Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் தொடர்ந்து முன்னேறும் விடுதலைப் புலிகள்

Featured Replies

யாழில் தொடர்ந்து முன்னேறும் விடுதலைப் புலிகள்

[சனிக்கிழமை, 12 ஓகஸ்ட் 2006, 00:38 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]

சிறிலங்காப் படையினரின் வலிந்த தாக்குதலை முறியடித்த விடுதலைப் புலிகள், யாழ். குடாநாட்டில் படையினரின் ஆக்கிரமிப்புப் பிரதேசங்களில் பல்வேறு பகுதிகளில் ஊடுருவி முன்னேறியுள்ளனர்.

சிறிலங்காப் படையினருடைய தடைவேலிகளைத் தகர்த்தவாறு விடுதலைப் புலிகள் முன்னேறிக் கொண்டு வருகின்றனர்.

முகமாலை கிழக்கு கண்டல்காடு முதல் மேற்கில் கிளாலி வரையான படை முன்னரணை தகர்த்த விடுதலைப் புலிகள், படையினரின் முன்னரண் வேலிகளையும் அரண்களையும் தகர்த்து அந்த வழியில் நகர்ந்து கொண்டிருக்கின்றனர்.

மேலும் யாழ். குடாநாட்டில் பல பகுதிகளில் படையினரின் பிரதேசங்களில் விடுதலைப் புலிகள் ஊடுருவியுள்ளார்கள்.

ஊடுருவல் மூலம் படையினருக்கு பலத்த இழப்புக்களை ஏற்படுத்தியபடி நகர்வுகள் நடந்து வருகின்றன.

யாழ். முகமாலையில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை படையினர் வலிந்த தாக்குதலை மேற்கொண்டனர். இதற்கு பதிலடி கொடுத்து வந்த தமிழீழ விடுதலைப் புலிகள், இரவு 9.30 மணியளவில் பலாலி படைத்தளம் மீது விமானத் தாக்குதலை நடத்தி இரு உலங்குவானூர்திகளை சேதமடையச் செய்தனர்.

இத்தாக்குதலை நடத்திவிட்டு விடுதலைப் புலிகளின் விமானங்கள் தங்களது நிலைக்கு பத்திரமாகத் திரும்பியுள்ளது.

இந்நிலையில் தொடர்ந்து விடுதலைப் புலிகள் யாழில் முன்னேறி வருகின்றனர்.

  • Replies 60
  • Views 13.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

உற்சாகத்தில் ஒவ்வொருவரும் புதுசுபுதுசாக ஒரே தலைப்பையே போடுறீங்களே? :lol:

  • தொடங்கியவர்

இன்றைக்கு ஒரு நாள் மோகன் அண்ணா மன்னிப்பார்! ஆனையிறவு தாக்குதல் கேட்டபோது ஏற்பட்ட உற்சாகத்தை விட உற்சாகமாக இருக்கு!

நேற்று எங்கள் மக்களின் கருகிய உடல் பார்த்தவர்களுக்கு நிச்சியம் இது வரும்

quote="hari"]இன்றைக்கு ஒரு நாள் மோகன் அண்ணா மன்னிப்பார்! ஆனையிறவு தாக்குதல் கேட்டபோது ஏற்பட்ட உற்சாகத்தை விட உற்சாகமாக இருக்கு!

நேற்று எங்கள் மக்களின் கருகிய உடல் பார்த்தவர்களுக்கு நிச்சியம் இது வரும்

  • கருத்துக்கள உறவுகள்

ஓஓ!! யாரங்கே!

நித்திலாவிற்கு ஒரே செய்திகளை ஆயிரம் தடவை அனுப்பி எழுத்துக் கூட்டிப் படிக்க வையுங்கள்!

