Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆன‌ந்த‌ ச‌ங்க‌ரிப் பையா அவர்களிற்கு கடிநொடியின் அன்பு மடல்: “சங்கரிக்கே சங்கா”

Featured Replies

  • ஆன‌ந்த‌ ச‌ங்க‌ரிப் பையா அவர்களிற்கு கடிநொடியின் அன்பு மடல்: “சங்கரிக்கே சங்கா”

    SRI LANKA 1


    உங்களிற்கு தமிழ் கூட்டமைப்பு சார்பாக வடமாகாண தேர்தலில் போட்டியிடுவதற்கு சீட் கிடைத்ததும், எமக்கு ஒரு நிமிடம் தலை சுத்தி மயங்கிவிட்டோம் ஐயா. ஐயா நீங்கள் வருடம் 2005, 2006 காலப்பகுதியில் இலங்கை அரசாங்கத்தின், உலகம் சுற்றும் வாலிபனாகத் தான் இருந்தனிங்கள்.

    அந்த காலப் பகுதியில் இலங்கை அரசாங்கத்தால் மற்ற நாடுகளில் ஒழுங்கு செய்யப்பட்ட கூட்டங்களில், ஐயா நீங்கள் தமிழ் ஈழ போராட்டத்தையும் தமிழ் மக்களையும் கேவலப்படித்தி சிங்கள மக்களை சந்தோசப் படுத்தி பேசினதுகள் ஞாபகம் வருதோ ஐயா. அதிலை நீங்கள் சொன்ன வார்த்தைகள் நான் தமிழனாக பிறந்ததுக்கா கேவலப்படுகிறேன் என்றும் மற்றும் சிங்கள மக்கள், தமிழ் மக்களிற்கு எந்த துரோகமும் செய்யவில்லையென்று சிங்கள மக்கள் முன்னாடி சிங்கள அரசாங்கம் சொன்ன வேலையை சந்தோசமாக செய்து முடித்துக் கொடுத்தீங்கள் ஐயா.

    அந்த நேரத்தில் அவர்கள் கொடுத்த பணத்துக்காக தானே ஐயா? அல்லது உங்களிற்கும் கூட்டமைப்பு தலைவர் பதவி கிடைக்கவில்லையோ என்ற காரணத்துக்காகவா?அல்லது நீங்கள் என் எம் பெரேரா மற்றும் இடதுசாரித்தளைவர்கள் காலம்முதல் செய்துவந்த கட்சிதாவும் பாரம்பரியத்தினாலா (நீங்கள் சொந்த வாழ்க்கையிலேயே ஒரேயிடத்தில் இருக்காதவர் என்பது ஊர் அறியும்)

    ஆனாலும் உங்களிற்கு வருடம் 2006 காலப்பகுதியில் சிங்கள அரசாங்கத்தின் முயற்சியால் சன்மானமாக UNESCO நிறுவினர்களிடம் இருந்து, நவம்பர் மாதம் 16ம் திகதி 2006 ஆம் வருடம் பிரஞ்சு தலை நகர் பாரிஸ்லில் $100,000 மற்றும் தமிழ் போராட்டத்தை காட்டிக் கொடுத்ததுக்கு சான்றிதழும் கிடைத்தது தானே ஐயா.அந்தப் பணத்தையும் கூ ட்டணியின் தலைமையகம் விற்ற காசையும் கொண்டுதானே கடந்த பாராளமன்ற தேர்தலில் வீராப்பு காட்டினீர்கள் உங்கள் பணத்தில் இந்தியா சென்றுவந்த இளம் பட்டதாரிகள் சிலர் காவடி எடுத்தார்களே அனைத்தும் முடிந்தபின் மோட்டுதமிழ் சனம் என்று திட்டித்தீர்த்தீர்களே இவை எதையும் நீங்கள் மறந்தாலும் நாம் மறக்கமாட்டோம்

    நீங்கள் இவ்வளவும் செய்த பிறகும் எந்த முகத்தை வைத்து தமிழ் மக்களிடம் வாக்கு கேட்கப்போறிங்கள் ஐயா?

    எமது கேள்வி என்னவென்றாள் நீங்கள் ஏன் சிங்கள மக்களின் தொகுதியில் நின்று அவர்களின் ஆதரவோடு பாராளுமண்றம் செல்ல முயற்சியுங்கோ? உங்களிற்குத்தானே தமிழன் என்று சொல்ல கேவலப் படுகின்றீர்கள். ஏன் உங்களிற்கு தமிழர்களின் வாக்குக்கள்?

    நான் நினைத்தேன் நீங்கள் மானமுள்ள சிங்கள பரம்பரையை சார்ந்தவர் என்று. ஐயா நீங்கள் பிறந்த இனத்துக்கோ அல்லது உங்களிற்கு பிடித்த இனத்துக்கோ விசுவாசமாக இருங்கள். நாம் அதை பிழையென்று சொல்லவில்லை.

    எமக்கு தெரியும், ஐயா உங்களிற்கு கிளிநொச்சி உடும்பு இறைச்சி கறி என்றால் கொள்ளைப் பிரியம் என்று. அதுதான் இந்த வயதிலும் இறைச்சிக்காக வேட்பு மனு கொடுத்தீங்களோ?

