Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அர­சாங்­கத்தை கவிழ்த்து தமி­ழீ­ழத்தை உரு­வாக்­கவே விக்னேஸ்வரன் திட்டம் தீட்டுகிறார்!

Featured Replies

CV_Sampanthan.jpgஅர­சாங்­கத்தை கவிழ்த்து, தனி தமி­ழீ­ழத்தை உரு­வாக்­கு­வ­தற்­கா­கவே விக்கி­னேஸ்­வரனின் திட்டமாகும் என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.

இதற்காகவே வட­மா­காண சபையின் முத­ல­மைச்­ச­ராக விக்னேஸ்வரன், ஜனா­தி­ப­தியின் முன்­னி­லையில் சத்­தியப் பிர­மாணம் செய்­ய­வுள்ளார்.

இதனை அர­சாங்கம் உட­ன­டி­யாக நிரா­க­ரிக்­க­வேண்டும் என்று எச்­ச­ரிக்கை விடுக்கும் தேசப்­பற்­றுள்ள தேசிய இயக்கம் கூட்­ட­மைப்பின் இம் முயற்சி நிறை­வே­றினால் ஆளு­நரின் அதி­கா­ரங்களை சவா­லுக்கு உட்­ப­டுத்தும் நிலை உரு­வாகும் என்றும் தெரிவித்துள்ளது.

தேசப்­பற்­றுள்ள தேசிய இயக்­கத்தின் பொதுச் செய­லாளர் டாக்டர் வசந்த பண்­டார இதனைத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வடக்கில் தேர்தல் நடத்தப்பட்டமையானது தமிழீழத்தை உறுதிப்படுத்தியுள்ளதாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார்.

ஜனநாயகத்தை நிலைநாட்டுவதாகக் கூறி அரசாங்கம் வடக்கில் தேர்தலை நடத்தியுள்ளதாகவும், இது நிரந்தர தமிழீழத்திற்கு வழிகோலியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வடக்குத் தேர்தலை நடத்த வேண்டாம் என தமது இயக்கம் அரசாங்கத்திற்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்த போதிலும் அரசாங்கம் அதனைக் கண்டுகொள்ளவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், எதிர்காலத்தில் நாட்டைக் கட்டிக்காக்கும் உறுதியான வேலைத் திட்டத்தை முன்வைக்கும் எந்தவொரு அரசியல் கட்சியுடனும் இணைந்துசெயல்படத் தயார் எனவும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் குறிப்பிடுவதைப் பார்க்க....
அரசாங்கத்தைக் கவிழ்த்து முழு ஸ்ரீலங்காவும்.... தமிழ் ஈழத்துக்குள் வரப் போகின்றது போலுள்ளது. நல்ல விடயம். :)

  • கருத்துக்கள உறவுகள்

என்னதான் இருந்தாலும் கூத்தமைப்பு ஒரு நல்ல விசயத்தைச் செய்திருக்கு, உந்தாள் விக்னேஸ்வரனை கண்டபடிக்குக் கைது செய்யமுடியாது, ஏனெண்டால் சட்டம் தெரிஞ்சவனைக் கைதுசெய்தால் பிரச்சனை புறவ்ழியால வந்திடும் எண்டு. அனால் அதுதான் தமிழர்களுக்குப் பின்னடைவை ஏற்படுத்தும். வடக்குக் கிழக்கு இணப்புப் போச்சு, காணி அதிகாரம் போச்சு, இனி என்னதான் இருக்கு உந்த கூழ்முட்டை மாகாணசபையில?

  • கருத்துக்கள உறவுகள்

என்னதான் இருந்தாலும் கூத்தமைப்பு ஒரு நல்ல விசயத்தைச் செய்திருக்கு, உந்தாள் விக்னேஸ்வரனை கண்டபடிக்குக் கைது செய்யமுடியாது, ஏனெண்டால் சட்டம் தெரிஞ்சவனைக் கைதுசெய்தால் பிரச்சனை புறவ்ழியால வந்திடும் எண்டு. அனால் அதுதான் தமிழர்களுக்குப் பின்னடைவை ஏற்படுத்தும். வடக்குக் கிழக்கு இணப்புப் போச்சு, காணி அதிகாரம் போச்சு, இனி என்னதான் இருக்கு உந்த கூழ்முட்டை மாகாணசபையில?

எல்லாம் போச்சுண்ணே போச்சு. இப்ப எல்லாரும் உங்களுக்கும் உங்கள் புலம்பெயர் வாய்வீரரையும் தான் எதிர்பார்த்து இருக்கிறார்கள். ஒபாமாவையும் கூட்டி கொண்டு ஒரு கப்பலில் போய், கிழிச்சிட மாட்டிங்க, கிழிச்சு.

சோல்பரியை இலங்கைக்கு அனுப்பி வைக்கும் போது அவருக்கு பல தெரிவுகள் கொடுக்கப்பட்டிருக்கவில்லை. அதாவது அவருக்கு இருந்த தெரிவு பிருத்தானிய ஜனநாய பாரளுமன்றத்தை பின்பற்றி அரசியல் அமைப்பு எழுதுவது மட்டும்தான் அவருக்கு கிடைத்த ஆணை.

