம் வழங்க பல நாடுகள் தயாராக உள்ளன. எம்மவர்கள் கொள்வனவு செய்யும் பொருட்களால் வரும் ஒரு மாதத்துக்கான வருமானத்தில் ஒரு வாரத்துக்கான மல்ரிபரல் குண்டுகளைக் கூட சிறீலங்காவால் வாங்க முடியாது.

விமானச் சேவைகளைப் பயன்படுத்துவது சிறீலங்காவுக்கு அந்நியச்செலவாணியை அனுப்பி வைப்பது சிறீலங்காவுக்கு கோடை விடுமுறை கழிக்கச் செல்வது என்று புலம்பெயர்ந்த எம்மவர்கள் காட்டும் கூத்துக்களை நிறுத்தினால் அவை தென்னிலங்கை முதலீட்டாளர்களைப் பாதிக்கச் செய்யலாம். அதைவிடுத்து மரக்கறி கருவாடு தேயிலை மீன் உணவுகள் தானியங்களைப் புறக்கணிக்கச் சொல்வது நிச்சயம் அது எம்மவர்களின் உற்பத்திகளைக் கூட தாயகத்தில் நேரடியாகப் பாதிப்பதோடு..சிறீலங்காவில் எழும் எந்த வகையான பொருளாதார நெருக்கடியும் தமிழ் மக்கள் மீது மேலதிக பழுவைத் தரும் என்பதையும் சிந்திப்பது நல்லது.

சிறீலங்காவின் 4 முன்னணி அந்நிய செலாவணி வருவாய்கள், தைத்த உடுபுடவை (garment) ஏற்றுமதி, தேயிலை, உல்லாசப் பயணிகள் மற்றும் வெளிநாடுகளில் வேலை செய்பவர்கள் அனுப்பும் பணம்.

அத்தோடு சிறீலங்காவில இருந்து cermaic பொருட்களும் பெருமளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதில் சாப்பாட்டு கோப்பைகள், சிறு பொம்மைகள், மற்றும் wall tiles, floor tiles அடக்கம்.

றப்பர் பொருட்களாக வாகன ரயர்கள், தளபாடங்கள் பாத்திரங்கள் எனபன.

மத்திய கிழக்கு நாடுகளிற்கும் கணிசமான அளவு ஏற்றுமதி நடக்கிறது. அவற்றில் ஒரு குறிப்பிட்ட அளவில் பண்டமாற்றாக மசகு எண்ணை பெறப்படுகிறது.

சிறீலங்காவின் உல்லாசப் பயணிகள் வருகை பற்றிய நல்ல தகவல்கள்:

Sri Lanka registers second tourist arrivals-May 31, 2005

Daily News Sri Lanka

Despite the tsunami effect on the country's tourism industry last December,

167,511 tourist arrivals were witnessed for January to April only. This was

162,624 last year from January to April, an increase by nearly 5000, something

to cheer for the Industry considering the tsunami devastation.

"The tourism sector is one of the major foreign exchange earners of the

country. However the tsunami struck when the local tourism sector was rapidly

expanding. But even with the tsunami there were 38,187, 36,645, 50,418, and

42,261 tourist arrivals in January, February, March and April," SLTB Director

General S. Kalaiselvam told the Daily News.

"Tourist arrivals have started picking up. We can see that clearly through the

March and April figures. We are expecting more tourist arrivals with the

forthcoming Sri Lankan Travel Mart which will be held from June 3 to 5 at the

Sirimavo Bandaranaike Memorial Hall at the BMICH in Colombo. This will be a

major event in the Sri Lankan travel calendar in the aftermath of tsunami

catastrophe", he said.

According to him, there were 49,950 tourist arrivals for January and 43,584 for

February last year. It dropped by 17,950 and 6,939 compared to the previous

year's figure mainly due to the tsunami devastation. Total tourist arrivals for

2004 was 566,202.

Thirteen Western European countries accounted for the heaviest influx of

tourists from January to April this year, latest statistics from the Research and

International Affairs Division of the Sri Lanka Tourist Board (SLTB) revealed.

The highest number of tourist arrivals to Sri Lanka in the aftermath of the

tsunami cataclysm have been from the West European and South Asian

countries, the Daily News learns.

These include UK (26,211), Germany (13,071), France (9,636), Netherlands

(3,882), Italy (2,841), Switzerland (2,532), Sweden (1,509) and Norway

(1,437) which were among the 67,092 tourist arrivals up to April, injecting new

life to the industry, hit by the Boxing Day catastrophe.

The report also shows that there were 48,129 tourist arrivals from South Asian

countries from January to April this year including 34,575 from India, the

Maldives (8,250), Pakistan (3,843) and others (1,461).

Meanwhile, according to the SLTB's April arrival figures for 2005, after the

Western European and South Asian countries, there were 10 East Asian

countries including Japan (5,346), Malaysia (3,801), Singapore (3,516) and

China (2,214) totalling 22,047 tourist arrivals.

In addition, 15,231 North American tourists from USA (9,126) and Canada

(6,105), 8,787 from Australasian, 2,880 from Eastern Europe, 2,433 from

Middle East and 183 from Latin American and the Caribbean arrived in Sri

Lanka between January and April this year.

The SLTB has a target of receiving one million tourist arrivals by 2010.

இவற்றில் கணிசமான வருகையுடைய spending power கொண்ட நாடுகள் பிரித்தானியா, யேர்மனி பிரானஸ். கடந்த யூலை லண்டனில் நடந்த சிறீலங்கா உல்லாசதுறை ஊக்குவிப்பு நிகழ்வும் இதை உறுதி செய்கிறது. எனவே எமது negative campaign இற்கு உரிய கவனவமும் அதிக வருவாயை கொண்டு வரும் நாடுகளில் தான் இருக்க வேண்டும்.

சிறீலங்காவின் ஏற்றுமதியாளர்கள் பற்றிய மேலதிக தகவல்கள்

National Chamber of Exporters

www.nce.lk

இந்தப் புறக்கணிப்பை நீங்கள் யாழ்களத்தில் மட்டுமல்லாது, வெளியிலும் பகிரங்கமாக மேற்கொள்ளவேண்டும். செய்வீர்களா??

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பேப்பரில் வந்த 'சிறிலங்காவின் அன்னியச் செலாவணியும் புலம் பெயர் தமிழரும்'

http://www.orupaper.com/issue58/pages_K__8.pdf

  • 2 weeks later...

கவலை வேண்டாம் நெக்டோ சுவையில் இன்னுமோர் பாணம் வந்துள்ளது

BURN-Enegry drink JUST LIKE A NECTO

3drink4_15.jpg

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாம் புறக்கணிக்கவேண்டிய சிறீலங்கா இறக்குமதிகள் சில:-

லீலா தூள்

லீலா கட்டாச்சம்பல்

லீலா சோயாமீற்

லீலா மோர்மிளகாய்

லீலா சீனிச்சம்பல்

ஒரேஞ் பார்லி

இஞ்சி சோடா

லீலா அப்பளம்

நெஸ்டமோல்ட்

ராணி சோப்

பிஸ்கற் வகைகள்

வடகம்

மது பானம் சாராயம்,பியர்

மாசிக்கருவாடு

நல்லெண்ணை

பேபி சோப்

பேபி பவுடர்

பேபி ஓடிகலோன்

சக்கரை

சிவப்பு பச்சை அரிசி

குத்தரிசி

தேங்காய்ப்பால்மா

மேற்குறிப்பிட்டபொருட்களையு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.