Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மந்துவில் வான்தாக்குதல் தவறானது

Featured Replies

மந்துவில் பகுதியில் நடைபெற்ற வான்படைத் தாக்குதலில் 21 மக்கள் கொல்லப்பட்ட செய்தி தவறானது.

செஞ்சோலை மீதான தாக்குதல் செய்தியின் இறுதியில் செஞ்சோலை தாக்குதல் போன்று 1999ம் ஆண்டு மந்துவில் பகுதியில் நடைபெற்ற சம்பவத்தையே தமிழ்நெட் தனது செய்தியில் குறிப்பிட்டிருந்தது.

அதனை பதிவு இணையத்தினர் தவறாக விளங்கிவிட்டார்கள் போல தெரிகிறது. பதிவின் செய்தியை நிதர்சனமும் பிரசுரித்து மக்களை குழப்பியுள்ளன என நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நடந்தது அதேதான்.

கொஞ்சமும் பொறுப்புணர்வு இல்லாமல் செயற்படுகின்றார்கள்.

யுத்தச் செய்திகள் என்ற பேரில் தருவது போல இப்படியானவற்றையும் எழுந்தமானத்துக்கு விழுந்தடித்து போட்டுக்கொண்டிருக்கிறார்

இப்படியான மிகைப்படுத்தல்களாலேயே உண்மையான இளப்புக்களும் வெளிநாட்டு ஊடகங்களால் சந்தேகக் கண்களோடு பார்க்கப் படுகின்றன.

இதுபோன்று பல பொய்யான அல்லது கற்பனை செய்திகளை வெளியிடுவதன் மூலம் இவர்கள் தங்களை தாங்களே தரம் இறக்கிறார்கள்.

இல்லை இந்த தகவலை ரி.ரி.என் முதன் முதல் அறிவித்து இந்த செய்தியை ஜ.சி.ஆர்.சி எனப்படும் ஜஆர்சிகள் மூலம் உறுதிப்படுத்தியது. அதை வைத்து பதிவும் நிதர்சனமும் போட்டது ஆனால் ஒருவர் ரி.ரி.என்ல் கைக்கும்பொது கிபிர் வருது சுத்தது குத்துது எண்ட உடல் தொலைபேசி கட்டாகிவிட்டது.

ஆனால் நான் மந்துவிலுக்கு தொடர்பெடுத்தன் ஏதோ குண்டு வெடித்ததாகவும் பல உடல்கள் சிதறி கிடப்பதாகவும் தெரிவிகபட்டது.

நான் நினைக்கிறன் இங்கை கனபேருக்கு நிதர்சனத்திலை கடுப்பு போல

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நடந்தது அதேதான்.

கொஞ்சமும் பொறுப்புணர்வு இல்லாமல் செயற்படுகின்றார்கள்.

யுத்தச் செய்திகள் என்ற பேரில் தருவது போல இப்படியானவற்றையும் எழுந்தமானத்துக்கு விழுந்தடித்து போட்டுக்கொண்டிருக்கிறார்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குடுவன்,

அப்ப என்னத்துக்கு முதல் போட்ட செய்தியைத் தூக்கி ஒழிச்சு வைக்கவேணும்?

கேட்டா 'காக்கா கொண்டு போச்சு' எண்டு சொல்லுவினமோ?

தென்மராட்சி மந்துவிலுக்குத் தொடர்பெடுத்தீர்களா?

அல்லது புதுக்குடியிருப்பு மந்துவிலுக்கா?

உண்மையில் அப்படியொரு தாக்குதல் நடந்திருந்தால் அதைச் சரியான முறையில் வெளிக்கொணரவேண்டியது கடமையே. இதென்ன செய்தியைப் போடுவதும் பிறகு தூக்குவதுமாக?

http://www.nitharsanam.com/?art=20142

அந்தச்செய்தி இப்போதும் உள்ளது....