 

பிருத்தானிய பாராளுமன்ற சம்பிரதாயம், நாள் ஒரு வண்ணம் பொழுதொரு மேனியாக, கடந்த சில நூற்றாண்டுகளாக,  மெல்ல மெல்ல பாரம்பரியங்கள் இணைந்து வளர்ந்த தொன்று. அதில் பல விடையங்கள் எழுத்தில் கூடப் போட்டில்லை. உதாரணத்துக்கு மந்திரி சபையில் தவறு நடந்தால் விசாரணை இன்றி மந்திரி பதவி விலகுவார். நாட்டை முன்னால் கொண்டு செல்ல முடியாமல் போய்விட்ட பிரதமர் ரோனி பிள்யர் பதவி விலகினார். இவற்றால்தான் எழுத்தில் இல்லாத பல ஜனநாய விடையங்கள் அங்கு பலமான நடை முறையில் இருக்கு. இதை காப்பி பண்ணி அந்த மேற்கு நாடுகளுக்கு 300 ஆண்டுகள் பின்னால்த் தங்கிப் போயிருப்பதாக கருத்தப்படும் தென் கிழக்காசிய நாடுகளில் ஒன்றான இலங்கைக்கு, சோல்பரிப் பிரபு அரசியல் அமைப்பு எழுதினால் அதன் பலன் இப்படித்தான் இருக்கும். இதைத்தான் 80 வருடங்களுக்கு முன்னர் இராமநாதன் சபையில் பேசின்னர்.

 

அந்த பிருத்தானிய பாராளுமன்ற முறையில் இருந்து இலங்கை இன்று மாறி, தாய் இளவரசிகள், மகள் இளவரசிகள் வந்து தலதா மாளிகையில் முடி சூட்டு விழாவுக்கு ஒத்திகை பாரிக்கிறார்கள் என்றல் இதை சிங்கள் மக்கள் விள்ங்கிக் கொள்ளமாட்டர்கள். அது சிங்கள மக்களின் விளக்கத்துக்கு ஏணி வைத்தாலும் எட்டாதது. ஆனால் விக்கினேஸ்வரன் கொழும்பை பிடித்து சிங்கள மக்களை அடிமைகளாக்கி ஆள துடிக்கிறார் என்று சம்பிக்க பேசினால் அதை கேட்டு இலகுவில் விள்ங்க்கிக்கொண்டுவிடுகிறார்கள். "அது எப்படி நடக்க முடியும்" என்பதை அவர்களுக்கு சம்பிக்க விளங்கப்படுத்த தேவை இல்லை. சந்திர மண்டலத்திலிருந்து அரசி வருகிறது என்றால் அதையும் ஏற்றுக்கொண்டுதான் வாக்களிக்கிறார்கள்.  அவர்களுக்கு விளங்கத்தக்கது சம்பிக்க போன்றவர்களின் பேச்சுக்கள் தான்.

 

சம்பிக்க, தவறுக்கு மேலாக தவறுகள் தொடந்து கொண்டிருக்கும் இலங்கை அரசிலிருந்து அது பின்பற்றி அமைக்கப்பட்ட பிருத்தானிய பாராளுமன்ற்தில் நடப்பது போலவல்லாமல் ஒருவர் கூட பதவி விலகத்தயாராக இல்லாமல், மகிந்தாவும் மற்ற்வர்களும் அரசியல் அமைப்பை மாற்றி மாற்றி எழுதி பதவிக்காலத்தை நீடித்துக்கொண்டு போவதை தாங்கிப்பிடிக்க இப்படி கீழ்தனமான இனத்துவேசங்களைத் தூண்டுகிறார். . (யாரோ முன்னர் யாழில்  எழுதியிருந்த "முன்னேறியிருந்த தமிழர்களை பார்த்து, அவர்களைப்போல்த்தான் சிங்களவர்களும் இருப்பார்கள் நினத்து வெள்ளிக்காரர்கள் தவறு இழைத்துவிட்டார்கள்". என்பது சரி போல் இருக்கிறது)  சம்பிக்க  தேர்தல் நடக்காது என்று சாவால் விடுத்தவர். ஆனால் வெளிநாடுகள் மகிந்தாவின் கையை இறுக்கி முறுக்கியதால் சம்பிக்க அதில் பலத்த தோல்வியை கண்டிருக்கிறார்.  வெளிநாடுகளால் வந்த அந்த தோல்விக்கு தமிழர்களை பழிவாங்க நரம்பு வலியில் துடிக்கிறார் சம்பிக்க. இதனால் இந்த மக்களின் மக்களின் முன்னேற்றத்திற்கு ஏற்ற்வகையில் ஆட்சியும் 300 வருடங்கள் பின்னல் தள்ளப்படுகின்றன.  

 

ஒரு தேர்தலுக்கு பின்னாலான இனக்கலவரம் ஒன்றை கொண்டு வர வேண்டும் என்று சம்பிக்கமாதிரி சிங்களத்தலைவரகள் சிக்னல் கொடுத்தால் அது விளங்கிவிடுகிறது.  1977, 1983 .....எல்லா ஆண்டுகளிலும் அது விளங்கியது. தேர்தல் முடிந்த நாளில் இருந்து அதைத்தான் இன்று வரையில் சம்பிக்க முயற்சிக்கிறார். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.