    ஆனால் தழிழ் மக்களை முட்டாள்கள் என்று நினைத்து விடாதீர்கள். அவர்கள் யாரை தேர்தலில் வெற்றியடைய வேணும் என்று முடிவேடுப்பார்கள். தமிழ் மக்கள் உங்களையும் நீங்கள் நிறுத்திய ஆட்கடத்தல்மன்னன் மற்றும் பதவிப் பச்சோந்தி அதிகாரமொகத்தால் அண்ணனால் அனுப்பிவைக்கப்பட்ட அப்பாவித்தங்கை தவிர்ந்த மற்ற கூட்டமைப்பு வேட்பாளர்களை வெற்றி அடைய செய்வார்கள்.

    ஐயா இன்னுமொரு விடயம் நீங்களும் உங்களுடன் திரிந்த அரங்கம் அமைத்து காட்டிக்கொடுத்து கப்பம்வாங்கிய கூட்டிட்க்கொடுத்த கூட்டத்திநரும் கூட்டமைப்பிலா உங்கள் கையாள் ஈ பி ஸ்ரீதரனுக்கு ஒரு சீட் குடுக்க எண்ணினீர்களா ஏன் கொடுக்கவில்லை கடத்தல் மன்னனின் காசு கண்ணை மறைத்ததா உங்கள் கையாள் உரிய இடத்துக்கு தாரத்தை தாரைவார்த்துள்ளார் கவலைப்படவில்லையா

    ஐயா உங்களிற்கு தமிழ் மக்களின் வாக்குத் தேவையென்றாள் நீங்கள் ஒட்டு மொத்த தமிழ் மக்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும். தமிழ் இனத்தை கேவலப்படுத்தியதற்கும் மற்றும் காட்டிக் கொடுத்ததுக்கும்.

    ஐயா, எமக்கு ஒரு சந்தேகமும் இருக்குது. எப்படி உங்களை தமிழ் கூட்டமைப்பு, வேட்பாளராக தெரிவு செய்தது? இதிலை ஒரு பின்னணி இருக்குதோ ஐயா. உங்களின் அடியாள் பரந்தன் ராஐனின்(ENDLF) முயற்ச்சியால் இந்தியாவின் ஆதரவோடை, எமது தழிழ் கூட்டமைப்பை நிற்ப்பந்தித்தார்களா? அல்லது உங்களின் குடும்ப வாரிசுகளின்னுடாக கிடைத்த வெற்றியா?(எந்தக்குடும்பம் என்று விடயம் தெரிந்தவர்கள் புரிந்துகொள்வார்கள் )

    (ஐயா உங்களில் யான் கொண்ட அக்கறை மிகுதியால் சில சிந்திக்க வைக்கும் பின் இணைப்பு நாடாலமன்றத்தேர்தல் 2010 இல் உங்கள்கட்சிக்குகிடைத்தவாக்கு 9223 மாநகரசபைத் தேர்தலில் கிடைத்தவாக்கு 1007 விருப்புவாக்கு 427)

    ஐயா உங்களின் பதிலை எதிர் பார்த்து சங்கோடு காத்திருக்கும் ஒரு தமிழச்சி

    (கடிநொடி).

    sinnaththambypa@gmail.com

    நன்றி  Shritharan Sarangan முகனூல் பக்கம் 

 

Edited by யாழ்அன்பு

  • கருத்துக்கள உறவுகள்

உதுகளுக்கு, கடிதம் எழுதி என்ன பிரயோசனம்.
காட்டிக் குடுக்கிறதை... எல்லாம், காட்டிக் குடுத்துப் போட்டு....
சாகிற வயசிலை... நல்ல பிள்ளையாய்.. மேடையிலை, தானும், ஒரு மனுசன் என்று குந்தியிருக்குது, சூப்பிரமணிய சாமி சங்கரி.

  • கருத்துக்கள உறவுகள்

உதுகளுக்கு கடிதம் எழுதி.. அது மூளையில உணர்ச்சியைத் தூண்டி.. உருப்படியா சிந்திக்க வைச்சு.. ஏதாவது நல்லது நடக்கும் என்று நினைக்கிறீங்க..! ஐயோ ஐயோ.. அப்படி ஏதாவது நடக்க முதல் உலகம் அழிஞ்சு போயிடும்..! :lol::D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஆன‌ந்த‌ ச‌ங்க‌ரிப் பையா... என்று,
தலைப்பை மாத்தவும்... யாழன்பு.
இந்த, *************** ... ஐயா என்று சொல்ல எப்படி மனம் வந்தது.

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

விளக்குமாறுக்கு, குஞ்சம் கட்ட வெளிக்கிட வேண்டாம்.
அப்படி, இந்த மூதேவிகளுக்கு... கட்ட வெளிக்கிட்டால்... அடுத்த தலை முறையும் பாழ்.
சங்கரி, முதலில்...தன்னை... புனித தமிழ் பிறவியாக வரட்டும்.
அவர், இந்த ஜென்மத்தில்.... செய்த பாவத்துக்கு...
அகராதியில்... தண்டனை இல்லை.
சாகிற வயசிய‌லை.., அழுந்திச் சாக‌ வேணும்.

 

Edited by தமிழ் சிறி

உதுகளுக்கு, கடிதம் எழுதி என்ன பிரயோசனம்.

சங்கரிப் பையன் பால்குடி பையன்களுக்கு  எழுதிய கடிதங்கள் அந்த மாதிரி .

சங்கரிப் பையன் பால்குடி பையன்களுக்கு  எழுதிய கடிதங்கள் அந்த மாதிரி .

 

ராஜபக்ச கொலைகாரக் கும்பலை பால்குடி பையன்கள் என்று எழுதிப்போட்டு இலங்கைப் பக்கம் போற ஐடியா இல்லையோ?

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.