தொலைபேசியில் ஒருவருடன் இன்று கதைக்கும் போது மந்துவில்லில் நடந்தது உண்மை எனச்சொன்னார் அங்குள்ள தன் உறவினருடன் தொடர்பு கொண்டதாகவும் அதன் மூலம் அறிந்தாதாகவும் ஆனால் விரிவாக எதுவும் அறியமுடியவில்லை இணைப்பு துண்டிக்கப் பட்டுவிட்டதென்றும் சொன்னார் மீண்டும் இணைப்பிற்கு முயற்சிசெய்வதாகவும் சொன்னார் :roll:

  • தொடங்கியவர்

இல்லை இந்த தகவலை ரி.ரி.என் முதன் முதல் அறிவித்து இந்த செய்தியை ஜ.சி.ஆர்.சி எனப்படும் ஜஆர்சிகள் மூலம் உறுதிப்படுத்தியது. அதை வைத்து பதிவும் நிதர்சனமும் போட்டது ஆனால் ஒருவர் ரி.ரி.என்ல் கைக்கும்பொது கிபிர் வருது சுத்தது குத்துது எண்ட உடல் தொலைபேசி கட்டாகிவிட்டது.

ஐசிஆர்சி 1999ம் ஆண்டுத் தாக்குதலையே உறுதிப்படுத்தியதாக தமிழ்நெட்டில் எழுதியிருந்தது.

தேவையற்ற விதத்தில் புதுக்குடியிருப்பு மந்துவில் பழைய சம்பவத்தை தவறாக புரிந்து கொண்டு குறித்த ஊடகங்கள் போட்டிருக்கின்றன.

இந்தச் செய்தி உண்மையானால் ரிரின், பதிவு, நிதர்சனம் தவிர்ந்த ஊடகங்கள் இதனை வெளியிடவில்லை??

பலமுறை இவர்களின் தவறான தகவல்களை படித்து அதை நம்பி நொந்துபோனன். விடுதலைபுலிகளின் ஆரம்பகால தொலைக்காட்சியின் பெயரில் இணையதள முகவரியை வைத்துகொண்டு மிகவும் கீழ்தரமான வார்த்தை பிரயோகங்கள் செய்யபடுகிறது. இது மேலதிக மனவருத்ததை ஏற்படுத்துகிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயா, குடுவன் / குட்டுவன்.

பதிவில் அச்செய்தியைத் தூக்கிவிட்டார்கள். அதைத்தான் சொன்னேன். நிதர்சனத்தில் தூக்கவில்லையென்றால், பதிவிருக்கிருக்கும் விளக்கம்கூட அவர்களுக்கில்லையென்று நொந்துகொள்ள வேண்டியதுதான்.

செய்தியில் தென்மராட்சி மந்துவில் என்று போடப்பட்டுள்ளது.

நீங்கள் எந்த மந்துவில் பற்றி எங்கிருப்பவர்களிடம் கேட்டீர்கள்?

அவர்கள் எந்த மந்துவில் பற்றிச் சொன்னார்கள்?

ஐசிஆர்சி உறுதி செய்ததெல்லாம் அப்படியே தமிழ்நெற்றின் 99 ஆம் ஆண்டுச் செய்தியில் வந்துள்ளது.

சிங்களவர்களின் யுத்தச் செய்திகள், மக்கள் அழிப்புச் செய்திகள் தொடர்பில் அவர்களை நக்கலடிக்கவோ அவர்கள்மேல் கோபம் கொள்ளவோ எந்த அருகதையுமற்ற நிலைக்கு நாங்கள் சென்று கொண்டிருக்கிறோம்.

யுத்த வெற்றிகள் பற்றி எங்கள் ஊடகங்கள் தந்த செய்திகள், சிங்கள அரசின் புளுகுகளுக்குக் குறைந்தவையல்ல. (என்ன வித்தியாசமென்றால் அங்கு அரசாங்கம் பொய்சொல்கிறது. இங்கு புலிகள் சொல்லவில்லை, ஆனால் ஊடகங்கள் சொல்கின்றன)

இப்போது எமது தரப்பு அழிவுகள் பற்றிய செய்திகள் தொடர்பிலும் அப்படியே.