இந்த மாதிரி செய்திகள் ஆயிரம் தரமல்ல லடசம் தடவை வாசித்தாலும் அலுக்காது தூயவன் :wink: :lol::D (நான் எழுத்துக்கூட்டி வாசிக்கிறதை இப்படியா பப்ளிக்கா சொல்லுறது :oops: )

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப எல்லோருக்கும் இரகசியமாகச் சொல்கின்றேன். நித்திலா எழுத்துக் கூட்டிப்படிப்பவர்!

நான் இப்ப சந்தோஸமாக இருப்பதால தூயவனுக்கு மன்னிப்பு கொடுத்துள்ளேன் அதால பிளைச்சு போங்க

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தவெற்றிச் செய்திகளை இணைப்பதை மட்டுறுத்துனர்களோ மோகனோ தடைசெய்யமுடியாது செய்தால் நாங்களும் யாழின் முன்னரங்குகளை உடைக்கவேண்டிவரும் முகமாலை அடிதான் :lol::D:lol:

  • தொடங்கியவர்

முற்றத்தில் விமானத்தாக்குதல் நடக்கும்! சொல்லிட்டன் :evil: :evil:

ஆர்டிலறியை மறந்திட்டீங்களே மன்னா :P

  • தொடங்கியவர்

அவைகளை வைச்சுதான் கல்கிஸ்சையை எனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்போகிறேன்!

  • தொடங்கியவர்

தென்மராட்சிவரை புலிகளின் படையணிகள் ஊடுருத் தாக்குதல். பிரதான வழங்கள் அனைத்து தடை.

தென்முனையில் ஆரம்பிக்கப்பட்ட சிறீலங்கா படையினரின் வலிந்த தாக்குதல்களை முறியடித்துக்கொண்டு முகமாலை முன்னரங்க இராணுவ நிலைகளையும் இராணுவ வேலிகளையும் இராணுவ மண் அணைகளும் விடுதலைப் புலிகளின் போராளிகளால் தகர்த்தெறியப்பட்டுள்ளன.

விடுதலைப் புலிகளின் படையணிகள் முகமாலையிலிருந்து இராணுவ முகாமையும் தாக்கியழித்து தென்மராட்சி நோக்கி நகர்வதாக போர் முனைச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதேவேளை முகமாலை கிழக்கு, கிளாலி மற்றும் நாகர் கோவில் முன்னரங்க நிலைகள் மற்றம் இராணுவ வேலிகளை உடைத்துக்கொண்டு விடுதலைப் புலிகளின் அணிகள் முன்னகர்ந்து செல்லுகின்றனர்.

மட்டுவில், மிருசுவில் பகுதிகள் வரை விடுதலைப் புலிகளின் அணிகள் ஊடுரு தாக்குதலைத் தொடுத்தவண்ணம் உள்ளன.

தென்மராட்சியில் அமைந்துள்ள சிறீலங்காப் படைத்தளங்களின் பிரதான வழங்கல்களுக்கான பாதைகளை விடுதலைப் புலிகளின் அணிகள் ஊடறுத்துள்ளதால் படையினருக்கான வழங்கல் மற்றும் தொடர்புகளும் முற்றாகத் துண்டிக்கப்பட்டுள்ளன.

விடுதலைப் புலிகளின் பதில் தாக்குதல்களில் படையினருக்கு உயிர் மற்றும் பொருள் பொருட் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. பலாலி இராணுவத் தளத்தினுள் பெருமளவு எறிகணைகள் விழுந்துவெடித்தால் படையினருக்கு பெரும் தேசங்கள் ஏற்பட்டுள்ளன.

தீவக மக்களையும் பாதுகாப்பு இடங்களுக்கு செல்லுமாறு அறிவிப்பு.

படை முகாம்களுக்கு அருகில் இருக்கும் மக்கள் பாதுகாப்பான இங்களுக்கு நகர்ந்து சென்று பாதுகாப்பைத் தேடுமாறு விடுதலைப் புலிகள் அடிக்கடி அறிவித்து வருகின்றனர்.

