Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு முதலமைச்சருக்கு நடந்த சோகம் ஆரம்பமே இப்படியா ?

Featured Replies

வடமாகாணசபையின் முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்டுள்ள சி.வி விக்னேஸ்வரன் மூன்று மணித்தியாலங்களுக்கு மேலாக வவுனியாவில் காத்திருக்கவேண்டிய சம்பவமொன்று நேற்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு திரும்பும் வழியிலேயே அவர் வவுனியாவில் காத்திருக்கவேண்டிய நிலை ஏற்பட்டது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணம் டில்கோ விடுதியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் விசேட கூட்டமொன்று திங்கட்கிழமை  நடைபெற்றது. இந்த கூட்டத்தை முடித்துக்கொண்டு விக்னேஸ்வரன் கொழும்புக்கு திரும்பிக்கொண்டிருந்தார்.

கொழும்புக்கு திரும்பிகொண்டிருந்த வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரனின் வாகன சாரதி  வவுனியாவிலுள்ள எரிபொருள் நிரம்பும் நிலையத்தில் வாகனத்தை எரிபொருள் நிரப்புவதற்காக நிறுத்தியுள்ளார்.

அங்கிருந்த ஊழியர்கள் அந்த வாகனத்திற்கு சுமார் 60 லீற்றர் வரை எரிபொருளை நிரப்பிக்கொண்டிருந்துள்ளனர்.

தற்செயலாக அவதானித்தபோது அந்த வாகனத்திற்கு பெற்றோலுக்கு பதிலாக டீசலை நிரப்பிக்கொண்டிருந்தமை கண்டுப்பிடிக்கப்பட்டது.

இதனையடுத்து அங்கிருந்தவர்கள் வாகனம் திருத்துனரை அழைத்துவந்து வாகனத்தின் எரிபொருள் தாங்கியை கழற்றி துப்பரவு செய்ததன் மீளவும் பொருத்தி பெற்றோல் நிரப்பினர்.

மூன்று மணிநேரத்திற்கு பின்னரே அவர் தனது பயணத்தை தொடர்ந்தார்.

இதேவேளை அவருடைய வாகனத்திற்கு பின்னால் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சரவணபவன், தேசியப்பட்டியல் நாளுமன்ற உறுப்பினர் எம். சுமந்திரன் ஆகியோரும் பயணத்தை மேற்கொண்டனர்.

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நெருக்கடியான நிலைமைக்கு முகம்கொடுத்திப்பதாக கேள்வியுற்று ஸ்தலத்திற்கு விரைந்த  வவுனியா பொலிஸ் தலைமைய பொறுப்பதிகாரி டி. கே. அபயரட்ண அவருக்கு தேவையான உதவிகளை மேற்கொண்டிருந்ததுடன் பாதுகாப்பினையும் வழங்கியிருந்தார்.

இதேவேளை அங்கு பிரசன்னமாகியிருந்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் பிரேமரட்ன சுமதிபால சி. வி. விக்னேஸ்வரனுக்கு கைலாகு கொடுத்து கலந்துரையாடியமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

vikkineshwaran.jpg
 
wikneshwaran2.jpg
 
wikkineshwaran4.jpg
 
 

இது சாதாரணமான ஒரு நிகழ்வு தான். இதை வைத்துக் கொண்டு அட இப்படியாப் போச்சே எண்டு ஆதங்கபபடும் அளவிற்கு இது செய்தியே அல்ல. 

 

அப்படி இதைச் செய்தியாக்குபவர்கள் ஒன்றில் பல்லியையும் பூனையையும் வைச்சு சகுனம் பாக்கிற ஆக்களாத் தான் இருக்கும். 

wikneshwaran2.jpg

 

இந்த படத்தை பார்க்க விக்கினேஸ்வரனுக்கும் தும்பிக்கை இருக்கு மாதிரி இருக்கு. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

wikneshwaran2.jpg

 

இந்த படத்தை பார்க்க விக்கினேஸ்வரனுக்கும் தும்பிக்கை இருக்கு மாதிரி இருக்கு. :lol:

 

உண்மை தான் அதைத் தான் நானும் சொல்ல நினைச்சன் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இது சாதாரணமான ஒரு நிகழ்வு தான். இதை வைத்துக் கொண்டு அட இப்படியாப் போச்சே எண்டு ஆதங்கபபடும் அளவிற்கு இது செய்தியே அல்ல. 

 

அப்படி இதைச் செய்தியாக்குபவர்கள் ஒன்றில் பல்லியையும் பூனையையும் வைச்சு சகுனம் பாக்கிற ஆக்களாத் தான் இருக்கும். 

 

தேர்தல் வெற்றி

கண்ணை  மறைத்துவிட்டது என்று சொல்லாமல் விட்டார்களே

அதே பெரிய விடயம் :(

இந்த செய்தியின் சரியான மூலம்: http://tamil.dailymirror.lk/pirasitta-seithi/83522-2013-09-23-19-16-32.html

எடுக்கப்பட்ட படங்களும் தமிழ் மிரரின் படங்கள்.

இவரை இதுவரையில் நேரில் கண்டதில்லை.. ஆனால் முன்னர் பார்த்த படங்களுக்கும் இதுக்கும் வித்தியாசம் அதிகம்.

 

இதில பார்த்தால் நல்லா வயதானமாதிரி  இருக்கு.  :huh:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.