Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முல்லைத்தீவு படுகொலை: சென்னையில் இன்று வழக்கறிஞர்கள் ஆர்ப்பா

Featured Replies

முல்லைத்தீவில் சிறிலங்கா வான்படையின் கொடூர வான்குண்டுத் தாக்குதலில் 61 பாடசாலை சிறுமிகள் படுகொலை செய்யப்பட்டமையைக் கண்டித்து சென்னையில் இன்று வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.

சமூக நீதிக்கான வழக்கறிஞர் பேரவையின் சார்பில் சென்னையில் இன்று புதன்கிழமை முற்பகலில் விக்டோரியா நினைவு அரங்கம் முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சென்னையில் உள்ள தமிழ்நாடு தலைமை நீதிமன்றம், எழும்பூர் நீதிமன்றம், ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உள்ளிட்ட சார் நீதிமன்றங்களில் பணிபுரியும் வழக்கறிஞர்கள் பங்கேற்கின்றனர்.

http://www.eelampage.com/?cn=28227

  • தொடங்கியவர்

போராட்டம் இன்று காலை பேரேழுச்சியுடன் நடந்து முடிந்தது. கொலைகாரன் மகிந்த வைக்கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர் வழக்குரைஞர்கள். சன் செய்தி சேனலிலும் ஒளிபரப்பிவருகிறார்கள்.

இந்திய அரசே உடனே தலையிட்டு கொலைகளை நிறுத்து !

கொலைகாரன் மகிந்த ஒழிக !

சர்வதேச மன்றமே இலங்கை அரசை கண்டனம் செய் !

எங்கள் உறவுகள் கொல்லப்படுவதை நாங்கள் வேடிக்கை பார்க்க இயலாது !

போன்ற வாசகங்கள் தாங்கிய பதாகை ஏந்தி ஆர்ப்பாட்டம் நிகழ்ந்தது.

வரும் நாட்களில் தமிழ்நாடெங்கும் இப்படுகொலைக்கு எதிராக போராட்டங்கள் தீவிரமடையும் என்றே தெரிகிறது

  • கருத்துக்கள உறவுகள்

உங்களின் அன்புக்கு நன்றி இரத்த உறவுகளே!

நன்றி சகோதரங்களே எம் துக்கத்தில் பங்காற்றியதற்கு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி சகோதரங்களே எம் துக்கத்தில்

:?: :?:

வடிவு எல்லோரும் அப்படி அல்ல எம் சகோதரர்கள் அவர்கள் மத்திய அரசின் பிடிவாததுக்கு அவர்கள் என்ன செய்வார்கள் தமிழனுக்கு ஒன்று எண்டால் ஒவ்வொரு தமிழனும் துடிப்பான் அது இயற்கை ஏன் இந்த துரோககும்பல்களும் ஒருமுறை கலங்கீருக்கும் பின் எலும்புத்துண்டை கண்ட நாய் போல சிங்கள எசமானருக்கு வாலாட்டிகொண்டிருக்கும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மன்னிக்கனும் நான் தவறாக விளங்கிவிட்டேன:

  • தொடங்கியவர்

மன்னிக்கனும் நான் தவறாக விளங்கிவிட்டேன:

மன்னிப்பு எதற்கு வடிவு ?

உங்கள் துயர் கண்டு வருத்தமடையா விட்டால் நாங்கள் தமிழச்சிக்கு பிறந்து என்ன பயன்?

மனிதராய் இருந்தென்ன பயன்...........

தமிழக உறவுகளுக்கு எமது நன்றி.

தமிழக உறவுகளுக்கு எமது நன்றி.

தமிழக உறவகளே!

உங்கள் உணர்வுக்கு நன்றி

இதுபோன்ற உங்களின் எழுச்சிதான் வாக்ககளுக்காக எதையும் செய்யக்கூடிய தமிழ்த் தலைவாகள் என்று தம்மைத் தாமே சொல்லிக் கொள்பவர்களின் கண்களைத் திறக்க வைக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக உறவுகளுக்கு எமது நன்றி

முல்லைப் படுகொலையைக் கண்டித்து தமிழக சட்டமன்றம்- இந்திய நாடாளுமன்றத்தில் கண்டனத் தீர்மானம்: கவிஞர் அறிவுமதி வேண்டுகோள்

kandanaa16806_1.jpg

kandanaa16806_2.jpg

kandanaa16806_3.jpg

முல்லைத்தீவில் சிறிலங்கா விமானப் படையின் குண்டு வீச்சில் 61 பாடசாலை சிறுமிகளை படுகொலை செய்யப்பட்டமைக்குக் கண்டனம் தெரிவித்து இந்திய நாடாளுமன்றம் மற்றும் தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கவிஞர் அறிவுமதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முல்லைத்தீவுப் படுகொலையைக் கண்டித்து சென்னையில் சமூக, நீதிக்கான வழக்கறிஞர்கள் பேரவை இன்று புதன்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது.