நேற்று கிளாலி, முகமாலை, எழுதுமட்டுவாள், கொடிகாமம், புலோப்பளை, மந்துவில், வரணி, கச்சாய், மீசாலைப் பொதுமக்களை பகுதிகளிலிருந்து வெளியேமாறு அறிவித்திருந்திருந்தனர்.

தற்பொழுது மண்டைதீவு, அல்லைப்பிட்டி, அரியாலை, கொழும்புத்துறை, பாசையூர், குருநகர், கோட்டைப் பகுதிகளிலிருந்து மக்கள் விலகி பாதுகாப்பான இடங்களை நோக்கி நகருமான விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.

pathivu.

யாழ் குடாநாட்டுக்கான அனைத்து தொடர்புகளும் துண்டிப்பு - இராணுவப் பேச்சாளர

யாழ் குடாநாட்டுக்கான் அனைத்து தொடர்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளதாக சிறீலங்கா இராணுவத்தினர் அறிவித்துள்ளனர். முகமாலையில் நேற்று ஆரம்பித்த பாரிய சமரை அடுத்து அடுத்து யாழ் குடாநாட்டுக்கான தொடர்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டுள்ளதா சிறீலங்காவின் இராணுவப் பேச்சாளர் மேஜர் உலாலி ராஜபக்ச தெரிவித்துள்ளார். எனினும் யாழ் குடாநாடு படையினரின் முழுமையான கட்டுப்பாட்டிலேயே உள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

pathivu.

  • தொடங்கியவர்

திரிகோணமலைபலாலியில் விடுதலைப் புலிகள் கடும் தாக்குதல்: பலர் பலி யாழ் நோக்கி முன்னேற்றம்!

ஆகஸ்ட் 12, 2006

யாழ்ப்பாணம்:

திரிகோணமலை துறைமுகம் மீது விடுதலைப்புலிகள் இன்று அதிகாலை நடத்திய பெரும் தாக்குதலில் கடற்படை முகாம்கள் அடியோடு அழிக்கப்பட்டன. பலாலி விமான தளம் மீது விமானம் மூலம் விடுதலைப் புலிகள் குண்டு வீசித் தாக்கியதால் முழு அளவிலான போர் மூண்டுள்ளது. இரு தாக்குதல்களையும் வெற்றிகரமாக மேற்கொண்ட புலிகள் தற்போது யாழ்ப்பாணத்தை நோக்கி வேகமாக முன்னேறி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்று அதிகாலை திரிகோணமலை துறைமுகம் மீது விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் பிரிவு கடும் தாக்குதலை மேற்கொண்டது. கடந்த 2002ம் ஆண்டுக்குப் பின்னர் இன்று தான் விடுதலைப்புலிகள் முழு அளவிலான மிகப் பெரிய தாக்குதலை மேற்கொண்டனர்.

திரிகோணமலை துறைமுகப் பகுதிகளில் உள்ள ராணுவம் மறறும் கடற்படை முகாம்களை விடுதலைப்புலிகளின் பீரங்கிக் குண்டுகள் துளைத்தெடுத்தன.

இந்த துறைமுகம் வழியாகத் தான் இலங்கை ராணுவத்திற்கும், கடற்படையினருக்கும் ஆயுத சப்ளை நடந்து வருகிறது. இதைத் தகர்க்க திட்டமிட்ட விடுதலைப் புலிகள் இன்று காலை தங்களது பெரும் தாக்குதலை மேற்கொண்டனர். சரமாரியான பீரஙகித் தாக்குதல்கள் மற்றும் ராக்கெட் வீச்சில் கடற்படை முகாம்கள் அடியோடு அழிக்கப்பட்டன. பல கடற்படை வீரர்கள் உயிரிழந்தனர்.

