Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காஷ்மீர் கிராமத்தைக் கைப்பற்றியது பாகிஸ்தான்! - 9 நாட்களின் பின் வெளிச்சத்துக்கு வந்த எல்லையில் நடக்கும் மினி போர்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
kashmir-31013-150.jpg

காஷ்மீர் எல்லைக்குள் தீவிரவாதிகளுடன் அத்துமீறி நுழைந்துள்ள பாகிஸ்தான் ராணுவம், அங்குள்ள கிராமத்தை ஆக்கிரமித்துள்ளது. அவர்களை விரட்டியடிக்க இந்திய ராணுவம் கடும் தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த 9 நாட்களாக நடக்கும் இந்த சண்டை பற்றி இப்போதுதான் தகவல் வெளியாகி உள்ளது. காஷ்மீர் மாநில எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும், தீவிரவாதிகள் ஊடுருவவும் உதவி செய்து வருகிறது.

  

கடந்த மாதம் 23ம் தேதி ஜம்முவில் ஊடுருவிய 3 தீவிரவாதிகள், ராணுவ முகாம் மற்றும் காவல் நிலையத்தில் புகுந்து நடத்திய தாக்குதலில் 5 போலீசார், 4 ராணுவ வீரர்கள் உட்பட 12 பேர் கொல்லப்பட்டனர்.தாக்குதல் நடத்திய 3 தீவிரவாதிகளையும் ராணுவம் கொன்றது.காஷ்மீரில் பூஞ்ச் எல்லையில் கிரன் என்ற பகுதியில் சலாபட் கிராமம் உள்ளது. பாகிஸ்தான் ராணுவத்தின் தொடர் தாக்குதலால் பீதி அடைந்த இந்த கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்று விட்டதால் நீண்ட காலமாக காலியாகவே கிடக்கிறது. ராணுவ முகாம், காவல் நிலையம் மீது தாக்குதல் நடத்திய மறுநாளே, இந்த பகுதிக்குள் 30 முதல் 40 தீவிரவாதிகள் ஊடுருவி உள்ளனர். அதோடு, பாகிஸ்தான் ராணுவத்தை சேர்ந்த சிறப்பு அதிரடிப் படை வீரர்களும் ஊடுருவி, இந்த கிராமத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.

 

உளவுப்பிரிவின் மூலம் இந்த தகவல் உறுதி செய்யப்பட்டது. எல்லை கண்காணிப்பு பணியில் இந்திய வீரர்கள் முனைப்புடன் ஈடுபட்டுள்ள நிலையில், இந்த ஊடுருவல் நடந்தது, ராணுவ உயர் அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை அளித்தது. உடனே, அந்த பகுதியை சுற்றிவளைத்து தாக்குதலை தொடங்கினர். இதைத் தொடர்ந்து, இருதரப்புக்கும் இடையே கடந்த 9 நாட்களாக கடும் சண்டை நடந்து வருகிறது.

 

இரவு பகலாக நடக்கும் இந்த மினி போரில் இதுவரை இந்திய வீரர்கள் 5 பேர் காயம் அடைந்துள்ளனர். இந்திய தரப்பில் உயிரிழப்பு ஏற்படுவதை தவிர்ப்பதற்காக, அந்த கிராமம் சுற்றி வளைக்கப்பட்டு, படிப்படியாக முன்னேறி தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதில், தீவிரவாதிகள் தரப்பிலும், பாகிஸ்தான் சிறப்பு அதிரடிப்படை தரப்பிலும் ஏற்பட்ட உயிர் இழப்புகள் பற்றிய விவரம் தெரியவில்லை.இந்திய ராணுவத்தை சேர்ந்த 15வது படைப்பிரிவு, இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளது.

 

இந்த படையின் லெப்டினென்ட் ஜெனரல் குர்மித் சிங், ஸ்ரீநகரில் நேற்று இது பற்றி அளித்த பேட்டி: இந்திய கிராமம் தீவிரவாதிகளின் பிடிக்கு சென்று விட்டதாக கூறப்படுவது அபத்தம். அப்பகுதி முழுவதும் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. காயமடைந்த 5 வீரர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. நமது தரப்பில் உயிர்ச்சேதம் ஏற்படுவதை தடுக்க, படிப்படியாக முன்னேறி தாக்குதல் நடத்தப்படுகிறது. தாக்குதலில் அவசரம் காட்டப்படவில்லை. நிலைமை இப்போது முழு கட்டுக்குள் இருக்கிறது.

 

தீவிரவாதிகள் ஊடுருவிய விதத்தையும், இடத்தையும் பார்க்கும்போது பாகிஸ்தான் ராணுவத்தை சேர்ந்த சிறப்பு அதிரடிப்படை வீரர்கள் அதில் இடம் பெற்றிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. பாகிஸ்தான் ராணுவத்தின் தொடர்பு பற்றி இப்போதே திட்டவட்டமாக கூறுவது சரியாக இருக்காது. தீவிரவாதிகள் கடந்த காலங்களில் நடத்திய ஊடுருவல் முயற்சிகளில் இருந்து, இது முற்றிலும் மாறுபட்டுள்ளது. சண்டை நடந்து கொண்டிருக்கும் போதே, நேற்றிரவு 10 முதல் 12 தீவிரவாதிகள் பாகிஸ்தானில் இருந்து ஊடுருவ முயன்றனர். அந்த முயற்சி முறியடிக்கப்பட்டது. தீவிரவாதிகள் அனைவரும் கொல்லப்பட்ட பிறகுதான், தாக்குதல் பற்றிய முழு விவரத்தையும் தர முடியும். இவ்வாறு குர்மித் சிங் கூறினார்.