மக்களைக் குழப்பிக் கலங்கடித்த செய்தியை நீக்கும்போது ஒரு வருத்தமோ, திருத்தமோ வெளியிடாத கயமைத்தனத்தை என்னவென்பது?

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் ஊடகங்களை இலக்கு வைத்து அதன் நம்பத் தன்மையை கேள்விக்குறியாக்கும் இவ் விவாதம் சரியாகப் படவில்லை. அதுவும் இந்தக் காலப்பகுதியில்!

சிங்கள ஊடகங்கள், தமிழர் படுகொலைகளை திசைதிருப்பம் செய்யவும், பழிக்கவும் செய்கின்றபோது நமக்குள்ளேயே, சண்டை பிடிக்கும் இப்படியான விவாதங்கள் தேவையா?

அப்படியான விவாதங்கள் சமயத்தில், கருத்து எழுதும் ஆட்களைப் பார்க்கும் போது, அவர்கள் குறித்தான சந்தேகமும் எழுகின்றது. பிற தளங்களில் இத்தளங்களைப் போட்டுத் தாக்கியது மட்டுமல்ல, யாழில் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்துகின்றார்களோ என்ற ஜயுறவும் ஏற்படுகின்றது!

சரியாக சொன்னீர்கள் தூயவன்.

ஊடகப் போரில் தமிழினம் வீழ்ச்சியுறுகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது. எதுவானாலும் இன்றைய சமயம் சாடலுக்கு உரியதல்ல...

அப்படியே கவனத்தில் எடுக்கப் படவேண்டிய விடயமாக இருந்தால் அவ்வுூடகங்களுக்குத் தனிமடல் போட்டுச் சுட்டிக் காட்டுங்கள்!

தாயகத்தின் மரண ஓலத்தை இன்றைய காலத்தில் ஆற்ற வேண்டியநிலையில் இருக்கிறோம் கவனத்தில் எடுத்தால் நல்லது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்கள ஆங்கில ஊடகங்கள் அனைத்தும் அந்த சின்னஞ்சிறார்களை குழந்தைப்புலிகள் என புளுகுகிறார்கள் இவங்களின் அட்டகாசத்தை நிறுத்து எம்மிடம் ஒரு சிறந்த ஊடகம் வேண்டும் தமிழ் நெட்டையும் இவங்கள் நம்புகிறான்கள் இல்லை. ஆனந்தசங்கரியும் டக்ளசும் சொன்னால் அது வேதவாக்கு மோட்டுச் சிங்களவங்கள் திருந்தமாட்டாங்கள்

  • தொடங்கியவர்

தூயவன் தமிழ்நெட் செய்தியில் தெரிவிக்கப்பட்டதை பதிவு இணையத்தினர் தவறான முறையில் விளங்கி பரபரப்பாக வெளியிட்டதை இனங்கண்டதாலேயே அதனை களத்தில் தெரிவித்தேன்.

1999ம் ஆண்டு நடைபெற்ற சம்பவத்தை நேற்று நடைபெற்றதாக பொறுப்பற்ற விதத்தில் செய்தி வெளியிட்டு ஏற்கனவே சோகத்தில் இருந்த மக்களை மேலும் புண்படுத்தும் விதமாக அந்த ஊடகங்கள் நடந்து கொண்டுள்ளன. அதனைத் தெளிவு படுத்தவே இந்த விவாதத்தை ஆரம்பித்தேன். மற்றையபடி அவைகளின் நம்பகத்தன்மையை குலைக்க நான் முயலவில்லை.

நடைபெறாத சம்பவத்தை நடைபெற்றதாக எழுதி அவைகளே தமது நம்பகத்தன்மையை இழக்கின்றன என்பதே உண்மை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.