புலிகளின் ஆவேசத் தாக்குதலை சமாளிக்க முடியாமல் கடற்படை வீரர்களும், ராணுவ வீரர்களும் பின் வாங்கிச் சென்றனர். இதைத் தொடர்ந்து திரிகோணமலை துறைமுகத்தையும், யாழ்ப்பாணத்தையும் இணைக்கும் முக்கியச் சாலையை விடுதலைப்புலிகள் குண்டு வீசித் துண்டித்தனர்.

அதேசமயம், அரசு வசம் உள்ள யாழ்ப்பாணத்த்தில் உள்ள பலாலி விமான தளம் மீது, போர்விமானம் மூலம் விடுதலைப் புலிகள் சரமாரியாக தாக்கினர். பலாலி விமான தளத்தைச் சுற்றிலும் உள்ள 10க்கும் மேற்பட்ட ராணுவ நிலையங்கள் முற்றிலுமாக தகர்க்கப்பட்டன. பல வீரர்கள் கொல்லப்பட்டனர்.

புலிகளின் விமானத்தாக்குதலில் இலங்கை ராணுவத்தின் 2 போர் விமானங்கள் சேதமடைந்தன. இரு பெரும் தாக்குதல்களை வெற்றிகரமாக¬முடித்த விடுதலைப் புலிகள் திரிகோணமலை யாழ்ப்பாணம் இடையிலான தேசியநெடுஞ்சாலையை தங்களது வசம் கொண்டு வந்துள்ளனர். இதையடுத்து திரிகோணமலையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி புலிகள் வேகமாக முன்னேறிச் செல்வதாக கூறப்படுகிறது.

போர் மூண்டதைத் தொடர்ந்து நேற்று இரவு முதல் யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அங்கு குவிக்கப்பட்டுள்ள 40,000 ராணுவ வீரர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். கடும் சண்டையை எதிர்பார்த்து அப்பாவித் தமிழர்கள் யாழ்ப்பாணத்திலிருந்து வேகமாக வெளியேறி வருகின்றனர்.

யாழ்ப்பாணத்தை கைப்பற்ற புலிகள் திட்டமிட்டுள்ளது தெரிய வந்துள்ளது. தமிழர்களின் கலாச்சார தாயகமான யாழ்ப்பாணத்தை மீட்க முழு அளவில் புலிகள் குதித்துள்ளதால் இலங்கை அரசு கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது.

இதுவரை இல்லாத அளவுக்கு விமானம் மூலம் மிகப் பெரிய தாக்குதலை விடுதலைப் புலிகள் மேற்கொண்டுள்ளதும் இலங்கையை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதற்கிடையே, தங்களது அனைத்துப் படையினரையும் போரில் ஈடுபடுத்தியுள்ளதாக விடுதலைப் புலிகளின் ராணுவ செய்தித் தொடர்பாளர் இருசய்யா இளந்திரையன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், எங்களது வீரர்கள், மாலுமிகள், விமானப்படை வீரர்கள், கடற்படை வீரர்களை முழு அளவில் பயன்படுத்தி எங்களது தாயகத்தையும், எங்களது மக்களையும் காப்போம்.

பலாலி விமான தளம் மீது எங்களது போர் விமானம் தாக்குதல் நடத்தியுள்ளது. அங்கு ராணுவத்திற்கு பெரும் நாசம் ஏற்பட்டுள்ளது. ராணுவத்தின் வசம் உள்ள யாழ் பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கிளிநொச்சி மாவட்டத்திற்கு அவர்கள் தப்பிச் சென்ற வண்ணம் உள்ளனர்.