 

 

http://seithy.com/breifNews.php?newsID=94093&category=IndianNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

Monmohan_CI.jpg

  • கருத்துக்கள உறவுகள்

2  பேர் சண்டை  பிடித்தாலே

உலகச்செய்தியாக சில செக்கன்களில்  வந்துவிடும் இன்றைய நிலையில்

போரையே  மறைத்து நிலத்தை  இழந்துள்ளது   இந்தியா.............. :(  :(  :(

  • கருத்துக்கள உறவுகள்

ம்...ம்.... நடக்கட்டும்.... சேர்ந்துதானே எங்களை வீழ்த்த உதவினீர்கள்! சீ இறை ஆண்மையற்ற கிந்தியா.

செவ்விந்தியரின்  நாடான அமெரிக்காவிற்கு கறுவல் ஜனாதிபதியா வெள்ளையன் ஜெனாதிபதியா எண்டு சண்டை. இங்கை காஸ்மீரியரின் நாடுக்கு பாகிஸ்தானியும் கிண்டியனும் அடி படுகிறார்கள் எலாம் அந்த மக்களின்  தலைவிதி 

ம்...ம்.... நடக்கட்டும்.... சேர்ந்துதானே எங்களை வீழ்த்த உதவினீர்கள்! சீ இறை ஆண்மையற்ற கிந்தியா.

என்ன ஐயா நீங்க ஜெயராம் பற்றியா பேசுகிறீர்கள். உஷ்! சத்தம!! சிவசேனா. விஸ்வ கிந்து, RSS ஒரே போடா போட்டுட போகிறங்கள். 

 

(சிவ சேனையை ஆக்கியவரோ ஒரு துறவி. சீதை கோவிச்சுக்கொண்டு இராவணனுடன் ஒட, காட்டுக்கு ஒட இராமர் .....................புகை அடிச்சு பழுக்கவிட்டவராகும் :lol:  :lol:  :lol:  :lol: .)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின், கேரன் பகுதியில் கார்கில் ஆக்கிரமிப்பு நிகழ்வு போல எந்தச் சூழலும் தற்போது இல்லை. இந்தியப் பகுதி எதுவும் பாகிஸ்தானியர்களால் ஆக்கிரமிக்கப்படவில்லை என்று ராணுவ தலைமைத் தளபதி பிக்ரம் சிங் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்,

 

04-army-chief-general-bikram-singh3-600.

 

ஜம்மு காஷ்மீர் எல்லையில், பாகிஸ்தான் தீவிரவாதிகளால் எந்த பகுதியும் ஆக்கிரமிப்பு செய்யப்படவில்லை. அதையும், இதையும் ஒப்பிட முடியாது. கேரன் சம்பவம் ஒரு தீவிரவாத ஊடுறுவல்தான்.

கேரன் பகுதியில் ஊடுருவியுள்ள தீவிரவாதிகளை வெளியேற்றும் பணியில் ராணுவத்தினர் 11 வது நாளாக ஈடுபட்டு வருகின்றனர். கார்கில் ஆக்கிரமிக்கப்பட்டது போல் தற்போது கேரன் பகுதியில் எந்த இந்திய கிராமமும் ஆக்கிரமிக்கப்படவில்லை. ஊடுருவிய தீவிரவாதிகள் விரைவில் வெளியேற்றப்படுவார்கள் என்றார்.

2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

இதற்கிடையே, இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற இரண்டு தீவிரவாதிகளை பாதுகாப்புப் படையினர் இன்று அதிகாலையில் சுட்டுக் கொன்றனர்.

குப்வாரா மாவட்டத்தின் வழியாக இவர்கள் பாகிஸ்தான் எல்லை வழியாக ஊடுறுவ முயன்றனர். இதைப் பார்த்த ராணுவத்தினர் அவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூட்டை நடத்தினர். இதில் 2 பேர் கொல்லப்பட்டனர் என்று ராணுவ செய்தி்த் தொடர்பாளர் தெரிவித்தார்.

கேரன் பகுதியில் பத்து நாட்களுக்கு முன்பு 30 முதல் 40 தீவிரவாதிகள் ஊடுறுவலை தொடங்கினர். அன்று முதல் ராணுவத்தினர் அவர்களை விரட்டியடிக்க போராடி வருகின்றனர். இதுவரை 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் 9 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

இந்த ஊடுறுவலில் பாகிஸ்தான் ராணுவத்தின் சிறப்புப் பிரிவுக்கு் தொடர்பு இருப்பதாக இந்தியா சந்தேகிக்கிறது. ஆனால் இதை பாகிஸ்தான் மறுத்துள்ளது.

இப்பகுதியில் கூடுதல் ராணுவத்தினர் தற்போது வரவழைக்கப்பட்டு தீவிரவாதிகளை விரட்டியடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

 
 

அடடா இம்முட்டு நடந்திருக்குது ஒண்ணுமே நடக்காதமாதிரி இருந்திருக்காங்க 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.