Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தென்மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் கூட்டமைப்பு பரிசீலனை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
sumathiran-seithy-20130929.jpg

தென் பகுதியில் நடைபெறும் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பரிசீலித்து வருவதாக அதன் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். தெற்கில் உள்ள தமிழ் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவு வழங்குவார்கள் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு எதிராக அரசாங்கம் பாதகமான பிரசாரங்களை மேற்கொண்ட போதிலும் வடக்கு மாகாண சபைத் தேர்தலில் மக்கள் அமோக ஆதரவை வழங்கியுள்ளனர். அத்துடன் தென், மேல் மற்றும் ஊவா மாகாணங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பில் அங்குள்ள தமிழ் மக்களின் ஆதரவைப் பெறவேண்டும் என கூட்டமைப்பு எண்ணுகிறது.

  

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பாக அரசாங்கத்தின் அமைச்சர்கள் மக்களை தவறான முறையில் வழிநடத்தி, தவறான எண்ணத்தை தென் பகுதி மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளனர். அந்த மக்களிடம் உள்ள எண்ணத்தை மாற்ற இது சிறந்த வாய்ப்பாகும் என்றும் சுமந்திரன் கூறினார். மேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களுக்கு அடுத்த வருடம் தேர்தலை நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தென் பகுதியில் நடைபெறும் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டால் அந்த கட்சி தெற்கில் மாகாண சபைகளில் ஆசனங்களை கைப்பற்றும் முதல் முயற்சியாக அது அமையும்.

 

http://seithy.com/breifNews.php?newsID=93828&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முடிவு மனோவுடன் சேர்ந்து போடியிடணும். சமஸ்டிக்கு ஆதரவான சிங்கள கட்சிகளயும் சேர்க்கலாம். சுமந்திரன் மீது மேலும் நம்பிக்கை வளர்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல   தருணம்

மக்கள்  எல்லாப்பகுதியாலும் ஏமாற்றப்பட்டு

ஏக்கத்துடன்  உள்ளனர்

அமோக வெற்றி  பெறமுடியும்

Edited by விசுகு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு என்னமோ இது சரி என்று தோன்றவில்லை ....

தென் பகுதியில் குறிப்பாக மேல் மாகாணத்தில் தற்போது ஓரளவு காலூன்றி இருப்பவரும் தமிழ் தேசியக் 4ட்டமைப்பின் போராட்டங்களில் தொடர்ந்து கலந்து கொள்பவருமான மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணீயுடன் இணைந்து போட்டியிடுவதே சரியான முடிவாக இருக்கும். 

 

ஏற்கனவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு மனோ கணேசனின் ஜனநாயக மக்கள் முன்னணி தொடர்பில் மதில் மேல் பூனையாகவே இருந்து வருகிறது. கடந்த முறை நடைபெற்ற தேர்தல்களில் கூட நேரடியாக தமது ஆதரவ வழங்கத் தயங்கி வந்தது. எனினுமுமு; செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்டவர்கள் மனோ கணேசனின் கட்சிக்காகப் பீரச்சாரம் செய்தனர்.

 

அதை விடுத்து தனித்து போட்டியிடுவதன் மூலம் ஜனநாயக மக்கள் முன்னணி கைப்பற்றி வரும் கணிசமான வாக்குக்களையும் ஆசனங்களையும் இழக்க வைக்கவே இது உதவும்.

 

மாறாக இணைந்து போட்டியிடுவதன் மூலம் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்திக் கொள்வதுடன் பாராளுமன்ற ஆசனங்களைப் பெற்றுக் கொள்ளவும் உதவும்.....

ஐக்கிய தேசிய கட்ச்சியோடு இணைந்து இருக்கும் மனோ கணேசன் ஐயாவுடன்  தமிழ் தேசிய கூட்டமைப்பு  இணையாது தனித்து நிற்பதுதான் நல்லது...   தேசிய கட்ச்சிகளுக்கு கூட்டமைப்பு ஊறுகாயாக இருப்பது தமிழர்களுக்கு நல்லதல்ல...

ஐக்கிய தேசிய கட்ச்சியோடு இணைந்து இருக்கும் மனோ கணேசன் ஐயாவுடன்  தமிழ் தேசிய கூட்டமைப்பு  இணையாது தனித்து நிற்பதுதான் நல்லது...   தேசிய கட்ச்சிகளுக்கு கூட்டமைப்பு ஊறுகாயாக இருப்பது தமிழர்களுக்கு நல்லதல்ல...

 

தமிழ் தேசியக் கூட்டமம்பும் ஜனநாயக தேசீய முன்னணியும் இணைந்து தனித்து பொட்டியிடும் பட்சத்தில் சிறிய கட்சிகளுக்கான பிரதிநீதித்துவம் என்ற வகையில் கொழும்பு மற்றும் கம்பஹா பகுதிகளீல் கட்டாயம் ஆசனங்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.

 

தற்போதைய நிலையில் கண்டி மாவட்டத்தில் மனோ கணேசன் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணண்து போட்டியிட்டமையை நான் அரசியல் சாணக்கியம் என்றே கூறுவேன். காரணம் ஐக்கிய தேசியக் கட்சீயி;ல போட்டியிட்டதால் தான் மனோ கணேசனால் கண்டியில் தனது பிரதிநிதித்துவத்தைப் பெற் முடிந்தது.

 

அடுத்ததாக பதுளையில் (சரியாகத் தெரியவில்லை) தமீழர் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதற்காக மனோ கணேசன் இலங்கைத் தொழிலாளர் காங்கிரசிற்கு தனது ஆதரவ வழங்க முன்வந்து அந்த பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக் கொண்டார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.