தப்பிச் செல்லும் தமிழ் மக்கள் மீது இலங்கை ராணுவம் கொடூரமாக தாக்குதல் நடத்தி வருகிறது என்று கூறினார் இளந்திரையன். தற்போது திரிகோணமலை யாழ்ப்பாணம் இடையிலான ஏ9 நெடுஞ்சாலையில் புலிகள் தரைமார்க்கமாக¬முன்னேறி வருகிறார்கள். யாழ்ப்பாணத்தை ஒட்டியுள்ள எல்லைப் பகுதிகளிலும் விடுதலைப் புலிகள் ராணுவத்துடன் கடும் சண்டையில் ஈடுபட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் கடற்கரைப் பகுதிகளிலும் கடும் சண்டை நடந்து வருகிறது. ¬கமலை பகுதியில் உள்ள ராணுவ முகாம்கள் முற்றிலும் தகர்க்கப்பட்டு விட்டதாக புலிகள் தரப்பு தெரிவித்துள்ளது. விரைவில் யாழ்ப்பாணத்தை நெருங்கி விடுவோம் என புலிகள் உறுதியாக தெரிவித்துள்ளனர்.

ஆனால் புலிகளின இந்த செய்தியை இலங்கை ராணுவம் மறுத்துள்ளது. பலாலி விமான தளம் ராணுவத்தின் முழுக் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. சண்டை நடந்து வருகிறது. ஆனால் புலிகளின் விமானம் தாக்குதலில் ஈடுபடுத்தப்பட்டதாக கூறப்படுவது தவறான செய்தி என்று ராணுவம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளபகுதிகளில் வசிககும் தமிழர்கள் தென்மராச்சி பகுதிக்கு இடம் பெயர்ந்து செல்லுமாறு விடுதலைப் புலிகளின் வானொலி கேட்டுக் கொண்டுள்ளது. தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் இலங்கை ராணுவம் தாக்குதல் நடத்தும் அபாயம் இருப்பதால் உடனடியாக மக்கள் அங்கிருந்து வெளியேறு மாறும் அது கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும், எழுத்துமடுவல், புலோ பல்லாய், கிலாலி, கொடிகாமம், கச்சை, வரனி ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் அங்கிருந்து வெளியேறி விடுமாறும் விடுதலைப் புலிகளின் வானொலி எச்சரித்துள்ளது.

புலிகள் தங்களது முழு பலத்துடன் தாக்குதலில் இறங்கியுள்ளதால், இலங்கையில் முழு அளவில் போர் மூண்டுள்ளது.

காங்கேசந்துறை கடற்படைத்தளம் கடுமையான ஆட்லறித் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக பதிவு.கொம் சொல்கிறது.

அரச ஊடகங்கள் இச்செய்திகள் தொடர்பில் மெளனம்.

சர்வதேசச் செய்தி ஊடகங்கள்...இரு தரப்புச் செய்திகளையும் பிரசுரித்து வருகின்றன.

அப்பாவி மக்களின் உயிரிழப்புக்களை தடுத்து..போராளிகளின் பாதுகாப்பையும் உறுதி செய்தபடி வெற்றிகள் பெறப்படட்டும்..!

தலைவர் சொல்லுறன் எல்லாரும் கேட்டு நடவுங்கோ, என்ன அங்கால ஒரு பார்வை ஒழுங்காச் சண்டை பிடியும் சரியோ,

லயினில ஒழுங்கா நில்லுங்கோ, தலையைத் தூக்காதேயுங்கோ,

இன்னும் அன்சு நிமிசத்தில ஒரு கோபி குடிச்சிட்டு வந்து மிச்சக் கட்டளைய கணனியில தட்டுறன்..........

  • தொடங்கியவர்

இலங்கையில் சக்தி டிவி உலக செய்திகளை அழகாக சொல்லிக்கொண்டு இருக்கு! இந்த செய்தியில் மௌனம்! அதில் இருந்து தெரிகிறது பயங்கர அடி விழுகிறது என்று!

இந்தாங்கோ சுடச் சுட தமிழினி யாழ் நிலவரம் சொல்லுறா?