சென்னை விக்டோரியா அரங்கம் முன்பாக நடைபெற்ற இப்போராட்டத்துக்கு பேரவையின் தலைவர் கே. பாலு தலைமை வகித்தார்.

இந்நிகழ்வில் கே. பாலு பேசியதாவது:

சர்வதேச போர் உடன்படிக்கையைத் தகர்த்தெறிந்து அப்பாவிக் குழந்தைகள் மீது சிங்கள இராணுவம் கொலைவெறித் தாக்குதலை நடத்தியுள்ளது கண்டிக்கத்தக்கது. அப்பாவித் தமிழ் மக்கள் மீதான இராணுவத் தாக்குதலை இலங்கை இராணுவம் உடனே நிறுத்த வேண்டும். இந்திய அரசு இதில் உடனே நதலையிட்டு தமிழ் மக்களின் உயிரிழப்பைத் தடுக்க வேண்டும். தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் இந்தப் பிரச்சனையில் ஒன்றுபட வேண்டும் என்றார் பாலு.

கவிஞர் அறிவுமதி:

பூக்களின் மீது நெருப்பைக் கொட்டுவது போல் முல்லைத்தீவு செஞ்சோலை பிஞ்சுக் குழந்தைகள் மீது குண்டுகளை கொட்டியிருக்கின்றனர்.

சிங்கள இனவெறி அரசின் இந்த படுபாதகச் செயலை தமிழ்நாடு முதல்வர் உள்ளிட்ட அனைத்து தலைவர்களும் கட்சி வேறுபாடு இல்லாமல் கண்டித்துள்ளனர். தமிழ் மக்களுக்கு எங்கு தீங்கு நடந்தாலும் தமிழகம் கொதித்தெழும் என்பதை தமிழினத் தலைவர்கள் மீண்டும் நிரூபித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் உள்ள சில ஊடகங்கள் இந்த துயரத்தை எந்த அளவுக்குப் பதிவு செய்திருக்க வேண்டுமோ அந்த அளவுக்குப் பதிவு செய்திருக்க வேண்டும். அப்படிச் செய்யாதது வருத்தமளிக்கிறது.

செஞ்சோலைப் பிஞ்சுகளின் மரண ஓலத்தை வெளிப்படுத்தும் வகையில் தமிழக அரசியல் கட்சிகள் தங்களது கட்சிக் கொடிகளை அரைக் கம்பத்தில் பறக்கவிட வேண்டும். சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் முல்லைத்தீவுப் படுகொலையைக் கண்டித்து கண்டனத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றார் கவிஞர் அறிவுமதி.

இந்தப் போராட்டத்தில் சமூகநீதிக்கான வழக்கறிஞர்கள் பேரவையின் தமிழ்நாடு செயலாளர் சாவணன், நிர்வாகிகள் வழக்கறிஞர் இராமலிங்கம், திரைப்பட இயக்குநர் புகழேந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

http://www.tamilwin.net/index.php?subactio...om=&ucat=1&

ஈரோட்டில் மகிந்த ராஜபக்ச கொடும்பாவி எரிப்பு

ஈரோட்டில் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் கொடும்பாவி உருவம் இன்று எரியூட்டப்பட்டது.

முல்லைத்தீவில் 61 பாடசாலை சிறுமிகள் படுகொலை செய்யப்பட்டமையைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பாரிய கண்டனப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கத்தின் நிர்வாகி பாவேந்தன் தலைமையில் 30-க்கும் மேற்பட்டோர் ஈரோட்டில் இன்று புதன்கிழமை மகிந்தவின் கொடும்பாவியை எரித்தனர். இதையடுத்து 30 பேரும் கைது செய்யப்பட்டனர்.

கொடும்பாவியை எரியூட்டமைக்காக இருவர் சிறையிலடைக்கப்பட்டனர். கோவையில் நேற்று செவ்வாய்க்கிழமை சிங்கள தேசியக் கொடி எரித்தமைக்காக இருவர் சிறையிலடைக்கப்பட்டனர்.

]http://www.eelampage.com/?cn=28240

இந்த அன்புக்காக எல்லாம் நண்றி சொல்லி அன்னியப்படுத்த விருப்பம் இல்லை... நெகிள்ந்துதான் போக முடிகிறது.... வடிக்க வார்த்தைகள்தான் வரவில்லை...!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.