யாழ்பாணத்திற்கான கைத்தொலைபேசி தொடர்புகள் யாவும் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில் சற்று முன்னர் வதிவிடத் தொலைபேசியூடாக தொடர்பு கொண்ட ஒரு நண்பரின் தகவலின் படி மண்டைதீவுப் பகுதியை தமது பூரண கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ள விடுதலைப் புலிகள் தற்போது யாழ் நாகர்ப் பகுதியில் காணப்படுவதாககும், தனது வீட்டிற்கு முன்னால்(திருநல்வேலி-நல்லூர்) எமது போராளிகளை காணக்கூடிடயதாக இருந்ததாகவும், இராணுவத்தின் எறிகனை தமது வீட்டிற்கு அருகில் விழுந்து வெடித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

எழுதியவர்: தமிழினி @ 9:18 PM

http://cinthanai-sei.blogspot.com/2006/08/...og-post_11.html

At 11:07 PM, தமிழினி said...

பருத்தித்துறை கடற்படை முகாம் பாரிய தாக்குதலுக்குள்ளாகியிருப்ப

At 11:09 PM, தமிழினி said...

மிருசுவில், மீசாலைப் பகுதிவரை புலிகள் ஊடுருவியிருப்பதாக பதிவுஇணைத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது

நண்பர்களே.

எதிரிகளும் செய்திகளை பலவழிகளில் பெற முயற்சிக்கலாம். Instantaneous updates கொஞ்சம் தவிர்கலாமே.

இலங்கையில் சக்தி டிவி உலக செய்திகளை அழகாக சொல்லிக்கொண்டு இருக்கு! இந்த செய்தியில் மௌனம்! அதில் இருந்து தெரிகிறது பயங்கர அடி விழுகிறது என்று!

மன்னா இந்த இணையத்தளத்திலும் உடனுக்குடன் செய்திகள் தரப்படுகின்றன.

http://www.athirvu.com

சிறீலங்கா அரசுச் செய்திகளின் படி தங்களில் 3 அதிகாரிகள் உட்பட 26 படையினர் பலி என்றும்..புலிகளின் தாக்குதல்கள் அனைத்தும் முறியடிக்கப்பட்டு..யாழ் குடா தங்களின் பூரண கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் சொல்லி இருக்கின்றன.

திருமலைத் தாக்குதலில் ஒரு சிப்பாயும் ஒரு பொதுமகனும் பலியாகி உள்ளதாகவும் சொல்லி இருக்கின்றனர்.

இதற்கிடையே நோர்வே சிறப்புத் தூதரைச் சந்தித்த இராணுவத் தளபதி..யுத்தத்தை நிறுத்துவது பற்றி ஆக்கபூர்வமான பதிலளிக்கவில்லை என்றும்..17 மனிதாபிமானப் பணியாளர்கள் படுகொலை விசாரணை தொடர்பில் இராணுவத்தின் ஒத்துழைப்பும் பெரிதாகக் கிடைக்கவில்லை என்றும் செய்திகள் கூறுகின்றன..!

இதற்கிடையே மணலாறு, மாவிலாறு பகுதியிலும் கடும் சண்டை நடக்கிறன. இராணுவம்..ஓமந்தை..மடு..போன்ற வன்னிக்கான தெற்கு நுழைவாயில்களையும் அடைத்துவிட்டது..! இதனால் வன்னியில் பெரும் பொருளாதார நெருகக்டி ஏற்படக் கூடும்..!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மன்னா இந்த இணையத்தளத்திலும் உடனுக்குடன் செய்திகள் தரப்படுகின்றன.

http://www.athirvu.com

இதற்கிடையே மணலாறு, மாவிலாறு பகுதியிலும் கடும் சண்டை நடக்கிறன. இராணுவம்..ஓமந்தை..மடு..போன்ற வன்னிக்கான தெற்கு நுழைவாயில்களையும் அடைத்துவிட்டது..!

இப்ப தான் தொலைநகல் வந்து சேர்திருக்கு போல அங்கால இருந்து :lol::D:lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.